தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் |
இன்று குடிநீராக பயன்படும் தண்ணீரில் காரீயம், செம்பு உள்ளிட்ட உலோகம் மற்றும் ரசாயன பொருட்களால் மாசடைந்து காணப்படுகின்றது. இத்தகைய நச்சுப் பொருட்கள் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றை நீக்குவதற்கு பியூரிபையர் உட்பட பல்வேறு ரசாயன முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றுக்கு செலவு அதிகமாவதுடன் நச்சுத் தன்மை உள்ளதாகவும் இருக்கின்றன. இந்நிலையில் தேங்காய் நார் மற்றும் கடலை தோல் உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் தோல் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழ தோலைக் கொண்டும் தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்று இவர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது தண்ணீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால் போதும் அதில் உள்ள உலோக நச்சுப் பொருட்களை உடனடியாக தன்னகத்தே உறிஞ்சிக் கொள்ளும். எவ்வித ரசாயனப் பொருளையும் சேர்க்கத் தேவையில்லை. தண்ணீரை சுத்தப்படுத்துவதில் மற்ற முறைகளை விட இம்முறை சிறப்பானதாகவும் செலவு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழ தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். |
செவ்வாய், 15 மார்ச், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...
-
கேரள தொலைக்காட்சிகளில் ஒரு கத்தோலிக்க ஜிகினா ! கத்தோலிக்க திருச்சபை லீலைகளை மறைக்கும் திரைச்சீலை ! ப ண்டைய எபிரேயு மொழியில் “ஷேக்...
-
விவேகானந்தர் ஓர் இந்துத்துறவி மேலைநாடுகளுக்கு பயணித்த துறவி மேலை நாடு அறிந்த துறவி ஆங்கிலத்தில் அற்புதமாக உரையாற்றிய துறவி இறுதியான...
-
அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அயோத்தி தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக