bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

கவிதை செய்வோம்

இன்று நல்ல கவிதை கிடைப்பது மிக  அரிது.
அதை எழுதுபவர்கள் அருகிவிட்டனர். இன்று தமிழா வேறு எந்த மொழியா
 என்று தெரியாத வார்த்தைகளே கவிதை என்று எழுதுபவர்கள் உபயோகம் செய்கின்றனர்.
                 முன்புள்ள செய்யுள்கள்தான் பொழிப்புரை,விளக்கவுரை வைத்துப்
 படிக்கவேண்டும்.இப்போது இவர்கள் எழுதும் வார்த்தைகளுக்கும் அவர்களிடமே
 விளக்கம் கேட்கவேண்டிய நிலை.
                  அவர்களிடம் சென்றாலோ ரசனையற்ற முட்டாள் என்று திட்டி
 விடுவார்களோ என்ற பயம் .
               கவிதையை படிக்க ஆவல்.ஆனால் இவர்கள் கவிதையை பார்த்துப்
  பயம்.என்ன செய்ய,,  
           முன்பு ஒருவர் கூறியது ஞாபகம் வருகிறது.சம்பந்தமில்லாமல் நண்பர்கள்
 ஒவ்வொருவர்த்தைகளைக்கூற அதை எழுதி குலுக்கள் முறையில் அதைத்
தேர்ந்தெடுத்து ஒரு காகிதத்தில் வரிசையாக எழுதி அதை ஒரு இலக்கியப்
 பத்திரிக்கை என்று பிரபலமான [பெயர் வெண்டாம்]இதழிற்கு அனுப்பிவைத்
து விட்டு மறந்தும் விட்டனராம்.
          ஆனால் அடுத்த மாத இதழில் அவர்கள் கவிதை[?] ஒரு அட்டகாசமான
 தலைப்பில் வெளியாகி அதிர்ச்சியை தந்ததாம்.
         இதை விடக்   கே  வலம் அதை பாராட்டி அடுத்த இதழில் சிலர் எழுதியிருந்
 தனராம்.
          எமக்குத்தொழில் கவிதை என்று இதைப்படித்த கவிகள் இவ்வளவு எளிதா
 கவிதை எழுதுவது என்று குலுக்களில் இறங்கிவிட வேண்டாம்.அப்படி எழுதினாலும்
 எமக்கு அனுப்பி விட வேண்டாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...