bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

இதுவரை என்னதான் செய்தது


 பிரமாண பத்திரம் கொடுக்க தயக்கம் ஏன்?

இதுவரையில் 'பேனர், கட் -அவுட்' கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தி.மு.க, சார்பில் மட்டுமே  உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

சுபஸ்ரீ
ஆனால் இந்த கோவை ரகு,சுபஸ்ரீ படுகொலைகளுக்கு காரணமான பேனர்கள்  வைத்த அ.தி.மு.க., உள்ளிட்ட, மற்ற கட்சிகள் இதுவரை  பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயக்கம் காட்டுகின்றன.


 பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின், அதை மீறினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம், அக்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

சென்னை, பள்ளிக்கரணை அருகே, 12ம் தேதி, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர், ஜெயகோபால் இல்ல திருமண விழாவிற்காக, சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில், ஒரு பேனர் சரிந்து அவ்வழியே  இருசக்கர வாகனத்தில் சென்ற, குரோம்பேட்டையை சேர்ந்த  23 வயதே ஆன மென்பொறியாளர் சுபஸ்ரீ  மீது விழுந்தது பேனருடன்  கீழே விழுந்த சுபஸ்ரீ  மீது பின்னால் வந்த குடிநீர் லாரி உடலில் ஏறியதால்  இறந்தார்.

இச்சம்பவம், தமிழகம் முழுவதும், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பேனர் கலாசாரத்திற்கு எதிராக, குரல்கள் ஒலித்தன.

சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வில், வழக்கறிஞர்கள் லக்ஷ்மிநாராயணன், கண்ணதாசன் ஆகியோர் முறையிட்டனர். அத்துடன், விதிமீறல்பேனர்கள் தொடர்பாக, 'டிராபிக்' ராமசாமி தொடர்ந்த வழக்கையும், நீதிபதிகள் விசாரித்தனர்.

அப்போது, 'பேனர்கள் வைக்கக் கூடாது என, தங்கள் கட்சியினருக்கு, அதன் தலைவர்கள் அறிவித்தால் என்ன' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின், 'தி.மு.க., -- அ.தி.மு..க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், எந்த நிகழ்ச்சிக்கும் பேனர்கள் வைக்கக் கூடாது என, தொண்டர்களுக்கு உத்தரவிட வேண்டும்; அதை, பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அதை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க.,- சார்பில், பிரமாணப் பத்திரத்தை, அதன் அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி, தாக்கல் செய்தார்.
அவிழ்க்கபப்ட்ட திமுக பேனர்கள்

அதில்
"கடந்த, 2017 ஜனவரி, 29ல், தி.மு.க., செயல் தலைவராக, ஸ்டாலின் இருந்தபோது, கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார். அதில், 'கட்சி அல்லதுபிற நிகழ்ச்சிகளுக்கு, சட்டவிரோத பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட்- அவுட்டுகள் போன்றவை வைக்கக் கூடாது' என, எச்சரித்திருந்தார். 
அடுத்து, 2018 ஜூன், 19ல், தி.மு.க., தலைமை வெளியிட்ட அறிவிப்பில், 'ஆர்வமிகுதியால், சிலர் பேனர்கள் வைப்பது தொடர்கிறது; அதையும் தவிர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது. 

சுபஸ்ரீ மரணத்திற்கு பின், 'பொது மக்களுக்கு இடையூறாக, பேனர்கள், கட் - -அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, 13ம் தேதி, ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

பேனர், கட்- - அவுட், பிளக்ஸ் போர்டுகளை கட்டுப்படுத்த, தி.மு.க., எடுக்கும் நடவடிக்கைகளை, நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்து வருவதற்காக, இந்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மதித்து, தி.மு.க., செயல்படும்."
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் அறிவுறுத்தலை ஏற்று, முதல் கட்சியாக, தி.மு.க., பிரமாண பத்திரம், தாக்கல் செய்தது.
ஆனால், பிற கட்சிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாமல், மவுனம் காத்து வருகின்றன.
 நீதிமன்றத்தில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின், கட்சி தலைமை உத்தரவை மீறி, கட்சியினர் யாரேனும், பேனர் அல்லது கட் அவுட் வைத்தால், அதற்கும் கட்சி தலைமையே, பொறுப்பேற்க வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட கட்சி மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு வழக்கு தொடரப்பட்டால், அதை கட்சி தலைவர்களே சந்திக்க வேண்டும்.
மேலும், பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின், அதை மீறி பேனர் வைத்தால், கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, தேர்தல் ஆணையத்திடமும் வலியுறுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
 இதனால் கலக்கமடைந்த கேட் அவுட்டிலேயே அரசியல் செய்யும் அதிமுக மற்றும் பிற கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாமல் அமைதி காத்து வருகின்றன.
அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ படுகொலையானதால் மக்களிடையே கோபமான குரல்கள் எழுந்ததாலும் ,நீதிமன்றம் கோபப்பட்டதாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் தமிழக காவல்துறைக்கு வர  வேகமாக செயல்பட்டு பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர்,அதை சரிவர கட்டாத ஒப்பந்தக்காரர் இவர்களை விட்டு,விட்டு பேனரை அச்சிட்டவரை கைது செய்து அச்சகத்தை  மூடி சீல் வைத்து வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்து மேலும் தனது ஏவல் புகழை மக்கள் மத்தியில் உயர்த்திக்கொண்டுள்ளது.

 
                 சாலையில் வைக்கப்பட்ட அதிமுக பேனர்களுக்கடியில் செல்லும் வாகனங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இதுவரை என்னதான் செய்தது 

விசாரணை ஆணையம் ?

ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு இதே தினத்தில்தான்  காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாட்டின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 முன்னதாக செப்டம்பர் 21-ம் தேதி, சென்னை, சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையைக் காணொலிக் காட்சி மூலம் தலைமைச் செயலகத்திலிருந்து தொடங்கிவைத்தார், ஜெயலலிதா.

ஆர்.கே.நகரில்,  3 மகளிர் பேருந்துகள் உட்பட 200 புதிய பேருந்து வசதிகளையும் தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் தொடங்கிவைத்தார்.
ஜெயலலிதா கடைசியாகக் கலந்துகொண்ட நிகழ்ச்சி இவைதான். அப்போதே, மிகவும் சோர்வுடனும்,  தடுமாற்றத்துடனும் காணப்பட்டார் ஜெயலலிதா.
 தொடர்ந்து, செப்டம்பர் 22-ம் தேதி இரவில் காய்ச்சல் மற்றும் மூச்சுக்குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் தொற்றின் காரணமாகவே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது.
சுவாசிக்கத் திணறிய நிலையில் இருந்த அவருக்கு, ஆரம்பத்தில் செயற்கைச் சுவாசக் கருவியின் மூலமாகச் சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னர், 'ட்ரக்கியோஸ்டமி' அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நுரையீரலுக்கு ஆக்சிஜன் நேரடியாகச் செல்லும்படியான சிகிச்சை அளிக்கப்பட்டது.
கூடுதலாக, உடலியக்கத்துக்காக பிசியோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

 ஓரளவுக்கு உடல்நிலை தேறிவந்த ஜெயலலிதாவுக்கு, டிசம்பர் 4-ம் தேதியன்று, திடீரென இதயமும் சிறுநீரகமும் பாதிப்படைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதயத் துடிப்பும் தற்காலிகமாக நின்றுபோனது. இதயத்தின் செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கான சிகிச்சைகள் (Cardiopulmonary Resuscitation-CPR) உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. அதனால் எந்தப் பலனும் இல்லாமல் போகவே, எக்மோ கருவியுடன் ரத்தநாளங்கள் நேரடியாக இணைக்கப்பட்டன.
தொடர்ச்சியாக 24 மணி நேரம் கடந்த பின்னரும் இழந்த செயல்பாடுகளை மீட்டெடுக்க முடியாமல் போக, டிசம்பர் 5-ம் தேதி இரவு 11:30 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஏராளமான சர்ச்சைகள் கிளம்பின.
மருத்துவனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட வி.ஐ.பி-க்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.

அதோடு, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரின் எந்தவொரு புகைப்படமும் வெளியாகவில்லை.

(அவர் குளிர்பானம் அருந்துவது போன்ற வீடியோ பல சர்ச்சைகளுக்குப் பிறகே வெளியானது.)
அமைச்சர்களும் முன்னுக்குப்பின் முரணான பல தகவல்களைத் தெரிவித்து வந்ததால், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க தொண்டர்களிடையே குமுறல் எழுந்தது.
 சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வமும், ''நீதி விசாரணை வேண்டும்'' எனக் குரல் கொடுத்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு, 'ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது.
அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவரைக் காண வந்தவர்கள், வீட்டு வேலையாட்கள் என 150-க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரணை நடத்தினர்.
கூடுதலாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட விசாரணையின் காலம், இதுவரை ஐந்து முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது, வரும் அக்டோபர் 24-ம் தேதி வரை இந்த விசாரணை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ''நீதி விசாரணை வேண்டும்'' என்று தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் விசாரணை ஆணையம் பலமுறை விசாரிக்க அழைத்தும் ஆணையாம் இருக்கும் சாலை பக்கம் கூட செல்லவில்லை.
அதுவே அதிமுக தொண்டர்களிடையே  ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக மட்டும்தான் ஜெயலலிதா எப்படி இறந்தாலும் தனக்கு கவலையில்லை என்றிருக்கிறார் என்ற அதிருப்தியை உண்டாக்கி ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டவர் என அவர் மீதிருந்த நல்லெண்ணத்தை உடைத்தெறிந்து விட்டது.

ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளுக்குள்ளாவது, அவரின் மரணம் குறித்த விசாரணை நிறைவுபெறுமா இல்லை, மேலும் நீட்டிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...