![](http://1.bp.blogspot.com/_xIo-rkD-sJ4/TS5tBEczd3I/AAAAAAAAABc/FnlXbtHEtdM/s1600/kamal_hassan.jpg)
எல்லாவற்றிலும் பழசாக,பழசாக கொஞ்சம் மவுசு குறைவுதான்.
சினிமாவும் அதற்கு விலக்கல்ல.
உள்ளே வரும் போது முழுசாக சாவிகொடுக்கப் பட்ட பொம்மைபோல்
வரும் இளசுகள் இரண்டு படம் செய்த உடனே சாவிகுறைந்த பொம்மை
யாகி விடுகின்றனர். பிறகு பழைய மாதிரி திறமையுடன் செய்ய இயலா
விட்டாலும் துணை இயக்குனர்கள் துணையுடன் கொஞ்சம் ஒப்பேற்றிவிடு
கின்றனர்.
அதன் பின்னர் கொஞ்சம் காசு ,வசதிகள் வந்து விடுகிறது.மக்களுடன்
இறங்கிவந்து பழகவும் இயலவில்லை. பெரிய தொடர்பு இடைவெளி.
கற்பனையும் கைகொடுப்பது ல்லை. பசித்தவயிறுக்கு இருக்கும்
கற்பனை இப்போது இங்கு இருப்பது இல்லை.
சூடு குறைந்து வேறு வழியின்றி பெருங்காய டப்பாவாகிவிடுகின்றனர்.
இன்றைய பெரிய இயக்குனர்கள்,சில நடிகர்கள் கதை மறுத்தாலும்
இதுதான்.
ஏதோ சிலர் திறமையான துணைகள்[?] மூலம் காலத்தை ஓட்டி வருகின்றனர்.
மன்மதன் அம்பு குறி தவறி, சொல்லப்போனால் குறியே இல்லாமல் பாய்ந்து
காணாமல் போனதும் இந்தக்கதையால்தான்.
கமல் பழைய மைக்கேல் மதன காமராஜன், சதிலீலாவதி போன்று தருவதாய்
நினைத்து ஏ.சி. அறையில் உட்கார்ந்து எய்த அம்பு அதிகமாக குளிரெடுத்ததால்
முக்காடு போட்டு தூங்கிவிட்டது.
கமல் இனி ரஜினியைப்போல் ஓடும் குதிரை மீது பணம் கட்டட்டும்.
புதுசுகள் கதை,இயக்கதில் நடிக்கட்டும். அவர் திறமையானவர்.அதில்
சந்தேகமே இல்லை. தேவை இன்றி துன்பப்படவேண்டாம்.அவர் துண்பப்
படுவதுடன்,தயாரிப்பாளர்களையும் துயரத்தில் ஆழ்த்தவேண்டாம்.
அது மட்டுமின்றி ரசிகர்களும் கவலைப்படமாட்டார்கள் அல்லவா.