bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

உண்மை வெளிவருமா?

கீழடியும், ஸ்டெர்லைட் படுகொலைகளும்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி பல போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. இந்தப் போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் கமிஷனை நியமித்தது. இந்த ஆணையம், கடந்த ஜூன் மாதம் முதல் தனது விசாரணையை நடத்திவருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடியில் உள்ள 4 காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதில் முக்கியமான 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து, 5 வழக்குகளும் ஒரே வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., மாரிராஜா தலைமையிலான போலீஸார் விசாரணையையும் நடத்தினர். இந்நிலையில், 243 வழக்குகளில் சிப்காட் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட 173 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றப்பட்டது.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பந்தமான வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 15-க்கும் மேற்பட்ட பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த நீதிபதிகள் செல்வம் மற்றும் பஷீர் அகமது ஆகியோர் அமர்வு, இச்சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-க்கு மாற்றி, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி போலீஸார் சி.பி.ஐ-யிடம் ஆவணங்களை சில நாட்களுக்கு முன்பு ஒப்படைத்தனர்.
இந்தச் சூழ்நிலையில், சி.பி.ஐ துணைக் கண்காணிப்பாளர் ரவி தலைமையிலான குழுவினர், நேற்று மதியம் தூத்துக்குடியில் விசாரணையைத் தொடங்கினர்.
கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்குதல், சந்தேக மரணங்கள் உள்ளிட்ட 13 சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக அவர்கள் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையம், தென்பாகம், வடபாகம், ஆயுதப்படை வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வழக்கு தொடர்பாக ஆவணங்களை சேகரித்தனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்களுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்த ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்தனர். இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடங்கினர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த வட்டாட்சியர் சந்திரனிடம் சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் இந்த துப்பாக்கி சூடும்,அதில் 13 பேர் இறந்ததும் தெரியாமல் தொலைக்காட்சியில் அது.இது,எது பார்த்துக்கொண்டிருந்ததாக கூறும்  எடப்பாடி எடுபிடி அரசோ  ‘இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியது அவசியம் இல்லாத ஒன்று. 

இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்; மீண்டும் தமிழக அரசே விசாரணை நடத்திட உத்தரவிட வேண்டும்” என்று  உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
காரணம் துப்பாக்கி சூடு நடத்த ஆணையிடும் அதிகாரம் உள்ள மாவட்ட ஆட்சியர் .அருகில் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் இருக்கையில் 13 கிமீ தூரத்தில் உள்ள துணை வட்டாசியர் சுட ஆணை கொடுத்த அசிங்கம் தெரியுமே?
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே இருந்த கண்காணிப்பு காமிரா மக்கள் வரும் முன்னரே கீழ்நோக்கி தொங்கிக்கொண்டிருந்த்தும்,வாயில் கண்ணாடிகள் உள்ளிருந்து உடைக்கப்பட்டதும் தெரிந்து விடும்.

நல்ல காவல் அலுவலர்களும் இருந்தனர்  

மக்கள் திரள் வரும் முன்னரே அரசு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதும்,கழிக்கப்பட்ட கோப்புகள் தீவைக்கப்பட்டதும் தெரிந்து விடுமே?
ஸ்டெர்லை எதிர்ப்பு போராட்டம் நடக்கும் என்பதும்,அதற்கு அன்று 144 தடை விதிக்கப்பட்டதும் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷுக்கு நன்கு தெரியும் .144 தடை போட்டதே அவர்தான்.
பின் இவ்வளவு சட்டம் ஒழுங்கு பத்தாஹ்ட்டம் உள்ள நிலையில் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்காமல் மாவட்ட ஆட்சியரும்,மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் தலைமையிடத்தை விட்டு ஓட்டப்பிடாரம்,விளாத்திகுளம் என்று திடீர் முகாம் சென்றது ஏன்?
அப்படியே இருந்தாலும் காவல்துறை கூறியபடியே வரும் வழியெல்லாம் கலவரம் செய்து சமூக விரோதிகள்,நக்சலைட்டுகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தாக்க வரும் போது அருகில் உள்ள அலுவலகத்திற்கு ஏன் அவசரமாகத்திரும்பி வரவில்லை.

அருகிலேயே மாவட்ட ஆட்சியர்,காவல் கண்காணிப்பாளர் இருக்கையில், பேக்ஸ், அலைபேசி ,நேரடி காணொளி (வீடியோ கான்பரன்ஸ் வசதிகள் முதல்வர்,தலைமைச்செயலாளர் போன்ற அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு நிலையை விளக்கி ஆணைகள் பெறாமல் சான்றுகள் வழங்கும் அதிகாரம் மட்டுமே உள்ள அதாவது சிறப்பு காவல் சார் ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ )நிலையில் உள்ள  துணை வட்டாட்சியரிடம் துப்பாக்கிச்சூடு நடத்த ஆணை பெற்றது ஏன்?
என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இதைவிட மர்மம்  மஞ்சள் பனியனுடன் வேனில் ஏறி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்ட காவலர் தான் குறிமட்டுமே பார்த்ததாகவும் சுடவில்லை,அதற்குள் வேறு நபர்கள் கொலை செய்யப்பட்டவர்கள் அருகில் இருந்தே ஆட்களை அடையாளம் கண்டு சுட்டதாக கூறியுள்ளார்.
அத்துடன் "காலையிலேயே எங்களை சீருடை இல்லாமல் மஞ்சள் பணியந்தான் வரக்கூறினார்கள் .நாங்கள் முன்பு பயிற்சி முடித்து மஞ்சள் பனியனுடன் மாவட்ட ஆட்சியருடன் எடுத்த புகைப்படத்தை பத்திரிகைகளுக்கு கொடுத்ததம் யார் எனத்தெரியவில்லை.அப்படம் மக்கள் தொடர்பு அலுவலகத்தாரால்தான் எடுக்கப்பட்டது "என்றும் கூறியுள்ளார். 
சி.பி.ஐ தோண்டினால் கீழடி,ஆதிச்சநல்லூரை விட பல உண்மைகள் வெளிவரலாம்.ஆனால் கீழடி,ஆதிச்சநல்லூரை ஆட்சியாளர்கள் 13 பேர்கள் கொலை ,ஸ்டெர்லைட் விவகாரத்தை தோண்டவிடுவார்களா?
அல்லது தோண்டியபின் அறிக்கையை எப்படி விட வேண்டும் என்று அனில் அகர்வால்தான் அறிவுரை வழங்காமல் இருப்பாரா?
=======================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...