bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

இந்தியாவில் அல்கொய்தா?

ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கமான அல்கொய்தாவின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்திய துணை கண்டத்தில் அது தன் புனித போரை தொடங்கும் என்றும் சமூக வலைத்தளத்தில் அந்த இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாகிரி பேசிய வீடியோ வெளியானது.
ஒசாமா பின்லாடன் அப்துல்லா அசாம் போன்றவர்களால் அல்கயித அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட வேளையில் அமெரிக்க அரசு பின்னணியில் செயற்பட்டது. அல்கொயிதாவைக் காரணாமக முன்வைத்து அமெரிக்கா தலைமையில் நேட்டோ இராணுவம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது.
உலகின் பல்தேசிய நிறுவானங்களால் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்ட நரேந்திர மோடியின் இந்து பாசிச அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்து வெறியை முன்வைத்தது.
உலகம் முழுவதும் மதங்களுக்கு இடையேயும், தேசிய இனக் குழுக்களுக்கு இடையேயும், வெவ்வேறு அடையாளங்களுக்கு இடையேயும் மோதலை ஏற்படுத்துவது பல்தேசிய வியாபார நிறுவனங்களின் கொள்ளைக்கு பக்கபலமாக அமைகிறது. இவ்வாறான மோதல்களை மக்களின் சிந்தனை திசைதிருப்பப்பட சந்தடி இல்லாமல் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்கின்றன. இக் கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் மக்களின் கவனத்திலிருந்து திசை திருப்பட்டு அடையாளக் குழுக்களுக்கு இடையேயான மோதல்கள் முன்னணிக்கு வருகின்றன.
இந்தியாவில் அல்கொய்தாவின் கிளை என்ற பரபரப்பின் பின்புலத்தில் இந்திய அமெரிக்க அரசுகள் இணைந்த பல்தேசிய நிறுவனங்களின் சதி காணப்பட வாய்ப்புக்கள் உண்டு.
இஸ்லாமியர்களின் எதிரியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சித்தரிக்க அல்கொய்தா விரும்புவதாக அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ முன்னாள் ஆய்வாளர் வேறு கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் காலூன்ற நினைக்கும் அல்கொய்தா, முஸ்லீம்களின் எதிரியாக நரேந்திர மோடியை சித்தரிக்க விரும்புவதாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ முன்னாள் ஆய்வாளர் தெரிவித்தார்.

மேலும் அல்கொய்தாவின் மிரட்டலை இந்தியா மிகவும் தீவிரமாக கையாள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வாளருக்கு மோடியின் நாசிக் கருத்துகள் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. 
இந்திய மக்களின் கவனத்தை வேறு திசைக்கு மாற்றுவதே இவ்வாறான கருத்துக்களின் அடிப்படை நோக்கம். மோடியை ஆட்சியிலேற்றிய பல்தேசிய வியாபாரப் பெரு நிறுவனங்களும் அவற்றின் ஊதுகுழல் ஊடகங்களும் அல்கொயிதா பற்றி பரபரப்புச் செய்திகள் வெளியிட ஆரம்பித்துவிட்டன.
இனிமேல் சில குண்டுவெடிப்புக்களையும் கொலைகளையும் நிகழ்த்த முன்பு இந்திய அரசு தனது பங்கிற்கான பரபரப்பை ஏற்படுத்த வேண்டும். அதன் ஒரு பகுதியாக அல்கய்தாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளதென விமானப்படை தளபதி அரூப் ராகா தெரிவித்துள்ளார்.

---------------------------------------------------------------------------------------------------------------------

புலிகளே காரணம் 

மக்கள் எழுச்சிகளை ஒடுக்குவதற்காகவும் போராட்டங்களை சிதைப்பதற்காகவும் அரச அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் தோற்றுவிக்கப்படு அரச சாரா என்ற பெயரில் உலகம் முழுவதும் விதைக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்களில் மார்கா (Marga Institute ) தொன்மையானது. 1972 ஆம் ஆண்டில் ஆய்வு செய்யும் நோக்கோடு அமெரிக்க அரசின் நிதி வழங்கலில் இலங்கையில் மார்கா உருவாக்கப்பட்ட காலத்தில் தொண்டு நிறுவனங்கள் அறியப்படாதவை. 
இலங்கையில் அதன் வெற்றியே ஏனைய நாடுகளுக்கு அதனை விரிவுபடுத்தக் காரணமாக அமைந்தது. மார்கா என்ற தன்னார்வ நிறுவனம் இன்று வரை அமெரிக்க அரசின் நிதிக் கொடுப்பனவிலேயே இயங்கி வருகிறது. இலங்கையில் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக ஆய்வு செய்து நூல்களையும் பிரசுரங்களையும் வெளியிடும் மார்கா அடிப்படையில் ஏகாதிபத்தியங்களின் தகவல் மையமாகவும் செயற்படுகிறது.
அமெரிக்காவைப் பிடித்துவந்து ராஜபக்சவைத் தண்டிக்கப் போவதாக புலம்பெயர் விதேசிய அமைப்புக்கள் கூறிவரும் அதே வேளை அமெரிக்க அரச நிதியில் இயங்கும் மார்கா இலங்கையிலிருந்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 
அந்த அறிக்கையில் வன்னியில் நடைபெற்ற படுகொலைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களைக் தடுத்துக் கேடையமாகப் பயன்படுத்தியதே காரணம் என்றும் இதனால் படுகொலைகளுக்கு புலிகளே பொறுப்பு என்றும் தெரிவிக்கிறது.
தவிர, அய்க்கிய நாடுகள் நிறுவனம் புலிகளிலிருந்து மக்களைத் தனிமைப்படுத்தி அவர்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்லக் கூடியதான மூலோபாயத்தை வகுக்கத் தவறியுள்ளது என்றும் பிரச்சனையின் மூலத்தை கண்டறியவில்லை என்றும் அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.
புலிகள் மக்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்திருந்ததை சுய விமர்சன அடிப்படையில் ஏற்றுக்கொண்டு இனக்கொலையின் சூத்திரதாரிகளான ராஜபக்ச குடும்பத்தைத் தண்டிகக் கோரும் தமிழ் அரசியல் தலைமைகள் எம்மத்தியில் இல்லை.
புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர் தலைமைகளின் ஒரே நோக்கம் மக்களிடமிருந்து இயலக்கூடிய பணத்தைச் சுருட்டிக்கொள்வதே. இந்த அடிப்படையில் நடந்த தவறுகளை சுய விமர்சன அடிப்படையில் ஏற்றுக்கொண்டு இலங்கை பாசிச அரசைத் தண்டிப்பதற்கான நெறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகளிடம் கோருவதற்குப் பதிலாக ஐக்கிய நாடுகளை நிபந்தனையின்றி ஏற்றுக்கொண்டுள்ளனர். 
அமெரிக்க அரசின் தீர்மானத்தில் இரண்டுபக்கமும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்க மாட்டோம் என்றும் வலிந்து கூறப்பட்டுள்ளது. இதனைக்கூடக் கேள்வி கேட்காத புலம்பெயர் அமைப்புக்கள் அப்பாவிப் போராளிகளைப் போர்க்குற்றவாளிகளாக்கும் ஐ.நாவின் செயலுக்குத் துணை செல்கின்றன.
அமெரிக்க நிதியில் இயங்கும் மார்காவின் அறிக்கை தமிழ்த் தலைமைகளின் வியாபார நோக்கத்தின் விளைபலன். இன்று மார்கா போன்ற அமைப்புக்கள் உலகம் முழுவதும் ஜனநாயக வாதிகளுடன் தமது அரசியல் மொழியில் பேசுகின்றன. இலங்கை அரசைத் தண்டிக்கக் கோரும் தமிழ்த் தலைமைகளை குற்றம் சுமத்துகின்றன.
 மக்களை ஏமாற்ற புலம்பெயர் தமிழத் தலைமைகள் கூறிய பொய் இன்று அவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது மட்டுமல்ல உலகின் மிகவும் கோரமான பயங்கரவாதி மகிந்த ராஜபக்சவையும் பாதுகாப்பதில் போய் முடிந்துள்ளது. இடையில் அனைத்தையும் இழந்து அழிவைச் சந்திப்பவர்கள் மக்களுக்காக ஆயுதமேந்திய அப்பாவிப் போராளிகளே.
                                                                                                                                                        நன்றி:இனியொரு,
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...