bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

பத்து வயது ஆண்ட்ராய்ட் !

முதலீட்டை பெருக்கியவர்?.
அன்னிய முதலீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வந்த குவைத் குழுவில் இடம்பெற்ற அதிகாரியின் பர்சை பாக்., செயலாளர் திருடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், குவைத்தை சேர்ந்த குழு ஒன்று, பாகிஸ்தானில் முதலீடு செய்வது குறித்து இஸ்லாமாபாத்தில், அந்நாட்டு நிதித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இது முடிந்த சிறிது நேரத்தில், குழுவில் இடம்பெற்ற ஒரவரின் பர்ஸ் காணவில்லை என புகார் கூறப்பட்டது. 

இதனையடுத்து, பேச்சுவார்த்தை நடந்த அறையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிர சோதனை நடத்தினர். 
இதில் பர்ஸ் கிடைக்காத காரணத்தினால், அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது,கூட்டம் முடிந்து அனைவரும் சென்ற பின்னர், நிதி அமைச்சகத்தில் செயலர் அளவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், மேஜையில் இருந்த அந்த பர்சை எடுத்து தனது கோட் பாக்கெட்டில் வைத்து கொண்டு சென்றது தெரியவந்தது. 

விசாரணையில், பாகிஸ்தான் முதலீடு துறை செயலராக பணியாற்றும் ஜரார் ஹைதர் கான் என தெரியவந்தது. 

இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பலர் கிண்டலாக கருத்தை பதிவிட்டு வருகின்றனர். 
==========================================================================================
  • இன்றுடன் ஆண்ட்ராய்ட் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. 
  • பின்லாந்து சிறுவன் குளிராமல் இருப்பதற்காக தனது பேண்டில் சிறுநீர் கழித்தானாம் அந்தக்கதைதான் ஆண்ட்ராய்டின் கதை என்று 2010ம் ஆண்டில், அப்போதைய நோக்கியாவின் சி.இ.ஓ.வாக இருந்த அன்ஸ்ஸி வன்ஜோகி கூறினார். ஆனால் அதையெல்லாம் உடைத்து ஆண்ட்ராய்ட் வளர்ந்து நிற்கிறது.

ஆண்ட்ராய்ட் இன்றைய நவீன உலகின் தவிர்க்கமுடியாத ஒன்று. 
ஒன்றுக்கும் உதவாது, தோல்வியடைந்துவிடும் என பத்து ஆண்டுகளுக்குமுன் சொல்லப்பட்டது. 
ஆனால் இன்று ஆண்ட்ராய்ட் இல்லாமல் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளது.


ஆண்ட்ராய்ட் பற்றிய சில குறிப்புகள்            

  • ஆண்ட்ராய்டை பலர் கூகுள் நிறுவனம் தயாரித்ததாக நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. கூகுள் நிறுவனம் 2005ல் ஒரு நிறுவனத்திடம் இருந்து வாங்கினர்.
     
  • பயன்பாட்டிலுள்ள மொபைல்களில் 88 சதவீத மொபைல் ஃபோன்கள் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்-ஐ சார்ந்தவை.
     
  • ஆண்ட்ராய்ட் உண்மையில் டிஜிட்டல் கேமிராக்களுக்கான ஓ.எஸ். ஆகதான் தயாரிக்கப்பட்டது. 
     
  • லினக்ஸ் என்ற ஓ.எஸ். ஐ அடிப்படையாக வைத்துதான் ஆண்ட்ராய்ட் உருவானது.
     
  • முதல் ஐந்து ஓ.எஸ்.கள் பிளாக்பெர்ரி போன்று இருக்கும்.
     
  • முதன்முதலில் ஹெச்.டி.சி (HTC) ஜி1 மொபைலில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
     
  • ஆண்ட்ராய்டின் அடையாளமான பச்சை பொம்மையின் பெயர் பக்டிராய்ட் 
     
  • 2 பில்லியனுக்கும் அதிகமான மொபைல் பயன்பாட்டாளர்கள் ஆண்ட்ராய்டை பயன்படுத்துகின்றனர்.

     
  • ஆண்ட்ராய்ட் 1.0                  (குறிப்பிட்ட பெயர் இல்லை)                           23.09.2008
     
  •                   1.1                               பெடிட்ஃபோர்                                                         09.02.2009  
     
  •                   1.5                              கப்கேக்                                                                      27.04.2009 
     
  •                   1.6                              டோனட்                                                                      15.09.2009
     
  •               2.0 - 2.1                          எக்லைர்                                                                     26.10.2009
     
  •                   2.2                              ஃப்ரோயோ                                                               20.05.2010
     
  •              2.3 - 2.3.7                       ஜிஞ்சர் பிரட்                                                             06.12.2010
     
  •             3.0 - 3.2.6                       ஹனிகாம்ப்                                                               22.02.2011 
     
  •             4.0 - 4.0.4.                      ஐஸ்க்ரீம் சேண்ட்விச்                                            18.10.2011
     
  •             4.1-4.3.1                        ஜெல்லிபீன்                                                                  09.07.2011 
     
  •            4.4-4.4.4                         கிட்கேட்                                                                         31.10.2013 
     
  •           5.0-5.1.1                          லாலிபாப்                                                                      12.11.2014
     
  •           6.0-6.0.1                          மார்ஸ்மல்லோ                                                           05.10.2015 
     
  •           7.0-7.1                            நோகட்                                                                             22.08.2016 
     
  •           8.0-8.1                            ஓரியோ                                                                           02.08.2017 
     
  •           9.0                                            பீ                                                                                06.082018 




  •  

இரட்டை மூளை...?

கோடிக்கணக்கான நரம்புகள், உலகத்தில் அதி உயர்ந்த pixel கொண்ட கேமராவாக கருதப்படும் கண்கள், 206 எலும்புகள், என்று நம் உடல் சார்ந்த அதிசய பட்டியல் நீள்கிறது. 
உலகின் நம்மை சுற்றி பல அமானுஷ்யங்கள் இருக்க அவற்றின் உச்சமாய் திகழ்கின்றோம் மனிதர்களாகிய நாம். மூளை மனித உடல் உறுப்புகளின் ராஜா. 
பல சூப்பர் கம்ப்யூட்டர்களை விட சிறந்த அதிநவீன கம்ப்யூட்டர் அது. டா வின்சி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ராமானுஜம் போன்ற அறிஞர் பெருமக்கள் கூட தங்களின் மூளையை வெறும் 17 முதல் 23 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
சரி அந்த மூளையின் சிறப்பை அதனுள் ஒளிந்திருக்கும் அமானுஷ்யத்தை காண்போம் வாருங்கள்.
பொதுவாக மனித உடலில் ஜோடி உறுப்புகள் அதிகம். ஆனால் மனிதனின் மூளையும் ஒரு ஜோடி உருப்பென்று உங்களுக்கு தெரியுமா?. 

நான் கூறுவது சிறு மூளை, பெரு மூளை என்ற ஜோடி உறுப்பு அல்ல. மாறாக நம் உடலுக்குள்ளே நம் இரண்டாம் மூளையாக செயல்படும் இன்னொரு உறுப்பை பற்றியே. ஆம் அதுவே நாம் உண்ணும் உணவை செரிக்கும் வயறு. அதை தான் அறிஞர்கள் நம் இரண்டாம் மூளையாக கருதுகின்றனர். 
“The Good Gut” என்ற தலைப்பில் Justin மற்றும் Erica என்ற மருத்துவ அறிஞர்கள் இதை பற்றிய ஒரு முழு ஆய்வை நடத்தி அதை பற்றிய கட்டுரையை வெளியிட்டு உள்ளனர். 
அவர்கள் அந்த பதிப்பில், நாம் பிறக்கும் போதே நம் மூளைக்கும் வயிற்றிற்கும் ஒரு மூலாதார தொடர்பு இருப்பதாகவும், சில சமயங்களில் புதிய மனிதர்களை சந்திக்கும் போதும், மிகுந்த அச்சத்தின் போதும், இன்னும் பல சந்தர்ப்பங்களில் அதை நாம் உணர்வதாகவும் கூறுகின்றனர்.
உடல் ரீதியாக உணரப்படும் அனைத்தும் உதாரணமாக சோர்வு, பசி, அச்சம், நோய் தாக்கம், பல வித மனங்கள் என்று எல்லாம் நம் வயிற்றால் உணரப்படுகின்றது. 
இதை நாம் பல முறை அனுபவித்தும் இருப்போம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நம் மூளை உணர்த்தும் பல விஷயங்களை நம் வயிற்றல் உணர்வது ஆச்சர்யமே. Justin மற்றும் Erica இதற்கு காரணமாக இருப்பது ஒரு மிக பெரிய நரம்பு மண்டலம் என்றும் கூறுகின்றனர். 
மூளையின் முழு வேலைகளையும் செய்யாவிட்டாலும், நம் வயிறு எப்போதும் ஒரு கூடுதல் மூளையாகவே செயல்படுவது உண்மையே. 
மேலும் அந்த அறிஞர்கள் கூறுகையில், உடலில் எந்த பாகத்திலும் இல்லாத அளவிற்கு மனிதனின் உடலில் குறிப்பாக வயிற்றில் அதிக அளவிலான நுண்ணுயிரிகள் உள்ளதாகவும், நம் வயிறு இரண்டாம் மூளையாக செயல்பட இதுவும் ஒரு காரணமாகவும் தெரிகின்றனர்.
உடலின் மொத்த நரம்புமண்டலமும் நம் மூளையோடு தொடர்புடையது என்ற போதும் இதய துடிப்பு, செரிமானம் ஏன் நாம் வாங்கும் மூச்சும் கூட இரண்டாம் மூளையாக செயல்படும் வயிற்றால் மேற்கொள்ளப்படுவது ஆச்சர்யமே. 
Justin, Erica தவிர இந்த இரண்டாம் மூளையை பற்றிய ஆய்வில் பெரிதாக யாரும் இன்னும் ஈடுபடவில்லை என்பதும் உண்மை. மனித உடலில் இப்படி ஒரு மாற்று சக்தி இருப்பதும் யாரும் அறிந்திராததே.
பழங்காலங்களில் பல ஞானிகளும், யோகிகளும் உண்ணாமல், உறங்காமல் தவம் செய்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம், அவர்கள் தங்கள் உடலை வெறுநிலை கொண்டு செல்ல வல்லவர்கள் என்றும் நாம் அறிவோம். 
அத்தகைய அசாத்திய சக்திகளை உண்மையில் அவர்கள் பெற்றிருப்பார்கள் என்று தற்போது யோசிக்க தோன்றுகிறது. 
இரண்டு மூளைகளையும் சரியான முறையில் பயன்படுத்தினால் எதுவும் சாத்தியமே.
மூளையின் உச்சகட்ட பலனை ஒரு உண்மை சம்பவத்தின் மூலம் காண்போம். பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் தன் வீட்டு கொல்லைப்புறத்தில் விளையாடிக்கொண்டு இருந்தான். 
அப்போது வானில் ஒரு பெரும் சத்தம், சோதனை ஓட்டத்தில் இருந்த ஒரு ஆள் இல்ல குட்டி விமானம் வெடித்த சத்தமே அது, ஆனால் வெடித்த விமானத்தின் பாகங்கள் அவனை நோக்கி சீறி பாய்ந்ததை அவன் அறியவில்லை. ஒரு சிறு துண்டு அந்த சிறுவனின் தலையை துளைத்து சென்றது. 
மூளையில் ஏற்பட்ட சிறு அதிர்வை தவிர வேறு காயங்கள் இன்றி அதிர்ஷடவசமாக அவன் உயிர் தப்பினான். ஆனால் அவன் வீடு திரும்பிய போதுதான் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது, அவன் மனநல பாதிப்பு குறைய தொடங்கியது, மேலும் அசாதாரண ஓவியங்களை வரையும் திறன் பெற்றான். 
மூளையில் ஏற்பட்ட சிறு பாதிப்புகூட அவனுக்கு நன்மையில் முடிந்தது.
                                                                                                                                                                    -லியோ
=====================================================================================================

 "பூண்டு" போதும்...! 

இதயத்தை பாதுகாப்பதில் பூண்டு மிக பெரிய பங்கு வகிக்கிறது. 
* பூண்டு ரத்த குழாயில் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். 
* ரத ஓடத்தை சீராக் வைத்துக்கொள்ளும் 
* பச்சை பூண்டை சாப்பிட்டால் கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை மிக சீராக இயங்கும். 

* வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். 
* குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்யை போக்கும். 
* ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் சேர விடாமல் தடுக்கிறது.
* மன அழுத்தம் வராமல் தடுக்கும். 
* இதே போன்று, வயிற்றில் உள்ள புழுக்களை அகற்ற பச்சை பூண்டை தினமும் காலை வெறும் வயிற்றில் உண்டு வர பூச்சுக்கள் வெளியேறி விடும்.
* தொண்டை புண்ணை ஒரே நாளில் அகற்றும். 
* நோய் எதிர்ப்பு தன்மையை உடலில் அகற்றும். 
* பாக்டீரியாவை எளிதில் அகற்றும் தன்மை கொண்டது.
* ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சனை எளிதில் நீங்கும் 1-2 பல் பூண்டு சாப்பிடுவது நல்லது... 
* உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து தலைவலி போன்ற தொந்தரவுகளை நீக்கும்.

வியாழன், 27 செப்டம்பர், 2018

கூகுள்: 20வது பிறந்த தினம்

"கூகுள் கோடிக்கணக்கான மக்களின்பல ட்ரில்லியன் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது;ஆண்ட்ராய்டாய் தொழில்நுட்ப உலகின் நுழைவு வாயிலாகவும், ஜிமெயிலாய் நவீன தபால் அட்டையாகவும், கூகுள் மேப்பாய் உங்களது தினசரி வழிகாட்டியாகவும், யூடியூப்பாய் காணொளி களஞ்சியமாகவும், ட்ரான்ஸ்லேட்டாய் மொழிப்பெயர்ப்புக்கு உதவியாகவும், கூகுள் குரோமாய் இணையதளங்களின் திறவுகோலாகவும், கூகுள் ஹோமாய் நவீனகால நண்பனாக தன்னந்தனியாக தொழில்நுட்ப உலகை ஆட்சி செய்து வரும் கூகுளின் 20வது பிறந்த தினம் இன்று."
                                                                                  கூகுள் யாரால், எப்படி ஆரம்பிக்கப்பட்டது? 
அதன் பெயர் காரணம் என்ன? 
சிறந்த/ பிரபல தயாரிப்புகள் என்ன? 
போன்ற அரத பழசான கதைகளை விட்டுட்டு, தற்போது 20 வயதைத் தொட்டுள்ள கூகுளின் பிரபலமில்லாத, அதே சமயத்தில் மிகவும் சிறந்த 3 தயாரிப்புகள் குறித்து பிபிசி தமிழின் தொழில்நுட்ப தொடரில் காண்போம்.
யூடியூப் கிட்ஸ்
ஒரு அடி கொடுத்தாலோ, உயரமான/ பெரிய மீசையுள்ள ஒருவரை காட்டி மிரட்டினாலோ அந்த காலத்தில் ஒரு குழந்தையை எளிதாக வழிக்கு கொண்டுவந்துவிடலாம். 
ஆனால், இந்த கால குழந்தைகளை மிரட்டுவது மட்டுமல்ல, அவர்களை இணையதள பயன்பாட்டை கண்காணிப்பதென்பதே இயலாத காரியமாகிவிட்டது.

குறிப்பாக, இணையத்தில் எவ்வித கட்டுப்பாடுமின்றி பரவி கிடைக்கும் தவறான விடயங்களை குழந்தைகள் பார்க்காமல் தடுப்பதும், அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் காணொளிகளை பார்ப்பதற்கான வழியை அமைத்துக்கொடுப்பதும் பெற்றோர்களின் சவால் மிகுந்த பணிகளில் ஒன்று.
இந்நிலையில், குழந்தைகளின் காணொளி பசியை, கற்றலை, பொழுதுபோக்கை அவர்கள் விரும்பும் வழியில் பயன்படுத்திக்கொள்ளும் சேவையை யூடியூப் கிட்ஸ் என்ற பெயரில் கூகுள் நிறுவனம் வழங்குகிறது.
அதாவது, குழந்தைகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் கல்வி, விளையாட்டு, இசை, நிகழ்ச்சிகள் என பல்வேறு விதமாக பாதுகாப்பான காணொளிகளை பெற முடியும்.
அதுமட்டுமல்லாமல், உங்களது குழந்தை எவ்வளவு நேரம் இந்த செயலியை பயன்படுத்தலாம், ஒலி அளவு எவ்வளவு வைத்துக்கொள்ளலாம், எதைத் தேடலாம் போன்ற பலவற்றை எங்கிருந்தாலும் இந்த செயலி மூலம் நீங்கள் மேலாண்மை செய்யலாம்.
கூகுள் மெஷர் செயலி
வர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்றவை விலையுயர்ந்த தொழில்நுட்பங்களாக பார்க்கப்பட்டு வருகிறது. 
எனவே, இதை பற்றிய அடிப்படை தகவல்கள்/ சிறப்புகள் கூட மக்களை சரியாக சென்றடைந்ததாக கருதப்படவில்லை.
உலகளவில் ஆகுமெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி இடத்தை பிடிப்பதில் கூகுள், ஆப்பிள், ஃபேஸ்புக் உள்ளிட்ட பல தொழில்நுட்ப ஜாம்பவான்களும் மோதி வருகின்றன.

இந்த தொழில்நுட்பங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே மிகப் பெரிய சவாலாக கருதப்படுகிறது. 
குறிப்பாக ஆகுமெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை தற்போதுள்ள திறன்பேசிகளில் விளையாட்டு செயலிகளாய் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், மக்களின் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் வகையிலான ஆகுமெண்டட் செயலியை கூகுள் நிறுவனம் வழங்கி வருகிறது. 
கூகுள் மெஷர் என்றழைக்கப்படும் இந்த செயலியை பயன்படுத்தி மேசைகள், நாற்காலிகள் போன்ற பல்வேறு பொருட்களின் நீல அகலங்களை உங்களது கைபேசியை கொண்டே அளவிட முடியும்.
உதாரணத்திற்கு, உங்கள் வீட்டிலுள்ள ஊஞ்சலை எடுத்துக்கொள்வோம். அதன் அளவை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்? ஒன்று டேப்பை கொண்டு அதை அளவிட வேண்டும், இல்லையெனில் கண்ணால் பார்த்து தோராயமாக அளவிடலாம். ஆனால், இந்த செயலியை கொண்டு உங்களது திறன்பேசி மூலமாகவே அதன் நீள, அகலங்களை நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும்.
அதுமட்டுமில்லாமல், வர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீங்கள் விரும்பிய ஓவியத்தை மெய்நிகர் உலகில் வரையும் டில்ட் பிரஷ் என்ற செயலியும் கூகுளின் முக்கியமான, அதேசமயத்தில் அவசியமான தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.
கூகுள் ஸ்காலர்

ஆராய்ச்சி கட்டுரைகள்/ வரலாற்று ஆவணங்கள்/ வித்தியாசமான புத்தகங்கள்/ சஞ்சிகைகள்/ குறிப்புகள்/ நீதிமன்ற தீர்ப்புகள் போன்றவற்றை தேடி நூலகங்களுக்கும், ஆயிரமாயிரம் இணையதளங்களுக்கும், கடைகளுக்கும் சென்று நேர விரயம் ஆவதை முற்றிலும் தடுக்கும் சேவையாக விளக்குகிறது கூகுள் ஸ்காலர்.
சாதாரண கூகுள் தேடலில் நீங்கள் எது கேட்டாலும் கிடைக்கும்தான், ஆனால் அது 1,000 அல்லது 10,000மாவது பக்கத்திலும் கூட இருக்கலாம். 
எனவே, பள்ளி-கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் தேடலுக்கென பிரத்யேக தேடல் தளமாக கூகுள் ஸ்காலர் விளக்குகிறது.
அதுமட்டுமல்லாமல், எழுத்தாளர்கள் தங்களது புத்தகத்தை முதலாக கொண்டு மேற்கோள் காட்டப்பட்டு எழுதப்பட்டுள்ள கட்டுரை, செய்தி, புத்தகங்கள் குறித்த விவரங்களையும் இந்த தளத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
மேலும், நீங்கள் ஒரு புதிய கண்டுபிடிப்பை செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், உங்களது கண்டுபிடிப்பு போன்ற வேறெதாவதொரு கண்டுபிடிப்பு ஏற்கனவே நிகழ்த்தப்பட்டுள்ளதா, காப்புரிமை பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதன் வடிவம், அமைப்புமுறை, செயல்பாடு குறித்த தகவல்களையும் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
உலகின் மிகப் பெரிய ஆவணக் காப்பகமாக விளங்கும் இந்த தளத்தில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் இருக்குமென்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகின் முன்னணி சமூக வலைத்தள செயலிகளில் ஒன்றான இன்ஸ்டாகிராமின் இணை நிறுவனர்கள் அந்நிறுவனத்திலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளது தொழில்நுட்ப உலகில் ஆச்சர்யத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
புகைப்படங்களை முதன்மையாக கொண்டு செயல்படும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை கடந்த 2012ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர்களுக்கு வாங்கியிருந்தது. ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராமை வாங்கியபோதிலும், அதன் இணை நிறுவனர்களான கெவின் சிஸ்டரோம், மைக் க்ரியேஜர் ஆகியோர் முறையே அதன் தலைமை செயலதிகாரியாகவும், முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாகவும் தொடர்ந்தனர்.
இந்நிலையில், எட்டு வருடங்களாக இன்ஸ்டாகிராமிலும், ஆறு வருடங்களாக ஃபேஸ்புக்கிலும் இருந்த நாங்கள் இருவரும் எங்களது ஆர்வம் மற்றும் படைப்பாற்றலை வெளிக்காட்டும் மற்றொரு இடத்தை தேடுவதற்காக விரைவில் பதவிலிருந்து விலகவுள்ளோம் என்று கெவின் சிஸ்டரோம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான பிரையன் அக்டோன் ஃபேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பேர்க் உடனான கருத்து வேறுபாட்டிற்கு பிறகு பதவி விலகியிருந்தார். எனவே, ஃபேஸ்புக் வாங்கும் நிறுவனங்களை சேர்ந்த தலைவர்கள் அந்நிறுவனத்தை விட்டு தொடர்ந்து வெளியேறி வருவது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக்கின் புதிய வர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் அறிமுகம்
வர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை பெரும்பான்மையானோர்க்கு கொண்டுசெல்லும் முயற்சியாக ஆகுலஸ் குவெஸ்ட் என்னும் ஃபேஸ்புக்கின் புதிய தயாரிப்பை அறிமுகப்படுவதாக அதன் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
சாதாரண வர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் போலன்றி இதில் அத்தொழில்நுட்பத்தை உணரும் வகையில் கை விசைகளுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சான்ஜோஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க் சக்கர்பெர்க் கூறினார்.
அடுத்தாண்டு மார்ச் முதல் மே வரையிலான காலக்கட்டத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த கருவியின் விலை 399 டாலர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:பிபிசி.தமிழோசை.
******************************************************************************************************************************************

புதன், 26 செப்டம்பர், 2018

சரிவது ரூபாய் மதிப்பு மட்டும்தானா ?

அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாய் மதிப்பு கடந்த ஆகஸ்டு 17ந்தேதி வரலாறு காணாத அளவில் டாலருக்கு 70.1 ரூபாயாக சரிந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின் இந்திய ரூபாய் மதிப்பில் எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. சாண் ஏறினால் முழம் சறுக்கின கதைதான்.
இந்த நிலை அடுத்த இரண்டு நிதி ஆண்டுகளுக்கும் தொடரும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. வரும் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து 75.15 ருபாயாக இருக்கும் என பொருளாதார கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் நம் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுமா? பொதுமக்களுக்கு என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும் ? ஐடி துறை, கார்ப்பரேட் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ரூபாய் மதிப்பு சரிவால் பாதிக்கப்படுமா? இந்த சரிவால் யாருக்காவது லாபம் கிடைக்கும்? போன்ற பல கேள்விகள் தற்போது மக்கள் மனதில் எழுந்துள்ளன.
நாணயத்தின் மதிப்பு
இந்தியாவின் நாணய மதிப்பு எப்படித் தீர்மானிக்கப்படுகிறது ?
மற்ற பொருட்களைப் போலவே  தேவை மற்றும் விநியோகம் அடிப்படையில் அந்நாட்டின் நாணயத்தின் விலை அல்லது நாணயத்தின் மாற்று விகிதம் (Exchange rate) தீர்மானிக்கப்படுகிறது.
இந்திய ரூபாய்க்கு நாணய மாற்றுச் சந்தையில் வலுவான தேவை இருந்தால் அது ரூபாயின் பரிமாற்ற விகிதத்தை வலுப்படுத்தும், அதன் மதிப்பை உயர்த்தும்.
வங்கிகள், கூட்டுறவு நிறுவனங்கள், ஏஜண்டுகள், அரசாங்கங்கள், தனிநபர் தினம் தினம் நடத்தும் பண பரிமாற்றங்களின் அடிப்படையில் நாணயங்களின் மதிப்பில் ஏற்ற இறக்கக்கங்கள் ஏற்படும். 
மக்களின் தேவை, பொருட்களின் விநியோகம் மற்றும் மக்கள் பொருட்களை வாங்குவது, விற்பது ஆகியவற்றின் அடிப்படையில் நாணயங்களின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.  உலகில் உள்ள நாணயங்களில் அமெரிக்காவின் டாலர் மற்றும் பிரிட்டனின் பவுண்டு இரண்டும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட உலக வர்த்தகத்தை நிர்ணயிக்கின்றன. எனவே நாணயங்களின் மதிப்பு பொதுவாக அமெரிக்காவின் டாலர் வைத்து மதிப்பிடப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கு இருக்கும் தேவையின் அடிப்படையில் மற்ற நாடுகளின் நாணய மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
தற்போது நிலவும் வர்த்தக சூழ்நிலையால் இந்தியாவில் டாலரின் தேவை அதிகரித்துள்ளது. அதனால் டாலர் மதிப்பு கூடுகிறது. அதன் அடிப்படையில் தற்போது இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.
இதனை மிகவும் எளிதாக கத்தரிக்காய் விலை நிலவரத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.கோயம்பேடு சந்தைக்கு கூடுதலாக 10 லாரி கத்தரிக்காய் வந்தால் கத்தரிக்காய் விலை கிலோவுக்கு 20 பைசா குறையும். கூடுதலாக 20 லாரி கத்தரிக்காய் வந்தால் கத்தரிக்காய் விலை கிலோவுக்கு 40 பைசா குறையும்.
தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு டாலர் தேவை. சந்தையில் போதுமான அளவுக்கு கிடைக்கிறது என்றால் டாலர் மதிப்பு உயராது. நமது தொழில் வரத்தக நிறுவனங்கள் சம்பாதித்த டாலரைவிட அதிகமாகத் தேவை இருந்தால் டாலர் மதிப்பு உயரும். அவ்வளவுதான்.  
கச்சா எண்ணெய் விலை
டாலரின் தேவை அதிகரிப்பதற்கும் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததற்கும் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு முக்கிய காரணமாகும்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சமீபத்தில் ஈரானிடம் இருந்து உலக நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்தது.
ஈரானிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இந்த சூழ்நிலையால் அமெரிக்காவின் ஒரு பீப்பாய் (சராசரியாக 159 லிட்டர்) கச்சா எண்ணெயின் விலை 75 டாலராக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் முன்பை விட கூடுதல் விலை கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் டாலரின் தேவை அதிகரித்து இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது.
வர்த்தக போர் 
அமெரிக்கா – சீனா இடையே நடந்து வரும் வர்த்தக போரால் சீனாவின் நாணய மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் வர்த்தக சந்தையில் பத்திரங்கள் மற்றும் பங்குகளில் போடப்பட்டுள்ள  அமெரிக்கா சார்ந்த நிதிகள் பாதுகாப்பு கருதி திரும்ப பெறப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆசிய நாடுகளின் நாணய மதிப்பு சரிவை சந்தித்துள்ளன. அதில் இந்தியாவின் நாணய மதிப்பு மோசமான சரிவை சந்தித்துள்ளது.
பணவீக்கம் பாதிப்பு
ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியாவின் பணவீக்கம் கடுமையாக உயரும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேறு யார் சொல்வதையும் நாம் கேட்க வேண்டியதில்லை. நமது ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது?
பணவீக்கம் 4 சதவீதத்துக்குள் இருந்தால் நல்லது. ஆனால் பண வீக்கம் அந்த எல்லையைத் தாண்டி உயரும் என நினைத்தோம். அதனால் 4.2 சத வீதத்தைத் தாண்டப்போவதில்லை என்று கணிக்கப்பட்டது. ஆனால் 2018-2019ம் ஆண்டு முதல் 6 மாதங்களில் 4.8 சதவீதத்தை தாண்டிவிடும் என அஞ்சப்படுகிறது. இதைச் சொன்னது முகவரி இல்லாத ஆசாமி இல்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஊர்ஜித் படேல்.
இந்திய நாணயக் கொள்கைக் கமிட்டியின் கூட்டத்துக்குப் பின் ஆகஸ்டு 2ந்தேதி செய்தியாளர்களிடம் கூறினார்.
ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியாவின் ஏற்றுமதிப் பொருள்களின் டாலர் விலை குறையும். அதேசமயம் கச்சா எண்ணெய், மூலதனப் பொருள்கள், ரபேல் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சூரிய மின்சார தயாரிப்புக்கான மின் உற்பத்தி தொகுப்பு பேனல்கள், காற்றாலை மின்சார தயாரிப்புக்கான நுணுக்கமான சில கருவிகள், அல்லது அவற்றுக்கான பாகங்கள், ஹார்லி டேவிட்சன் போன்ற ஆடம்பர மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கான விலை அதிகரிக்கும்.
அதேசமயம் ஏற்றுமதி விலை குறைவதால் உலக நாடுகள் நம் நாட்டு பொருள்களை முன்பை விட குறைந்த விலையில் இறக்குமதி செய்யலாம். எனவே இந்திய பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும். ஆனால் அதே பொருள்களைத் தயாரிப்பதற்கான செலவும் அதிகரிக்கும்.
இந்த அதிகரிப்போடு பண வீக்கத்தால் உணவு எண்ணெய், கத்தரிக்காய், முட்டை, கோழிக்கறி, ஆட்டு மாமிசம். அரிசி, கோதுமை ஆகியவற்றின் விலையும் உயரும். இதறகுத் தான் ரிசர்வ் வங்கித் தலைவர் அஞ்சுகிறார். 
அதேசமயம் இறக்குமதிக்கான செலவுகள் அதிகமாகும் என்பதால் இந்தியாவின் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்படும். வயிற்றை வாயை, கண்ணை இறுகக் கட்டிக் கொள்ள வேண்டி நேரிடலாம்.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும், தங்கம் வெள்ளி, செம்பு நிக்கல், இரும்பு உள்ளிட்ட உலோகப்பொருள்களின் விலை உயரும்.
மேலும் பெட்ரோல், டீசல், மொபைல் போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களின் விலை உயரும்.
ஏற்கெனவே அதிகரித்து வரும் உலக கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்தியாவில் அதிகரிக்கும் இறக்குமதி செலவு இரண்டும் சேர்ந்து நம் நாட்டின் பெட்ரோல், டீசல் விலையை வரலாறு காணாத அளவில் உயர்த்தக்கூடும்.
பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்தால் பொருட்களுக்கான போக்குவரத்து செலவு அதிகரிக்கும். அதனால் நாட்டில் விலைவாசி உயரும். இந்த சூழ்நிலையால் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும். இது மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். ஃப்
கடன் விகிதங்கள் உயர்வு 
பணவீக்கம் அதிகரித்தால் அதன் தொடர்ச்சியாக மத்திய ரிசர்வ் வங்கி செலவை கட்டுப்படுத்த கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தும். இதனால் வீட்டு கடன்களுக்கான மாத தவணை அதிகரிக்கும். இது சராசரி மக்களை வெகுவாக பாதிக்கும்.
முக்கியமாக வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் அதிக பணத்தை செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். உதாரணமாக வெளிநாட்டில் படிக்க 20,000 டாலர் கடன் பெற ரூ.13.2 லட்சம் கட்ட வேண்டிய நிலை மாறி ரூ.13.8 லட்சம் கட்ட வேண்டி வரும்.
அதேப்போல் வெளிநாட்டுக்குப் பயணம் செல்பவர்களும் முன்பு திட்டமிட்டதை விட அதிகப் பணத்தை கொண்டு சென்றால் மட்டுமே உணவு, தங்கும் வசதி ஆகியவற்றிக்கான செலவுகளை சமாளிக்க முடியும்.
மொத்த உள்நாட்டு வளர்ச்சி
இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரிப்பதால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும். இதன் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு – ஜிடிபி மதிப்பு அதிகரிக்கும்.
அதேசமயம் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் தங்கள் தேவைகளைப்பெற கூடுதல் பணம் செலவிட வேண்டி வரும். மக்கள் கையில் கூடுதல் பணம் இருந்தால் வேண்டிய அளவு வாங்கிக் கொள்ளலாம். உபரியாக கையில பணம் இல்லாவிட்டால் தேவையைக் குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதனால் சந்தையில் விற்பனைச்சரிவு ஏற்படும்.  அதனால் விற்பனை சரிந்தால் மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் பெரிதாக முன்னேற்றம் இருக்காது.
விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி போன்றவை காரணமாக இன்றைய சூழ்நிலையில் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக பண்டிகைகள் நெருங்கி வரும் சமயத்தில் விலைவாசியால் மக்கள் தங்கள் தேவைகளை குறைப்பது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் நம்மால் இப்பொழுது யூகிக்க தான் முடியும். துறைவாரியான துல்லியமான மதிப்பீட்டுக்கு பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
வெளிவர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு
இறக்குமதி பொருட்களின் விலை உயர்வால் இந்தியாவின் வெளிவர்த்தக பற்றாக்குறை (Current account deficit) அதிகமாகும். தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு மதிப்பில் வெளி வர்த்தக பற்றாக்குறை 2 சதவீதமாக உள்ளது.
நாணய மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்தால் இது 3 சதவீதமாக அதிகரிக்கலாம் என நிபுணர்கள் அஞ்சுகிறார்கள். இது தொடர்ந்து அதிகரித்தால் அந்நிய செலாவணி இருப்புக்களை இந்தியா பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இந்தியாவில் இதுவரை அப்படிப்பட்ட நிலை உருவானதில்லை.
யாருக்கு லாபம் ? 
ரூபாய் மதிப்பு சரிவதால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டாலும் சில துறையினர் அதனால் பலனடைய வாய்ப்புள்ளது.
ஏற்றுமதியாளர்கள்
இந்தியாவில் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் ரூபாய் மதிப்பு சரிவால் அதிக லாபம் பெரும்.
ஏனென்றால் இங்கிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வழங்கப்படும் வெளிநாட்டு நாணயங்களை இந்திய ரூபாயாக மாற்றினால் முன்பை விட அதிக பணம் கிடைக்கும். உதாரணமாக முன்பு ஒரு அமெரிக்க டாலருக்கு 68 ரூபாய் கிடைத்தால் தற்போது நிலவரப்படி ஒரு டாலருக்கு 69.86 ரூபாய் அல்லது அதற்கும் அதிகமாக கிடைக்கும்.
அவர்களின் தொழில் முன்னேற்றம் காரணமாக ஏற்றுமதித் துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
சுற்றுலா துறை
ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியாவில் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகரிக்க வாய்ப்புண்டு.
இன்றைய சூழ்நிலையில் அவர்களிடம் உள்ள வெளிநாட்டு நாணயங்களை இந்திய ரூபாயாக மாற்றினால் முன்பை விட கூடுதலாக பணம் கிடைக்கும்.
எனவே அவர்களது போக்குவரத்து செலவு, தங்கும் வசதிகள், நுழைவு கட்டணங்கள், ஷாப்பிங் செய்வதற்கான செலவுகள் என அனைத்துக்கும் அவர்கள் முன்பை விட குறைவாக செலவிடும் நிலை உருவாகியுள்ளது.
உதாரணமாக முன்பு 20,000 ரூபாய் விமான கட்டணத்திற்கு கடந்த மாதம் 290 டாலர்கள் கட்ட வேண்டும். இந்த மாதம் அது 286 டாலராக குறைந்துள்ளது. இதேப்போல் இந்திய ரூபாய் சரிவு அதிகரிக்க அதிகரிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறிப்பாக மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு செலவுகள் குறையும். 
எனவே ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியாவுக்கு சுற்றுலா பயணிகளின் வரத்தும் அவர்கள் இங்கு செலவிடும் தொகை இந்திய ரூபாய் அடிப்படையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது பண்டிகைகள் காலம் நெருங்குவதால் சுற்றுலா துறைக்கு இது சாதகமான சூழலாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடு
இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்படும் இழப்பை சீர்செய்ய இந்திய ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளாக வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள டாலர்களை வங்கிகள் மூலம் விற்று ரூபாய் நோட்டுகளாக மாற்றி புழக்கத்தில் விடுவது. இந்தியாவின் பெரிய நிறுவனங்கள் வைத்திருக்கும் வெளிநாட்டு டாலர்களை ஒரு நாள் வட்டிக்கு கடனாக பெற்று அதை வங்கிகள் வழியாக புழக்கத்தில் விடுவது.
இந்திய வங்கிகள் வெளிநாட்டு சந்தைகள் வழியாக நிதி திரட்டி அதை இந்திய ரூபாயாக மாற்றி உள்ளூர் மக்களுக்கு கடன் வழங்குவது போன்றவற்றை ரிசர்வ் வங்கி செயல்படுத்தும்.
சில நேரங்களில் வெளிநாடுகளில் நிதிகளை திரட்ட பொது துறை நிறுவனங்களிடமும் அரசாங்கம் வலியுறுத்தும்.
இறக்குமதிக்கான கட்டணத்தை மெதுவாக செலுத்துவது, ஆடம்பர பொருட்கள் மீதான சுங்க வரிகளை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவை பயன் அளிக்காத பட்சத்தில் மத்திய அரசின் அனுமதியுடன் இந்திய பங்கு சந்தையில் அமெரிக்க டாலர்களை விற்பதன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பை சீர் செய்யும் முயற்சியில் ரிசர்வ் வங்கி ஈடுபடும்.
ரூபாய் மதிப்பை சீர் செய்ய மத்திய ரிசர்வ் வங்கி இதுவரை 2300 கோடி டாலர் செலவிட்டுள்ளதாக மத்திய நிதி விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் கார்க் தெரிவித்துள்ளார்.
ஆனால் ரிசர்வ் வங்கியின் இந்த முயற்சி பெரிதாக பலன் தராது என்றும் சுபாஷ் கார்க் கூறியுள்ளார். 
இந்திய ரூபாயின் வீழ்ச்சி உலக வர்த்தக சூழ்நிலையால் ஏற்பட்டுள்ளது. இந்தியா மட்டுமன்றி பல உலக நாடுகளின் நாணய மதிப்பும் தற்போது சரிந்து வருகின்றது. அமெரிக்காவின் மோசமான வர்த்தக கொள்கைகளால் இந்த நிலை மேலும் மோசமாக கூடும் என அஞ்சப்படுகிறது.
எனவே தற்போது நிலவும் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி என்ன முயற்சி செய்தாலும் அது பலன் தராது. இந்தியாவிடம் தேவையான அளவு அந்நிய செலவாணி இருப்பு உள்ளதால் கவலை கொள்ள தேவையில்லை என சுபாஷ் கார்க் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படும் சராசரி மக்கள்
ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்படும் விலைவாசி உயர்வின் தாக்கம் அனைவரையும் கடுமையாக தாக்காது. 
உதாரணமாக தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை முன்பே வாங்கிச் சேமித்து வைப்பவர்கள், பல வருடத்திற்கு தேவையான வர்த்தக முதலீடுகளை செய்துள்ள பெரு வணிகர்கள், பொருட்களை உடனடியாக விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் அதை சேமித்து வைத்து உரிய நேரத்தில் விற்பனை செய்பவர்கள் ஆகியோர் ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்படும் மாற்றங்களை பெரிதாக உணர வாய்ப்பில்லை.
ஆனால் தங்களுக்கு தேவையான பொருள்களை அன்றைய தினம் வாங்கும் ஏழை, எளிய மக்கள் மற்றும் கையில் உள்ள பொருளை முதலீடாக போட்டு வியாபாரம் செய்யும் சிறு, குறு வணிகர்கள் ஆகியோர் ரூபாய் மதிப்பு சரிவால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விலைவாசி உயர்வில் ஏற்படும் தாக்கத்தை அவர்களால் தான் நன்கு உணர முடியும். 
இந்தியாவில் ஏழை, எளிய மக்களின் கொந்தளிப்பை தவிர்க்கவே மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பு சரிவை சீர் செய்ய விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.
ரிசர்வ் வங்கியின் ஆரம்ப கட்ட முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில் வெளிநாட்டு முதலீடு வரவு குறையத் தொடங்கும். இது தொற்று நோயாக மற்ற பகுதிகளையும் பாதிக்கும் அபாயம் நிரந்தரமாக உள்ளது.
இந்த அபாயங்கள எல்லாம் மிரட்டும் வேளையில் இதுதான் பொற்காலம் என்று தலையிலடித்து சத்தியம் செய்யும் பாணியில் பங்குச்சந்தையில் கூத்தும் கும்மாளமாக உள்ளது. பங்குச்சந்தைகளின் குறியீட்டெண்கள் கயிற்றில் ஏறி உச்சங்களுக்கு உல்லாசப் பயணங்கள் போகிறார்கள்.
பங்குச்சந்தை, வேளாண் பொருள்களின் ஆன் லைன் வர்த்தகம் இவை வர்த்தக சூதாடிகளின் பெருங்குமிழ்களாக காற்றில் மிதக்கின்றன.
இந்த பிரச்சனைகளால் உலக வர்த்தகம், அந்நிய செலவாணி போன்றவற்றை பற்றி எதுவும் அறியாத ஏழை, எளிய மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் நஷ்டமடைகிறார்கள். இந்த நிலை நீடித்தால் இந்தியா எப்படி வல்லரசாக வளர முடியும்?
.

                                                                                                                                          -சி.நிரஞ்சனா

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...