bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 30 மார்ச், 2013

கட்ஜு க்கு என்னவாயிற்று....?

முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு இதுவரை கூறிய கருத்துக்கள் பெரும்பாலான  இந்தியர்களின் கருத்துக்களுடன் ஒத்து போவதாக இருந்தது.ஆனால் இப்போது தெரிவிக்கும் கருத்துக்கள் முன்னாள் நீதிபதியாக இருந்தவரின் கருத்து என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை .சஞ்சய்தத் பெற்ற தண்டனை பற்றிய பற்றிய கருத்துக்கள் முரணானவை.
சில மாதங்களுக்கு முன் 90 சத இந்தியர்கள் முட்டாள்கள் எனவும், 90 சத நீதிபதிகள் முட்டாள்கள் ‌எனவும் கருத்து தெரிவித்தார்.
 பின்னர் காங்., மற்றும் பா.ஜ. முதல்வர்களை விமர்சித்தார் . 

மார்க்கண்டேய கட்ஜு 
இப்போது மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத்திற்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்கிறார். அதையே பலவழிகளில் கூறியும் வருகிறார்.

இப்போது ஆங்கில தொலைக்காட்சி  ஒன்றில் :-

" நான் பேசும் கருத்துக்கள் விளம்பரம் தேடுவதற்காக அல்ல. மனதில் பட்டதை வெளிப்படுத்துகிறேன்.
 நாட்டில் எல்லா வாக்காளர்களும் முட்டாள்கள் தான். [முன்பு இந்த சதவிகிதம் 90 ஆக இருந்தது.]
தேர்தலில் நான் ஓட்டளிக்கமாட்டேன். ஏனென்றால் எனது ஒரு ஓட்டினால் எந்த பிரயோஜனமும் இல்‌லை. விளம்பரம் தேடிக்கொள்வதற்காக [?]நான் எப்போதும் கருத்து தெரிவிக்கவில்லை. 
ஆனால் அது போன்ற சூழ்நிலை என்னை தொடர்ந்து வருகிறது. என்னால் என்ன செய்ய முடியும். நாட்டில் நடந்து வரும் தற்போதைய சூழ்நிலையை வேடிக்கை பார்க்க நான் செவிடனோ, ஊமையோ அல்ல.
 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சஞ்சய்தத் பெரும் மனவருத்தத்தில் உள்ளார். இந்த விஷயத்தில் அவருக்கு ஆறுதலாக இருக்க காங்கிரஸ் கட்சி தயங்குகிறது. அவரது தந்தை சுனில் தத் முன்னாள் காங். எம்.பி.யாக இருந்தார். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி அவருக்கு எதுவும் செய்யவில்லை. "
என்று அவர் கூறியுள்ளார்.
ஒருவர் தண்டனை விதிக்கப்பட்டால் மனவருத்தம் கொள்ளாமல் எப்படி இருப்பார்.?அதற்காகத்தானே தண்டனையே வழங்கப்படுகிறது.மார்க்கண்டேய கட்ஜு சஞ்சாய் தத் குற்றம் இழைக்கவில்லை என்கிறார்.மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது,ஆயுதங்களை மறைவாக ஒளித்து வைக்க உதவியது,வெடி பொருட்களை வைத்திருந்தது எல்லாம் தேச பக்தி செயல்களா?மும்பையில் குண்டு வெடிப்பில் என்ன காரணத்தினால் தான் இப்படி உடல் சிதறி சாகிறோம் என்று தெரியாமலேயே உயிரை விட்டா நூற்றுக்கணக்கானொர் சிந்திய ரத்தத்தில் சஞ்சய்தத் கைகளும் கறை படிந்திருப்பது ஏன் கட்ஜுக்கும் ,இங்குள்ள நடிகர் ரஜின்காந்துக்கும் தெரியவில்லை.
இப்போது தண்டனையைப்பார்த்து அழுவதாலும் ,மனவருத்தம் அடைவதாலும் சஞ்ச்சய்த்துக்கு விடுதலை அளிக்க வெண்டும்.அவர் அப்பா காங்கிரசு மக்களவை உறுப்பினராக இருந்தார் என்பதாலும் விட முடியுமா?
அதுவும் நீதியை கட்டிக்காத்த இடத்தில் இதுவரை அமர்ந்திருந்தவர் சொல்லுகிற வசனமா இது.?

எதற்கென்று தெரியாமல்,யார் என்று தெரியாமல் வீட்டை வடைகைக்கு கொடுத்த பொருளை கொண்டு சென்ற பேரறிவாளன் போன்றோருக்கு தூக்குத்தணடனை விதிக்கப்பட்டு நாளை என்னிக்கொண்டிருக்க்கிரார்களே அவர்களை பற்றி இந்த ரஜினியும்-கட்ஜும்இதுவரை கருத்து கந்தசாமிகளாக மாறாததுஏன் ?  
சஞ்சய் தத் தெரிந்தே தவறு செய்துள்ளார்.கையுங் களவுமாக மாட்டியும் உள்ளார்.ஆதாரங்களும் உள்ளன.குற்றமும் நிருபிக்கப்பட்டுள்ளது.ஆனால் சந்தேகத்தின் பேரிலேயே பேரறிவாளன்,சாந்தன்,முருகன் உள்ளெ உள்ளனர்.அவர்கள் கையும் களவுமாக மாட்டவும் இல்லை.
நடிகர் என்றால் ஒரு வழக்கு அப்பாவி மக்கள் என்றால் ஒரு வழக்கா?கசாப்,அப்சல் குருக்கள் கூட எதோ லட்சியத்துக்காக் போராடுவதாகத்தான் சொல்லி குண்டுகளை வேடிக்கச்செய்தார்கள் அவர்களை தூக்கில் போட்டது தப்பான செயலா?
இந்திய சுதந்திரத்துக்காக ,இந்தியமக்களை கொன்று குவித்ததற்காக குண்டு வீசிய பகத்சிங்-சுகதேவ்-ராஜகுருவை கூட இங்கு காரணமே கேட்காமல் தூக்கில்தான் போட்டார்கள்.அதற்கு இங்கிருந்த காந்தியும் துணைதானே போனார்.விடுதலைப்போராட்ட வீரர்களுக்கே இந்த தண்டனை .அப்படியென்றால் தீவிரவாதிகளுக்கும் அதற்கு துணை போன-போகிறவர்க ளுக்கும் எப்படிப்பட்ட தண்டனை வழங்க வே ண்டும்.

----------------------------------------------------------------------------------------------

வைரஸ்களிடமிருந்து தப்பிக்க....  

 நமது தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கும், அந்த தகவல்களை தேவையான நேரம் பார்வையிடவும் -பயன்படுத்தவும் ,தகவல்களை எளிதாக  எடுத்துச் செல்வதற்கும் பென்டிரைவ்கள் (USB) பயன்படுத்தப்படுகின்றன.
இத்தனை வசதி மிக்க பென் டிரைவகளை கணினி வைரஸ்கள் எளிதாக தாக்கி விடுகின்றன.பலர் நாம் கொடுக்கும் பென் டிரைவ்களை கையால் வாங்கி தங்கள் கணினிகளில் பயன்படுத்த மறுக்கிறார்கள். பென் டிரைவ்களை    வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்றாக காணப்படுகின்றது .
உங்களையும் உங்கள் பென் டிரைவ்களையும் காக்கும் ஒரு மென்பொருள் பாதுகாக்கிறது.
மேலும் தொடர 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
நச்சு ஆலைக்கு மூடு விழா?

" தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடசென்னை மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
 ஸ்டெர்லைட்  நச்சு ஆலையில் இருந்து கந்தக டை ஆக்சைடு வாயு அடிக்கடி சட்டவிரோதமாக வெளியேறுவதால் ஏராளமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஆலையை மூட வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. ஆலையை மூட வலியுறுத்தி பல்வேறு தரப்புகளிலும் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வந்தது. இதனையடுத்து ஆலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடிகோட்டாட்சியருக்கு  உத்திரவிடப்பட்டது.
அவர் பரிந்துரை மற்றும் நகர மக்களின் கடுமையான் போராட்டம் காரணமாக  ஆலையை மூடுமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசிஷ் குமார் பரிந்துரை செய்தார்.அதை  அடுத்து ஆலையை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆணை பிறப்பித்தது.. முதல் கட்டமாக ஆலைக்கு மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்ட து.
 முற்றிலுமாக ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது."
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

"ஹோலி "சாயம் பூசிவிளையாடி ன களைப்புதான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாட்டு நடப்பு பார்க்கிற மாதிரியா இருக்கு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...