bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 19 ஜனவரி, 2019

மூளை சுறுசுறுப்பாக...,

அலுவலகத்தில் தினமும் 8 மணி நேரம் தொடர்ந்து உற்சாகமாக செயல்பட மூளை சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்.

துக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றுடன் மூளையை சுறுசுறுப்பாக்கும் உணவுகளும் மிக அவசியம். எந்தெந்த உணவுகள் நாள் முழுக்க மூளையை சுறுசுறுப்பாக்க உதவும் எனத் தெரிந்துகொள்வோம்.


காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள ஃபோலிக் அமிலம், மூளையின் கொழுப்பு அமிலச் சங்கிலியை உறுதியாக்குகிறது. தினமும் இரவு, ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.
 ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், அறிவுக்கூர்மையை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆனால் சாப்பிட்டவுடன் பழம் சாப்பிடுவது தவறு.
 சிறிது நேரம் கழுத்து சாப்பிடலாம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த முட்டை, மீன், நட்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவதால் டொகோசஹெக்ஸேனாய்க் ஆசிட் (Docosahexaenoic acid) எனும் அமிலச் சுரப்பு அதிகரிக்கிறது.
இந்த அமிலம், மூளை நரம்புகளைத் தூண்டி, மூளையின் செயல்திறன் மற்றும் அறிவுக்கூர்மையை அதிகரிக்கிறது.
 நம் ஊரில் கிடைக்கும் வஞ்சிரம், நெத்திலி மீன்களைச் சாப்பிடுவதன் மூலமாக ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை அதிக அளவு பெறமுடியும்.
மேலை நாடுகளில் பிரபலமான சால்மன் மீனுக்கு இணையான சத்து இவற்றில் அடங்கியுள்ளது. 
முட்டையில் உள்ள கோலின் சத்து, தண்ணீரில் கரையக்கூடியது.
இது, மூளை நரம்புகளைச் சுறுசுறுப்பாக்குகிறது.
வாரத்துக்கு மூன்று நான்கு முட்டைகள் வரை சாப்பிடலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், மஞ்சள் கருவைத் தவிர்த்து, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

 முழுதானியங்கள், இதய ரத்தநாளங்களைப் பாதுகாப்பதுடன், மூளையின் ரத்தஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இதனால், அறிவுக்கூர்மை, நினைவுத்திறன் அதிகரிக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் மட்டும் அல்லாமல், அனைவரும் இவற்றைத் தங்களது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சப்பாத்தி, களி, சம்பா கோதுமை உப்புமா உள்ளிட்ட உணவுகளை இரவு உணவாகச் சாப்பிடலாம்.

 பட்டையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. புற்றுநோயை எதிர்க்கக்கூடியது. அசைவ ரெசிப்பிகள் தயாரிக்கும்போது, பட்டையைச் சேர்க்க வேண்டும்.
செரிமானத்துக்குப் பயன்படும்.
 உடல் வெப்பத்தைக் குறைக்கும்.
அறிவுக்கூர்மையை அதிகரிக்கும்.

மூளை நரம்பு செல்களுக்கு இடையே தகவல் தொடர்பு ஏற்படுத்த உதவுவது, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் புரதச்சத்துக்கள். இவை இரண்டும் யோகர்ட் என்னும் கெட்டித் தயிரில் உள்ளது.
 இதனை மதியச் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். யோகர்ட் செரிமானமாகத் தாமதமாவதால், இரவில் இதனை சாப்பிடக் கூடாது.
லாக்டோஸ் இன்டாலரென்ஸ் எனும் பால் ஒவ்வாமை இருப்பவர்கள், இதனைத் தவிர்க்க வேண்டும்.
இதற்கு மாற்றாக மீன், முட்டை, காய்கறி, பழங்களைச் சாப்பிடலாம்.
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
 மரு உள்ளவரா?
கொலாஜன், ரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.
பொதுவாக இத்தகைய மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில் வரும். இவற்றை போக்க வழிகள் என்னென்ன எனப் பார்ப்போம்.

தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும்.

இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.

அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை பரு உள்ள இடத்தில் தேய்த்து 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

 வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தாலும் மருக்கள் மறையும்.
 இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். வேண்டுமானால் இந்த கலவையை இரவில் படுக்கும் போது தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.

 ஆப்பிள் சீடர் வினிகரை மரு உள்ள இடத்தில் காட்டன் கொண்டு தேய்த்து வந்தாலும், அது விரைவில் உதிர்ந்துவிடும்.

சோப்பு கொண்டு தேய்த்து கழுவி விட்டு, பின் டீ ட்ரீ ஆயிலை மரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதனால் சிறிது எரிச்சலும், வலியும் இருக்கும்.
 இருப்பினும். இதனை தினமும் மூன்று முறை செய்து வந்தால், மருக்களானது எளிதில் உதிரும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...