bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 30 மே, 2017

மோடியின் சாதனை

ராணுவத்திலும் தனியார் மயம்.


படு பயங்கரமான முதலாளித்துவக் கொள்கை கொண்ட  நடுகளில் கூட  காவல்துறை,நீதித்துறை,ராணுவம் தனியார் மயம்,அந்நிய மயமாக்கள் கிடையாது.
மோடியின் பிதாமகன் தாராளமயமாக்கல் தாதா அமெரிக்காவில் கூட ராணுவத்தில் தனியார்களை பென்டகன் உள்ளே நுழைய விடுவதில்லை.
டாங்க்கியில் உள்ள சின்ன துருக்கு கூட அதற்கான பாதுகாப்பான தொழிற்ச்சாலையில்தான் செய்யப்படுகிறது.
அங்கு தனியார் ஆயுதத் தொழிற்சாலைகள்,ஆயுத வியாபாரிகள் அதிகம்.
ஆனால் அவைகளின் விற்பனை தளங்கள் அந்நிய நாடுகள்,தீவிரவாதிகள்,கொரில்லாக்கள்தாம்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை தன நாட்டில் உள்ள ஆயுதவியாபாரிகளிடம் தொடர்பு வைத்துக்கொள்வதில்லை.காரணம் அமெரிக்காவுக்கு எக்கசக்க எதிரிகள்.
அதேபோல் இந்தியாவுக்கு எப்போதும் குடைச்சல் கொடுக்கும் பாகிஸ்தான்,எப்போதாவது எல்லை மீறும் சீனா என்றும் உள்ளே தீவிரவாதிகள்,நக்சல்கள் என  எதிரிகள் .
இப்படிப்பட்ட நிலையில் ராணுவத்தில் தனியார்களை நுழைப்பது,அவர்களிடம் ஆயுதங்கள் வாங்குவது சரியான மனநிலை உள்ளவர்கள் செய்யும் காரியமா?
தனியாராகில் தங்கள் லாபத்தை அதிகரிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் .அவர்களுடன் கொஞ்சி குலஸ்வும் மோடிக்கு தெரியாததல்ல.
குட்டி நாடும்,அமெரிக்காவிற்கு கொடுங்கனவாகவும் உள்ள வட கொரியாவே தனது நாட்டில் விதவிதமாக ஆயுதங்களை தயாரித்து அமெரிக்காவுக்கு வேடிக்கை காட்டி வயிற்றே ச் சலை கொட்டி வரும் பொது இந்தியா இப்படி செய்வது புத்திசாலித்தனமா ?

மோடி அரசாங்கம், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியைத் தனியாரிடம் தாரைவார்த்திட நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறது. 

ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி மற்றும் உயர்தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்குவதற்கு இந்திய மற்றும் அந்நிய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றன.இது நாட்டின் இறையாண்மை மற்றும் எதிர்காலத்தை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக "பீப்பிள்ஸ் டெமாக்ரசி" ஏட்டின் தலையங்கத்தில் (மே 28) கூறப்பட் டுள்ள அம்சங்கள் வருமாறு:ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி தொடர்பான புதிய கொள்கையை பாது காப்பு அமைச்சகம் இறுதிப்படுத்தி இருக் கிறது. இதற்காக இந்தியாவில் உள்ள ஆறுநிறுவனங்களை அரசு அடையாளம் கண்டி ருக்கிறது. இந்நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் ஈடுபடும்.

தனியாருடன் இணைந்து ஹெலி காப்டர்கள், ஒரு என்ஜின் உள்ள போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஆயுதந்தாங்கிய கனரக வாகனங்கள் ஆகியவற்றை உருவாக்க இருக்கிறார்கள்.ஏற்கனவே சில பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ராணுவ உற்பத்தியில் நுழைந் திருக்கின்றன.

டாட்டா குழுமம், ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட், ரிலையன்ஸ் அடாக் (அனில் திருபாய் அம்பானி குழுமம்), மகிந்திரா குழுமம், லார்சன் & டுப்ரோ, பாரத் போர்ஜ், இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் முதலானவை இவ்வாறுநுழைந்திருக்கின்றன. இந்த நிறுவனங்களி லிருந்து முதல் ஆறு கூட்டாளிகள் தெரிவு செய்யப்பட இருக்கிறார்கள்.

ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் நூறு சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தபோதே ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியைத் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கான திட்டம் உருவாகிவிட்டது. தொழில்களை வளர்க்கிறோம் என்ற பெயரில் ஏற்கனவே நம்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களுடன் பன்னாட்டு நிறுவனங்கள் கூட்டாக உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தங் கள் செய்துகொள்ளப்ப ட்டிருக்கின்றன.

தற்சமயம், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் பெரும்பகுதி பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் துப்பாக்கித் தொழிற் சாலைகளால் (ordnance factories) மேற்கொள்ளப்பட்டு வந்தன. 
இவ்வாறு பொதுத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த உற்பத்தியில் 60 இலிருந்து 70 சதவீதம் வரைக்குமான உரிமங்களை அரசு ரத்து செய்துவிட்டது. பொதுத்துறையில் உற்பத்தி செய்து வந்த தளவாடங்களில் முதல்கட்டமாக 25 சதவீதத்தைத் தனியாரிடம் தாரைவார்த்திட, அரசு திட்டமிட்டிருக்கிறது.

தனியார்துறையினர் ராணுவத் தள வாடங்கள் உற்பத்தியில் தனியாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதையொட்டி, அவர்கள் ராணுவம் சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை கபளீகரம் செய்வதற்கான வேலைகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML-Bharat Earth Movers Ltd) என்னும் பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளில் 26 சதவீதம் முதல் கட்டமாக தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் ராணுவம் சம்பந்தப்பட்ட மிகவும் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். 

மிகவும் கேந்திரமான இத்துறையைத் தனியாருக்குத் தாரை வார்த்திருப்பதானது, தனியார்துறையில் இயங்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு ராணுவத் தளவாட உற்பத்தியாளர்களுக்கு மிகுந்த குதூகலத்தை அளித்திருக்கிறது.

ராணுவ உற்பத்தித்துறையைத் தனியாரிடம் தாரைவார்ப்பதில் நாட்டின் இறையாண்மைப் பிரச்சனையும் மிகவும் சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்நிய ஆயுத உற்பத்தியாளர்கள் நம் நாட்டிற்குள் நுழைவதை, இந்திய – அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் அமெரிக்காவுடனான கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்துப் பரிவர்த்தனை ஒப்பந்தத்துடன் இணைத்துப் பார்த்திட வேண்டும்.

இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு என்னவிதமான ஆயுதங்கள் தேவை என்பதையும் அந்நிய மற்றும் இந்திய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கட்டளை பிறப்பித்திடும்.ஏற்கனவே, அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் ராணுவம் மற்றும் பொறியியல் கம்பெனி குஜராத் மாநிலம், பிபவாவ் என்னுமிடத்தில் உள்ள தன்னுடைய கப்பல்கட்டும் கம்பெனியில் அமெரிக்காவின் கடற்படை போர்க்கப்பல்களைப் பழுது பார்த்திடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. 

அமெரிக்காவுடன் இந்தியா செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதனை ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது.

ஆயுத உற்பத்தியில் இந்திய கார்ப்பரேட்டுகள் அமெரிக்க ராணுவத்தின் ஆயுத உற்பத்தி யாளர்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி இருப்பது என்பது மிகவும் கேந்திரமான துறை யான ராணுவம் மற்றும் ராணுவம் சம்பந்தமான கொள்கைகளை வடிவமைப்பதில், இந்தியாவின் இறையாண்மைமீதான ஆக்கிரமிப்பு முத லானவை குறித்து பல்வேறு சங்கடத்திற்குரிய கேள்விகளை எழுப்பி இருக்கின்றன.

ஆயுத உற்பத்தியில் பெரிய கார்ப்பரேட்டு கள் நுழைந்திருப்பதானது, இந்தியாவில் ‘ராணுவ தொழில் வளாகம்’ (military industrial complex)) அமைப்பதற்கான அடித்தளளத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆயுத உற்பத்தியில் கார்ப்பரேட்டுகள் அதிகரித்துக்கொண்டி ருப்பது, இந்தியாவின் ராணுவ ரீதியான ராஜதந்திர மற்றும் அயல்துறைக் கொள்கையிலேயே கடும் விளைவுகளை ஏற்படுத்திடும்.

அமெரிக்காவில், ராணுவ உற்பத்தியில் பெரும் ஆயுத உற்பத்தியாளர்கள் ஈடுபட்டி ருப்பது அந்நாட்டின் ராணுவமயத்திற்கு ஒருதூண்டுவிசையாக இருக்கிறது என்பதைநாம் அனுபவபூர்வமாக பார்த்துக்கொண்டி ருக்கிறோம். அதேபோன்ற நிலைமை இந்தியாவிலும் உருவாகும். 

இங்கேயும் பிராந்தியவெறியை அதிகப்படுத்தி, ஆயுத மோதல்களை உருவாக்குவதற்கான வேலை களில் தனியார் ஆயுத உற்பத்தியாளர்கள் இறங்குவதற்கான சூழலை ஏற்படுத்திடும்.இவை நம்முடைய மிகவும் முக்கியமான முன்னுரிமைகளான நாட்டின் வளர்ச்சி மற்றும்சமூகநலம் ஆகியவற்றையே ஆபத்திற்குள்ளாக் கிடும், சீர்குலைத்திடும். 

ராணுவ உற்பத்தியில் தனியார்மயம் தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும். 

அதற்குப் பதிலாக பொதுத்துறையில் தற்போது நடை பெற்றுவரும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியை விரிவாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும். 

இதற்குத் தேவையான அளவிற்கு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஈடுபட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...