bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 21 டிசம்பர், 2018

பிரபஞ்சன்

பிரபல எழுத்தாளரும், விமர்சகருமான பிரபஞ்சன் இன்று காலை காலமானார்.
பிரபஞ்சன் ஏப்ரல் 27, 1945-ல் புதுச்சேரியில் பிறந்தவர்.

தமிழில் சிறந்த எழுத்தாளராகவும், விமர்சகராகவும் விளங்கியவர்.
 பிரபஞ்சன் 1961ம் ஆண்டு எழுதத் தொடங்கினார். 
 100க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ள பிரபஞ்சன், தமிழக மற்றும் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை பெற்றவர்.
 ”வானம் வசப்படும்” என்ற நாவலுக்காக கடந்த 1995ம் ஆண்டு அவர் சாகித்ய அகாடமி விருது பெற்றார். 

 2017ம் ஆண்டு அவரின் எழுத்துப்பணி 55ம் ஆண்டை கடந்து உள்ளது. 

பிரபஞ்சனின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரஞ்சு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

வானம் வசப்படும், மகாநதி, மானுடம் வெல்லும், சந்தியா, காகித மனிதர்கள், கண்ணீரால் காப்போம், பெண்மை வெல்க உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

இதில் வானம் வசப்படும்,மாந்தம் வெல்லும் ஆகியவைகள் புகழ்பெற்ற அனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புதினங்கள் .
இரண்டுமே தினமணி கதிர் இதழில் தொடராகவந்து புகழ்பெற்றவை.

வானம் வசப்படும் நூலுக்காக 1995-ம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

மேலும், பாரதிய பாஷா பரிஷத் விருது,
கஸ்தூரி ரங்கம்மாள் விருது,
இலக்கியச் சிந்தனை விருது,
சி.பா.ஆதித்தனார் விருது,
 தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு,
 தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும்-பரிசுகளையும் பெற்றுள்ளார்.

 பிரபஞ்சன் 1961ம் ஆண்டு எழுதத் தொடங்கினார். 100க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ள பிரபஞ்சன், தமிழக மற்றும் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை பெற்றவர். ”வானம் வசப்படும்” என்ற நாவலுக்காக கடந்த 1995ம் ஆண்டு அவர் சாகித்ய அகாடமி விருது பெற்றார். 2017ம் ஆண்டு அவரின் எழுத்துப்பணி 55ம் ஆண்டை கடந்து உள்ளது. பிரபஞ்சனின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரஞ்சு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே புற்று நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபஞ்சன் தனது 73ம் வயதில் இன்று காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...