bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 28 மார்ச், 2013

சிங்கள விஷ[ம]ம்



இலங்கை ராஜபக்சேக்கு எதிரான உலகத்தமிழர் எழுச்சி இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது.
அதனை தனது குள்ளநரி தனத்தால் இந்திய ஒற்றுமைக்கே உலை வைக்கும் விதமாக கையாலத்துவங்கி விட்டது.
அதன் விஷமப்பிரச்சாரத்தை இந்தியாவில் தூதர் என்பவர் மூலமே ஆரம்பித்து விட்டது.
டெல்லியில் உள்ள இலங்கைக்கான் தூதர் வட இந்திய ஊடகங்களுக்கு ஒரு செய்தியை தனிப்பட்ட கவனத்துக்கு என்று அனுப்பியுள்ளார்.
"இலங்கை மக்கள்தொகையில் 75% உள்ள சிங்களர்கள் இந்தியாவின் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான்.
எனவே, இலங்கையில் வெறும் 12% மட்டுமே உள்ள தமிழர்களை இந்திய வம்சாவழியினர் எனக் கருதி கவலைப்படக் கூடாது. மாறாக 75% உள்ள சிங்களர்கள் தான் இந்திய வம்சாவழியினர் என்பதை உணர்ந்து அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைக் கொள்ள வேண்டும் .
இலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்கள், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களின் பூர்வீகக் குடிமக்கள்.
அசோக சக்கரவர்த்தி ஆட்சி நடைபெற்ற போது , அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே  வட இந்தியாவுக்கும் இலங்கைக் கும் இருந்த உறவுகள் பதிவாகி உள்ளன. அப்போது புத்தமதத்தை பரப்ப வட இந்தியாவில் இருந்து சென்ற வட இந்தியர்கள்தான் இன்று சிங்களர்களாக உள்ளனர்.
அதன் பின்னர் வந்த முகலாயர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சியில் இந்த தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதை தற்போது சிங்கள மக்கள் புதுப்பித்து வருகின்றனர். ஆண்டுக்கு இரண்டரை லட்சம் இலங்கையர்கள் இந்தியா வந்து செல்கின்றனர். வட இந்தியாவுடன் வரலாற்று தொடர்புள்ள இனம்தான் சிங்களர்.
இந்தி, வங்காளி, ஒரியா ஆகியவற்றின் மூல மொழி சமஸ்கிருதம். அதுதான் சிங்களத்துக்கும் மூலம்.அதை சிங்களரால் பேசவும் எழுதவும் முடியும்."
என்ன ஒரு அரிய கண்டு பிடிப்பு.
இதைத்தானே இலங்கையில் செல்வநாயகம் முதல் மாவீரன் பிரபாகரன் வரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்கள்.வந்தேறிகள்தான் சிங்கள காடையர்கள் என்று. 
வங்கம்,ஒரிசா,பீகார் என்று பிழைக்க வந்தவர்கள் தான் இவர்கள்.அவர்களின் ஒற்றுமையும் கலப்பும்தான்  இவர்கள் ஒரு புது இனமாக -சிங்களனாக வடிவெடுத்து விட்டன ர்.
அனால் பழைய வரலாறை சொல்லி வட இந்தியர்களிடம் ஆதரவு தேடுவது  தமிழர்களை கொன்று குவித்ததற்கான பாதுகாப்பு தேடி எழுப்பப்படும் பிரசாரம்.ஆனால் இந்திய அரசும் ,வட இந்தியத் தலைவர்களும் இப்போதும் சிங்கள வெறியர்களுக்கு ஆதரவாகத்தானே செயல்படுகிறார்கள்.
இந்த கரிய வாசம் எழுதிய கரிய வாசகம் வட இந்திய முதல்வர்களுக்கும்-அங்குள்ள எதிர்கட்சித்தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதன் மூலம் அசோகர் காலத்தில்தான் இலங்கையில் வடஇ ந்தியர்கள் அதாவது இன்றைய சிங்களர்கள் இலங்கையில் பிழைக்கப் போனது  வெளிச்சத்துக்கு வந்து விட்டது.அதற்கு முன் இருந்தே தமிழன் இலங்கையை ஆண்டு வந்ததும் சிங்களன் வாயாலே வெளி வந்து விட்டது.
ஒண்ட வந்த பிடா ரி ஊரில் உள்ளவர்களை விரட்டிய கதை உலக்குக்கு எடுத்துகாட்டப்பட்டு விட்டது.
கரிய வாசமும் இலங்கை அரசும் இந்த பிரச்னையை இப்போது கையில் எடுத்தாலும்.அதனால் தமிழர்களுக்கு ஒரு துன்பமும் புதிதாக வந்து விடப்போவதில்லை.
காரணம் வட இந்தியர்கள் ஏற்கனவே தமிழர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள்.
ராஜபக்ஷேவை விருந்துக்கு அழைத்து தமிழர்கள் மனதை நோக அடித்தவர்தான் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.
இலங்கைக்கு எதிராக மக்களவையில் ஒரு தீர்மானம் கொண்டுவரக்கூட விடாமல் வட இந்திய கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது சமீபத்திய செய்திதான்.
இந்தியாவில் தமிழன் தனித்தீவகத்தான் உள்ளான்.
காரணம் கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு மூத்த குடி மக்கள் இன்று  சொந்த நாடற்ற இனமாக உள்ளதுதான்.இறக்கும் தமிழ் நாட்டையும் வட இந்தியனிடம் அடகு வைத்து அவனின் வென்கொற்றக்  குடையின் கீழ்தான் காலம் தள்ளுகிறான்.தமிழன்.
கரிய வாசம் எழுதிய கரிய வாசகம் தமிழர்களுக்கு எதிராக பயன் படுவது போல் தமிழர்களுக்கும் இலங்கைக்குமான உரிமையையும் ஒரு பக்கம் எடுத்துக் காட்டியுள்ளது.
ஆனாலும் ஒன்றுபட்ட இந்தியாவில் தூதராக இருந்து கொண்டு ஒற்றுமையை சிதைக்கும் கரிய வாசம் போன்றவர்கள் ஒரு நாட்டின் தூதராக இருக்க உரிமை இழந்து விட்டார்.அவரை வெளியெற்றுவதுதான் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...