bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 30 ஆகஸ்ட், 2014

காப்பீடை காப்போம்.



சுரன்28082014

மோடியின் மத்திய அரசு தனது முதல் வரவு-செலவு அறிக்கையிலேயே காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக அதிகரிப்போம் என பராக்..பராக்..என அறிவித்து விட்டது.
இந்த அறிவிப்பு பல்வேறுஎச்சரிக்கைகளை, இந்திய நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும், அரசியலுக்கும் குறிப்பாக பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.க்கும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
இந்திய நாட்டின்,அனைத்து மாநிலங் களிலும்,மக்கள் பெரும்பாலானோர் தங்களது கடின உழைப்பால் சேமிக்கப்பட்ட நிதியை, போலி நிதி நிறுவனங்கள், சீட்டு கம்பெனிகள் என போட்டு ஏமாறுவது வாடிக்கையாகிவிட்டது. 
அண்மையில் இந்த வகையில் மேற்கு வங்கத்தின் சாரதா சிட் ஃபண்ட் கம்பெனியில் பணம் செலுத்தியமக்கள், முதலீடு செய்த பணம் கூட திரும்பக்கிடைக் காமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள். இந்த கம்பெனியின் தலைமை நிர்வாகி,நிறுவன அதிபர் சுதிப்தா சென் எத்தனை வருடங்கள் ஆனாலும் சிறையில் இருக்கிறேன். 
ஆனால் பணம் மட்டும் திருப்பித்தர இயலாது என்கிறார். அவரது தொலைக்காட்சி ஊடகத்தை தனது அடாவடி அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வெற்றிபெற்றது மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ்.
திருடனுக்கு தேள் கொட்டியது போல வெளியேதெரியாமல் சமாளித்தாலும் அதன் எம்.பி.க்கள் வரிசையாக சிறைக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். இதில் குணால் கோஷ் முந்திக்கொண்டார்.
சதாப்தி ராய்,மிதுன் சக்கரவர்த்தி போன்ற சின்னத்திரை, பெரிய திரை பிரபலங்கள் இந்த கம்பெனியின் பிராண்ட் அம்பாசடர்கள். இவர்கள் எல்லாம் இப்போது திரிணாமுல் அரசியல் பிரபலங்கள். 
சிறைக்கு போகும்வரை மம்தாவை ஆஹா, ஒஹோ என்று வர்ணித்த இந்த மோசடி அரசியல்வாதிகள் உள்ளே போனதும் மம்தாவுக்காகத்தானே இப்படி ஈடுபட்டோம் என வசை பாடுகிறார்கள். 
இந்த போலி சீட்டுக் கம்பெனியின் விளம்பரத்தில் மயங்கி பணம் சேமித்து இன்று நடுத்தெருவில் புலம்புபவர்கள் மேற்கு வங்க மக்கள் மட்டுமல்ல, பீகார், அசாம், ஒரிசா, திரிபுரா, ஜார்க்கண்ட் என வங்க மொழி தெரிந்தவர்கள்தான் இந்த மாய வலைக்குள் விழுந்து விட்டார்கள். அவர்களில் சிலர் ஏமாற்றம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டனர்.
இதுபோல் தமிழ் நாட்டிலும், பல மாநிலங்களிலும் கார் கம்பெனிகள், கோழிப் பண்ணைகள் என விளம்பரத்தை நம்பி மோசடி போனவர்களும் இருக்கிறார்கள். 
இவர்கள் மேலும் மேலும் வசதியாக வாழமுயற்சி செய்யும், நுகர்வு கலாச்சார அடிமைகளான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இது உலகமயம் கற்றுக்கொடுத்த நாகரீகம். இது தவிர அன்றாடம் வேலை செய்து தன் வருங்காலத்திற்காக, மகள், மகன், கல்வி, திருமணம் இவைகளுக்காக சேமித்து அதை குட்டி சீட்டு கம்பெனிகளில் போட்டு கையை பிசைந்து கொண்டிருப்போர் கூலித்தொழிலாளர்கள்.இவர்களுக்கு இந்த சமூகத்தில் கல்வி, மருத்துவம்,வேலை வாய்ப்பு,வீடு, திருமணம் எல்லாமே அரசால் உத்தரவாதம் செய்யப்படாததால், வை ராஜா வை என பணம் போட்டு பணம் எடுக்கும் மோடிமஸ்தான் வித்தைகளில் இறங்கி பார்க்கின்றனர்.
2003-ல் எல்.ஐ.சி.யில்.உருவாகிய லிகாய் என்ற அகில இந்திய முகவர்கள் சங்கம்,தனது 35-அம்ச கோரிக்கைகளுக்காகவும்,இன்சூரன்ஸ் துறையில் 26சதவீத அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்தும் மிகப்பெரிய போராட்டங்களை தொடர்ந்து நடத்தியது.
2006-ல் அப்போதைய சி.ஐ.டி.யு.வின் அகில இந்திய தலைவர் தோழர் எம்.கே.பாந்தேவின் ஆலோசனைப்படி, பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் பங்கேற்ற நாடாளுமன்ற தர்ணா நடைபெற்றது. எல்.ஐ.சி.சரித்திரத்திலேயே முகவர்கள் நாடு முழுவதும் திரண்டு நடத்திய முதல் நாடாளுமன்ற போராட்டமாக பதிவு செய்யப்பட்டது. இன்சூரன்ஸ் துறை 2012-13-ல் 6.32 சதவீதம் இறங்கு முகத்தை சந்தித்தது.எல்.ஐ.சியும் முதல் பிரிமியத்தில் அதே அளவு சரிந்தாலும், மொத்த பாலிசிகள் எண்ணிக்கையில் 2.88 சதவீதம் அதிகரிக்க முடிந்தது. 
ஆனாலும் மற்ற தனியார் நிறுவனங்கள் போல் வீழ்ச்சியடையாமல் காப்பாற்றப்பட்டது. இன்சூரன்ஸ் சந்தையில் எல்.ஐ.சியின் பங்கு பாலிசிகள் எண்ணிக்கையில் 2010-ல் 73.02 சதவீதத்திலிருந்து 2012-மார்ச்சில் 80.90 சதவீதமாக உயர்ந்தது. மேலும் 2013-ல் 83.24 சதவீதமாக அதிகரித்தது.அதேபோல் முதல் வருட பிரிமியத்தை 2010-ல் 64.86 சதவீதத்தை 2012-13-ல் 71 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். 
எல்.ஐ.சி.2012-13-ல் 1.70 கோடி பாலிசிதாரர்களுக்கு முதிர்வுத்தொகையையும், வாழ்வுகாலப் பயனையும் வழங்கியுள்ளது.
இதன் மதிப்பு 49,642 கோடி ரூபாய். மேலும்7.26 லட்சம், இறப்பு உரிமங்களுக்காக ரூ.6,360 கோடி வழங்கியுள்ளது.கொடுக்கப்பட வேண்டிய முதிர்வு கேட்புரிமம் வெறும்0.49 சதவீதமும் இறப்பு உரிமம் 1.05 சதவீதமும்தான் உள்ளது. இது உலக அளவிலேயே எந்த கொம்பனும் எட்டிப்பிடிக்க முடியாத சேவை. 
எல்.ஐ.சி. சரித்திரத்திலேயே கடந்த 11 வருடங்களில் மிகப்பெரிய சாதனை இது.மேலும் ஐந்து கோடி அரசு முதலீட்டில் 1956-ல் மக்கள் நலனில் அக்கறையுடன் மக்கள் வரிப்பணத்தால் ஆரம்பிக்கப்பட்ட எல்.ஐ.சி. இன்று பதினைந்து லட்சம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பாகவும், அதே அளவு வாழ்வாதார நிதியாக வும் ஆலமரமாய் வளர்ந்து, தொடர்ந்து இந்திய நாட்டின் கட்டுமான வளர்ச்சிக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை வழங்கி வருகிறது.
உலகம் முழுவதும் வலம் வந்த அமெரிக்கன் இண்டர்நேசனல் குரூப் என்ற ஏ.ஐ.ஜி போண்டியாகி தெருவில் நிற்கும் நேரத்தில், இந்திய இன்சூரன்ஸ் சந்தை அவர்களை வாழவைக்கவே திறந்து விடப்படுகிறது.
நம் நாடு உலக அளவில் இரண்டாவது மக்கள் தொகையும்,அதிக வர்த்தக வாய்ப்புக்களை கொண்ட தாகவும் உள்ளதுதான்.60 சதவீத மக்கள் இளைய தலைமுறையினராய் உள்ளனர். 
2020-ல் இந்திய மக்கள் தொகையில் 42.7 சதவீதம்பேர் முப்பது வயதுக்குக்குறைந்தவர்களாயிருப்பார்கள். இந்த நிலை இன்சூரன்ஸ் வர்த்தகத்திற்கு மிகவும் சாதகமாக இருக்கும்.மேலும் இந்த மசோதா தாக்கலானால் எல்.ஐ.சி. “கம்பெனி சட்டத்திற்கு” உள்ளாக்கப்பட்டு அதன் பங்குகளும் சந்தைக்கு வரும்.
இதற்காகவே சென்ற நாடாளுமன்ற தொடரில் “2013 கம்பெனி சட்டம்”என்ற பெயரில் திருத்தம் செய்து தயாராக வைத்துள்ளனர். இந்த சட்டப்படி எல்.ஐ.சி,.கம்பெனி சட்டத்திற்குள் வந்துவிட்டால் அதன் பங்குகளை போட்டிபோட்டு இந்நாட்டு மற்றும் வெளிநாட்டு கம்பெனிகள் வாங்கிவிட்டால்.எல்.ஐ.சி.யின் தனித்தன்மையான பொதுத்துறை நிறுவனம் என்ற அந்தஸ்தும் போய்விடும்.
சுரன்28082014
பி.எஸ்.என்.எல்.லில் என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலை எல்.ஐ.சி.க்கும் ஏற்பட்டு செயலிழக்கவைத்துவிடும். 
கடந்த நான்கு ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல். என்ற பொதுத்துறை சேவை நிறுவனம் பெரிய நட்டத்தில் இயங்குவதை இங்கு நினைவு கூறவேண்டும். 26சதவீத அந்நிய முதலீட்டுடன் வந்த கம்பெனிகள் இன்சூரன்ஸ் சந்தையில் முதன் முதலாக பங்கு மார்க்கெட்(ULIP POLICIES) பாலிசிகளை அறிமுகப்படுத்தி, எல்.ஐ.சி.யின்.சந்தை பங்கை 50சதவீதத்திற்கும் கீழே குறைத்த போதும்,முகவர்கள் அயராது பாடுபட்டு இன்று 70 சதவீதம் வரை சந்தை பங்கை உயர்த்தியுள்ளார்கள்.
எல்.ஐ.சி.யை.பொருத்தவரை இங்கு முகவர்கள்தான் சர்வீஸ் செக்டார். முகவர்கள் சிஸ்டம் வெற்றிகரமாக செயல்படுவது இந்தியாவில் மட்டுமே. உலகத்திற்கே முன் மாதிரியானது.
இந்திய இன்சூரன்ஸ் வாங்குபவர்கள் நிர்ணயிப்பது விற்பவர்கள் நிர்ணயிப்பது அல்ல. முகவர்கள் செயலிழக்க நேரிட்டால் எல்.ஐ.சி.யின்,கதி என்னவென்று கற்பனைசெய்துகூட பார்க்க முடியாது.கடந்த 57 ஆண்டுகளாக சிறிது சிறிதாக மக்களின்சேமிப்பில் வளர்ந்து, முகவர்கள் மற்றும் ஊழியர்களின், வேர்வையாலும், ரத்தத்தாலும் நிலை நிறுத்தப்பட்ட எல்ஐசியின் சந்தை, அந்நிய மற்றும் இந்திய கார்ப்பரேட்டுகளால் அரிக்கப்பட்டு நிலைகுலையும். இந்திய நாட்டின் பொருளாதாரமே சீர்குலையும்.
 இதைத்தான் இந்திய ஆளும் மோடி அரசு விரும்புகிறது.முன்பு காங்கிரசு அரசும் விரும்பியது.
                                                                                                                            சோ.சுத்தானந்தம்
                                                                                                                                                    லிகாய் அமைப்பின்பொதுச் செயலாளர்.
சுரன்28082014

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காப்பவருக்கு காப்பீடு?

மும்பை வடாலாவில் ஜி.எஸ்.பி. சேவா மண்டல் சார்பில் விநாயகர் சிலைக்கு
 ரூ.260 கோடி அளவில் காப்பீடு செய்துள்ளது. விநாயகர் சிலை மற்றும் 
சிலைக்கு அணிவிப்பதற்காக பக்தர்களால் அளிக்கப்படும் தங்க ஆபரணங்கள் 
ஆகியவற்றை தீ விபத்து, தீவிரவாதம் மற்றும் கலவரங்களிலிருந்து காக்கும் 

வகையில் காப்பீடு செய்துள்ளதாக ஜி.எஸ்.பி. சேவா மண்டல் கூறுகிறது.
ரூ.22 கோடி மதிப்பில் தங்கம்
சுரன்28082014
மும்பை மாநகரிலேயே பணக்கார
 அமைப்பாக உள்ள ஜி.எஸ்.பி. மண்டல்
 ரூ.259 கோடிக்கு காப்பீடு பெற்றுள்ளது. 
கிங் சர்க்கிள் பகுதியில்
 அமைக்கப்பட்டுள்ள கணபதி சிலையை 5 
நாள்கள் பூஜை செய்வதற்காக
 வைத்திருப்ப தற்காக  நாளொன்றுக்கு
 ரூ.51.7 கோடி மதிப்பில் காப்பீடு 
செய்யப்பட்டுள்ளது.  சிலை மட்டும் ரூ.22 
கோடி மதிப்பில் தங்கம் இதுவரை
 செலவாகி உள்ளதாம்.
காப்பீடு தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு
 செய்யப்பட்டுள்ளது. மும்பை மாகரி 
லேயே மற்ற மண்டல்களை விட அதிக 
மதிப்புள்ள மண்ட லாக வடாலாவில் அமைக்கப்பட்டு உள்ளது. மும்பை
 மாநகரில் பிரபலமான லால்பக்ச ராஜா ரூ.51 கோடிக்கு காப்பீடு
 செய்யப்பட்டுள்ளது. அதையும்கூட மிஞ்சிவிட்டது வடாலா ஜிஎஸ்பி மண்டல்
. தீவிபத்து, தீவிரவாதத் தாக்குதல் மற்றும் கலவரங்களிலிருந்தும் 
காக்கும்வகையில்  ஜி.எஸ்.பி. யின் காப்பீடுமூலம் சிலை, தங்கம், மண்டபம்
 காப்பீடு உள்ளடக்கி உள்ளது. முதல் நாளில் தொடங்கும் காப்பீடு விழா
 முடிந்ததுமே முடியாது. அமைப்பைச் சேர்ந்தவர்கள் விழா கடைசி நாளில்
 சிலையின் தங்க ஆப ரணங்களை பாதுகாப்பாக வங்கியின் பாதுகாப்புப் 
பெட்டகத்துக்குள் வைப் பதுவரை காப்பீடு இருக் கும். முதல் நாளில் தொடங்கி
 சிலை நகைக்கடைகளி லிருந்து வரும் தங்க ஆபரணங்களைக்கொண்டு 
 சிலையை தண்ணீரில் மூழ் கடிக்கும் வரையிலும் அலங் காரங்கள்
 செய்யப்படும். தண்ணீரில் மூழ்கடிப்பதற்கு சற்றுமுன்பாக சிலையிலிருந்து 
தங்க ஆபரணங்கள் அகற் றப்பட்டு, அடுத்த ஆண்டுக்கு பாதுகாப்பாக 
வைக்கப்படும்.
மண்டலுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.258.9 கோடி
ஜி.எஸ்.பி.மண்டல் மூத்த அறக்கட்டளை உறுப்பினரான சத்தீஷ் நாயக்
 கூறும்போது, தேசிய மயமான காப்பீடு நிறுவனங்கள்மட்டும்
 பங்கேற்பதற்கான ஒப்பந்தப் புள்ளியைக் கோரினோம். காப்பீட்டுத்துறையில்
 உள்ள தனியாரை உள்ளேக் கொண்டுவரவில்லை. காப்பீட்டுத்
 தவணைத்தொகையை வெளியிடவில்லை. ஆனாலும், காப்பீட்டுக்கான
 பிரீமியத் தொகை மட்டும் இலட்சங்களில் இருக்கும். மண்டலுக்கான
  காப்பீட்டுத் தொகை ரூ.258.9 கோடியாக அமைக்கப்பட்டுள்ளது என்
று கூறினார்.
லால்பக்சா ராஜா மண்டல் ரூ. 51 கோடி காப்பீட்டுத் தொகைக்கு தவணைத் 
தொகையாக(பிரீமியம்) ரூ. 12 இலட்சத்தை செலுத்தியுள்ளது. அதன்படி
 பார்க்கும்போது, ஜிஎஸ்பி மண்டல் காப்பீட்டுத் தவணைத் தொகை (பிரீமியம்)
 குறைந்தபட்சம் ரூ.50 இலட்சத்தையாவது செலுத்த வேண்டியிருக்கும் என்று 
கருதப்படுகிறது.
தவணைத்தொகை ரூ.இரண்டரை இலட்சத்துக்கும்மேல்...
காப்பீட்டு நிறுவனத்தின் மூத்த மேலாளர் ஒருவர் கூறுகையில், சாதாரண
 பாலிசியைப் போன்று மண்டல் காப்பீட்டுப் பிரீமியித்தை கணக்கிட
 முடியாது.  சாதாரண மாக காப்பீட்டுத்தொகை ரூ.இரண்டு கோடி என்றால்
, அதற்கானத்  தவணைத்தொகை ரூ.இரண்டரை இலட் சத்துக்கும் மேல்
 இருக்கும். ஆனால், மண்டல் காப்பீடு செயல்பாடு வேறு விதமானது. அவர்கள்
 காப்பீடு செய் துள்ளதானது தீ விபத்து, தீவிரவாத செயல்கள் போன்ற 
வற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே, ரூ. 259 கோடி காப்பீட்டுக்கு அரை
 கோடியைத் தாண்டியே தவணைத் தொகை இருக்கும். ஆனாலும், இது
 யூகத்தின் அடிப் படையிலான வேலையே ஆகும்.
சுரன்28082014
தூணிலும் துரும்பிலும் இருந்தவர் இப்போது தேங்காயிலும் 

தேங்காய் ஒப்பந்தப்புள்ளி
ஜிஎஸ்பி மண்டல் சார்பில் 1.75 
இலட்சம் 
எண்ணிக்கை யில் தேங்காய்கள்

 பெறுவதற்காக
 ஒப்பந்தப்புள்ளியைக் கோரி 
உள்ளது. இறுதியாக ரூ.31.5
 இலட்சத்துக்கு முடி வானது. 
அதன்படி, 
தேங்காய் ஒன்றின் விலை ரூ.18-
லிருந்து ரூ.20 ஆக இருக்கும்.
5 இலட்சத்தில் தங்க மலர்
ஜிஎஸ்பி மண்டல் 150 கிராம் எடை 
அளவுள்ள தங்க மலர் ரூபாய் 5 இலட்சம்
 மதிப்பில் கொடையாகப் பெற் றுள்ளது
 என்று அதன் அறக்கட்டளை சார்பில்
 தெரிவிக் கப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுரன்28082014

வெள்ளி, 27 ஜூன், 2014

பேரா சிறி யர் ?



சென்னை எத்திராஜ்கல்லூரியில் இணைப்பேராசிரியராக இருந்த கல்யாணி மதிவாணன், 2011 ஏப்ரல்9 ம் தேதி மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட் டார். 
இவர்  நியமனத்துக்கு ஒரே தகுதி முன்னாள் அதிமுகஅமைச்சர் நெடுஞ்செழியனின் மருமகள் ஆவார்.
அவர் பதவியேற்ற நாளிலிருந்தே, ஆசிரியர், மாணவர், ஊழியர் விரோதப்போக்கில் ஈடுபட்டார். 

தன்னை எதிர்த்து பேசுபவர்களை அடியாட்கள் வைத்து மிரட்டினார்.இதனால் இவரை எதிர்த்து பல போராட்டங்கள் மாணவர்களாலும்,ஆசிரியர்களாலும்,அலுவலர்களாலும் நடத்தப்பட்டன.ஆனால் அதிமுக கட்சி தலைமை இவருக்கு ஆதரவாக இருந்ததால் இவரை ஒன்றும் அசைக்க முடியவில்லை.ஆனால்  பல்கலைக் கழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றன
.இந்நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி)வகுத்துள்ள விதிமுறைகளின் படி, பத்தாண்டுகள் பேராசிரியர் பணியில் இருந்தவரே துணைவேந்தராக நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால் கல்யாணி மதிவாணன் எத்திராஜ் கல்லூரியில் இணைப்பேராசிரியராக மட்டுமே இருந்தவர்.
ஆனால் அவர், இணைப்பேராசிரியர் என்பதை மறைத்து, பேராசிரியராக இருந்ததாகத் தன்னுடைய விண்ணப்ப மனுவில் தவறான தகவலைக் கூறி, துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் ஓய்வு பெற்ற பேரா.ஜெயராஜ், பேரா.இஸ்மாயில், சந்திரன் பாபு ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடுத்தனர்.அந்த வழக்கு விசாரணைக்கு வரவிடாமல் கல்யாணிமதிவாணன் தரப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. பலப்பல போராட்டங்கள், பலப்பல வழக்குகள் என்று காமராசர் பல்கலைக்கழக வரலாற்றிலேயே இந்த இரண்டு ஆண்டுகளில் தான் நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நடந்து வருகின்றன. பல முறைகேடான நியமனங்கள், முறைப்படி இடஒதுக்கீடு செய்யாத நியமனங்கள், அதை எதிர்த்த வழக்குகள் என்று இந்த காலகட்டத்தில்தான் பல்கலைக்கழகம் முழுக்க ‘பணக்கலைக்கழமாக’ மாற்றம் பெற்றுள்ளது.
முறைகேடுகளால் பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகப் பல்வேறு மட்டங்களில் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணமுள்ளன.அத்தோடு தனக்குப் பிடிக்காத, தனக்குப் பிடித்தவருக்குப் பிடிக்காத ஆசிரியர், அலுவலர், மாணவர் என்று சகல தரப்பினரையும் சஸ்பெண்டு, இடமாற்றம், பதவி இறக்கம் என்றுபல அராஜகங்களை துணைவேந்தர் பதவிகொண்டு கல்யாணி மதிவாணன் செய்தார். பேரா.கிருஷ்ணசாமி, பேரா.இரவிக்குமார், பேரா.வாசு, அலுவலர் பார்த்தசாரதி, ஆராய்ச்சி மாணவி ஈஸ்வரி, ஆராய்ச்சி மாணவர்கள் அருண், பாண்டியராஜன் என்று பலரும் அவரது தவறான நிர்வாகத்தால் கடுமையாகப் பழிவாங்கப்பட்டனர். இதற்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் பலகட்டப் போராட்டங்களை நடத்தியது.
suran

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், கல்யாணி மதிவாணனைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் ‘மதுரைப் பல்கலையைப் பாதுகாப்போம்’ இயக்கத்தின் சார்பில் போராடி வந்த பேராசிரியர் சீனிவாசன், ரவுடிகளால் தாக்கப்பட்டு கைகள் உடைக்கப்பட்டார். அவர் தந்த வாக்குமூலத்தின் படி அந்த வழக்கில் முதல் குற்றவாளியாகக் கல்யாணி மதிவாணன் சேர்க்கப்பட்டுள்ளார். அரசியல் செல்வாக்கினால் இன்னும் கைதாகாமல் இருக்கிறார்.இது தவிர பார்த்தசாரதி என்பவர் தொடுத்த வன்கொடுமை வழக்கிலும், முதல் குற்றவாளியாகக் கல்யாணி மதிவாணன் சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கு நிலுவையில் உள்ளது.
பரபரப்புத் தீர்ப்புஇந்த நிலையில் அவர் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டது செல்லாது எனறு பரபரப்புத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இணைப் பேராசிரியரானஅவர் தன்னைப் பேராசிரியர் என்று கூறிப்பதவியை பெற்றார் என்பது இந்தத் தீர்ப்பின் மிக முக்கிய அடிப்படையாக அமைந்துள்ளது.மேலும் யு.ஜி.சி. விதிகள் இவர் நியமனத்தில் மீறப்பட்டுள்ளதும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட டிவிசன்பெஞ்ச், மேற்கண்ட தீர்ப்பினைஅளித்தபோதிலும், துணைவேந்தரின் வழக்கறிஞரது வேண்டுகோளை ஏற்று, இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளித்தனர்
suran

.‘ஒருபல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமனம் செய்வது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகள் 2010ன் அடிப்படையில் வரையறை செய்யப்பட்டுள்ள தகுதிகள், காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டை நாங்கள் முக்கியமானதாகக் கருதுகிறோம்.
பல்கலைக்கழக மானியக்குழுவின் ஒழுங்காற்று விதிமுறைகள் கட்டாயமாகப் பின்பற்றப்படவேண்டியவை அல்ல என்ற வாய்ப்பினை பயன்படுத்தி இதுபோன்று தகுதிகள் தொடர்பான அம்சம் முற்றிலும் மறுக்கப்பட்டு பின்பற்றப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது. 
எனவே, மேற்கண்ட நியமனம் செல்லாது’ என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறினர்.
ஆளுநர்அலுவலகத்தில் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட கல்யாணி மதிவாணனின் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பமே, அதில் அவர் பேராசிரியர் என்று தன்னைக் குறிப்பிட்டிருப்பதே வழக்கின் மிக முக்கிய ஆவணமாக இருந்துள்ளது. 
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, கல்யாணி மதிவாணன், துணைவேந்தர் பதவியில் நீடிக்கக் கூடாது என ‘மதுரைப் பல்கலைக் கழகத்தைப் பாதுகாப்போம் இயக்கம்’ உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர், அலுவலர் தரப்பினரும் இந்திய மாணவர் சங்கமும் வலியுறுத்தியுள்ளன.
ஆளுநர் விரைந்து இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசு தலையிட்டு, கல்யாணி மதிவாணனை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக உயர்கல்வி வரலாற்றில், ஒரு துணைவேந்தரின் பதவி நியமனம் செல்லாது என்று நீதி மன்றத் தீர்ப்பு வந்துள்ளது 
இதுவே முதல்முறை .

=============================================================================================

தண்ணீர்...

ஜீரண சக்திக்கு, உடல் சூட்டை ஒரே சீராக வைக்க, ஹார்மோன் மாற்றத்திற்கு, சருமப் பொலிவுக்கு என உடலுக்கு தண்ணீர் அவசியம். சராசரியாக ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், ஒன்றரை லிட்டர் தண்ணீர் வெளியில் போகும். இந்த நீர்ச் சத்து உடலுக்குத் தண்ணீர் மூலம் நேரடியாகவும், சாம்பார், ரசம், ஜூஸ், காய்கறிகள், பழங்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற உணவின் மூலமாகவும் உடலில் சேர்ந்துவிடும். 

1. சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1,500 மில்லி அதாவது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அவசியம். ஏழு முதல் எட்டு தம்ளர் வரை அவசியம் தேவை.

2. கோடைக் காலத்தில் சருமத்தின் மூலமாக வியர்வை வெளியேறுவதால், வறட்சி, போன்ற காரணங்களால் தண்ணீரின் தேவை இன்னும் கூடுதலாக மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தேவைப்படும்.

3. விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியாளர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பது நல்லது. வெறும் வயிற்றில் இரண்டு தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

4. சாப்பிட்டவுடன், தொடர்ந்து மருந்து சாப்பிடுபவராக இருந்தால், அரை தம்ளர் முதல் ஒரு தம்ளர் வரை குடிக்கலாம்.

5. காலையில் டிபன் சாப்பிட்டதும், இரண்டு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

6. சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின்பும் என தண்ணீரை குடிப்பது நல்லது.

7. உணவு உண்ணத் தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்கச் செய்வதற்கான திரவம் சுரக்கத் தொடங்கும். வாயில் உள்ள உமிழ்நீரே உணவை உள்ளே தள்ளப் போதுமானது. கூடுதலாகத் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தும்போது, தண்ணீர் ஜீரணத் திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரணப் பணியை மந்தமாக்கும். சாப்பிடும்போது நடுநடுவே தண்ணீர் அருந்தக் கூடாது.

8. அதிக உப்பு, காரம் சேர்த்து சாப்பிடும்போது, தாகத்தைத் தூண்டி அதிக தண்ணீரை கேட்கும். தவிர்ப்பது நல்லது.

9. உணவை வேகமாக சாப்பிடும்போதும் தண்ணீரின் தேவை அதிகரிக்கும். நிதானமாக சாப்பிடப் பழகுங்கள்.

10. நமது உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்திப் பெற்றுக்கொள்ளும். ஒவ்வொருவரின் உடல்வாகு, வசிப்பிடம், மற்றும் வெப்பநிலை நிலை பொறுத்து, தண்ணீரின் தேவை அளவு மாறும்.









suran

திங்கள், 14 ஏப்ரல், 2014

அழகிரி கதை


suran


அழகிரி கதை முட்டுசந்தில் நிற்கிறது.தனது அடியார்களை வைத்து திமுக தலைமையை மிரட்டி தனது கதையை சாதித்துக் கொள்ளலாம்.தனது செல்வாக்கை தமிழகத்திற்கு காட்டலாம் என்று எண்ணியவர் திட்டத்தில் மண்ணை அள்ளி ந டிகர் ரித்திஷ் போட்டு விட்டு அதிமுகவில் ஐக்கியமாகி விட்டார்.
இது நிச்சயம் திமுகவிற்கு இழப்பே இல்லை.அழகிரிக்குதான் அடி.
ரித்திஷை திடிரென திமுகவில் நுழைத்து அவருக்கு உடனேயே மக்களவை தேர்தலில் போட்டியிட இடமும் வாங்கிக்கொடுத்து மக்களவை அனுப்பியவர் அழகிரி.

ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுகவை வளர விடாமல் மாவட்ட செயலாளருடன் மோதி அடிதடியில் இறங்கி கட்சியை கெடுத்துக்கொண்டிருந்தவ்ர்தான் ரித்தீஷ்.
இவர் போனது திமுகவை பொறுத்தவரை நல்ல விடயம்.
அழகிரி அடியார்களில் அவரால் இனி ஒன்றும் நடக்கப்போவதில்லை என்று இடத்தை காலி செய்பவர்கள் அதிகரிக்கிறார்கள்.
அழகிரியின் வலது கையாக இருந்த கோபி ஸ்டாலினை சந்தித்து பாவ மன்னிப்பு கேட்டு சென்று விட்டார்.ரித்தீஷ் அதிமுக.
கே.பி. ராமலிங்கம் கருணாநிதியை சந்தித்து சமாதானப் படு த்த சென்று வாங்கிக்கட்டிக் கொண்டு திரும்பியுள்ளார்.
நெப்போலியன் அமெரிக்காவில் அரசியல் செய்கிறார்.அவர் கூட அதிமுக சென்றால் அழகிரி ரொம்ப மனமுடைந்து போய் விடுவார்.
அழகிரியிடம் இருப்பது வெறும் அதிரடி பேச்சு மட்டும்தான் என்பதை அவரின் அடியார்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள்.இனி அவரால் ஒன்றும் ஆவதில்லை என்றுதான் ரித்தீஷ் கடையை மாற்றி விட்டார்.
ஆக இதுவரை திமுக வின் தேர்தல் பரப்புரைக்கோ,கட்சி நிகழ்ச்சிக்களுக்கோ  தமிழ்நாட்டிற்குள் மதுரையை தவிர்த்து எங்குமே செல்லாத அழகிரி இன்று  ஊர்,ஊராக சென்று படுக்கையில் இருக்கும் கட்சியினரின் நலம் விசாரித்து ஆங்காங்கே செய்தியாளர்களிடம் முழங்கி வருகிறார்.
ரித்தீஷ் போனபின் இப்போது அழகிரி சவால் சுதி குறைந்துள்ளது.இவரின் அரசியல் கதைக்குதவாது என்று மீண்டும் திமுக பக்கம் போக வழி இல்லாதவர்கள் அதிமுக பக்கம் ஓடுகிறார்கள்.அந்த அதிர்ச்சி அழகிரிக்கு அதிகம்.
suran

முன்பே சொன்னதுதான் இன்னொரு முறை சொல்லி வைப்போம்.
அழகிரி அரசியல் விளம்பர அரசியல்.செய்திதாள் வெளியிடுவோர் வேறு நல்ல பரபரப்பு செய்தி கிடைத்து விட்டால் அழகிரியை கண்டு கொள்ள மாட்டார்கள் அவரின் விஷ்வரூபம் காற்று இறங்கிய பலூன் ஆகி விடும்.
கருணாநிதி எதிர்ப்பு அரசியலுக்கு இன்றைய கருவி அழகிரி
என்பதுதான் அவர்களின் கருத்து.நாளை வேறு வந்து விடும்.அப்போது அழகிரி?
வடிவேலு சொல்லுவதிப் போல் உசுப்பேத்தி ,உசுப்பேத்தி உங்களை வண்டு முருகனாக்கி விட்டார்கள்.இனி இவன் இதற்கு சரிப்பட்டு வரமாட்டான் கதைதான் .
அழகிரி பேசுவதும் வெறும் பேத்தலாகவே உள்ளது.

திமுக தான் என் கட்சி.கலைஞர் என் தலைவர்.வேறுகட்சி ஆரம்பிக்க மாட்டேன்,வேறு கட்சியில் சேர மாட்டேன் என்று சொல்லும் அவரே திமுக 40 லும் தோற்க வேண்டும் .இத் தேர்தலில் 4 வது இடத்துக்கு போக எனது ஆதரவாளர்கள் பாடு பட வேண்டும் என்கிறார்.

திமுக வின் அறிவாலயத்தை என்னவோ கருணாநிதியின் குடும்ப  சொத்து போல் தனக்கும் அதில் பங்கு உள்ளது.நீதிமன்றம் போவேன் என்கிறார்.
என்ன செய்கிறோம்,என்ன செய்ய வேண்டும் என்றே புரியா குழப்ப நிலையில் இருக்கிறார்.
கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட போது வீர வசனம் ,அதிரடி அறிவிப்பு வெளியிட்டால் கட்சி பணிந்து தம்மிடம் வந்து விடும் என்ற நினைப்பில் பேசியது அவரை கட்சியை விட்டே வெளியெற்றியதால் உண்டான அதிர்ச்சியில் தான் இன்னமும் உள்ளார்.
திருமங்கலம் தேர்தலில் திமுக ஆளுங்கட்சி இன்றைய நிலவரப்படி வென்றது.அது தனது செல்வாக்கால்தான் என்ற மாயை அழகிரி கண்னை இன்னமும் மறைத்துள்ளது.
அதன் பின் அதிமுக ஆட்சியில் மதுரையில் அவர் குடியிருக்கும் சொந்த வட்டத்தில் கூட அவரது அடி பொடியை அவரால் வெற்றி பெறச் செய்து மதுரை மாநகராட்சிக்கு உறுப்பினராக அனுப்பி வைக்க முடியா நிலையை மறந்து விட்டார்.
suran

அழகிரி கொஞ்ச ம் கனவுலகில் இருந்து மீண்டு வருவதே அவருக்கு நல்லது.
இவரின் இந்த நடவடிக்கைகள்தான் திமுகவின் அடிமட்டத் தொண்டனையும் ஸ்டாலினை அடுத்த தலைவராக எற்றுக் கொள்ள வைத்து விட்டது.கட்சியும் முழுமையாக ஸ்டாலின் வசம் செல்ல காரணமாகவும் ஆகி விட்டது.
இனி அவர் திமுகவுக்கு திரும்பினாலும் பத்தோடு பதினொன்றுதான்.
காலியானால் இப்போதைய அன்பழகன் இருக்கைதான் அவருக்கு.
------------------------------------------------------------------------------------------------------------


வாய்  நாற்றமா?

நீங்கள் பேசும் போது  உங்கள் நண்பர்கள் முகத்தை திருப்பிக் கொண்டு பேசுவதால்  நீங்கள் அவமானமடைந்தது போல உணர்கின்றீர்களா? 
 துர்நாற்றத்தால் மற்றவர்களிடம் முகம் கொடுத்து கதைப்பதற்கு பெரிதும் கஷ்டப்படுகின்றீர்களா? 
  கவலையை விடுங்கள். 
நீங்கள் மற்றவர்களிடம் மனம் விரும்பியது போல முகம் பார்த்து பேசுவ தற்கும், அவர்கள் உங்கள் பேச்சை தாராளமாக கேட்டு ரசிப்பதற்குமான காலம் வெகு தொலைவில் இல்லை.

அதற்கு முதலில் வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கான காரணங்களைவாய் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் வயிற்றில் ஏற்படும் புண்கள் தான் அதற்கு முதலாவது காரணமாக விளங்குகின்றது. ஆமாம் அல்சர் எனப்படும் இவ்வயிற்றுப் புண்களால் வயிற்றில் உருவாகும் நாற்றத்தன்மை வாய் வழியாக வெளியேறும் போது 

தா ன் வாய் துர்நாற்றம் அதிகம் ஏற்படுகின்றது.
 அத்துடன் கீழ் வரும் சில விடயங்களும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
suran
  • உடம்பில் நீர்ச்சத்து குறைந்து போகின்றமை.

  • புகையிலை, வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வாயிற்குள் போட்டு மெல்லுதல்.
  • புகைக்கும் பழக்கம்.
  • போதைப் பொருட்களை சாப்பிடுதல்.
  • தொண்டையில் உள்ள டான்சில் எனப்படும் சுரப்பியல் தொற்று ஏற்படுதல். இவ்வாறு தொண்டையில் உருவாகும் கிருமித் தொற்றும் வாய் துர்நாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைகின்றது.
  • சிலருக்கு ஒரு வழி பாதையான உணவுக்குழாயினூடாக உணவு பையிலிருந்து அமிலங்கள் மேல் நோக்கி வந்து போகும். Re-Fix எனப்படும் இச்செயற்பாட்டினாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படுகின்றது.
  • உணவு குழாயினூடாக உணவு மண்டலத்திற்கு சென்ற உணவு சுமார் 4 மணித்தியாலத்தில் செறிமானம் அடைய வேண்டும். நான்கு மணித்தியாலத்திற்கு மேல் உணவு செறிமானம் அடையாமல் இருக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் புளிச்ச நாற்றம் வாய் வலியாகவே வெளியேறும் அதுவும் வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது. இதனையே அஜீரணக்கோளாறு என்கின்றோம்.
  • வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை எப்படி இலகுவாக போக்கி கொள்ளலாம் என்பதை இனி பார்ப்போம். 
    suran
    • உடனடி நிவாரணி எனும் போது வாசனைப் பொருட்களான கராம்பு, கொத்தமல்லி இலை என்பவற்றை வாயில் போட்டு மெல்லுதல்.
    • குடற் புண்னை போக்குவதற்காக காலையில் எழுந்தவுடன் காப்பிக்குப் பதிலாக தினமும் 4 டம்பளர் சுத்தமான நீரை அருந்த வேண்டும்.

    • அரை லீற்றர் நீரில் புதினா சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சம அளவில் கலந்து வாயை கொப்பளிப்பதுடன் தினமும் அவற்றை அருந்தி வருவதன் மூலமும் வாய் துர்நாற்றத்தைப் போக்க முடியும். அதனுடன் உப்பு சிறிதளவை சேர்த்துக் கொள்வதன் மூலம் பயனை இரட்டிப்பாக்கிவிட முடியும்.
    • அத்துடன் காலை மாலை என இரண்டு நேரமும் பற்களை நன்றாக துலக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் பல் இடுக்குகளில் தேங்கி விடும் உணவு துகல்களை அகற்றி மாதம் ஒரு தடவையேனும் பல் வைத்தியரிடம் காட்டி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
    • சாப்பிட்டப் பின் வாயை நன்றாக கொப்பளித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    • புகைப்பழக்கம் உள்ளிட்ட போதைப் பொருட்களை வாயில் போட்டு மெல்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
    • அதிகமான காரம் மற்றும் புளிப்புச் சுவையுள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
    • வாய் சுகாதாரத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்ள வேண்டும்.


    இவ்வாறான விடயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் வாய் திறந்தாலே தூர ஓடும் உங்கள் அன்புக்குரியவர்களை உங்கள் அருகிலேயே அமரச் செய்து விட முடியும். 
  • ------------------------------------------------------------------------------------------------------------
suran

சனி, 5 ஏப்ரல், 2014


சனி, 5 ஏப்ரல், 2014

மிஸ்ஸாகி விட்டது





ஜெயலலிதாவை பற்றி இந்தியா முழுக்க பிரதமராகும் தகுதி உள்ளவர் என்ற பொய் பரப்பு செய்யப்படுகிறது.
உண்மையில் அவருக்கு அத்தகுதி உள்ளதா?என்று கொஞ்சம் அதை பரப்புகிறவர்கள் உட்கார்ந்து யோசித்தால் உடனேயே தங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுவார்கள்.

suran

ஒரு கருத்தில் நிலையாக இருக்கும் பழக்கமே ஜெயாவுக்கு .கிடையாது அவர் அமைச்சர்களை நியமிப்பதும் தூக்கி விடுவதும் ஆதாரம்.அது மட்டுமல்ல மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலை அவர் எப்போதாவது சரியாக அறிவித்து ள்ளாரா?இவ்வளவுக்கும் உளவுத்துறை ,கட்சியினர் இவற்றுக்கு மேலாக ஜாதகம் வைத்துத்தான பட்டியலையே தயாரிக்கிறார்.
அப்படியலின் லட்சணம் இரு நாட்களிலேயே அம்மணமாகி விடுகிறது.அவருக்கு தெரியாமலேயே பட்டியல் தயாரிக்கப்பட்டத்தாக ஊடகங்களின் சிங்கிகள் வேறு .
அதுமட்டுமல்ல நம்பகத்தன்மையும் துளியும் கிடையாது.திமுக கூட்டணி கட்சிகளிடம் நடந்து கொள்ளும் முறையும் ,அதிமுகவின் அணுகு முறையும் உலகறிந்த விடயம்.சமீபத்திய எடுத்துக்காட்டு மார்க்சைவிடவும்,லெனினை   கண்டுக்காமல் ஜெயலலி தாவை புகழ்ந்து பரணி பாடிய தா.பாண்டியன்,ஜி,ராமகிருஷ்ணன் கட்சியினரை காக்க வைத்து கழுத்தறு த்தது,[இன்னமும் தா.பாண்டியன் தங்களை சேர்க்காததால் ஜெயலலிதா பிரதமராவது எங்களை கூட்டணியில் சேர்க்காததால்  மிஸ்ஸாகி விட்டது என்று மேடையில் புலம்பியது தனி காமடி]கண்டிப்பாக நிறைவேற்ற வெண்டும் என்று இரண்டு தேர்தல் அறிக்கைகளில் வெளியான சேது சமுத்திரத் திட்டத்தை இன்று நிறைவேற்ற கே கூடாது தடுத்து நிறுத்துவேன் என்று மேடைதோறும் திட்டுவது.

suran

நிர்வாகத்திறமை என்று பார்த்தாலும் அதிலும் ஜெயலலிதா பூஜ்யம்தான்.அதற்கு மூண்றாண்டுகளாக கொஞ்சம் கூட சரிப்படுத்தப்படாத மின் தடை..ஆட்சிக்கு வந்ததும் உயர்த்தப்பட்ட விலைவாசிகள்.பால் விலை உயர்வு.பேருந்துக் கட்டணம் உயர்வு.இவ்வுயர்வுகளை பட்ஜெட்டில் அறிவிக்காமால் அவ்வப்போது தன்னிச்சையாக உயர்த்தியது.
உயர்த்தக் காரணம் கருணாநிதி ஐந்து ஆண்டுகளாக உயர்த்தாததால் கருவூலமெ காலி.அரசை நடத்த இயலவில்லை என்பது அவரின் வாக்குமூலம்.அதற்கு தா.பா.இவ்விலைவாசி உயர்வுக்கு காரணம் கருணாநிதிதான் என்ற பக்கப்பாட்டு வேறு .
இலவச தொலைக்காட்சி வழங்கி வந்ததுடன் தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் பேருந்து ,மின் கட்டணங்கள் ,பால் விலை உயர்த்தாதது கருணாநிதியின் நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு.அவர் ஆட்சியை விட்டு இற ங்கும் போது கருவூலம் பணத்துடன்தான் இருந்து.
ஆனால் இன்று?
அம்மா உணவகங்கள் நடத்த நிதி ஒதுக்கப் படவே இல்லை.இப்போது அந்தந்த மாநகராட்சிகள் செலவை தாக்குப் பிடிக்க முடியாமல் நடத்தி வருகிறது.மாநகராட்சி நிர்வாக செலவிற்கு நிதி இல்லாமால் தவிக்கிறது.குடி நீரை பத்து ரூபாய்க்கு விற்பது போக்குவரத்துக் கழகம் .அதற்கும் இதே நிலைதான் குடிநீர் விற்க ஆள் இல்லாமல் அலுவலர்க்களை பயன்படுத்தி நிர்வாக சீகெட்டில் உள்ளது.ஏற்கனவே போக்குவரத்துக் கழக நிர்வாக சிறப்பு உலகறிந்தது.
இவ்வளவு விலைவாசிகளை உயர்த்திய பின்னரும்,டாஸ்மாக் பணத்தை கொட்டியபோதும் கருவூலம் காலி.அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் தட்டுப்பாடு.இலவச மின் விசிறி போன்றவைகள்,மடிக்கணினி வழங்க பணம் இல்லை.ஏற்கனவே மின்விசிறி,மிக்சி,கிரைண்டர் வழங்கிய நிறுவனங்களுக்கு பணம் கொடுக்கப்பட வில்லை.பாக்கி.அவர்கள் மேலும் தயாரிக்க மறுப்பு என்று செய்திகள் அவரை ஆதரிக்கும் ஊடகங்களிலேயே வருகிறது.இவை எல்லாமும் முதல்வர் ஜெயலலிதாவின் நிர்வாகத்திறனுக்கு எடுத்துக்காட்டுகள்.அது மட்டுமல்ல தொடர்ந்து அண்டை மாநிலங்களுடன் மோதல் போக்கு கடை பிடிப்பதால் காவிரி நீர் முதல் முல்லைப்பெரியார் வரை முட்டல்  மோதல்கள்.
இவையே பிரதமரானால் பாகிஸ்தான்,சீனா என்று இருக்கும். 
அமைச்சரவை மாற்றங்கள் சொல்லவே வேண்டாம் .
காலில் விழாத அமைச்சர் சரத் பவரோ ,பருக அப்துல்லாவோ நிச்சயம் மாற்றம் என்றால் அமைச்சரவை நடப்பு என்ன ஆக்கத்தில் இருக்கும் ,நிர்வாகம் எப்படி இருக்கும்,
suran
போயஸ் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு கோட்டைக்கு சென்று அறையிலேயே இரண்டு மணி நேரம் உட்கார்ந்து கொப்புகளை பார்த்து விட்டு [இவை அனைத்துமே குளிர் சாதன வசதியில் நடக்கிறது.]ஒரு மாதமானதும் கோட நாட்டில் ஓய்வெடுக்கும் அம்மையாருக்கு டெல்லி பணிகள் எப்படி இருக்கும்.

இங்காவது தமிழ் நாட்டு பிரச்னைகள் மட்டும்தான்.அங்கோ இந்தியாவில் உள்ள அனைத்துப் பிரச்னைகளும் தாண்டி உலக நடப்புகளும் உண்டு.அம்மா உடல் நிலை  என்ன ஆகும்?.இங்கோ திமுகவுக்குத்தான் பதில் சொல்ல வேண்டும் .அதையும் இங்குள்ள ஊடகங்கள் பார்த்துக்கொள்ளும்.ஆனால் அங்கோ ...?அங்கு உட்கார்ந்ததும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீரை திறந்து விட்டு விடுவாரா/முல்லைப்பெரியாரை தமிழகத்திற்கு தாரை வார்த்து விடுவாரா?சேது சமுத்திரம் போன்ற ஒரு திட்டத் திற்கே ஒரு நாளுக்கு ஒன்று பேசுபவர் எத்தனை திட்டங்களை எதிர் கொள்ள வேண்டும் ,
சரி.இன்னமும்  ஜெயலலிதா பிரதமர் பொறுப்புக்கு தகுதியானவர் என்று நினக்கிறீர் களா? சொல்லுகிறீகளா?உங்களை திருத்தவே முடியாது.அதிமுக காரனே  இப்போது  அம்மாதான் பிரதமர் என்று சொல்லுவதை விட்டு விட்டான்.தா.பாண்டியன் மட்டும்தான் ஆங்காங்கே "ஜஸ்ட் மிஸ்ட் "என்று சொல்லி வருகிறார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
suran
--------------------------------------------------------------------------------------------------------------------------
அரசியல்வா [ வியா]திகள்
"மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தனி ஈழத்தை ஆதரிக்க மாட்டோம். ஒரு தேசிய கட்சி பிரிவினையை எப்படி ஆதரிக்க முடியும்? ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை என்று கூறியுள்ளார் பாஜக தலைவர்களில் ஒருவராகிய வெங்கையா நாயுடு
.ஆனால், அந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, பாமக அந்த கூட்டணி அமைய தரகுவேலை பார்த்த தமிழருவி மணியன் போன்றவர்கள் தனி ஈழம் ஒன்றுதான் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக அமைய முடியும் என்று கூறி வருகின்றனர்.
மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் “தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு- பொது வாக்கெடுப்பு தேவை” என்ற தலைப்பில் தமிழ் ஈழம் என்ற லட்சிய நோக்கத்தை நிறைவேற்ற ஐ.நா. மன்றம் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்திட இந்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மறுமலர்ச்சி திமுக மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் வெங்கையா நாயுடு தமிழ் ஈழத்தை ஆதரிக்க மாட்டோம் என்கிறார்.
ஆனால், மோடி அலை வீசுகிறது. அடுத்தபிரதமர் மோடிதான் என்று வீதிவீதியாக முழங்கி வரும் வைகோ தமிழ் ஈழம் அமைய இந்திய அரசு ஆதரவு தர வேண்டும் என்கிறார்.
தப்பி தவறி மோடி பிரதமர் ஆகிவிட்டால், அவர் வெங்கையா நாயுடுபேச்சைக் கேட்பாரா? அல்லது வைகோ பேச்சைக் கேட்பாரா?மோடி பிரதமரானால் தனி ஈழத்தை பெற்றுத் தருவார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். அவ்வாறு வாங்கித் தருவதாக அன்புமணியிடம் மோடி வாக்குறுதி எதுவும் அளித்துள்ளாரா?
அது வெங்கையா நாயுடுவுக்கு தெரியாதா?தில்லி வழக்கறிஞர் மாநாட்டில் மோடியை வைத்துக் கொண்டு பேசிய வைகோ, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இலங்கை அரசுக்கு எந்த ஆயுத உதவியும் செய்யவில்லை. அதே அணுகுமுறையை மோடியும் பின்பற்ற வேண்டும் என்று வைகோ பேசியுள்ளார். ஆனால், வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் சுகன்யா என்ற போர்க்கப்பலை இலங்கைக்கு வாஜ்பாய் கொடுத்ததாக தி.க. தலைவர் கி.வீரமணி சுட்டிக்காட்டியுள்ளார்.(ஜூனியர் விகடன்) இதே அணுகுமுறையைத்தான் மோடியும் பின்பற்ற வேண்டுமென வைகோ கூறுகிறாரா?
suran
சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வர நான் தான் காரணம் என்று வைகோ ஊர் ஊராகச் சென்று முழக்கமிட்டார்.
ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமையும் வாய்ப்பு கிடைத்தவுடன் சுற்றுச்சூழல் பிரச்சனை உள்ளதாக மாற்றிப் பேசுகிறார். ஏன் இந்த தடுமாற்றம்? பெரியாரை செருப்பால் அடிக்க வேண்டுமென்று பேசிய பாஜக தலைவர் எச். ராஜாவை வைகோ கண்டிக்கவில்லை. மோடி என்ற அலையில் தமிழகத்தின் குப்பை கூளங்கள் எல்லாம் வெற்றி பெற்றுவிடும் என்று வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் போன்றோர்களை மனதில் வைத்து பேசிய பாஜக தலைவர் சுப்பிரமணியசாமியையும் இவர்கள் யாரும் கண்டிக்கவில்லை.
கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தன்மானம், சுயமரியாதை என்பதையெல்லாம் ஒட்டுமொத்தமாக எடைக்குப் போட்டுவிட்டு பேரீச்சம்பழம் வாங்கித் தின்றுவிட்டார்கள் போலிருக்கிறது.
இந்த வைகோ ,தமிழருவி போன்ற அரசியல் வியாதிகளுக்கு கருணாநிதியை ஈழப் பிரச்னையில் குற்றம் சொல்ல என்னத்குதி பாக்கி யிருக்கிறது.ஈழ மக்கள் இங்கு இப்போது நடக்கும் ஈழ வியாபாரிகள் அரசியலைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.காங்கிரசை எதிர்ப் பதாக கூறி வீணத் தமிழன் சீமானும் ஈழ எதிர்ப்பாளர்கள் மோடி கூட்டத்தையும் ,திடீர் ஈழத்தாய் ஜெயாவையும் ஆதரித்து பரப்புரை செய்கிறாராம்.
மொத்தத்தில் இந்த மூவெந்தர்களின் பிழைப்பு ஈழத்தை வைத்தும் கருணாநிதியை எதிர்த்தும்தான் .
அதை இங்குள்ள தமிழர்களும்,உலகமெங்கும் உள்ளத் தமிழர்களும் உணர்ந்து வருகிறார்கள்.

ஞாயிறு, 9 மார்ச், 2014

அவுட்டர்நெட்?

இன்டர்நெட்  இருக்கிறது.அப்படியென்றால்  அவுட்டர்நெட் என்று ஒன்று உண்டா ?
இதுவரை யாரும்   யோசித்ததில்லை.
 ஆனால், நியூயார்க் நகரில் இயங்கும் "ஊடக வளர்ச்சி முதலீட்டு நிதி Media Development Investment Fund (MDIF) என்னும் அமைப்பினைச் சேர்ந்த சிலர் இணைந்து "Outernet” என்ற ஒன்றை அமைப்பதில் ஈடுபட்டுள்ளனர். இது சிறிய சாட்டலைட்களின் இணைப்பாக உலகெங்கும் அமைக்கப்படும். இதன் பணி? இன்டர்நெட் வழி கிடைக்கும் டேட்டாவினை இலவசமாக, இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் பெறும் வகையில் தருவதே இந்த கட்டமைப்பின் பணியாக இருக்கும். எந்த இடம் என்றில்லாமல், உலகில் வாழும் அனைவருக்கும், எந்தவித தடையும் இன்றி, வடிகட்டல் இன்றி, அனைத்து இணைய டேட்டாவும் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.
அதுவும் இலவசமாகவே அனைவருக்கும் இந்த இணைப்பு கிடைக்கும்.
இன்டர்நெட் வேகமாக வளர்ந்து, நம் வாழ்வின் அத்தியாவசிய அங்கமாக மாறிவிட்டது.
எனவே, மனித உரிமைகளுக்காகப் பாடுபடும் அமைப்பினர், உணவு, உடை, வாழ இடம் ஆகியவற்றை அடுத்து, இன்டர்நெட் இணைப்பினையும் மனிதனின் அடிப்படை உரிமையாகக் கருதுகின்றன. எனவே, இணைய இணைப்பினைப் பெற்று பயன்படுத்தக் கூடாது, சிலவகை இணைப்பினைத் தடை செய்திட வேண்டும் என முயற்சிக்கும் அரசுகளுக்கு இந்த அமைப்பினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
அடிப்படை மனித உரிமை இது போன்ற அரசு அமைப்புகளால் மீறப்படுகின்றன என்று கருதுகின்றனர்.

எனவே, இந்த குழுவினர், பல நூற்றுக் கணக்கான அளவில் சிறிய சாட்டலைட்களை உலகெங்கும் பறக்கவிட இருக்கின்றனர். இவை ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருக்கும். இவற்றை ஸ்மார்ட் போன் அல்லது கம்ப்யூட்டர் வழியாக, எவரும் இணைப்பு பெற்று, இணையத் தகவல்களைப் பெறலாம். இந்த சாட்டலைட்களுக்குத் தகவல்களை அனுப்ப தரையில் இயங்கும் நூற்றுக் கணக்கான மையங்கள் அமைக்கப்படும்.
MDIF அமைப்பைப் பொறுத்தவரை, இந்த உலகில் இன்னும் 40 சதவீதம் பேர், இணைய இணைப்பினைப் பெற முடியாமலே வாழ்கின்றனர். இதற்குக் காரணம் வட கொரியா போல தடை போடும் அரசுகள் மட்டும் அல்ல;
 உலகின் மூலை முடுக்குகளில் வாழும் மக்களுக்கு இணைய இணைப்பினை வழங்குவதில் ஏற்படும் பெருத்த செலவும் ஒரு காரணமாகும்.
அவுட்டர் நெட் (Outernet) மூலம் சைபீரியா அல்லது மேற்கு அமெரிக்காவில் உள்ள தொலை தூர தீவுகளில், கிராமங்களில் வாழும் மக்கள், நியூயார்க், டில்லி, டோக்கியோவில் வாழும் மக்களைப் போலவே, இணைய இணைப்பினைப் பெற்று, தகவல்களை அடைய முடியும்.
அனைவருக்கும் இந்த உரிமை சமமாய் கிடைக்கும்.
கீழே தரையில் இயங்கும் நிலையங்களில் இருந்து தகவல்கள் சிறிய சாட்டலைட்களுக்கு அனுப்பப்படும். இந்த சாட்டலைட்கள், பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் இணைய இணைப்பினையும், அதன் வழி தகவல்களையும் தரும்.
இந்த கட்டமைப்பினை அமைக்க 3 லட்சம் டாலர் வரை செலவாகும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
MDIF அமைப்பு இதற்கான நிதியைத் திரட்டி வருகிறது.போதுமான நிதி கிடைத்தவுடன், அவுட்டர்நெட் திட்டம் அமைக்கப்படும்.

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...