bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 19 அக்டோபர், 2018

ஏன் பார்ப்பனீயம் எதிர்க்கப்படவேண்டியது?

ஏன் பிராமணீயத்தை எதிர்க்கின்றோம்..?
ஆரியர்களை விட ஆங்கிலேயர்கள் குறைந்த அயோக்கியர்கள் தான் ...!
800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள் !
ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..?
800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், இந்து மனு தர்ம கோட் பாட்டினை எதிர்க்கவே இல்லை.
ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்..?
அவை என்னவென்று பார்ப்போம்...
பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும்,
வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்
எனவும் இருந்த இந்து மனுதர்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,
சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில்
1773 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு சட்டத்தை எழுத தொடங்கியது.
சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை,
1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.
1804யில் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது
1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது
பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும்
(இந்து மனு சட்டம் VII 374, 375),
ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்னைணோடு உறவு கொள்ளலாம். ஆனால் அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்து விட்டால் பிணம் போன்றதேயாகும்.
(இந்து மனு சட்டம் IX 178)
பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் - - -பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது....!!!
சூத்தர பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும்.
அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.
பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த
இந்து சட்டத்தை 1835 ஆண்டு Lord
மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற
ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை 1835-ல் பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.
1835 ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்காண அரசாணை கொண்டுவரப்பட்டது.
1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்திரவு பிறப்பித்தது.
இந்தியாவை மட்டும் பிரிடிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால் "ஜோதிராவ் புலே"வுக்கு கல்வி கிடைத்திருக்காது,
இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது,
அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவ பணியும் கிடைத்திருக்காது,
ஏதோ திராவிட கருத்தியல் மட்டும்மே ஆரிய சனதான வழக்கங்களை எதிர்கிறது, அசுரர்களக குறித்து பேசுகிறார்கள் என்பதை தாண்டி, இப்போது வடக்கிலும் எழும் எதிர்ப்பு குரல்கள்...
இப்போதெல்லாம், வடமாநில பழங்குடி இனம் மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட இனமக்கள், அசுரர்களை அழிக்கப்பட்டதை, ஆரியர்கள் வெற்றிகொண்டதை கொண்டாடும் துர்கா பூஜா, ராம நவமி, ஜென்மாஷ்டமி, தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு மாற்றாக, தங்கள் முன்னோர்களான அசுரர்களை போற்றும் பண்டிகைகளை கொண்டாட ஆரம்பித்துள்ளனர். மத்திய இந்தியாவில் ராவண லீலா கொண்டாடும் கோண்டு இன திராவிட பிரிவு மக்கள்..... கோண்டு அரசனாகிய ராவணன், ஆரிய படையெடுப்பால் கொல்லப்பட்டதாக சொல்கிறார்கள்...
இராவணனை, மகிஷாசூரனைக் கொல்வதாய் நடக்கும் துர்கா பூஜைக்கு தடைவிதிக்க வேண்டும் என சட்டீஸ்கர் மாநிலத்தில் ஆதிவாசிகள் வழக்கு ஒன்று பதிவு செய்திருக்கின்றனர். அவர்கள் தங்கள் முன்னோர்கள், கடவுள்கள் என்றும் அவர்களைக் கொல்வதாக சித்தரிப்பதையும் அதை கொண்டாடுவதையும் ஏற்கமுடியாது என்றும் அம்மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கின்றனர். செய்தி லிங்க்குகள் கமென்ட்டுகளில்

//Over 15 districts spread across Uttar Pradesh, Bihar, Jharkhand, West Bengal and Orissa saw Durga Puja with a difference this festival season. Instead of the goddess slaying Mahishasur, the usual story of the Puja, this year, tribals and people belonging to Scheduled Castes and backward classes in these districts are celebrating the "demon king" as a non-Aryan inhabitant and a just king of the land, with Durga representing Aryan invaders. //
//Forward Press had published stories countering the mainstream narratives on Dussera/Durga Puja, essentially asserting that Mahisasura was an popular adivasi king who was killed by the brahminic Hindus by deception. The Asur tribe in Jharkhand has similar story to tell about its martyr Mahisasura. Here is a counter-narrative on Durga Puja from West Bengal//
//According to their version, Ravan was a Gond king who was slain by Aryan invaders. Ravan was connected to Central India. In a clash of cultures, the Aryans distorted Gond history.//
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2006 ஆம் ஆண்டு சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கேரளா ஆர்எஸ்எஸ் இந்துத்துவ தலைவர்கள் வலியுறுத்தினார்கள்..
 நீதிமன்றத்தில்  வழக்கு போட்டார்கள்.. 
தீர்ப்பு அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக வந்ததால் அவர்களே இப்போது குட்டிக்கரணம்  அடித்து எதிர்ப்பு நாடகத்தை அரங்கேற்றி கலவரத்தை உருவாக்குகிறார்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...