bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 17 பிப்ரவரி, 2011

கொசுவைக் குறைக்க,,,,,,


 
கொசுவை உண்ணும் சிலந்தி
கொசுவை உண்ணும் சிலந்தி
கொசுவை உண்ணும் சிலந்திவகை ஒன்று மனித வியர்வை வாடையால் ஈர்க்கப்படுகிறது என்பதை தாம் கண்டறிந்துள்ளதாக கென்யாவில் பணியாற்றிவரும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தக் கண்டுபிடிப்பு மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு ஆப்பிரிக்க பிரதேசத்து துள்ளியோடும் சிலந்தியினம், மனிதர்கள் பயன்படுத்திக் களைந்துபோட்ட காலுறையின் வாடையால் ஈர்க்கப்பட்டு அவற்றில் போய் தஞ்சம் அடைகின்றது என்றும், துவைத்து வைக்கப்பட காலுறைகளில் இவை சென்றடைவது இல்லை என்றும் தாம் கண்டறிந்துள்ளதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வியர்வை வாடை வரும்போது அந்த வாடைக்குரிய பாலூட்டி விலங்குகளின் இரத்தத்தை உறிஞ்சி வாழுகின்ற கொசுக்கள் இரையாகக் கிடைக்க வாய்ப்புள்ளது என்று நம்பி சிலந்திகள் வருகின்றன என்று தாம் நம்புவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சிலந்திகளுக்கு வீட்டில் இடம் தந்தால் வீட்டில் கொசுத்தொல்லை குறையும் அதனால் மலேரியாவில் இருந்து தப்பிக்க வாய்ப்பு ஏற்படும் என்று கென்யர்களிடம் அறிவுறுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் விரும்புகின்றனர்.
 சரி கொசு போய்விடும்.சிலந்தித்தொல்லை அதிகமாகிவிடுமே.
 அதற்கு என்ன செய்யலாம்ன்னு ஆராய்ச்சியை இப்பவே துவக்கிடுங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...