bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 17 ஜூன், 2012

ஞாநி ‘ஓ’ ஞாநி


ஞாநிமிகப் பெரிய எழுத்தாளர் சமுகசிந்தனையாளர்.இதுதான் எனது முந்தையக்கருத்து.அவரது அலைகள்,தீம்தரிகிட,இதழ்கள் மற்றும் அவர் பொறுப்பேற்று நடத்திய தினமணி ,ஜூனியர் போஸ்ட் போன்றவை அப்படித்தான் என்னைக் கருதவைத்தன.
ஆனால் அவருக்கும் மனதின் ஒரத்தில் சில பிற்போக்கான எண்ணங்கள் உள்ளது
என்பது சமிபகாலங்களில் அவரையும் அறியாமல் வெளியாகிவிட்டது. அவருக்கு தமிழ் ,தமிழர் என்ற உணர்வு கொண்டவர்களை என்னகாரணமோ பிடிக்காது.அவர்களை எந்தவகையிளாவது மட்டம் தட்டி பத்திரிகைகளில் எழுதிவிடுவார். குட்டு,சொட்டு,மொட்டு என்று எழுதித்தள்ளிவிடுவார்.
ஆனால் அவரிடமே சில குட்டுக்கான அவலங்கள் உண்டு.
தான் நடத்திய தீம்தரிகிட இதழில் முன்பு தலையங்கம் பக்கம் கீழே ஒரு அறிவிப்பு இருக்கும். அது’குமுதம் இதழ் எழுத்தாளர் உரிமையை பறிப்பதால்
அவர்களைத்தவிர மற்றவர்கள் இதழில் இருந்து படைப்புகளை எடுத்தாளலாம்.’என்பதாகும்.அப்படி எழுதிய அவரே சில காலம் கழித்து அதே குமுதம் இதழில் தனது’ஓ’பக்கத்தை எழுத ஆரம்பித்துவிட்டார். குமுதம் எழுத்தாளர்களை கொண்டாட ஆரம்பித்து விட்டதா? இல்லை,ஞாநி தான் தனது நிலையில் இருந்து திண்டாடிவிட்டார்.
தமிழிழம் அவரைப்பொறுத்த மட்டில் வெற்றுக்கோசம்.அதைவிட ஈழம் வருவதை அவரும்,ராம்[இந்து]மும் பக்சேவைவிட அதிகமாக விரும்பவில்லை.
அதற்கு அவர் தமிழ் நாட்டில் இல்லாமல் கர்நாடகத் தமிழர்களால் விரட்டப்பட்டிருப்பது கொஞ்சம் ஆறுதல். அங்குள்ள தமிழர்கள் கேள்விக்கு பதில் கூற பயந்து கூட்டத்திற்கு வராமல் போய்விட்டது முக்கியநிகழ்வுதான்.ஆனால் அவர் இன்னும் தனது சக்திமிக்க பேனாவால் விசம் கக்காமல் இருப்பாரா? அதுதானே முக்கியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...