bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 27 பிப்ரவரி, 2013

ராஜபக்சேயின் போர் குற்றம்.

புதிய தீர்மானம்?

இலங்கை இறுதிக்கட்ட போரில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட நெஞ்சை பதற வைக்கும் வீடியோ ஆதாரங்களை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது.
 இதன் அடிப்படையில் இலங்கை அரசு மீது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் போர்க்குற்ற மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. சமீபத்தில் சேனல்-4 தொலைக்காட்சி 2-வதாக போர்க்குற்ற மீறல்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை வெளியிட்டது. அதில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவரது மகன் 12 வயது பாலச்சந்திரன் ஆகியோர் இலங்கை ராணுவத்தால் முகாமில் பிடித்து கொல்லப்பட்ட தகவல் வெளியானது. மேலும் தமிழர்கள் படுகொலை காட்சிகளும் சித்ரவதைப்படும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தது.
இது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது.
 இதையடுத்து இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பாக மேலும் ஒரு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்டுள்ளது.
 இந்த தீர்மானத்தையும் அமெரிக்காவே கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக மேலும் ஒரு வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு முன் 2 வீடியோ காட்சிகளையும் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. தற்போது வெளியாகியுள்ள புதிய வீடியோ காட்சிகளை வெளியிட்டிருப்பது யார் என்பது தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் இதனை தயாரித்துள்ளது. தி லாஸ்ட் பேஸ் (இறுதிக் கட்டம்) என்ற தலைப்பில் வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட காட்சிகளும் சிங்கள ராணுவத்தின் சித்ரவதையால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் தப்பிய தமிழர்களின் வாக்கு மூலங்கள் இடம் பெற்றுள்ளன. ஜெனீவாவில் இன்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் புதிய வீடியோ காட்சிகள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் அதிகாரிகளுக்கு போட்டு காண்பிக்கப்படுகிறது.
 பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாக்குமூலங்கள் தமிழில் இருப்பதால் அவற்றுக்கு ஆங்கிலத்தில் சப்- டைட்டில் போடப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நடந்த மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் மனித உரிமைகளுக்கான தூதர் நவி பிள்ளை ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் இலங்கை போர்க்குற்ற மீறல்கள் என்ற தலைப்பில் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருந்தன. ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இது போன்ற அபாயகரமான குற்றங்களில் இருந்து நீதி கிடைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று போர்க்குற்ற மீறல்களுக்கான ஆதாரங்களாக வீடியோ காட்சிகள் வெளியிடப்பட இருப்பதால் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகளின் பார்வை திரும்பும். இதன் மூலம் இலங்கையின் முகமூடி கிழித்து எறியப்படும். அதற்கு எதிரான பிடி மேலும் இறுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை ஒன்றை லண்டனில் நேற்று வெளியிட்டது. மனித உரிமை அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குனர் பிராட் ஆடம்ஸ் இதை வெளியிட்டுள்ளார். 141 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் 2006-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இலங்கை ராணுவம் மற்றும் போலீசாரால் பாதிக் கப்பட்ட 75 பேரின் வாக்கு மூலங்கள் இடம் பெற்றுள்ளன.
இவர்கள் அனைவரும் இலங்கையில் அதிகாரபூர்வ மற்றும் ரகசிய விசாரணை முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள். அங்கு இவர்கள் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து இருக்கிறார்கள்.
ராணுவம் மற்றும் போலீசாரால் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். தாங்கள் பட்ட இன்னல்களை அவர்கள் வாக்குமூலமாக தெரிவித்து இருக்கிறார்கள். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் இலங்கை ராணுவம் கொடு மைப்படுத்தி உள்ளது. வீடுகளில் இருக்கும் ஆண்கள், பெண்களை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறி கடத்திச் சென்று முகாம்களில் வைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.
சிறுவன் பாலச்சந்திரனைகொன்று

விடக்கூ றியதெ இனத்துரோகி கருணாதானாம். 
அவர்கள் சொல்வது உண்மைதான் என்பதை நிரூபிக்க அவர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சரி பார்த்து உறுதி செய்து இருக்கிறோம் என்றும் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போரில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பி இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆனால் அவர்களை இங்கிலாந்து அரசு இலங்கைக்கு  திருப்பி அனுப்பி வருகிறது. அவ்வாறு இலங்கை திரும்பிய பின்புஅவர்களை  சிங்கள ராணுவம் , போலீசார்  சித்ரவதைகள் செய்வ தாகவும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் இங்கிலாந்து இயக்குனர் டேவிட் மேபம் கூறுகையில், இங்கிலாந்து அரசு இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் கொள்கையில் மாற்றம் செய்து அவர்களுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும். இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
மாவீரன் பிரபாகரன் தமிழீழம் எனக் காட்டும் இடங்கள்தான் இன்று தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட இடங்களாக மாறிய சோகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...