bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 12 டிசம்பர், 2019

வளரும் ஆனா வளராது.

அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அயோத்தி தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி 

உச்சநீதிமன்றத்தில் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு 18 மனுக்களையும் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதற்கு மனுக்களை ஏற்க வேண்டும்.ஐந்து பேர்கள் கொண்ட அமர்வை உருவாக்க வேண்டும்.
இது தொடர்பாக மேல் முறையீடு கிடையாது என அறிவித்து விடலாமே.
--------------------------------+-------------------------------------
பொருளாதார மந்தநிலைதான் இப்போது இந்தியா சந்தித்துள்ள மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. கடந்த ஒரு ஆண்டாகவே நாட்டின் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. 

இந்த ஆண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்தது. அதைத் தொடர்ந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டில் இன்னும் மோசமாக, பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாகக் குறைந்தது. 
இந்த முழு நிதியாண்டிலும் நாட்டின் வளர்ச்சி 5 சதவீதத்தை விடக் குறைவாகவே இருக்கும் என்று பல்வேறு ஆய்வுகளில் மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் தற்போது ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டைக் குறைத்துள்ளது. முன்னதாக வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-20 நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது.

இந்நிலையில் தற்போது ஆசிய மேம்பாட்டு வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

வேளாண் துறையில் அறுவடை மந்தமாக இருந்ததாலும், போதிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாததால் நுகர்வு குறைந்துள்ளதாலும்தான் தனது மதிப்பீட்டைக் குறைத்துள்ளதாக ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது. வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது மற்றும் கடன் சேவை சிறப்பாக இல்லாதது போன்ற காரணங்களாலும் பொருளாதார வளர்ச்சி மங்கியுள்ளதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


செப்டம்பர் மாதத்தில் ஆசிய மேம்பாட்டு வங்கி வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், 2019ஆம் ஆண்டில் 6.5 சதவீதமாகவும், 2020ஆம் ஆண்டில் 7.2 சதவீதமாகவும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இருக்கும் என்று கூறியிருந்தது. ஆட்டோமொபைல், உற்பத்தித் துறைகளில் மந்தநிலை நிலவுவதால் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்துள்ளன.

ஆகஸ்ட் மாதத்தில் மூடிஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் 2019-20ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என்று கூறியது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஃபிட்ச் நிறுவனம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் இந்திய வளர்ச்சி மதிப்பீட்டை 5.6 சதவீதமாகக் குறைத்தது நினைவுகூறத்தக்கது.
-----------------------------------------------------+++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...