bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 30 மார்ச், 2013

கட்ஜு க்கு என்னவாயிற்று....?

முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு இதுவரை கூறிய கருத்துக்கள் பெரும்பாலான  இந்தியர்களின் கருத்துக்களுடன் ஒத்து போவதாக இருந்தது.ஆனால் இப்போது தெரிவிக்கும் கருத்துக்கள் முன்னாள் நீதிபதியாக இருந்தவரின் கருத்து என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை .சஞ்சய்தத் பெற்ற தண்டனை பற்றிய பற்றிய கருத்துக்கள் முரணானவை.
சில மாதங்களுக்கு முன் 90 சத இந்தியர்கள் முட்டாள்கள் எனவும், 90 சத நீதிபதிகள் முட்டாள்கள் ‌எனவும் கருத்து தெரிவித்தார்.
 பின்னர் காங்., மற்றும் பா.ஜ. முதல்வர்களை விமர்சித்தார் . 

மார்க்கண்டேய கட்ஜு 
இப்போது மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத்திற்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்கிறார். அதையே பலவழிகளில் கூறியும் வருகிறார்.

இப்போது ஆங்கில தொலைக்காட்சி  ஒன்றில் :-

" நான் பேசும் கருத்துக்கள் விளம்பரம் தேடுவதற்காக அல்ல. மனதில் பட்டதை வெளிப்படுத்துகிறேன்.
 நாட்டில் எல்லா வாக்காளர்களும் முட்டாள்கள் தான். [முன்பு இந்த சதவிகிதம் 90 ஆக இருந்தது.]
தேர்தலில் நான் ஓட்டளிக்கமாட்டேன். ஏனென்றால் எனது ஒரு ஓட்டினால் எந்த பிரயோஜனமும் இல்‌லை. விளம்பரம் தேடிக்கொள்வதற்காக [?]நான் எப்போதும் கருத்து தெரிவிக்கவில்லை. 
ஆனால் அது போன்ற சூழ்நிலை என்னை தொடர்ந்து வருகிறது. என்னால் என்ன செய்ய முடியும். நாட்டில் நடந்து வரும் தற்போதைய சூழ்நிலையை வேடிக்கை பார்க்க நான் செவிடனோ, ஊமையோ அல்ல.
 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சஞ்சய்தத் பெரும் மனவருத்தத்தில் உள்ளார். இந்த விஷயத்தில் அவருக்கு ஆறுதலாக இருக்க காங்கிரஸ் கட்சி தயங்குகிறது. அவரது தந்தை சுனில் தத் முன்னாள் காங். எம்.பி.யாக இருந்தார். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி அவருக்கு எதுவும் செய்யவில்லை. "
என்று அவர் கூறியுள்ளார்.
ஒருவர் தண்டனை விதிக்கப்பட்டால் மனவருத்தம் கொள்ளாமல் எப்படி இருப்பார்.?அதற்காகத்தானே தண்டனையே வழங்கப்படுகிறது.மார்க்கண்டேய கட்ஜு சஞ்சாய் தத் குற்றம் இழைக்கவில்லை என்கிறார்.மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது,ஆயுதங்களை மறைவாக ஒளித்து வைக்க உதவியது,வெடி பொருட்களை வைத்திருந்தது எல்லாம் தேச பக்தி செயல்களா?மும்பையில் குண்டு வெடிப்பில் என்ன காரணத்தினால் தான் இப்படி உடல் சிதறி சாகிறோம் என்று தெரியாமலேயே உயிரை விட்டா நூற்றுக்கணக்கானொர் சிந்திய ரத்தத்தில் சஞ்சய்தத் கைகளும் கறை படிந்திருப்பது ஏன் கட்ஜுக்கும் ,இங்குள்ள நடிகர் ரஜின்காந்துக்கும் தெரியவில்லை.
இப்போது தண்டனையைப்பார்த்து அழுவதாலும் ,மனவருத்தம் அடைவதாலும் சஞ்ச்சய்த்துக்கு விடுதலை அளிக்க வெண்டும்.அவர் அப்பா காங்கிரசு மக்களவை உறுப்பினராக இருந்தார் என்பதாலும் விட முடியுமா?
அதுவும் நீதியை கட்டிக்காத்த இடத்தில் இதுவரை அமர்ந்திருந்தவர் சொல்லுகிற வசனமா இது.?

எதற்கென்று தெரியாமல்,யார் என்று தெரியாமல் வீட்டை வடைகைக்கு கொடுத்த பொருளை கொண்டு சென்ற பேரறிவாளன் போன்றோருக்கு தூக்குத்தணடனை விதிக்கப்பட்டு நாளை என்னிக்கொண்டிருக்க்கிரார்களே அவர்களை பற்றி இந்த ரஜினியும்-கட்ஜும்இதுவரை கருத்து கந்தசாமிகளாக மாறாததுஏன் ?  
சஞ்சய் தத் தெரிந்தே தவறு செய்துள்ளார்.கையுங் களவுமாக மாட்டியும் உள்ளார்.ஆதாரங்களும் உள்ளன.குற்றமும் நிருபிக்கப்பட்டுள்ளது.ஆனால் சந்தேகத்தின் பேரிலேயே பேரறிவாளன்,சாந்தன்,முருகன் உள்ளெ உள்ளனர்.அவர்கள் கையும் களவுமாக மாட்டவும் இல்லை.
நடிகர் என்றால் ஒரு வழக்கு அப்பாவி மக்கள் என்றால் ஒரு வழக்கா?கசாப்,அப்சல் குருக்கள் கூட எதோ லட்சியத்துக்காக் போராடுவதாகத்தான் சொல்லி குண்டுகளை வேடிக்கச்செய்தார்கள் அவர்களை தூக்கில் போட்டது தப்பான செயலா?
இந்திய சுதந்திரத்துக்காக ,இந்தியமக்களை கொன்று குவித்ததற்காக குண்டு வீசிய பகத்சிங்-சுகதேவ்-ராஜகுருவை கூட இங்கு காரணமே கேட்காமல் தூக்கில்தான் போட்டார்கள்.அதற்கு இங்கிருந்த காந்தியும் துணைதானே போனார்.விடுதலைப்போராட்ட வீரர்களுக்கே இந்த தண்டனை .அப்படியென்றால் தீவிரவாதிகளுக்கும் அதற்கு துணை போன-போகிறவர்க ளுக்கும் எப்படிப்பட்ட தண்டனை வழங்க வே ண்டும்.

----------------------------------------------------------------------------------------------

வைரஸ்களிடமிருந்து தப்பிக்க....  

 நமது தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கும், அந்த தகவல்களை தேவையான நேரம் பார்வையிடவும் -பயன்படுத்தவும் ,தகவல்களை எளிதாக  எடுத்துச் செல்வதற்கும் பென்டிரைவ்கள் (USB) பயன்படுத்தப்படுகின்றன.
இத்தனை வசதி மிக்க பென் டிரைவகளை கணினி வைரஸ்கள் எளிதாக தாக்கி விடுகின்றன.பலர் நாம் கொடுக்கும் பென் டிரைவ்களை கையால் வாங்கி தங்கள் கணினிகளில் பயன்படுத்த மறுக்கிறார்கள். பென் டிரைவ்களை    வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்றாக காணப்படுகின்றது .
உங்களையும் உங்கள் பென் டிரைவ்களையும் காக்கும் ஒரு மென்பொருள் பாதுகாக்கிறது.
மேலும் தொடர 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
நச்சு ஆலைக்கு மூடு விழா?

" தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடசென்னை மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
 ஸ்டெர்லைட்  நச்சு ஆலையில் இருந்து கந்தக டை ஆக்சைடு வாயு அடிக்கடி சட்டவிரோதமாக வெளியேறுவதால் ஏராளமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஆலையை மூட வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. ஆலையை மூட வலியுறுத்தி பல்வேறு தரப்புகளிலும் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வந்தது. இதனையடுத்து ஆலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடிகோட்டாட்சியருக்கு  உத்திரவிடப்பட்டது.
அவர் பரிந்துரை மற்றும் நகர மக்களின் கடுமையான் போராட்டம் காரணமாக  ஆலையை மூடுமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசிஷ் குமார் பரிந்துரை செய்தார்.அதை  அடுத்து ஆலையை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆணை பிறப்பித்தது.. முதல் கட்டமாக ஆலைக்கு மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்ட து.
 முற்றிலுமாக ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது."
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

"ஹோலி "சாயம் பூசிவிளையாடி ன களைப்புதான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாட்டு நடப்பு பார்க்கிற மாதிரியா இருக்கு?

வியாழன், 28 மார்ச், 2013

சிங்கள விஷ[ம]ம்



இலங்கை ராஜபக்சேக்கு எதிரான உலகத்தமிழர் எழுச்சி இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது.
அதனை தனது குள்ளநரி தனத்தால் இந்திய ஒற்றுமைக்கே உலை வைக்கும் விதமாக கையாலத்துவங்கி விட்டது.
அதன் விஷமப்பிரச்சாரத்தை இந்தியாவில் தூதர் என்பவர் மூலமே ஆரம்பித்து விட்டது.
டெல்லியில் உள்ள இலங்கைக்கான் தூதர் வட இந்திய ஊடகங்களுக்கு ஒரு செய்தியை தனிப்பட்ட கவனத்துக்கு என்று அனுப்பியுள்ளார்.
"இலங்கை மக்கள்தொகையில் 75% உள்ள சிங்களர்கள் இந்தியாவின் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான்.
எனவே, இலங்கையில் வெறும் 12% மட்டுமே உள்ள தமிழர்களை இந்திய வம்சாவழியினர் எனக் கருதி கவலைப்படக் கூடாது. மாறாக 75% உள்ள சிங்களர்கள் தான் இந்திய வம்சாவழியினர் என்பதை உணர்ந்து அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைக் கொள்ள வேண்டும் .
இலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்கள், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களின் பூர்வீகக் குடிமக்கள்.
அசோக சக்கரவர்த்தி ஆட்சி நடைபெற்ற போது , அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே  வட இந்தியாவுக்கும் இலங்கைக் கும் இருந்த உறவுகள் பதிவாகி உள்ளன. அப்போது புத்தமதத்தை பரப்ப வட இந்தியாவில் இருந்து சென்ற வட இந்தியர்கள்தான் இன்று சிங்களர்களாக உள்ளனர்.
அதன் பின்னர் வந்த முகலாயர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சியில் இந்த தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதை தற்போது சிங்கள மக்கள் புதுப்பித்து வருகின்றனர். ஆண்டுக்கு இரண்டரை லட்சம் இலங்கையர்கள் இந்தியா வந்து செல்கின்றனர். வட இந்தியாவுடன் வரலாற்று தொடர்புள்ள இனம்தான் சிங்களர்.
இந்தி, வங்காளி, ஒரியா ஆகியவற்றின் மூல மொழி சமஸ்கிருதம். அதுதான் சிங்களத்துக்கும் மூலம்.அதை சிங்களரால் பேசவும் எழுதவும் முடியும்."
என்ன ஒரு அரிய கண்டு பிடிப்பு.
இதைத்தானே இலங்கையில் செல்வநாயகம் முதல் மாவீரன் பிரபாகரன் வரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்கள்.வந்தேறிகள்தான் சிங்கள காடையர்கள் என்று. 
வங்கம்,ஒரிசா,பீகார் என்று பிழைக்க வந்தவர்கள் தான் இவர்கள்.அவர்களின் ஒற்றுமையும் கலப்பும்தான்  இவர்கள் ஒரு புது இனமாக -சிங்களனாக வடிவெடுத்து விட்டன ர்.
அனால் பழைய வரலாறை சொல்லி வட இந்தியர்களிடம் ஆதரவு தேடுவது  தமிழர்களை கொன்று குவித்ததற்கான பாதுகாப்பு தேடி எழுப்பப்படும் பிரசாரம்.ஆனால் இந்திய அரசும் ,வட இந்தியத் தலைவர்களும் இப்போதும் சிங்கள வெறியர்களுக்கு ஆதரவாகத்தானே செயல்படுகிறார்கள்.
இந்த கரிய வாசம் எழுதிய கரிய வாசகம் வட இந்திய முதல்வர்களுக்கும்-அங்குள்ள எதிர்கட்சித்தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதன் மூலம் அசோகர் காலத்தில்தான் இலங்கையில் வடஇ ந்தியர்கள் அதாவது இன்றைய சிங்களர்கள் இலங்கையில் பிழைக்கப் போனது  வெளிச்சத்துக்கு வந்து விட்டது.அதற்கு முன் இருந்தே தமிழன் இலங்கையை ஆண்டு வந்ததும் சிங்களன் வாயாலே வெளி வந்து விட்டது.
ஒண்ட வந்த பிடா ரி ஊரில் உள்ளவர்களை விரட்டிய கதை உலக்குக்கு எடுத்துகாட்டப்பட்டு விட்டது.
கரிய வாசமும் இலங்கை அரசும் இந்த பிரச்னையை இப்போது கையில் எடுத்தாலும்.அதனால் தமிழர்களுக்கு ஒரு துன்பமும் புதிதாக வந்து விடப்போவதில்லை.
காரணம் வட இந்தியர்கள் ஏற்கனவே தமிழர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள்.
ராஜபக்ஷேவை விருந்துக்கு அழைத்து தமிழர்கள் மனதை நோக அடித்தவர்தான் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.
இலங்கைக்கு எதிராக மக்களவையில் ஒரு தீர்மானம் கொண்டுவரக்கூட விடாமல் வட இந்திய கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது சமீபத்திய செய்திதான்.
இந்தியாவில் தமிழன் தனித்தீவகத்தான் உள்ளான்.
காரணம் கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு மூத்த குடி மக்கள் இன்று  சொந்த நாடற்ற இனமாக உள்ளதுதான்.இறக்கும் தமிழ் நாட்டையும் வட இந்தியனிடம் அடகு வைத்து அவனின் வென்கொற்றக்  குடையின் கீழ்தான் காலம் தள்ளுகிறான்.தமிழன்.
கரிய வாசம் எழுதிய கரிய வாசகம் தமிழர்களுக்கு எதிராக பயன் படுவது போல் தமிழர்களுக்கும் இலங்கைக்குமான உரிமையையும் ஒரு பக்கம் எடுத்துக் காட்டியுள்ளது.
ஆனாலும் ஒன்றுபட்ட இந்தியாவில் தூதராக இருந்து கொண்டு ஒற்றுமையை சிதைக்கும் கரிய வாசம் போன்றவர்கள் ஒரு நாட்டின் தூதராக இருக்க உரிமை இழந்து விட்டார்.அவரை வெளியெற்றுவதுதான் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு நல்லது.

புதன், 27 மார்ச், 2013

ஆங்கில மொழி அறிவைப் பெருக்கிக் கொள்ளும்


 ஆர்வம் இன்று அனைவரிடையேயும் உள்ளது. சாப்ட் ஸ்கில் என்று சொல்லப்படும் மொழி திறனாற்றல் அனைத்து நிலைகளிலும் வேண்டப்படுகிறது. வேலை வாய்ப்பினைத் தேடாதவர்களும் தங்கள் ஆங்கில அறிவு சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அனைவரும் கற்றிருந்தாலும், அயல் மொழி என்பதால் பயன்பாட்டில் தவறு இருக்குமோ என்ற அச்சம் கூடவே இருக்கிறது. இவர்களுக்கெனவே ஓர் இணைய தளம் இயங்குகிறது.
இந்த தளம் உள்ள இணைய முகவரி முதலாவதாக, இதில் ஆங்கில மொழியினை நன்றாகப் பேச மற்றும் எழுத 500 சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதே போல 100 வினைச் சொற்கள் கிடைக்கின்றன. எவ்வளவு கவனம் எடுத்தாலும், பிழைகளுடன் எழுதப்படும் சொற்கள் தரப்படுகின்றன. ஆங்கில இலக்கணத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பயிற்சியும், தேர்வும் கிடைக்கிறது. எதிர்ப்பதங்களும் ஒத்த பொருள் தரும் சொற்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆங்கில மொழி இலக்கணத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் விளக்கங்களும் சிறு சிறு தேர்வுகளும் தரப்படுகின்றன. குவிஸ், விளையாட்டு மூலமாகவும் இவற்றைக் கற்றுக் கொள்ளலாம். பிழைகளுடன் சொற்கள், வாக்கியங்கள் தரப்பட்டு உங்களின் திறமை சோதிக்கப்படுகிறது. ஆங்கிலத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்று எண்ணுபவர்கள் கூட இந்த தளம் சென்று இந்த தளத்தில் உள்ள பயிற்சி வினாக்களில் தங்களுக்கானதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். ஆடியோ கேட்டு பின் பதில் சொல்லும் பயிற்சியையும் இதில் மேற்கொள்ளலாம். Six sick hicks nick six slick bricks with picks and sticks என்று சொல்லிப் பாருங்கள். என்ன நாக்கு சுழல்கிறதா? ஆங்கிலம் தடுமாறுகிறதா? நீங்கள் பயிற்சி பெறுவதற்கு இதே போல பல வாக்கியங்கள் இத்தளத்தில் கிடைக்கின்றன.
நீங்கள் நன்றாக ஆங்கில மொழியினைப் பயன்படுத்துபவராக இருந்தாலும், உங்கள் அளவில் மேற்கொள்ளவும் சோதனைத் தேர்வுகள் உள்ளன. IELTS எனப்படும் வெளிநாட்டில் வேலை வாய்ப்பிற்கான அத்தியாவசியமான தேர்வு குறித்த தகவல்களும் இணைய தள முகவரிகளும் தரப்படுகின்றன. இந்த தளத்தில் சென்று நம் மின்னஞ்சல் முகவரியினைப் பதிந்து கொண்டால் இலவசமாக இந்த தளம் வழங்கும் ஆங்கில மொழி குறித்த இமெயில் செய்தித்தாள் நமக்கு அனுப்பப் படும்.
http://www.world-english.org/ 


ஞாயிறு, 24 மார்ச், 2013

சில காண வேண்டிய படங்கள்.

இவை கூகுள் +இல் கண்டெடுத்த புகைப்படங்கள்.நீங்கள் சில காண வேண்டிய படங்கள்.முடிந்தால் ரசிக்கவும் செய்ய லாம்.

உங்கள் பார்வைக்காக :





















































முத்தத்துடன் முடிப்போம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 22 மார்ச், 2013

சோனியா எப்படி ஒத்துக்கொள்வார்

"தி.மு.க.,வின் கோரிக்கைகளை ஒட்டிவரும்  21ம் தேதி ஓட்டெடுப்பு நடக்க இருப்பதால், அதற்குள் மக்களவையில்  தி.மு.க., கேட்ட திருத்தங்களோடு தீர்மானம் கொண்டு வரப்பட்டால்மட்டும்  தன் முடிவை மறு பரிசீலனை செய்ய தயார்" என்று  கருணாநிதி கூறியுள்ளார்.
ஆனால்  சோனியா கடைசி வரை  முடிவை பற்றி வாயை திறக்காமல் இருந்ததால்  தி.மு.க.சோனியா கூட்டணியில் இருந்தும்-மத்திய அமைச்சர்கள்  பதவியில் இருந்தும்  விலகி யுள்ளது.
புலிகள் தடைக்கு ஜெயலலிதா நன்றி.
இலங்கை போர் குற்றம் பற்றி விசாரணையை நடத்த சொல்ல சோனியா எப்படி ஒத்துக்கொள்வார்.அவரின் காங்கிரசு[ இந்திய] அரசின் ஒத்துழைப்புதானே  ஈழத்தமிழர்கள் அழித்தொழிப்பில் ராஜபக்சேக்கு பெருமளவில் கைகொடுத்தது.போர்குற்றம் பற்றி விசாரித்தால் பக்சே தனது வாயை சோனியா அரசுக்கு எதிராக திறப்பாரே.உலக அளவில் மாட்டிக்கொள்ளப் போவது-அசிங்கப்படப்போவது யாராக இருக்கும் என்று உணர முடியாதவர்களாக தமிழர்கள் இ ருக்கிறார்களா?
இதில் பாஜகவும் ராஜபக்சேயின் போர்குற்றம் பற்றி விசார்க்க சொல்வது தேவை இல்லாதது என்று பொன்மொழியை உதிர்த்துள்ளது வேதனை.
"போனால் போகட்டும் போடா ,இந்த பூமியில் நிலையாய் ஆண் டவர் யாரடா?"
  பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, அளித்து வரும் ஆதரவை திரும்பப்   பெறுவது தொடர்பான கடிதத்தை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம், தி.மு.க., நேற்றிரவு அளித்தது. தி.மு.க.
மக்களவை  குழு தலைவர், டி.ஆர்.பாலு தலைமையிலான எம்.பி.,க்கள்  நேற்றிரவு, 10:30 மணிக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, தி.மு.க., வாபஸ் பெறுவது தொடர்பான கடிதத்தை, ஜனாதிபதியிடம் அளித்தனர்.
திமுக சார்பில் மத்திய கேபினட் அமைச்சராக மு.க.அழகிரியும், இணை அமைச்சர்களாக 4 பேரும் உள்ளனர். பதவி விலகும் தி.மு.க. அமைச்சர்கள் .அவர்கள் வகிக்கும் இலாகாக்கள் . மத்திய அமைச்சர் மு.க.அழகிரி (ரசாயனம் மற்றும் உரம்)
இணையமைச்சர்கள்:
பழநிமாணிக்கம் (நிதித் துறை)
ஜெகத்ரட்சகன் (தொழில் துறை)
காந்திசெல்வன் (சுகாதாரத் துறை)
நெப்போலியன் (சமூக நீதித் துறை)
இதுவரை திமுக காங்கிரசை அதன் மக்கள் விரோத போக்கிற்கு எதிராக ஆட்சியில் இருந்து விலகுவதாக ஐந்து முறை மிரட்டல் விடுத்துள்ளது.
 ஆறாவது முறையில்தான், கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.
* 2006 அக்., - நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், 10 சதவீத பங்குகளை, தனியாருக்கு விற்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, "கூட்டணியை விட்டு விலக நேரிடும்' என, தி.மு.க., எச்சரித்தது. இதனால், மத்திய அரசு, முடிவை மாற்றிக் கொண்டது.

* 2008 அக்., - இலங்கையில் இறுதிக் கட்டப் போர் நடந்த போது, போர் நிறுத்தம் கோரி, கூட்டணியிலிருந்து விலகப் போவதாக அறிவித்தது.

* 2011 மார்ச் - தமிழக சட்டசபை தேர்தலின் போது, தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் - தி.மு.க., இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கூட்டணியிலிருந்து விலக தி.மு.க., முடிவு செய்தது.
* 2012 மார்ச் - "இலங்கைக்கு எதிராக, ஐ.நா.,வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததை ஆதரிக்காவிட்டால், கூட்டணியிலிருந்து விலகுவோம்' என, அப்போதும் தி.மு.க., எச்சரித்தது. .

* 2012 மே - பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது. "விலை உயர்வை குறைக்காவிட்டால், கூட்டணியிலிருந்து விலகுவோம்' என அறிவித்தது.
* 2013 மார்ச் - "இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் கூட்டணியிலிருந்து விலக நேரிடலாம்" என்று இப்போது கடைசியாக  எச்சரித்து வந்தது.
கடைசியாக  நேற்று கூட்டணியிலிருந்து விலகியேவிட்டது .
இது பற்றி ஆனால் கருணாநிதியின் வள,வளப்பை ஸ்டாலின்தான் உறுதியாக்கி மத்திய அரசில் இருந்து விலக வைத்தாராம்.முன்பிருந்தே மத்திய சோனியா அரசின்-ராகுலின் நடவடிக்கைகள் ஸ்டாலினுக்கு பிடிக்க வில்லையாம்.பதவி விலகக் கோரியும் கருணாநிதி 2ஜி ,அழகிரி பிடிவாதத்தால் தான் விலகவில்லையாம்.
இந்த முறையும் கூட கனிமொழி,தயாநிதி மாறன்,அழகிரி,பழனி மாணிக்கம் போன்றவர்கள் கொஞ்சம் பார்த்து பேச்சுவார்த்தை செய்து விட்டுக்கொடுத்து போகலாம் என்று  வழுக்கிக்கொண்டு சென்றிரு க்கிறார்கள்.கருணாநிதியை சமாதனப்படுத்த செய்திருக்கிறார்கள்.
ஆனால் மு.க.ஸ்டாலின்  "பதவியை விட்டு விலகாவிட்டால் தமிழகத்தில் திமுகவுக்கு மரியாதையே இல்லாமல் போ ய் விடும்,ஒவ்வொரு திமுக தொண்டனும் காங்கிரசை வெறுக்கிறார்கள்.கூட்டணியை விட்டு விலகுவதே அவர்களின் விருப்பம்.அதை மீறி கூடணியில் தொடந்தால் அது திமுகவை படுகுழியில் தள்ளி விடும்.நானும் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்கிறேன் "என்று  பிடிவாதம் காட்டினாராம்.பேராசிரியர் அன்பழகன்,வீரமணி,சுப.வீரபாண்டியன்  போன்றோர் ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசியுள்ளார்கள்.
அவர்கள் கூறியது உண்மை என்பதை ஊர்கள் தோறும் திமுகவினர் காங்கிரசு கூட்டணி முறிவையும்- அமைச்சரவையில் இருந்து விலகுவதையும் வெடி வெடித்து ,இனிப்புகள் கொடுத்து கொண்டாடியது உணர்த்திவிட்டது.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------


சனி, 16 மார்ச், 2013

அன்றைய காங்கிரசுக்காரர் நெடுமாறன்

அய்யா நெடுமாறன் செல்லும் பேசும் இடங்களில் எல்லாம் ராஜபக்சேவையும் ,அவருக்கு துணை போகும் சோனியா காங்கிரசு அரசையும் தாக்கி பேச  மறந்து விடுகிறார்.ஆனால் அவரின் அரசியல் எதிரி கருணாநிதியை மட்டும் தாக்கி பேச மறப்பதில்லை.
இப்போதைய மாணவ்ர்கள் போராட்டத்தில் பேசும்போது தீர்மானத்தை ஆதரிக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.மாணவர்கள் போராட காரணமான  தீர்மான ஆதரவை காங்கிரசு அரசு தெரிவிக்க வே ண்டும்  வற்புறுத்தவில்லை.
மாறாக அப்போது ஆட்சியில் இருந்தும் ஈழத்தமிழர் பிரச்னையில் கருணாநிதி ஒன்றும் செய்ய வில்லை.அதற்காக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மட்டுமே ஆவேசமாக முழங்கியுள்ளார்.
இது போன்ற தனது அர்த்தமற்ற பேச்சுக்கள் மூலம் ஈழப்போராட்டத்தின் திசையையே நெடுமாறன் மாற்றி விடுகிறார்.அதன் வீரியத்தையே தனது உள்ளடி உள்ளூர் அரசியல் மூலம் நீர்த்து விடச்செய்கிறார்.
திமுகவில் நெடுமாறன் அரசியல் கற்றுக்கொண்ட நாள் முதலாக கருணாநிதிக்கும் அவருக்கும் உள்ள அரசியல் மோதலின் வெளிப்பாடுதான் இவைகள்.
இல்லை என்றால் விடுதலிப்புலிகள் இந்தியாவின் எதிரிகள்.பிரபாகரனை கைது செய்ய வே ண்டும்,அவரை கைது செய்து நிறுத்துவேன் என்றதுடன் ஈழ இறுதிப்போரின் ஆரம்பத்தில் இதே ஜெயலலிதா தமிழர்கள்,மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி வந்தததும்"போர் என்றால் பொதுமக்கள் உயிர் இழப்பு சாதாரணமான துதானே "என்ற  ஜெயலலிதா இன்றுவரை அவரும் ,சீமானும்,வைகோவும் இது போன்றன்மன்னிப்புகளை கேட்கச்சொல்லாததன் மர்மம் என்ன?
மன்னிப்பு கேட்கச்சொல்லாததுடன் மட்டுமல்ல .அவரை காவிரியிந்தாய் போல் ஈழத்தின் தாய் என்றும் துதி பாடுகிறார்கள்.
அது மட்டுமல்ல இன்றைய மாணவ்ர்கள் போராட்டத்தை அமுக்கி வைக்க பரவும் மாணவர் ஆவேசத்தை தடுக்க கல்லூரிகளுக்கே விடுமுறை விட்டு வரும்,டெசோ "தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வற்புறுத்தி  "நடத்திய வேலை நிறுத்தத்தையே சிதறடித்து மத்திய அரசின் நிம்மதியை காப்பாற்றிய முதல்வர்" ஜெயலலிதாவால் மட்டும்தான் முடியும் "[you can amma]என்று சிலர்  பதாதைகளை தூக்கி காண்பித்தார்களாம்.
இப்போதும் இந்திய அரசை ஐ.நா.வில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒப்பந்தத்தில் நடந்து கொள்ள டெசோ அறிவித்த முழு அடைப்பு  போராட்டத்தை அனைத்து பிரிவினரும் அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து வெற்றி பெறச்செய்திருந்தால் இந்திய மன்மோகன் சிங் காங்கிரசு அரசின் நிலை மாறி இருக்கும் .ஆனால் அதை வைகோ,சீமான்,நெடுமாறன்,ஜெயலலிதா கூட்டம் தானே நீர்ர்த்துப்போக வைத்தது.அது இந்திய அரசின் நிலைக்கு சார்பாக மாற்றி விட்டார்களே.
இன்றும் கர்நாடகாவில் வாட்டாள்,பாஜக,காங்கிரசு எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருந்தாலும் காவிரி பிரச்னை என்று வந்தால் எவ்வாறு ஒரே குரலில் பேசுகிறார்கள் ,கேரளாவிலும் முல்லைப்பெரியாறு பிரச்னையில் தமிழக ம் பக்கம் வலுவான உண்மை இருந்தாலும் காங்கிரசு,பாஜக,மார்க்சிஸ்ட், கட்சிகள் தங்கள் அரசியலை மறந்து ஒரே முறையில் போராடினார்கள்.
இந்த ஒற்றுமை நம் தமிழத்தில் மின்சாரம் பெறுவதில் இருந்து காவிரி,முல்லை பெரியாறு,ஈழம் என்று ஒரு பிரச்னையில் இல்லாதது தமிழத்தின் அரசியல் சாபக்கேடு.
காரணம் தன்னால்தான் இந்த பிரச்னை முடிந்தது என்று ஆதாயம் தேடும் அரசியல்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் கட்டாயத்தால் அரசிதழில் காவிரி தீர்ப்பு வெளியானதையெ தங்களின் மாபெரும் சாதனை என்று தன்னை பாராட்டி தானே விருது வழங்கும் விளம்பர தான் என்றதற்பெருமை  மோகத்தில் மூழ்கியுள்ள மாநிலம் இது.
கல்லுரி மாணவர்கள் ஈழப்போராட்டத்தையே தங்கள் கட்டுக்குள் கொன்டுவர முயற்சிகள் செய்கிறார்கள்.தங்கள் எதிரணியினர் போராட்டத்தை பாராட்டி பேச வந்தால் கூட கொஞ்ச பேர்கள் இருந்து கொண்டு கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இது மாணவர்கள் போராட்டத்தையே  திசைமாற்றி வலுவிஹ்ழ்க்கச்செய்யும் என்பதை உணராத அளவு இருக்கிறார்களா?அல்லது அதுதான் இவர்களின் நோக்கமா?
மாணவர்களை பாராட்டி பேச வேண்டிய வர்  அவர்கள் போராட்டத்தை சரியான முறையில் கொண்டு செல்ல அறிவுரைகளை வழங்க வேண்டியவர் நெடுமாறன் ,வைகோ,சீமான் போன்றோர் அந்த மேடையை தங்கள் அரசியலுக்கு மட்டுமே பயன் படுத்துவது மிகத்தவறு.நடந்த கதைகளை மட்டுமே மீண்டும் ,மீண்டும்  கூறி முன்னெடுத்து செல்ல வெண்டிய திசையை நேர்மாறாக மாற்றுவது மாணவர்களின் கவனத்தையே திசை திருப்பி விடும்.இவர்களையும்உங்கள் ஆவேச பேச்சின் மூலம்  தீக்குளி ப்பதுதான் இப்பிரச்னைக்கு தீர்வு என்கிற அளவு கொண்டு செல்ல வே ண்டாம்.
இன்றையை நிலைக்கு என்ன தேவை என்று சிந்தித்து செயல்பட வையுங்கள்.வீண் ஆவேசம் இங்கு இப்போது செல்லாது .அது தேவையும் அல்ல.
மற்றவர்களை தூண்டி விடும் இந்த போராளிகள் தலைவர்கள் யாராவது  இதுவரை தீக்குளித்து வைத்தார்களா? அல்லது சாகும் வரை உண்ணா நிலை போராட்டம்தான் செய்தார்களா.வாழ்த்தி பேச வந்து தனது உள்ளூர் அரசியலையும் உணர்ச்சியை தூன்டுவதையும் மட்டுமே பேசிவருகிறார்கள்.இப்போது ஈழத்தமிழர் பிரச்னை ஊள் ளூர் அரசியல் இல்லை.உலக அளவில் எடுத்து சென்று நிவாரணம் செய்ய வே ண்டிய பிரச்னை.
அதை கருணாநிதி சரியான முறையில் டெசோ மூலம் செய்து வர முயற்சிக்கிறார் .அதை நெடுமாறன்,வைகோ  ,ஜெயலலிதா திசை மாற்றுவது சரியான செயல் அல்ல.
கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது நடந்த முறை அவர் அப்போது மேற்கொண்ட முயற்சி தவறான எதிர் விளைவுகளை தந்திருக்கலாம் .
அவரால் பொறுப்பில் இருந்தும் படுகொலைகளை தடுக்கமுடியாமல் போனது தவறாக கருதப்படலாம்.
ஆனால் அப்போது மட்டும் அவர் என்ன செய்தாலும் இந்த படுகொலை களை தடுத்திருக்க முடியுமா?முடியாது.இது அடுத்த நாட்டில் நடந்த பிரச்னை.ஒரே இந்தியாவில் இருந்து கொண்டெ இங்குள்ள காவிரி பிரச்னையை தீர்க்க முடியவில்லை .முல்லைப்பெரியார் அணை போன்ற வற்றில் நமது மாநிலத்துக்கு கிடைக்கக் வேண்டிய உரிமையையே பெற மத்தியா,அண்டை மாநிலத்துடன் போராடியும் ஒன்றும் நடக்காத நிலை.
இதில் அந்நிய நாட்டில் கருணாநிதி என்ன செய்யா முடியும்?பதவி விலகலாம்.அது மட்டும் தான் செய்ய முடியும்.அதைத்தானே இவர்களும் எதிர் பார்த்தார்கள்.
இன்று  எதிர்கால வாழ்விற்கு இருக்க இடமும்,உன்ன உணவும் இன்றி துன்பத்தில் உழலும் ஈழ மக்களுக்கு இன்றைய நிவாரணத்தை பக்ஷே அரசு செய்ய அழுத்தம் தர வேண்டும் .அதற்குத்தான் தீர்மானம் .அதை இந்திய அரசு  ஆதரிக்க வே ண்டும் இலங்கை அரசை கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டும் .அதற்குத்தான் மானவர்கள் போராட்டம்,டேசொவின் கதவடைப்பு போராட்டம் .ஆனால் இன்னமும் மாவீரன் பிரபாகரன் வருவார் ஆயுதம்தாங்கி போராடி தனி ஈழம் மலரும்.பாலாறு ம்,தேனாறும் ஓடும் என்பதுதான் நெடுமாறன்,வைகோ,சீமான் கனவு.அந்த கனவிலேயே இன்றைய யதார்த்த நிலையை மறந்து இன்றைய ஈழத் தமிழர்கள் அவலத்தை தீர்க்கும் முறை மறந்து திரிகிறார்கள்.
இப்போதைய நிலைக்கு கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெ வைத்துக் கொள்ளலாம்.
அவரின் மன்னிப்பு மூலம் இழந்த ஈழவர் உயிர் திரும்பிடுமா?தமிழிழம்தான் மலர்ந்திடுமா?
கடந்த காலத்தில் காலத்தில் கருணாநிதி செய்த வை அவரை பொறுத்தவரை சரி என்றுதான் அவருக்கு படுகிறது.ஆனால் நெடுமாறன் பார்வைக்கு அவை தவறு என்று படுகிறது .அவ்வளவுதான்.கடந்த காலத்தில் நெடுமாறன் இதே காங்கிரசில் செயல் வீரராகஇருந்தாரே அதற்காக அவர் என்ன செய்யப்போகிறார்?அதற்கு பிராயச்சித்தம் தான் என்ன? கருணாநிதி அப்போது துரோகம் செய்தார் என்றும் ,ஜெயலலிதா ஈழத்தாயாகிறார் என்றும்  திரும்ப திரும்ப சொல்லி வருபவை ஊடகங்களிடையே ஒரு மர்மக்கயிறு தொடர்பாக இருப்பதை உணர் முடிகிறது.ஊடகங்கள் பெயர்களை மட்டும் சொல்லிவிடலாம்தான்.தினமலர்,தினமணி,துக்ளக்,ஆனந்த விகடன்,ஜூனியர் விகடன்,குமுதம் ரிபோர்ட்டர்,என்டிடிவி,இந்தியா டுடே .
இதற்கு முன்னர் விடுதலை புலிகள் பிரச்னைக்காவே இரண்டு முறை தனது அரசை பலி கொடுத்தாரே அதற்கு அன்றைய காங்கிரசுக்காரர் நெடுமாறன் என்ன செய்யப்போகிறார்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 15 மார்ச், 2013

இணையம் மூலம் திருட்டு

"இந்திய தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் ".நமது இந்திய நாட்டின் முக்கிய பாதுகாப்பு தொடர்பான ராணுவ ரகசியங்கள் இதன்  கணினிகளில் கோப்புகளாக பாதுகாத்து வரப்படுகின்றன.
இந்த நிறுவன கணினி களில்  இருந்து பாதுகாப்பு மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்களை ஒரு கணினி அறிவுள்ள கும்பல்  களவாடி யுள்ளது. 
இது போன்ற கன்னி தகவல்களை மறைமுகமாக தங்கள் கணினி அறிவு மூலம் திருடும் கும்பலுக்கு "ஹேக்கர்ஸ்' என்ற பெயர் உள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறையின் பல முக்கிய பைல்கள் இவர்கள் வசம் இருப்பதாக, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இவர்கள் சீனா வைச்சே ர்ந்தவர்கள் என்றும்  கடந்த ஒரு ஆண்டாக நடந்த  இந்த திருட்டு  இம்மாதம் முதல் வாரத்தில் தான்  நம் இந்திய பாதுகாப்பாளர்களுக்கு தெரிய வந்துள்ளது.அந்த அளவு நம்நாட்டின் ரகசியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தொழில்நுட்ப நிபுணர் குழு மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், தனியார் பாதுகாப்பு வல்லுனர்க ஆய்வு செய்ததில்  இந்த திருட்டை சீனாவில் இருந்து தான்  நடத்தி இருப்பதாக தெரிகிறது.
 "ஆர்மி சைபர் பாலிசி' என்ற இணைப்புடன் இந்த பாதுகாப்பு நிறுவன அலுவலர்களுக்கு  வந்த, "மின்னஞ்சலை ' திறந்தவுடன் அதில் அனுப்ப படும் வைரஸ்கள் மூலம்  அக்கணினியில் பாதுகாக்கப்படும் கோ ப்புகள் எதிராளி கணினியில் தரவிறக்கம் ஆகி விடும்.
இந்த கணினி தகவல் கொள்ளை   குறித்த தகவல் தெரிந்தவுடன், இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் ஆராய்ந்ததில் இது போன்ற திருட [ "ஹேக்'] பட்ட  அனைத்துத் தகவல்களும், சீனாவில் உள்ள, "குவாண்டாங்' என்ற இடத்தில் உள்ள, "சர்வர்' மூலம் பதிவேற்றம் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு அமைப்பு, இதற்கு முன் நடந்த திருட்டை இவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்ததில்லை. இம்முறைதான்  மிகத் துல்லியமாக கண்டறிந்துள்ளது.ஐதராபாத்தில் உள்ள, டி.ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ள இந்திய பாதுகாப்பு குறித்த ஆவணங்கள், ரேடார் மற்றும் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற ஆயிரக்கணக்கான மின் கோப்பு கள், இம்முறையில் திருடப்பட்டுள்ளன.

 திருடப்பட்ட அந்த கோப்புகள்  மீட்கப்பட்டுவிட்ட ன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், டி.ஆர்.டி.ஓ., மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு இடையேயான ஒப்பந்தம், பிரான்ஸ் ஏவுகணை நிறுவனத்துடனான பணப் பட்டுவாடா உள்ளிட்ட பைல்கள் மீட்கப்பட்டுள்ளன. 
இந்தத் திருட்டை தனியார்கும்பல்கள் [ "ஹேக்கர்'] செய்திருக்க  முடியாது.  சீன அரசு சம்பந்தப்பட்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 "ஹேக்' செய்து பதிவேற்றம் செய்யப்பட்ட, "சர்வர்' சீனாவில் உள்ளது. இதற்காக, 150 கோடி ரூபாய் மதிப்புள்ள, "சர்வர்' பயன்படுத்தப்பட்டு உள்ளது.
 ஆரம்பத்தில் இருந்தே சீனாவுக்கு  பிற நாடுகளின் ரகசியங்களைத் திருடுவ துவழமையாக உள்ளது.
 அமெரிக்காவின் ரகசியங்களையும், சீனா, "ஹேக்' செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ ரகசியங்களை சீனா திருடு வது போல் அமெரிக்காவில் பிரபலங்காளாக உள்ள அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் ரகசியங்களை  இணைய தகவல் திருடர்கள் எடுத்து ஒரு இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதுதான் இப்போது  அமெரிக்காவை அதிர்ச்சியில் மூழ்க செய்துள்ளசெய்தியாகும்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன், எப்பிஐ இயக்குநர் ராபர்ட் முல்லர், ஜோய் பைடன், எரிக் ஹோல்டர், சாரா பாலின் மற்றும் பிரபலங்களான ஜெ சே, பியொன்ஸே, கிம் காதர்ஷியன், பெரிஸ் ஹில்டன், எஸ்டன் கட்சர் உட்பட பலரின் தனிப்பட்ட கணக்குவிபரங்கள் உள்ளிட்டவையை அவர்களுக்கு தெரியாமலேயே இணையம் மூலம் எடுக்கப்பட்டிருக்கிறது. 
இந்த தகவல்களை ஹேக்கர்கள் எடுத்து இணையத்தில் வெளியி ட்டுள்ளனர்.
 இது அமெரிக்க அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க பிரபலங்களின் சொத்து விபரங்கள், வங்கிக் கணக்கு விபரங்கள், கடன் விபரங்கள், கடனட்டை விபரங்களே தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு ரகசிய விபரங்களையும் இந்த ஹேக்கர்ஸ் சேகரித்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
இதனால் அமெரிக்காவில் பெரிய மனிதர்கள்  பலரது ரகசியங்கள் நடுத்தெருவில் பகிரப்படலாம்.
இதில் மிகப்பெரிய கொடுமை.இது போன்ற கணினி தகவல்களை ஆட்டைபோடும்   ஹேக்கர்களை கண்காணிக்கும் எப்பிஐயின் இயக்குநர் ராபர்ட் முல்லரின் தகவல்களும் அவருக்கு தெரியாமலேயே எடுக்கப்பட்டிருக்கிற து .
 இதையடுத்து உடனடியாக இந்த ஹேக்கர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசுகடும்  உத்தரவிட்டிருக்கிறது.
 இதற்கெல்லாம் காரணம் தகவல் தொழில்நுட்ப அறிவை பொதுவுடமையாக்கி மக்கள் பயன்பெற வழிகாண வேண்டும் என போராடி வந்த அரோன் ஆர்சத் என்ற இணைய போராளியை அமெரிக்க அரசு சமீபத்தில் கைது செய்து, கடுமையான சித்தரவதைக்குள்ளாக்கியது. 
மேலும் அவருக்கு பல ஆ ண்டுகள்  சிறைதண்டனை விதித்து அவரது வாழ்க்கையையே நாசமாக்கி விட்டது.
 இந்த கவலையில்  அவர் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார் .
 இந்த கொலைக்கு காரணம் அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி என்றும், எப்பிஐ திட்டமிட்டு அவரது கொலைக்கு காரணமாக செயல்பட்டிருக்கிறது என குற்றம் சாட்டி உலக நாடுகளில் உள்ள இணைய போராளிகளும், ஹேக்கர்களும் இணைந்து போராடி வருகின்றனர். 
ஆனால் இந்த தற்கொலை சம்பவத்தை -தகவலை அமெரிக்க அரசு கட்டளைக்கேற்ப உலக ஊடகங்கள்  மறைத்து விட்டன.

 இந்நிலையில் அமெரிக்க பிரபலங்களின் ரகசிய தகவல்கள் வெளியாகியிருப்பது அமெரிக்க அரசு நிர்வாகத்தின் பாதுகாப்பு தன்மையை எங்களால் உடைத்தெரிய முடியும் என ஹேக்கர்கள் அமெரிக்காவிற்கு பாடம் புகட்டவே இதுபோன்று செய்திருப்பதாக பல பதிவுகள் இணையத்தில் வெளியாகி வருகிறது .
ஏற்கனவே அசாஞ்ச்சே தனது "விக்கி லீக்ஸ்" மூலம் அமெரிக்காவின் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தி உள்ள நிலையில் ,இது அமெரிக்காவுக்கு வந்த புது சோதனையாகும்.
இந்த அசாஞ்ச்சே இலங்கை-{சோனியா]இந்தியா  ஆதரவு மர்மம் தொடர்பான தகவல்களை  எடுத்து வெளியிட முடியாதா?
ஆனாலும் இது போன்ற இணையத்திருட்டு பல நாடுகளின் பாதுகாப்பை  கேள்விக்குரியதாக்கி விடும் ஆபத்தை கொண்டிருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

சனி, 9 மார்ச், 2013

இந்திய பொருளாதாரம்

ஒரு சின்ன பார்வை.                                                                                                       
நமது இந்தியாவை வழிகாட்டி நடத்தி செல்பவர்கள் சாமானியப்பட்டவர்கள் கிடையாது.
பொருளாதாரத்தில் புலிகள்.அதையே புளி போல் கரைத்து குடித்து கொட்டை போட்டவர்கள் .மன்மோகன் சிங் ,ப.சிதம்பரம்  என்றால் சும்மாவா?
அவரகள் தலை மையின் கீழ் இப்போதைய இந்தியா பொருளாதார வலிமையை பார்ப்போம்.
மொத்த வருவாயைக் காட்டிலும் மொத்த செலவினம் அதிகரித்துள்ளதால் நடப்பு 2012-13-ஆம் நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதமாகும்.
 நிதி பற்றாக்குறை அதிகமாக உள்ளதால் சர்வதேச தர நிர்ணய அமைப்புகள் இந்தியாவின் கடன் பெறும் தகுதியை குறைக்கும் என்ற அச்சம் எற்பட்டு ள்ள து. 
இந்த பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இந்தியாவின் முதல் பணக்காரராக இருந்து வரும் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.1.18 லட்சம் கோடியாக (2,150 கோடி டாலர்) உள்ளது. இது, நாட்டின் நிதி பற்றாக்குறையில் 24 சதவீதமாகும்.அவருக்கு மட்டும் இந்திய அரசு இதுவரை 1000 கோடிகள் வரிச்சலுகை ,மற்றும் வருமானத்தில் முறைகேடுகள் என செய்துள்ளது.
நடப்பு விலை அடிப்படையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.95 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. 
இந்தியாவில் உள்ள  55 ப காசுர  கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாகும். கடந்த 2011-ஆம் ஆண்டில் மெகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 55-ஆக இருந்தது. இது, 2012-ஆம் ஆண்டில் 48-ஆக குறைந்தது. இது, தற்போது மீண்டும் 55-ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் 2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மொத்த சொத்து மதிப்பு 3 சதவீதம் குறைந்துள்ளது.
நம் நாட்டில் "10 மெகா கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ.5.50 லட்சம் கோடியாகும். இதுவும் நிதி பற்றாக்குறையைக் காட்டிலும் ரூ.50,000 கோடி அதிகமாகும்".
இந்தியாவில் 55 மெகா கோடீஸ்வரர்கள் இருந்தா லும், உலகின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல், அசிம் பிரேம்ஜி ஆகிய மூன்று பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.2.71 லட்சம் கோடி (4,920 கோடி டாலர்) என்பது குறிப்பிடத்தக்கது. இது, நிதி பற்றாக்குறையில் 60 சதவீதமாகும்.
உலக பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் வணிக பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. 
அ தன்படி, நம் நாட்டில் 100 கோடி டாலருக்கும் (ரூ.5,500 கோடி) அதிகமாக நிகர சொத்து மதிப்பைக் கொண்டுள்ளவர்கள் 55 பேர்.
 இவர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் கோடி (18,900 கோடி டாலர்) ஆகும். இது, நம் நாட்டின் மொத்த நிதி பற்றாக்குறையான 5 லட்சம் கோடி ரூபாய்களை  காட்டிலும் 100 சதவீதம் அதிகமாகும்.
ஆனால் இதனை அதாவது நாட்டின் பற்றக்குறைகளை களைய இந்திய அரசு அதன் கடுமையான போக்குகளை இந்த பகாசுர பணக்காரர்களை விட்டு விட்டு வறுமையில் இருக்கும் மக்களையே மேலும் மானியங்கள் வெட்டு என்று இருக்கும் கோவணத்தையும் ஆட்டையை போட பார்க்கிறது.
அதே நேரம் தொழில் வளர்ச்சி என்று கூறிக்கொண்டு பகாசுர தொழிலதிபர்களுக்கு வரிச்சலுகை,இதர சலுகைகள்,முறைகேடுகள் என வாரி வழங்குகிறது. ஆனால் அந்த அமபானிகளொ அரசை வரிமுதல் அத்தனை விடயங்களிலும் ஏ மாற்றுகிறர்கள்.அது தெரிந்தே அரசும் மக்களை கசக்கி பிழிகிறது,சவ ஊர்வலம் தவிர அனைத்துக்கும் சேவைவரி என்று பிடுங்கும் அரசு பல கோடிகள் புழங்கும் சினிமாத்துறைக்கு சேவை வரி விளக்கை தருகிறது.
அன்றாடம் சாப்பிடும் சோற்றை பொங்க கூட ஆண்டுக்கு 6 எரிவாயு உருளை என்று வயிற்றில் அடிக்கிறது.
பண முதலைகளுக்கு மேலும் சலுகைகள்-சேவைகள் .
நடுத்தர மக்களுக்கு மேலும் -மேலும்  சேவை வரிகள்.
இதுதான் நேரு சொன்ன  காங்கிரசின் சோசலிசமா?

------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை விவகாரத்துக்காக உண்ணா நிலை போராட் டத்தில்  லயலோ கல்லுரி மாணவர்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
-
 விவசாயத்திலும் "நானோ"

"நானோ தொழில்நுட்பம் என்பது மூலக்கூறு அல்லது அணு அளவில் ஒரு பொருளினை மாற்றம் செய்வதாகும்". 
அத்தொழில் நுட்பம்  இப்போது பல துறைகளிலும் பெரும் புரட்சியையே செய்து வருகிறது.
இப்போது அத தொழில் நுட்பம் விவசாயத்திலும் தனது கரங்களைப் பதித்துள்ளது. 
இந்தியா விலேயே முதன் முதலாக தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை உருவாக்கியுள்ளது.
மண்வளத்தை பாதுகாப்பது பயிர் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.

 பயிருக்கு அளிக்கப்படும் சத்துக்களில் பெரும்பாலானவை களிமண்ணில் ஒட்டிக் கொள்வதால் பயிருக்கு சரியான விகிதத்தில் கிடைப்பதில்லை. 
ஆனால் நானோ தொழில்நுட்பத்தின்மூலம் இதனை மாற்ற முடியும். நானோ துகள்கள் களிமண்ணில் ஒட்டிக்கொள்வதால் பயிர்ச்சத்துக்கள் களிமண்ணில் ஒட்டுவது தடுக்கப்பட்டு பயிருக்கு தேவையான அளவு கிடைக்கிறது.
 நானோ உரங்களுக்கு ஜியோலைட் மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் முதற்கட்ட ஆராய்ச்சியில் நானோ உரங்களிலிருந்து பயிருக்கு தேவையான நைட்ரஜன் சத்து நாற்பது நாட்கள் வரையிலும் நானோ உரங்களிலிருந்து சீராக வெளியாகிறது. 


நானோ உரங்கள் பயிருக்கு தேவையான சத்துக்களை சரியான விகிதத்தில் தக்க முறையில் கிடைக்க வழிசெய்கிறது. மேலும் உரத்துகள்கள் நானோ படலம் கொண்டு பூசுவதால் சத்துக்கள் வெளியாவது தடுக்கப் படுகிறது. 
பயிர்களின் சரிவிகித சத்து தேவைக்காக எல்லாத்தேவையான சத்துக்களையும் உள்ளடக்கிய நானோ கம்போஸ்ட்டை உருவாக்க முடியும்.
விவசாயப் பல்கலைக்கழகத்தில் நானோ களைக்கொல்லிகள் உருவாக்கப் பட்டுள்ளன. களைக்கொல்லியின் மூலக்கூறுகளைத் தேவையான இடத்தில் வெளியிடுவதால் களைகளில் வளர்ச்சி கட்டுப்படுத்தப் படுகிறது. 

பாலிமர் பொதிந்த களைக்கொல்லிகள் மண்ணில் உள்ள ஈரப்பதத்திற்கேற்ப வெளியாகி அதிலுள்ள வேதிப்பொருட்களை விதைகளின் முளைப்புத்திறனைக் குறைத்துவருகிறது. இதன்மூலம் களைக்கொல்லிகளின் திறன் அதிகரிக்கிறது.
கார்பன் நானோ குழாய்கள் விதைகளின் தோலை விரிவடையச் செய்தும் நீக்கி கதவுகளாகச் செயல்பட்டு விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்கின்றன. இந்த கார்பன் நானோ குழாய்கள் மண்ணின் ஈரப்பதம் குறைவாக உள்ள நிலையிலும் முளைப்புத்திறனை அதிகரிக்கிறது.

 நானோ துகள்களை பயிர்களில் நோயின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தேவையான பூசனக்கொல்லியை தேவையான இடத்தில் வெளியிடச்செய்ய முடியும். இதன்மூலம் விளைச்சல் குறைவதைத் தடுக்க முடியும். 
நானோ சென்சார்கள் மூலம் பயிரில் உள்ள பிரச்னைகளையும் உடனடியாக தெரிந்துகொள்ளலாம். நானோ தொழில்நுட்பத்தின் மூலம் வேளாண் பொருட்களைத் தரப்படுத்துவதும் சாத்தியப்படுகிறது.
நானோ உயிரி தொழில்நுட்பத்தின்மூலம் உணவு-பயிர்ச்சத்துக்களுக்குத் தேவையான மூலக்கூறுகள், புரதத்தைக் கண்டு பிடிப்பதற்கான புதிய உபகரணங்கள் பற்றியும் விலங்குகளின் கழிவிலுள்ள நச்சான "பைட்டோ டாக்சிக்" நோய்க் காரணிகளைக் கண்டுபிடிப்பதும் சாத்தியமாகும்.ஏற்கனவே  நானோ தொழில்நுட்பம் உணவியல் துறையில் பெரும்பங்கு வகிக்கிறது.
மண், நீர் மாசுபடுவதை நானோ துகள்கள் மூலம் தடுப்பது குறித்து ஆராய்ச்சிகளும் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தகவல்: முனைவர் ப.முருகேசபூபதி
, துணைவேந்தர், த.வே.பல்கலைக் கழகம்,
 கோயம்புத்தூர்-641 003
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-- 

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...