bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 28 ஜூலை, 2017

நீங்கள் உண்ணும் உப்பில் விஷம்?

அயோடின்  ஆபத்துக்கள்

இன்று நாட்டில் பிரபலப்படுத்தப்படும் அயோடின் உப்பிலும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் ரசாயன கலவைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. நாம் உண்ணும் உணவில் அயோடின் கலந்த உப்பை பயன் படுத்துவதால், அது நல்ல உணவா? அல்லது விஷமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
xjEeSWPAjZgQliVH
இந்தியர்கள் சாதாரணமாக நோய் வந்து பாயில் படுக்கமாட்டார்கள். காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களையும், கடலைக்காய், தேங்காய் போன்றவற்றையும் உண்டு நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள். வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தைக் காத்து நின்றன.
இப்போது அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துவிட்டார்கள். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு புரளியை அன்னிய சக்திகள் கிளப்பிவிட்டன நம்முடைய விளம்பர அரக்கர்கள் மக்களை நம் பீசா, பர்கர், கொக்கோ கோலா பக்கம் இழுத்துவிட்டார்கள்.. பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் அவர்களுடைய உணவுத் திட்டத்திலிருந்து விடைபெற்றுவிட்டன. இன்று, சென்னையில் நம் நாட்டின் உயர் மக்கள் பீசாவுக்கும் பர்கருக்கும் அலை மோதுகிறார்கள்.
aboutsalt8
தமிழ் நாட்டில் சின்னச் சின்னக் கிராமங்களின் பெட்டிக் கடைகளில் கூட பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டுத் தின்பண்டங்கள்தாம் கடையை அடைத்துக்கொண்டு தொங்குகின்றன. பாரம்பரிய கடலை உருண்டைகளும், பொரி உருண்டைகளும், இஞ்சி மொரபாக்களும் காணாமல் போய்விட்டன. வெல்லப்பாகு கலந்து செய்யப்பட்ட புளிப்பு மிட்டாய்களும் ஆரஞ்சு மிட்டாய்களும் போன இடம் தெரியவில்லை. உப்பும் மசாலாவும் கொட்டி செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை இந்தக்கால குழந்தைகள் விரும்பித் தின்கின்றன.
“இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் மூளை இல்லை…!” என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார், ஒரு விஞ்ஞானி. இவர் பன்னாட்டு தொழில் அதிபர்களின் ஆதரவாளர். டாக்டர் இர்வின் என்ற இவர், அமெரிக்க இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். உப்பின் மூலக் கூறுகள் எவை, அதில் உள்ள வேதிப்பொருள்கள் எவை, அதை கார்ப்பரேட் கமாடிட்டியாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு நடத்தியவர்,. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரேட் படிப்பை முடித்தவர். பரங்கிப் பேட்டையில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய உணவில் உப்பின் பங்கு என்பது குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர்.’உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா?
எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு’….ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வரத் தொடங்கின. இப்படிப்பட்ட விளம்பரங்களால் இந்தியர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது. எந்த வீட்டிலும் இப்போது உப்பு ஜாடி இல்லை. உப்புப் பானை இல்லை. உப்புத்தூள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உபயோகத்திற்கு வந்துவிட்டன.
இந்த நிலையில் சமையலுக்காகப் பயன்படுத்தும் உப்பில் அயோடின் கலக்க வேண்டும். அப்போதுதான் ‘தைராய்டு நோய்’ வராது என்று மக்களுக்குத் தவறான செய்திகளை அன்னிய சக்திகள் தந்தது. மக்களும் நம்பி விட்டார்கள். பாமர மக்களுக்கு ‘அயோடின் உப்பு’ என்ற இந்த மிகப் பெரும் அபாயம் பற்றி தெரியாது. பன்னாட்டு கம்பெனிகள், பணம் மட்டுமே குறிக்கோளாக செயல்படுகின்றன என்பதே உண்மையாக இருக்கிறது.
சாதாரணமாக தமிழக கடற்கரைகளில் அமைக்கப்படும் உப்பளங்களில் இருந்து உற்பத்தியாகும் கல் உப்பைத்தான் இதுவரை மக்கள், தங்கள் உணவுகளில் பயன் படுத்தி வந்தனர். ஆனால், அதில் பல்வேறு தீமை பயக்கும் பொருட்கள் இருப்பதாக மக்களிடம் பரப்பி, அயோடின் கலந்த பொடி உப்பை பாக்கொட்டுகளில் அடைத்து, அதனை கடைகளில் விற்கச்செய்து கோடி கோடியாய் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார்கள், பெரிய தொழில் அதிபர்கள்.
ஆனால், இப்படியாக அயோடின் கலந்த உப்பைத்தான் பயன் படுத்த வேண்டும் என்று விளம்பரப்படுத்தும் கம்பெனிகள், உண்மையில் சரியான தரத்தில் பொடி உப்பை மக்களுக்கு வழங்குகிறார்களா? என்றால்,கேள்விக்குறிதான். இப்போது கல்லுப்பின் பயன்பாடு, இந்திய் கிராமங்களில் கூட அறவே நின்றுவிட்டது. சரியாக ஐந்தாண்டுகளில் பன்னாட்டு தொழில் அதிபர்களின் சதித்திட்டம் இந்தியாவில் வெற்றி அடைந்துவிட்டது.
இந்த ஆட்கொல்லி அயோடின் உப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க ஒரு நூறு இளைஞர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முன் திரண்டார்கள். மெகாஃபோனை தன் வாயின் முன் பிடித்துக்கொண்டு, வேகாத வெயிலில் நின்றபடி ஓர் இளைஞன் உரத்தக் குரலில் பேசினான்: -
‘பொது மக்களே….! நீங்கள் பாக்கெட் உப்புப் போட்டுதான் சோறு தின்கிறீர்களா? நம் பாட்டனும் பூட்டனும் கல் உப்பைத்தானே பயன்படுத்தினார்கள்? ஃபெரஸ் சயனைட் என்னும் மெல்லக் கொல்லும் நச்சுப்பொருள் உப்புத் தூளில் கலந்து விற்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா?’.
‘ஒரு குண்டூசி முனையளவு சயனைட் வயிற்றுக்குள்…. இல்லையில்லை வாய்க்குள் போனாலே அடுத்த நொடியில் இறக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.’
‘நாம் வாங்கும் பொடிஉப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக அலுமினியம் சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். அது சிவப்புக் கம்பளம் விரித்துப் புற்று நோயை வரவேற்கும்.’
‘2020 இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டும் என அப்துல் கலாம் முயற்சி மேற்கொண்டார். ஆனால் மேலை நாட்டு மருந்து முதலாளிகள் நம் நாட்டை ஒரு தளர்ந்த நாடாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள்.அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்த அயோடின் உப்பு.’
ஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள் தெரியுமா?. இப்போது தொப்பைப் பெருத்துப் போய் பார்க்கச் சகிக்கவில்லை.எல்லாம் இந்தச் செயற்கை உப்பு நிறைந்த தின் பண்டங்களைத் தின்றதன் விளைவுதான். போதாக் குறைக்கு நம் இல்லத்தரசிகள் சமையலுக்கும் இந்த நச்சு உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
கடலுக்கு அருகில் இருக்கும் உப்பளங்கள் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் கல்லுப்பில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாது உப்புகளும் உரிய விகிதத்தில் உள்ளன. இந்தக் கல்லுப்பை அப்படியே பயன்படுத்திய தலைமுறையினருக்கு இதய நோய் வந்ததா? சர்க்கரை நோய் வந்ததா? சிறு நீரகக் கோளாறுதான் வந்ததா? உடல் பருமன் நோய் என்பது அவர்கள் அறியாத ஒன்று.
நம் அரசியல்வாதிகள் ஊழல் மலிந்தவராய் இருப்பதால்தான் வெளிநாட்டுப் பணமுதலைகள் நம் நாட்டுக்குள் எளிதாக நுழைந்து குதியாட்டம் போடுகின்றன. வெல்ஃபேர் கவர்ண்மெண்ட் என்று வாய்கிழியப் பேசுவார்கள். ஆனால் உண்மையில் மக்கள் நலம் குழிதோண்டிப் புதைக்கப் படுகிறது. அடுத்த சில நொடிகளில் சைரன் பொருத்திய வேன்கள் வந்து நின்றன, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் அவர்களை அள்ளி வேனில் திணித்துக் கொண்டு விரைந்தனர்.
அமெரிக்காவின் மத்தியப் பகுதியிலிருந்து ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய பலர் மந்தமாகவும், பருத்தும், தைராய்டு வீக்கத்தோடும் இருப்பதைக் கவனித்த ராணுவ அதிகாரிகள், அவர்களுக்கு உணவில் அயோடின் குறைபாடு இருப்பதை ஆராய்ச்சி மூலமாகக் கண்டுபிடித்தார்கள். அப்போதுதான் 1924-ல் அயோடின் கலந்த உப்பு உபயோகத்துக்கு வந்தது. அந்தப் பகுதி மக்களுக்கு தைராய்டு பிரச்னை தீர்ந்தது. ஆனால், பல வருடங்களுக்குப் பிறகு, அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர்கள் பலர் அயோடின் மிகுதியால் ரத்தக்கொதிப்பு,மாரடைப்பு போன்ற வியாதிகளால் அதிக எண்ணிக்கையில் மடிந்தனர் என்பது மருத்துவ சரித்திரம்.
அளவுக்கதிகமாக அயோடின் கலப்பதும், அயோடின் மிகுதி வியாதிகளுக்கு ஒரு காரணம். இவற்றில் ‘ஹாஷிமேட்டோஸ்’என்ற ஆட்டோ – இம்யூன் வியாதி முக்கியமானது. இது, இப்போது உலகெங்கும் பெருகி வருகிறது. அயோடின் வேலை செய்வதற்கு ‘செலீனியம்’ என்ற தாதுப் பொருளும் தேவை. கடல் உப்பில் செலீனியம் உண்டு… அயோடின் உப்பில் இல்லை. செலீனியம் இல்லாத உப்புதான், இந்த வியாதிக்குக் காரணம்.
கல் உப்பு, கடல் நீரில் எடுக்கப்படுகிறது. ‘டேபிள் சால்ட்’என்பதன் மூலம்… கடல் மட்டுமல்ல. பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பில் மிஞ்சும் கழிவுகளிலிருந்தும் இந்த உப்பு தயாரிக்கப்பட்டு, பாலிஷ் போட்டு பளபளப்பாக்குகிறார்கள். ஆக,நாம் உபயோகிக்கும் ‘டேபிள் சால்ட்’, கடல் உப்பா, பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்புக் கழிவா? என்பதை நுகர்வோர் அறிவதற்கில்லை’’ என்று அதிர்ச்சி தகவலை, ஒரு விஞ்ஞானி வெளியிட்டுள்ளார்.
உண்மையில், நம் அன்றாட உணவில் அயோடின் தாராளமாகக் கிடைக்கிறது. கீழே இருக்கும் பட்டியலைப் பாருங்கள். இவற்றைஎல்லாம் அன்றாட உணவில் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தாலே… அயோடின் பற்றாக்குறை தானே ஓடிவிடும்.
மீன் 2 துண்டு – 35 மை.கி
முட்டை 1 – 12 மை.கி
பால் 1 கப் – 56 மை.கி
உருளைக்கிழங்கு 1 – 60 மை.கி
பீன்ஸ் 1/2 கப் – 32 மை.கி
வாழைப்பழம் 1 – 3 மை.கி
நம் ஊர் கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், கீரை வகைகள், பழங்கள் எல்லாவற்றிலும் அயோடின் உண்டு.
தாய்மார்களே, உங்கள் சமையலறைகளில் இருந்து அயோடின் கலந்த உப்பை அப்புறப்படுத்தி விடுங்கள். அது உங்கள் நலமான வாழ்வையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாழாக்கி விடும். குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு அயோடின் உப்பைக் கொண்டு சமைத்துப் பரிமாறப்படும் உணவு, பூப்பெய்தும் பருவம் அடையும் போது பல சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே தற்போது பல குடும்பத்தினர், அயோடின் சால்ட்டில் இருந்து, சாதாரண கல் உப்புக்கு மாறிக்கொண்டு வருகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
அயோடின் – உப்பு இருதய இயக்கத்தை சீர்குலைக்கும்
அயோடின் – உப்பு மாரடைப்பு நோய்க்கு வழிவகுக்கும்
அயோடின் – உப்பு மூளையை மந்தமாக்கும்
அயோடின் – உப்பு தைராய்டு வியாதியைத் தோற்றுவிக்கும்
அயோடின் – உப்பு தைராய்டு வீக்கத்தையும் ஏற்படுத்தும்
அயோடின் உப்பே கர்ப்பப்பை நோய்களுக்குக் காரணம்…!
இனி மக்களாகிய நாம்தான் திருந்த வேண்டும்…! பொடி உப்பைத் தவிர்ப்போம்… கல் உப்பைப் பயன் படுத்துவோம்…!”.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...