bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 4 டிசம்பர், 2018

கும்பல் கொலைகள்


திங்கள்கிழமை காலை 9 மணி அளவில் உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியிலுள்ள புலந்த்ஷகர் மாவட்டத்திலுள்ள மஹாவ் கிராமத்தை சேர்ந்த மக்கள், குறைந்தது 5 டஜன் பசுக்களின் இறந்த உடல்கள் என்று கூறப்படுவதை கண்டறிந்ததாகக் கூறியதில் இருந்து இந்த பிரச்சனை தொடங்கியது.

"அந்நேரத்தில் 200 பேருக்கும் அதிகமான பஜ்ரங் தல் ,சிவசேனா,சங் பரிவார் ஆட்கள் கூடிவிட்டனர்.அவர்களுக்கும்  மஹாவ் மற்றும் பக்கத்து கிராமங்களின் தலைவர்களால் சூடான விவாதங்கள் எழுந்தன.


இந்த சம்பவம் நடைபெற்ற ஒரு நாளுக்கு பின்னர், இந்த கிரமத்திலுள்ள அனைவரும் வெளியேறிவிட்டனர்.

பசு வதை என்றும் முஸ்லிமகள்,தலித்துகள் அதற்கு காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ள பின்னர், பின்விளைவுகளுக்கு பீதியடைந்து சிறுபான்மை முஸ்லிம்கள் தப்பியோடி விட்டனர்.

தலித் இந்துக்கள் காவல்துறையால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் தப்பி ஓடியுள்ளனர்.

கால்நடைகளின் உடல்களை சுற்றி கூடிய அவர்கள் கோபத்தால் வெகுண்டெழுந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி அவற்றை காவல்நிலையத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
அப்போது மணி பத்தரை.
  பஜ்ரங் தல் ,சிவசேனா,சங் பரிவார் ஆட்கள் மொத்தமாக 300க்கு அதிகமானோர் கூடவே, அவர்கள் நெடுஞ்சாலையிலுள்ள சிங்காரவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கைகளில் துப்பாக்கிகள்,வாள்கள் போன்ற ஆயுதங்கள் இருந்தன.

அந்த காவல் நிலையத்தில் இருந்த 6 காவல்துறையினரும் தலைமையகத்திற்கு தொலைபேசியில் அழைத்து விவரம் தெரிவித்து இருந்தனர்.
பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டது. 3 மைல் தொலைவில் இருந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய சுபோத் குமார் சிங் வாகனத்தில் ஏறி தனது ஓட்டுநரிடம், முடிந்த வரை வேகமாக செல்ல பணித்திருக்கிறார்.
சம்பவ இடத்தை அவர் முதலில் வந்தடைந்துள்ளார்.
11 மணிக்கு அந்த இடத்தை வந்தடைந்த அவர், உடனடியாக இந்த கும்பலில் புகுந்து கோபடைந்தோரை அமைதியடைய செய்ய முயன்றார்.
தன்னுடைய சகாக்களை போல குண்டு துளைக்காத ஆடையை கூட சுபோத் குமார் சிங் அணிந்திருக்கவில்லை. தன்னுடைய துப்பாக்கியையும் அவர் கையில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை நேரில் பார்த்தோர் வாக்குமூலம் தந்துள்ளனர்.
அந்த கும்பல் கூக்கிரலிட்டு, கேபத்தின் உச்சத்தில் கற்களால் காவல் நிலையத்தை ,காவலர்களை தக்க ஆரம்பித்த போது, அதிக காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தை வந்தடைந்தனர்.


"போலீசாருக்கும், கோபமடைந்திருந்த கும்பலுக்கும் இடையில் நடைபெற்ற அரை மணிநேரத்திற்கு மேலான காரசாரமான விவாதங்களுக்கு பின் கற்கள்,வாள்களால் தாக்க ஆரம்பித்தது கலவர கும்பல் இதனால்  துப்பாக்கிக்சூடு நடத்தப்பட்டது என்று இந்த காவல் நிலையத்திற்கு அருகில் இருக்கும் இடைநிலை பள்ளியில் வேலை செய்யும் நபர் ஒருவர் தெரிவித்தார்.

செல்பேசி இல்லாததால் பெண்களுக்கான கழிவறையில் அவர் பல மணிநேரம் அடைந்து கிடந்துள்ளார்.
நாட்டுப்புறத்து துப்பாக்கிகளை கொண்டிருந்த அந்த பஜ்ரங் தல் ,சிவசேனா,சங் பரிவார் கும்பல், காவல்துறையினர் மீது சுடத் தொடங்கினர்.


ஆனால்   சுபோத் குமார் சிங் கை  பழிவாங்கும் நோக்குடன் இருந்த கும்பல் சூழ்ந்து கொண்டு, அந்த பகுதியில் பசு வதை செய்யப்படுவதாக கூறப்படுவதை தடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

சில மூத்த காவல்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் இருந்த சிறியதொரு அறையில் தங்களை பூட்டிக்கொண்ட நிலையில், போராட்டக்காரர் ஒருவர் வீசிய செங்கல் அதற்கு வெளியே நின்ற சுபோத் குமார் சிங்கை தாக்கியது.

சுபோத் குமார் சிங் செங்கல்லால் தாக்கப்பட்டு, சுவருக்கு அருகில் சுயநினைவிழந்து கிடைப்பதை உணர்ந்து உடனடியாக நாங்கள் அலுவலக வாகனத்தில் அவ்விடத்திற்கு சென்றோம். பின் இருக்கையில் அவரை தூக்கி கிடத்திவிட்டு ஜீப்பை வயலை நோக்கி திருப்பினோம் என்று ஓட்டுநர் ராம் அஸ்ரெ கூறினார்.

காவல் நிலையத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை  பஜ்ரங் தல் ,சிவசேனா,சங் பரிவார் கும்பல் ஆயுதங்களுடன் பின்தொடர்ந்து வந்ததாகவும், அந்த  வயலில் அவர்கள் இன்னொரு துப்பாக்கி தாக்குதலை நடத்தியதாகவும் அக்கிராமத்தினர் கூறுகின்றனர்.
அந்த வயலில் சமீபத்தில்தான் சீர்திருத்த வேலைகள் நடைபெற்றிருந்ததால், வாகனத்தின் முன்பக்க சக்கரங்கள் புதைந்தன. எங்களுடைய வாழ்க்கையை பாதுகாத்து கொள்ள ஓடுவதை தவிர வேறுவழி இருக்கவில்லை என்று ராம் அஸ்ரெ திங்கள்கிழமை மாலையில் காவல்துறையினரிடம் கூறினார்.
இயக்கமே இல்லாமல் கிடந்த காவல்துறை அதிகாரி, அவரது அலுவலக காரில் கிடப்பதையும், கோபமாக இருந்த கும்பல் அவர் இறந்து விட்டாரா, உயிருடன் இருக்கிறாரா என்று கேள்வி கேட்பது போல பின்னணியில் ஒலியும் இருந்த காணொளி வைரலாக பகிரப்பட்டது.

அவர் தாக்குதலில் இறந்ததாக அரசு முதலில் தெரிவித்து.
ஆனால் அவரது இடது புருவத்திற்கு மேல் துப்பாக்கி குண்டு துளைத்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கைமூலம் தெரியவந்த பின்னரே இந்துத்துவா பசு காப்பு கும்பல் துப்பாக்கியால் அவரை சுட்டுக்கொன்றது தெரிய வந்தது.

ஆனால், அது எவ்வளவு ஆழம் சென்றது என்று அரசு தெரிவிக்கவில்லை.
அவரது துப்பாக்கியை பறித்து, யாரவது அவரை சுட்டிருக்கலாம் என்றுஅரசு தெரிவிக்கிறது.ஆனால் அவர் துப்பாக்கி எடுத்துவர வில்லை,குண்டு துளைக்காத சட்டையை அவர் மற்ற காவலர்கள் போல் அணியவில்லை என்றும் அவரின் கார் ஓட்டுநர் உறுதியாக தெரிவிக்கிறார்.காவல் நிலையத்தில் வைத்திருந்த அவரது 3 செல்பேசிகளையும், .32 துப்பாக்கியும் காணவில்லை.மாயமாக மறைந்துள்ளது.

அருகிலுள்ள மருத்துவமனை மருத்துவர்கள், அவர் இறந்தே மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தாக காவல்துறையினர் கூறுகின்றனர்.


2015ம் ஆண்டு மாட்டிறைச்சி சாப்பிட்டதாக முகமது அக்லாக் என்பவர் இந்தியாவில் நடைபெற்ற இந்துத்துவா பசு காப்பு கும்பல் கொலையின் முதல் வழக்கை விசாரித்த முதல் அதிகாரி இவர்தான்.
அதில்  சங் பரிவார் கும்பல் பொய் கூறி கொலை செய்ததாக சுபோத் சிங் அறிக்கை வெளியிட்டு குற்றவாளிகளை சிறையில் தள்ளினார்.

அந்த கோபத்திலேயே சுபோத்த்தை இந்துத்துவா கும்பல் திட்டமிட்டு கலவரம் உண்டாக்கி கொலை செய்துள்ளது தெரிய வருகிறது.

தத்ரி என்ற இடத்தில் முகமது அக்லாக் கொல்லப்பட்ட இடம் சுபோத் கொல்லப்பட்ட வயலில் இருந்து வெகுதொலைவில் இல்லை.

அந்த போராட்டக் கூட்டத்தில் இருந்த இளைஞர் சுமித்தும் சுடப்பட்டு இறந்துள்ளார்.இவர் தனது நண்பரை பேருந்து நிலையத்திற்கு வழியனுப்ப சென்றவர்.
 அவரும் மெர்ருட் நகர மருத்துவமனையில் இறந்துள்ளார்.

இந்த பகுதியில் தோன்றிய எதிர்பாராத, அறிவிக்கப்படாத வன்முறையில் இறந்த இரண்டாவது நபர் இவர்.
சுபோத் குமார் சிங்கின் இறப்பை பொறுத்தவரை, பசு வதை என்று கூறி போராட்டம் நடத்தி கொலை செய்தது பஜ்ரங் தல் ,சிவசேனா,சங் பரிவார் கும்பல்ஆள்வோரால் வளர்த்து விடுவதையே காட்டுகிறது.

கும்பலாக சென்று கலவரம் செய்து கள்ளத்துப்பாக்கியால் கொலைகளை செய்தால் குற்றவாளி தப்பிக்க வைக்கலாம் என்று எண்ணத்திலேயே இவ்வாறு நடந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 ====================================================
 ஜிசாட்-11 செயற்கைக்கோள் 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்ததிலேயே மிகுந்த எடையுள்ளதும், அதிநவீனமான முறையில் செய்யப்பட்டதுமான ஜிசாட்-11 செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியேன் ராக்கெட் மூலம் புதன்கிழமை காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தப் பணி வெற்றிகரமாக அமைந்தததாக இஸ்ரோ தமது இணைய தளத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரூ-வில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏரியேன்-5 VA-246 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைக் கோளின் எடை 5,854 கிலோ.

இந்தியாவில் அதிவேக இணைய இணைப்புகளைப் பெற இந்த செயற்கைக்கோள் உதவும்.
இந்தியாவின் பெருநிலப் பகுதியிலும், தீவுகளிலும் இணையத் தொடர்புக்கு உதவும் வகையில் இந்த செயற்கைக் கோளில் மல்டி-ஸ்பாட் பீம் ஆண்டெனா உள்ளது.

பிராண்ட்பேண்ட் சேவையில் இன்றியமையாத சேவையை ஆற்றும் என்றும், அடுத்த தலைமுறை செயலிகளை செயல்படுத்துவதற்கான தளத்தை அமைத்துக்கொடுக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புவி இயைபு மாற்று சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டது. உடனடியாக ஹசனில் உள்ள இஸ்ரோ முதன்மை கட்டுப்பாட்டு மையம் இந்த செயற்கைக்கோளை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.

 செயற்கைக்கோளில் உள்ள திரவ அப்போஜி மோட்டாரை இயக்கி, வட்ட புவிநிலை சுற்றுப்பாதைக்கு செயற்கைக் கோளை நகர்த்தும் பணியில் ஹசன் மையம் ஈடுபடும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.


 

👉 அப்பட்டமாக தெரியும் இந்திய வரலாற்றிலேயே அதுவும் நாட்டின் பாதுகாப்பு துறையில் 1,60,000 கோடி ஊழல்(rafale) 1,60,000 கோடி.

👉பல்லாயிரக்கணக்காண கோடி உழலான நாட்டின் வங்கி துறையில் ஊழல் (PNB Scam)

👉பல உயிர்களைக்கொன்று நூற்றுகணக்கான கோடியை சுருட்டி மருத்துவத்துறையில் ஊழல் (வியாபம்).

👉பல்லாயிரக்கணக்காண கோடியை சுருட்டி மின்சாரத்துறையில் ஊழல் (Adani Power Scam).

👉 நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கி பணமதிப்பிழப்பு என்ற பெயரில் அமித் ஷாஹ் மட்டும் சுருட்டிய தொகை 700+ கோடி.

👉இந்த நான்கு வருடங்களில் மட்டும் அமித் ஷாஹ்வின் மகன் ஜே ஷாஹ்வின் வருமானம் 16,000 தடவை அதிகமாகி இருக்கிறது. 16000 தடவை !


இப்படி மொத்தம் சரியாக 27 ஊழல் இந்த மோடியின் ஆட்சியில்.
👉ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி !

👉வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு !

இப்போ இது மேட்டர் இல்ல....


சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்... 2014 தேர்தலுக்கு வெறும் 6 மாதங்கள் இருந்தபொழுது சோசியல் மீடியாவில் ஊழலுக்கு எதிராக தையத்தக்க என்றும் நாடே அழிந்துவிட போகும் நிலையில் இருக்கிறது என்றும் யாரெல்லாம் குதித்தார்கள் என்று நினைவு இருக்கிறதா ?

குறிப்பாக NRIகள் அதுவும் மிக குறிப்பாக ப்ராஹ்மண NRIக்கள்... இப்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் ? என்ன வடை சுட்டுக்கொண்டு இருக்கிறார்கள் ?
இவர்களின் அமைதி எதை குறிக்கிறது ?

இந்த நான்கரை ஆண்டுகள் வெறும் ஊழல்மட்டும் பிரச்சனை அல்ல...
RBIல் தொடங்கி சுப்ரீம் கோர்ட், CBI வரை நடுத்தெருவில் வந்து நிற்கிறது...
அதே நடுத்தெருவில் சாதாரண எளிய மனிதர்கள் கட்டி வைத்து அடித்தும், உயிரோடு எரித்தும், கூட்டமாக மிதித்தும் கொல்லப்படுகிறார்கள், அவர்களை கொன்ற கொலைகாரர்கள் இதை youtubeயிலும் பதிவேற்றுகிறார்கள்..

அந்த ஊழல் ஒழிப்பு போராளிகள் குறிப்பாக NRIக்கள்... இப்போது எங்கு இருக்கிறார்கள் ?
இப்போ புரிகிறதா ? ஊழலெல்லாம் இந்த வெறிநாய்களுக்கு ஒரு பிரச்சனையே கிடையாது...
ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் முழுக்க முழுக்க ஓர் ரத்த வெறி பிடித்த மதவெறி/ஜாதிவெறி ஆட்சியை அமைப்பதுதான் இந்த வெறிநாய்களின் முழுநேர வேலை அதைத்தான் அந்த வெறிநாய்கள் வெற்றிகரமாக செய்து முடித்தார்கள்.  

அதற்கு இங்கு பல பேர் பலியானார்கள்...
முடிந்தால் அந்த வெறிநாய்களை டேக் செய்து கேள்வி எழுப்புங்கள்.. குலைக்குதான்னு பாப்போம்.
'அது எப்படி நாயுன்னு சொல்லலாம் நீங்க'ன்ணு கேட்டா...
நான் நாய்யுன்னு சொல்லவே இல்லையே... நல்ல பாரு ...
வெறி நாய்யுன்னு தான சொல்லிருக்கேன்.
நீ ஏன் வெறிநாயே டென்ஷன் ஆகுற ?
                                                                                                        -Thameem Tantra

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...