bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 28 நவம்பர், 2018

அகர்வால்களின் ஆய்(வு) அறிக்கை

 
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தமிழக அரசு 48 ஏ பிரிவின்கீழ் ஸ்டெர்லைட் ஆலை யை மூடியது. இப்போது வேதாந்தா குழுமத்துக்கு நீதிபதி அகர்வால் தலைமையிலான கமிட்டி ஊது குழலாக செயல்படுவது போல் தோன்றுகிறது.
உண்மையில் ஆய்வுக்குழுவின் வேலை என்பது ஸ்டெர்லைட் ஆலை குறித்து மக்கள்கருத்துக்களை அறிந்து அறிக்கை யாக தாக்கல் செய்வது மட்டுமே. ஆனால் அகர்வாள்களால் அமைக்கப்பட்ட பசுமை தீர்ப்பாயக்குழு அறிக்கை மக்களுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும்,அது தங்கியுள்ள பசுமை க்கும் எதிரானது.

இதுவரை இந்தியா முழுக்க சுற்றுசுசுழல்,இயற்கை வழங்களைப்பதுக்காக்க அமைக்கப்பட்ட   பசுமை தீர்ப்பாயம் அறிக்கை,தீர்ப்பு என்பது நாசகார ஆலைகளுக்கு,முதலாளிகளுக்கும் மட்டுமே ஆதரவாகவுள்ளது.
எதற்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை விட்டு விலகி இயற்கை வளத்தை அழிக்கும்,சுற்று சுழலுக்கு கேட்டுவிளைவித்து காற்றையும்,நிலத்தடி நீரை விஷமாகும் ஆலைகளுக்கு அதன் முதலாளிகளுக்கு ஆதரவாகவே அமைந்து வருகிறது.
ஒரு தீர்ப்பு கூட  வாழ்வதற்காகப்போராடும் மக்களுக்கு ஆதரவாக பசுமைத் தீர்ப்பாயம் அளித்ததாக வரலாறே இல்லை.
பின் எதற்கு இந்த பசுமைத் தீர்ப்பாயம் ?

போராடும் மக்களை அவர்களின் போராட்டக்குணம் நீர்த்துப்போகவும் மக்களை திசை திருப்பி விரக்தி மனப்பான்மைக்குத்தள்ளவுமே இந்த தீர்ப்பாயம் கார்ப்பரேட் அரசால் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஸ்டெர்லை அலை முதல் நீதிக்கு எதிரானது என்று வாய்க்கிழிய தீர்ப்பில் முழங்கியுள்ள கண்டித்துள்ள அணில் அகர்வால் நண்பர்  தருண் அகர்வால் "ஸ்டெர்லைட் ஆலை தனக்கு ஆணையிடப்பட்ட பசுமை வேலி ,கொதிகலன் மாசு வடிகட்டி,கழிவுகளை அப்பறப்படுத்தும் வழிகள்,தொழிலாளர் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் விதிகளை மீறி இயங்கியதையோ,மாத்தி வாங்கும் முன்னரே நாசகார ஆலையையும்,அதன் விரிவாக்கத்தையும் இயக்கியதை கண்டித்தும் எந்த கண்டனமும் தெரிவிக்க வில்லை.
மக்கள் விரோத முதலாளித்துவ (அகர்)வால்கள் .

ஆளை இயங்கலாம் என்ற தீர்ப்பில் அது விதிகள் படி ஏற்பாடுகளை செய்தபின்னர் இயங்கலாம் என்ற ஒரு அறிவுரையை கூட தருண் அகர்வால்,அணில் அகர்வாலுக்கு கொடுக்கவில்லை.


நீதி மீறப்பட்டுள்ளது என்று ஒப்பாரி வைக்கும் தருண் அகர்வால் ,தனது நீதி என்பதற்க்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.


மக்களுக்கு நன்மை உண்டாக்குவது நீதியா ,மக்கள் அழிந்தாலும் சரி எனது நாசகார ஆலையை இயக்கி கப்பல்,கப்பலாக பணத்தைக்கொள்ளையடிப்பேன் என்கினற தனி முதலாளி,

அதுவும் தஸ்ஒருசாலை ராபத்தி வரவு-செலவுகளை வரி ஏய்ப்பு செய்கினறவனுக்கு மேலும் செய்கினற நன்மை நீதியா?
இதை அணிலாகர்வால்,அம்பானிகள்,மோதிகள்,அதானிகள் உறவின் முறை குஜராத்தியும்  ,நரேந்திர மோடியால் ஸ்டெர்லைட்  ஆய்வுக்காக அந்தநேரம் பசுமைத் தீர்ப்பாய ஆணையராக நியமிக்கப்பட்டவருமான தருண் அகர்வால் தெளிவுபடுத்துவாரா?

அதனை விட்டு, ஆலை இயங்கு வது குறித்து முடிவைக் கூறுவது அதன் வேலை அல்ல.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினருக்கும் இடையே ஸ்டெர்லைட் ஆலை குறித்த ஒரு ஒருமித்த கருத்து உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையைநிரந்தரமாக மூடுவதற்கு தீர்மா னித்து, அதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

 சரியான வழிமுறைகளை பின்பற்றி அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்று தருண் அகர்வால் தலைமையிலான குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள தூத்துக்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.
மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கின்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதில் காவல்துறையினர் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து பெரும் போராட்டம் எழுந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.அந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சீராய்வு மனுவும் தள்ளுபடியானது. இதனிடையே தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமை யிலான குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் கருத்து கேட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும் சென்று, பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு தரப்பினரிடம் மனுக்களையும் பெற்றனர். அதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள மாநில பசுமைத் தீர்ப்பாயத்திலும் கூட்டம் நடத்தி, அரசியல்கட்சியினர், ஸ்டெர்லைட் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுவினரிடம் கருத்துக்களைப்பெற்றனர்.

இந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை தனித்தனி யாக மூடி முத்திரையிடப்பட்ட 48 உறைகளில் வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது.
ஆலைக்கு உரிய முறையில் நோட்டீஸ் கொடுக்காமல் மூடப்பட்டுள்ளது .
ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை முறையாக அகற்றுவ தோடு, 10 நாட்களுக்கு ஒருமுறை நிலத்தடி நீரை ஆய்வு செய்ய வேண்டும். ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்கலாம்” என்று பரிந்துரைத் துள்ளதாக கூறப்படுகிறது.
 இந்த ஆய்வறிக்கை யை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தமிழக அரசு உரிய பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தருண் அகர்வால் குழுவின் அறிக்கையால் தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் மாநிலங்களவையில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்திருக்கும் பகுதியில் மத்திய நிலத்தடி நீர் வாரியம்மேற்கொண்ட ஆய்வில் நிலத்தடி நீர் மாசுபட்டுஇருப்பதும், ஈயம், காட்மியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு , அர்சினிக் ஆகியவை நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதுஉறுதி செய்யப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

ஆனால் தற்போது, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த தருண் அகர்வால் தலைமையிலான குழு தமிழக அரசு ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு முறையாக நோட்டீஸ் கொடுக்காமல் ஆலையைமூடியது இயற்கை நீதிக்கு மாறானது என கூறியிருக்கிறது.

முறையாக அனுமதி பெற்று இயங்கும் ஒரு நிறுவனத்தை மூட வேண்டும் என்றால்நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்பது இயற்கைநீதி. ஆனால் ஆலையை இயக்குவதற்கான உரிமத்தையே புதுப்பிக்க அரசு மறுத்துவிட்ட நிலையிலும் ஆலை இயங்கி வந்தது.
அந்தநிலையில்தானே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீலிட்டது.


அது எப்படிஇயற்கை நீதிக்கு முரணாகும்.
 நீதிபதி தருண் அகர்வால் குழுவின் வாதம்தான் இயற்கை நீதிக்கு மாறானதாக இருக்கிறது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் குழுவின் அறிக்கை, ஆலையைமீண்டும் திறக்கலாம் என பரிந்துரைத்திருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையால் புற்று நோய்,தோல் வியாதிகள்,சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை,அரசே ஆலையி சுர்ருலுமுள்ள நிலத்தடி நீர் குடிக்க முடியாத நிலையில் ரசாயனக்கலப்பு ள்ளது என்று அறிக்கை கொடுத்துள்ளது,எல்லாவற்றுக்கும் மேலாக பல ஆண்டுகளாக மக்கள் ஸ்டெர்லைட் ஆளை எதிர்ப்பு போராட்டம் நடத்துவது,உச்சக்கட்டமாக 13 பேர்கள் ஆளை நிர்வாகத்திற்கு ஆதரவாக காவல்துறை சுட்டுக்கொன்றது போன்ற எதையுமே ஆய்வில் எட்த்துக்கொள்ளப்படவே இல்லை.முற்றிலும் ஸ்டெர்லைட்டை இயக்கவேண்டும் என்ற ஒரே நோக்கில் மட்டுமே ஆய்வு நடந்துள்ளது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.அதற்க்கு அவர்கள் பயன்படுத்திய சொற்கள் அனைத்துமே மக்கள் விரோதமானதுதான்.


இது எப்படி ஆய்வறிக்கையாக இருக்க முடியும்?

இது முழுக்க முழுக்க ஒரு சார்பான அறிக்கையாகத்தானே இருக்க முடியும்.


தருண் அகர்வால் அறிக்கையை விடதேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி கோயலின் நிலைப்பாடு அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கிறது.


தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர்ஆய்வுக் குழுவில் இடம்பெற்றால் தமிழகத்திற்கு சாதகமாக ஆய்வு 

இருக்கும் என்ற வாதத்தை ஏற்று ஆய்வுக்குழுவில் தமிழக நீதிபதியை இணைக்க மறுத்தது நீதிபதிகளுக்கு களங்கம் கற்பிக்கும் செயல். 

அது மட்டுமல்ல அக்குழுவுக்கு  ஸ்டெர்லைட் முதலாளி அணில் அகர்வால் மாநிலமான குஜராத்தை சேர்ந்த அவர் இனத்தைச் சேர்ந்த தருண் அகர்வால் என்றவரை தலைவராகவும் நியமித்தது 

இக்குழுவின் அறிக்கையை முன்னரே தமிழக மக்களுக்கு வெளிகாட்டிவிட்ட அநியாயம்.
இவர்கள்தான் வாய்கிழிய நியாயத்தைப்பேசுகிறார்கள்.
 
தற்போது ஆய்வுக்குழு அறிக்கையை பாதிக்கப்பட்ட தரப்பிற்கு கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று சொல்லியிருப்பது அதைவிட மோசம்.
.

இது ஸ்டெர்லைட் அனில் அகர்வாலுக்கு வெளிப்படையாக ,ஆதரவாக தருண் அகர்வால் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஆதரவு அறிக்கையே அன்றி ஆய்வறிக்கையல்ல.
எனவே இதனை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.

'நாங்களும் காமெடி செய்வோம்'

மனிதர்களை புகைப்படம் எடுக்கையில் சிலர் செய்யும் செயல்கள் நகையாக இருக்கும்.அவற்றுக்கு சளைக்காமல் சில மிருகங்களை படம் எடுக்கையில் செய்த சேட்டைகள் சிரிப்பை வரவழைக்கிறது.
அப்படி சில.

 Two embraced lizardsA rhino with peacock feathers behind it 
   Squirrel holding on to plants with its feet
 Bear holding a paw against its face

Polar bear looking at a camera on a tripod

 

Shocked squirrel 
 நன்றி:பிபிசி .


செவ்வாய், 27 நவம்பர், 2018

வரலாறு படைத்த ஐராவதம் மகாதேவன்

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ஐராவதம். 

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த பர்மாவில் அவர் பணியாற்றியபோது அவரது குடும்பமும் அங்கேதான் இருந்தது. 
அப்போது 1930ல் பிறந்தவர் மகாதேவன்.

சில ஆண்டுகளில் குடும்பம் தமிழ்நாட்டிற்கு வந்த பின்பு, திருச்சியில் பள்ளிப்படிப்பை முடித்த மகாதேவன் சென்னையில் விவேகானந்தா கல்லூரியில்இணைந்து இளங்கலை வேதியல் பட்டம் பெற்றார்.
 பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று சட்டஅறிஞரானார். 

அதன் பின் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றிபெற்று, 1953ல் அவ்வாண்டின் தமிழ்நாட்டுக் குழுவைச் சேர்ந்த இஆப அதிகாரியாக அறிவிக்கப் பட்டார். 

மத்திய அளவிலும் மாநிலத்திலும் கடமைப் பொறுப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாகச் செயலாற்றினார். 

மத்திய வணிகம் மற்றும் தொழில்துறையில் ஒரு அதிகாரியாக 1958 முதல் 1961 வரையில் பணியாற்றிய போது அவருக்கு, அலுவலகத்திற்கு அருகில் இருந்த இந்திய அருங்காட்சியகத்திற்கு அடிக்கடி சென்றார்.
 அங்கிருந்த தொன்மை சார் தகவல்களும் தடயங்களும் அவரை ஈர்த்தன. 

அதன் தலைமைக் காப்பாளராக இருந்தகல்வெட்டு ஆய்வாளர் சி. சிவராமமூர்த்தி அவரது ஆர்வத்தைக் கண்டு, தென்னிந்திய எழுத்தியல் வரலாறுபற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட ஊக்குவித்தார்.

பின்னர், அதிகாரம் மிக்க ஆட்சிப் பணி பொறுப்பி லிருந்து 1980ல் தன் விருப்ப ஓய்வு பெற்றார் ஐராவதம் மகாதேவன். நெடுங்கால லட்சியமான எழுத்தியல் ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இவ்வாறு பதவி விலகினார்.

1987ல் ‘தினமணி’ நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பு அவரைத் தேடி வந்தது. 
அவரது பன்முகக் கல்வியறிவும் சமூக அக்கறையும் தமிழ் நாட்டமும் இதழியல் பணியை நான்காண்டு காலம் சிறப்பாக நிறைவேற்றத் துணையாக அமைந்தன.

 தினமணியில் அதுவரையில் இருந்த எழுத்து நடையில் நல்ல தமிழ்ச்சொற்களைக் கொண்டுவரச் செய்ததில் அவர் காட்டிய ஈடுபாடு பிற பத்திரிகைகளுக்கும் ஒரு ஈர்ப்பாக அமைந்தது என்றால் மிகையில்லை. பத்திரிகைப் பணிக்குப் பிறகு தனது ஆராய்ச்சிகளிலேயே முழுமையாக ஈடுபட்டார். 

அவரது ஆயுளின் பிந்தைய முப்பதாண்டு காலம் இந்திய எழுத்தியல் தொன்மைகள் பற்றிய அர்ப்பணிப்பு மிக்க ஆராய்ச்சிகளிலேயே கடந்தன. 


 உலக அளவில் சிந்து சமவெளி நாகரிக எழுத்துப் படிவங்கள் பற்றி ஆராய்ந்து புகழ்பெற்ற சிலரது வரிசையில் மகாதேவனும் இடம்பெற்றார், நுட்பமான, கடுமையான உழைப்பின் அடிப்படையில் அன்றைய அந்த எழுத்துரு திராவிட எழுத்துருவே என்று நிறுவினார்.

இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் நிதியுதவியோடு நடத்திய ஆராய்ச்சியின் அடிப்படையில் அவர் ஆக்கிய‘சிந்து பதிவுகள் – எழுத்தாக்கங்கள், பொருளாக்கங்கள், பட்டியல்கள்’ என்ற நூல் விரிவான ஆராய்ச்சிகளுக்குத் தூண்டுகோலாக அமைந்தது என்கிறார்கள் துறைசார் வல்லுநர்கள். 
இந்தியத் தொல்லியல் துறை 1977ல் அந்தப் புத்தகத்தை வெளியிட்டது. 

அவருடைய கட்டுரைகள் வாய்மொழி வழியிலான ரிக் வேதப் பதிவுகளுக்கும் எழுத்துப்பூர்வமான சிந்துசமவெளி பதிவுகளுக்கும் இடையேயான தொடர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது சாமானியமான பணியல்ல. 


குறிப்பாக அவர், அறிவியல் கண்ணோட்டத்தோடு வரலாற்றை அணுகிய இந்தியாவின் ரொமிலா தாப்பர், பின்லாந்து நாட்டின் அஸ்கோ பார்ப்போலோ போன்ற முன்னணி ஆய்வாளர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு இயங்கினார்.

தமிழ் எழுத்து, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றின் தொன்மையை நிறுவிட முயலும் சக்திகளுக்கு அவரது ஆராய்ச்சிகள் பெருந்துணையாக அமைந்துள்ளன என்று இளம் ஆய்வாளர்களும் கூறுகிறார்கள்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அவர் ‘பண்டைய தமிழ் எழுத்தியல்’ பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார். 

 2003ல் அந்த நூல் வெளியிடப்பட்டது. 

பின்னர் 2014ல் மத்திய செம்மொழித் தமிழ் நிறுவனம் அதனை மறுவெளியீடு செய்தது. 
கரூர் அருகில் உள்ள புகளூர் பகுதியில் கிடைத்த தமிழ் பிரம்மி எழுத்துகள் பற்றிய அவரது ஆய்வு சங்க இலக்கியம் தொடர்பான ஆய்வுகளில் புதிய ஆர்வத்தைத் தூண்டியது என்கிறார் மூத்த எழுத்திய லாளர் முனைவர் நாகசாமி. 

மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளின் எழுத்துரு தொடர்பான ஆராய்ச்சிகளிலும் அவர் ஈடுபட்டார். 
1961ல் வர லாற்றாய்வாளர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அவர் சில. குகைகளில் உள்ள எழுத்துகள் பற்றிக்கூறியதுதான் தனக்கு இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தைக் கொடுத்தது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் ஐராவதம் மகாதேவன்.

 எழுத்தியல் போலவே அவர் பண்டைய நாணயங்கள் பற்றிய ஆராய்ச்சியிலும் அக்கறை காட்டினார். 
அதே அளவுக்கு ஆராய்ச்சியும் முக்கியமானது என்று இந்திய தொல்லியல் துறை முன்னாள் கண்காணிப்பாளரும், ஊரகக் கல்வி மற்றும் மரபுப் பாதுகாப்பு அமைப்பின் தலைவருமான டி.சத்தியமூர்த்தி கூறுகிறார்.
இத்தகைய பணிகள் அவருக்கு 1970ல் ஜவஹர்லால் நேரு ஃபெல்லோஷிப் விருதையும், 1992ல் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் ஃபெல்லோஷிப் விருதையும், 2009ல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுத்தந்தன. 
1998ல் அவர் இந்திய எழுத்தியல் அமைப்பின் மாநாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
2001ல் இந்திய வரலாற்று பேராயத்தின் பொதுத் தலைவரானார்.

தமிழ் பிரம்மி குறிப்புகள் தொகுப்பு (1966), அகம் புறம்– சிந்து எழுத்துரு அறிகுறிகள் (2010), ரிக் வேத வழி சிந்து பதிவுகளுக்கான திராவிட ஆதாரம் (2014) ஆகிய நூல்களும் அவரது முக்கியப் பங்களிப்புகளாகும்.
                                                                                                                                                                                                                                                   -அ.குமரேசன்

ஞாயிறு, 25 நவம்பர், 2018

மாவீரன் பிரபாகரன்.


தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி  வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்
தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.; சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .
இனித் தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை அவர் அடியெடுத்த போராட்ட மரபு தொடரும். கூலிகள் என்றும் வந்தேறு குடிகள் என்றும் நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன்.
இணையத்தில் தமிழ் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர் தமிழியலுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத் தோன்றாத் துணையாக நிற்பவர்
பலரை வரலாறு படைக்கின்றது ஒரு சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள் அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன். மிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும் அப்போது உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்க்குத் தமிழினத்தைப் பிரபாகரன் தூக்கிச் சென்று நிறுத்தியதைத் தமிழினம் உணரும்.
 
அன்று தொட்டு இன்று வரை தமிழரின் போரட்டம் அற வழியைத் தழுவி நிற்கின்றது அகிம்சை வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி தமிழர் வரித்துக் கொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில் நெறிப்பட்டு நிற்கின்றது அவர் நடத்திய ஈழவிடுதலைப் போர் தார்மீக அடிப்படையிலானது. 
அது தமிழர்களின் ஆன்மபலமாகவம் இருந்து வருகிறது.
சிங்களவர்கள் உண்மையான புத்த மதத்தினராக இருந்தால் தமிழீழ விடுதலைப் போருக்கான அவசியம் இராது சமாதானப் பேச்சென்றாலும் சரி, போர் என்றாலும் சரி, சிங்களவர்கள் நேர்மை, நிதானம், காருண்யம் அற்றவர்களாக வெளிப்படுகிறார்கள் சிங்களப் பயங்கரவாதம் ஈழத் தமிழர்களின் தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.
 
“ விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை’ என்று பிரபாகரன் மிகச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார். அவர் தொடர்ந்து பேசுகிறார் விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்துள்ளது சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை .
தமிழர்களை ஏமாற்றுவதும் அடிமை கொள்ளும் நோக்குடன் இன அழிப்புச் செய்வதும் சிங்கள தேசத்தின் பாரம்பரிய நடைமுறை. தற்காக புத்த மதத்தைத் துணைக்கு அழைக்க அவர்கள் தயங்கியதில்லை சிங்கள மக்களின் பாலி மொழி இதிகாசமான மகாவம்சத்தின் நாயகனான துட்ட காமினி போர் மரபை மீறீத் தமிழ் மன்னன் எல்லாளனை வஞ்சகமாகக் கொன்றான் பல்லாயிரம் தமிழர்களையும் அதே போரில் அவன் கொன்றான்.
இரத்த வெறி அடங்கியபிறகு அவன் சோர்வடைந்து மாளிகை உப்பரிகையில் படுத்திருந்தான் உயிர்ப்பலி அவனை துயரடையச் செய்ததாக மாகவம்சம் கூறுகிறது அவனுக்கு ஆறதல் மொழி கூறுவதற்காக எட்டு புத்த பிக்குகள் வான் மூலம் பறந்து அவனிடம் வந்து சேர்ந்தனர்.
புத்த மதத்தைச் செராதவர்களைக் கொல்வதில் பாவமில்லை என்ற ஞான உபதேசத்தை பிக்குகள் மன்னனுக்கு வழங்கி அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதாக மகாவம்சம் கூறுகிறது அண்மையில் புத்த பிக்கு ஒருவர் வெளியிட்ட ஆங்கில ஆய்வு நூலில் சிங்கள தேசியத்தின் அதியுச்சம் துட்டகாமினியின் தமிழ்ப் படுகொலைகளின் போது எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள பௌத்தம் என்ற புதிய மதத்தைச் சிங்களப் பேரினவாதிகள் உருவாக்கியுள்ளனர் திவ்வியஞான சபையைச் சேர்ந்த (Theosophical society ) காலஞ்சென்ற  கிருஷ்ணமூர்த்தி கொழும்பு வந்த போது இதைக் கடுமையாகச் சாடியுள்ளார் .
சிறிலங்கா தனது அரசியல் சாசனத்தின் மூலம் புத்த மதத்திற்கு மேலிடம் வழங்கியுள்ளது புத்த மதத்தைத் பாதுகாத்தல் அரசின் பொறுப்பு என்று அரசியல் சாசனம் இடித்துரைக்கிறது. சிறிலங்கா மதச் சார்புள்ள நாடு. படிப்படியாகப் பிற மதங்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது
தமிழ் நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழர் மத்தியில் புத்த மதம் முன்னர் செழித்தோங்கி இருந்தது 7ம் நூற்றாண்டில் தொடங்கிய சிவ மதத்தின் மறுமலர்ச்சிக்குப் பிறகு இரு பகுதிகளிலும் புத்த மதம் மங்கிவிட்டது ஆனால் வரலாற்றுச் சின்னங்கள் கிடைக்கின்றன.
ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் புத்த சின்னங்களும், புத்த கோயில்களின் எச்சங்களும் காணப்படுகின்றன இவை சிங்கள பௌத்தத்தின் அடையாளங்கள் என்று சிங்கள பௌத்த பேரினவாதிகள் புதிய வரலாறு படைக்கின்றனர் யாழ் கந்தரோடையிலுள்ள புத்த மத இடிபாடுகள் சிங்கள பௌத்தத்திற்கு உரியவை என்ற வாதம் நிறுவப்படுகிறது.
கந்தரோடை இடிபாடுகளுக்கு சிங்களப் பெயர் சூட்டப் பட்டுள்ளதோடு சிங்களப் புத்த பிக்குகளும் அங்கு நிலைகொண்டுள்ளனர் பிக்குகளின் பாதுகாப்பிற்காக சிங்கள இராணுவ அணி நிறுத்தப்பட்டுள்ளது பாலஸ்தீன அரபு மக்களின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமிக்கும் யூத அரசு போலி வரலாற்று செய்திகளைக் கூறுவது வழமை.
பழைய ஏற்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்களை ஆக்கிரமிப்புச் செய்த நிலத்திற்குச் சூட்டியபின் அது புராதான கால யூத நிலம் என்று உரிமை  கோருவது இஸ்ரேலிய நடைமுறை இதைச் சிங்கள அரசும் பின்பற்றுகிறது சிறிலங்கா சுதந்திரம் பெற்ற நாட்தொட்டுத் தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடைவிடாது நடக்கின்றன.
 எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் வெப்ப வலய மேம் பாட்டுத் திட்டம் என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம் தமிழர் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப் படுககின்றது இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை தமிழர்களை விரட்டுவதற்கும் குடியேற்ற வாசிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
 தமிழர் நிலத்திற்க்குப் புதிய சிங்களப் பெயர் சூட்டும் செயற்பாடு இன்னுமோர் பக்கத்தில் நடக்கிறது பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் மண்ணின் பட்டியல் மிக நீளமானது மிக அண்மையில் முல்லைத்தீவு மூலதூவ என்றும் கிளிநொச்சி கிரானிக்கா என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இனப் படுகொலையின் அங்கமாகவும் சிங்களக் குடியேற்றத்தை பார்க்கலாம் மணலாறில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் nஐனரல் ஐhனகா பெறேரா தலைமையிலான இராணுவத்தால் சுட்டும் வெட்டியும் கொன்று விரட்டப்பட்டுள்ளன.
ஓரு தமிழ்க் கிராமத்திற்கு ஐhனகாபுர என்று தன்னுடைய பெயரை அவர் சூட்டியுள்ளார் குடியேற்றத்தின் மூலம் தமிழர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மணலாறு ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர் இப்போது வடக்கில் குடியேற்றம் தொடங்கிவிட்டது.
குடியேற்றத்தின் மூலம் இனப் பிரச்சனைக்குத் திர்வு காணமுடியும் என்று கூறும் புவியியல் ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் நிலம் சிங்களவருடைய நிலம் என்று வாதிடும் சிங்களப் பேரினவாதிகள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் நிலவிய சோழர் ஆட்சியின் போது தாம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்
தாம் குடியேறும் நிலத்திற்கு தாமே சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்லவென்றும் வாதிடுகிறார்கள். இது போதாதென்று 1956 தொடக்கம் காலத்திற்கு காலம் அரசு ஆதரவு பெற்ற சிங்களக் காடையர்கள் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் தமிழர் மீது தாக்குதல் நடத்தினார்கள். உயிரிழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் தமிழர்கள் சந்தித்தனர் 1983ல் இது உச்சம் அடைந்தது.
பாதிக்கப்பட்ட தமிழர்கள் வெளிநாடுகடுளுக்குத் தப்பியோடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது தமிழ் டயஸ் போறா எனப்படும் புலம்பெயர் தமிழர் சமூகம் அனைத்துலக மட்டத்தில் தோன்றியது உலகத் தமிழர் என்றால்  புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற கருத்து நிலவுவதற்கு இது தான் காரணம்
தமிழர் தாயகம் மனிதப் புதைகுழிகள் நிறைந்த பூமி மட்டு அம்பாறைத் தமிழுறவுகள் கொடுத்த விலை மிக அதிகம் கொக்கட்டிச் சோலையிலே தமிழர் வீடுகள் குடிசைகள் தோறும் எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர் வடக்கில் செம்மணி, வயாவிளான் என்பன கொன்று புதைக்கப்பட்டவர்களுக்குச் சாட்சி பகர்கின்றன இறுதியாக இப்போது முள்ளிவாய்க்காலில் மீண்டும் புதைகுழி.
வரலாறு எமது வழிகாட்டி என்று சொன்ன தமிழீழத்  தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் “ சிங்களப் பயங்கரவாதம் எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப் போவதில்லை ‘என்று அடித்தக் கூறியுள்ளார் .
பிரபாகரனின் தனிப்பெரும் பண்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம் குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை, கருத்தில் தெளிவு சாதனைக்கு மதிப்பு எனலாம் அவர் மேடை போட்டு முழங்கியதில்லை. வேட்டி சால்வை அணிந்து அரசியல்வாதி வேடம் தரித்ததில்லை தந்தவனுக்கே திருப்பி கொடு இது தான் அவருடைய செய்தி அடித்தவனைத் திருப்பியடி என்பது இந்தச் செய்தியின் சாரம்சம் அறிவு ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் தமிழீழனம் வளர வேண்டுமென்டு ஆசைப்பட்டு அதற்காக உழைத்தவர் விடுதலைப் பெற்ற தமிழீழம் பொருளாதார சுபீட்சம் காணவேண்டுமென்டு திட்டமிட்டார்.
சாதி ஒழிப்பிற்கு அவர் முன்னுரிமை அளித்தார் சீதனக் கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்தார் மதச் சமத்துவத்தைப் பேணினார் தமிழீழ காவல்துறையை உருவாக்கி சட்ட ஒழுங்கை அமுலாக்கினார் ; எல்லாவற்றிக்கும் மேலாக அவர் பெண்கள் வாழ்வில் புரட்சிகர மாற்றத்தைத் ஏற்படுத்தினார் ஒரு புதுமைப் பெண்னை, புரட்சிகரப் பெண்னை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் அதன் தாக்கம் நிரந்தரமானது.
தேசியத் தலைவர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் “ மகளீர் படையணினின்  தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று “ என்று சொன்னார்.
  தன்னாட்சி பெற்ற தமிழீழத்திற்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக உலகின் தலைசிறந்த அரசறிவியல் பேராசியர்களையும் புலிகள் அமைப்பில் உறுப்பியம் பெற்;ற வல்லுனர்களையும் ஒன்றிணைத்து ஒரு  வரைவைத் தயாரித்தார் சாசனவியலாளர்களால் அந்த வரைவு போற்றி பாதுகாக்கப்படுகிறது.
ஒடுக்கப்பட்ட இனம் தொடர்ந்து ஒடுங்கியிராது என்பதற்கு பிரபாகரன் தொடுத்த விடுலைப் போர் சாட்சியாக அமைகிறது பிரபாகரன் நேத்தாஜி சுபாஸ் சந்திரபோசை நேசித்தார். அவரைப் போலவே பிரபாகரன் தூய்மையாக வாழ்ந்தார் நேத்தாஜியின் போராட்டப் பங்களிப்பு இன்னும் சரிவர கணிப்பி;டப் படவில்லை. மழங்ககடிக்கப் படுகிறது என்று கூடச் சொல்லலாம்
தமிழினத்தை கடந்த முப்பதிற்கும் மேலான வருட காலம் வழிநடத்தி வரும் பிரபாகரன் அவர்களின் தாக்கம் உலகத் தமிழினத்தால் மிக நன்றாக உணரப்படுகிறது. உலக தமிழ்ச் சமுதாயத்தில் எது நடந்தாலும் அவருடைய தாக்கம் இல்லாமல் நடக்க முடியாதளவிற்கு அவர் முத்திரை பதித்துள்ளார்.

காரணம் தமிழர்கள்!

ஒரு படத்திற்கு 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் அஜித் கஜா புயல் நிவாரணத்திற்கு வெறும் 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

கஜா புயல் கரையை கடந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரமான தென்னை, முந்திரி, நெல்,கரும்பு போன்றவற்றை இழந்துவிட்டதால் அடுத்த வேளைக்கு சோறு கூட இல்லாமல் திண்டாடி வருகின்றனர். 

இதனால் தன்னார்வலர்கள் அனுப்பி வரும் நிவாரணப் பொருட்களை நம்பியே பெரும்பாலான கிராம மக்கள் தற்போது பிழைப்பை ஓட்டி வருகின்றனர்.

 இந்த நிலையில் புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசும் நிதி வழங்குவதை தாமதம் செய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பொதுமக்கள் புயல் நிவாரணத்திற்கு தாரளமான நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். 


இதனை தொடர்ந்து தொழில் அதிபர்கள், திரையுலகினர், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் தங்களால் முடிந்த உதவியை தமிழக அரசுக்கு செய்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் அஜித் தனது பங்களிப்பாக 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. அஜித் தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஒரு நடிகர். 
ஒரு படத்திற்கு 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். 

ஆனால் அவர் வெறும் 15 லட்சம் கொடுத்துள்ளது பலராலும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது . 


அண்மையில் திரையுலகில் வந்து முன்னேறிக்கொண்டிருக்கும்   சிவகார்த்திகேயன் கூட 20 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். 
நடிகர் விஜய் சேதுபதியோ தனது பங்கிற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார். 
திரையுலகில் அஜித்தின் போட்டியாளராக கருதப்படும் விஜய்  தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக செலவழிக்க தனது சொந்தப்பணம் கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். 

ஆனால் அஜித் வெறும் 15 லட்சம் கொடுத்துவிட்டு ஒதுங்கியது எப்படி சரியாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது. 

இப்போது படங்களே இல்லாத நடிகை கஸ்தூரி தனது சேமிப்பில் இருந்து 15 லட்சம் கொடுத்துள்ளார்.அவர் முன்பு கதாநாயகியாக நடித்தப் படங்களில் கூட 10 லட்சங்களுக்குடப்பட்டேதான் கஸ்தூரி சம்பளம் பெற்றார்.ஆனால் நடிகர் அஜித் இன்றைய சம்பளம் 30 கோடிகளுக்கு மேல்.


முதல் நாளே நிவாரணமாக 50 லட்சங்கள் கொடுத்த சூர்யா ,அஜித்தை விட குறைவாகத்தான் சம்பளம் வாங்குகிறார்.
 

ஆனால் அஜித் வெறும் 15 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பதும்,முந்தைய வரதா புயல்,கேரளா பேரிடர் போன்றவைகளுக்கு பைசா கொடுக்காததும் அவரது தீவிர ரசிகர்களை கூட கவலை அடைய வைத்துள்ளது. படம் வெளியான படம் வெளியான முதல்  நாளில் தமிழக மக்கள் அஜித்திற்கு 15 கோடி ரூபாய் வரை வசூல் கொடுக்கின்றனர். 

ஆனால் அஜித் 15 லட்சம் நிவாரணம் வழங்கியிருப்பது அள்ளிக் கொடுக்கும் தமிழர்களை அதிருப்தியில் தள்ளியுள்ளது.

ஆனால் அஜித்தை நன்கு தெரிந்த ஊடக நண்பர்கள் சொல்லுவது அஜித்தின் மறுபக்கத்தைக்காட்டுகிறது.

அஜித் மற்றவர்களுக்கு உதவுகிறாரோ இல்லையோ,ஊடகத்தினரை குளிப்பாட்டிவிடுவாராம்.
எப்போதும் தன்னைப்பற்றி உயர்வாகவே செய்திகள் வரும்படி கவனித்துக்கொள்வாராம்.

இதை அவரது மனைவி ஷாலினியின் தம்பிதான் கவனித்துக்கொள்கிறாராம்.

அவரது வேலைக்காரர்களுக்கு வீடுகட்டிக்கொடுத்தார் ,கார் வாங்கிக்கொடுத்தார் என்பதெல்லாம் பாதிதான் உண்மை.சம்பளத்தில் பிடித்தம் செய்து வருவதையும் இன்னமும் பத்திரங்களை தனது பெயரிலேயே வைத்திருப்பதையும் எந்த ஊடகமும் சொல்லவில்லை.

வடபழனியில் 7 பேர்களைக்கொண்ட அலுவலகம் கணினி வசதியுடன் ஷாலினியின் தம்பி மேற்பாரவையில் நடக்கிறது.

 ஒவ்வொருவருக்கும் பல்வேறு பெயர்களிலும்  ஆயிரக்கணக்கில் போலி கணக்குகள் உள்ளனவாம்.

மோடி க்கும் இவ்வாறு லடசக்கணக்கில் கணக்குகள் இருந்தது.தற்போது அவை முகநூல் ,டுவிட்டர் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டு வடிகட்டியதும் தெரிந்ததே.அதுதான் அஜித் கதையும்.

இதன் வேலை நடிகர் விஜய் படங்களைத்தாக்கி பல்வேறு கணக்குகளில் சமூக வலைத்தளங்களில் இடுகை,மீம்ஸ் வெளியிடுவது,அஜித்தைப்பற்றி வானத்தை வில்லாக வளைப்பார்,மண்ணை தங்கமாக்கிக்காட்டுவார் என்பது போல் கதைகளை ஊடகங்களில் தொடர்ந்து வரவைப்பதும்தான்.
இதற்காக செய்தியாளர்கள் பலவகைகளில் கவனிக்கப்படுகிறார்கள்.
காசு வாங்காதவர்களும் ஒரு சிலர் அங்கும் இருப்பார்களேஎன்கிறீர்களா?அவர்களையும் வலைப்பதில் அஜித் வல்லவர்.
அதற்கு ஒரு சம்பவம்.
ஒரு பிரபல புகைப்பட செய்தியாளர் . திறமைக்கேற்ற நல்ல வருமானம்.காசு வாங்குவது கிடையாது.
அஜித் தன்னைப்படமெடுத்து செய்தி போடவந்தவருக்கு கவரை வழமை போல் கொடுத்துள்ளார்.
வாங்க மறுத்து போய்விட்டார்.
பின்னர் ஒரு முறை அஜித் தொடர்பான செய்தியை (நடிகர் விஜயை தாக்கி அஜித் சொன்னவற்றை போட்டு வளரும் நடிகர் அஜித்துக்கு இது தேவையா?என்றிருந்தார்.)
அடுத்து அந்த புகைப்பட செய்தியாளருக்கு பிறந்த நாள்.பல நடிகர்கள் வாழ்த்தினர்.அஜித்திடமிருந்து வாழ்த்து ஷாலினி தம்பி மூலம் வந்தது.போக்கே வாழ்த்துடன் பரிசுப்பொட்டலம்.

பின்னர் பிரித்துப்பார்த்தால் அவர் வெகுநாட்களாக வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட காமிரா.
இப்போது அவர் அஜித்தை புகழ்ந்து செய்திபோடுவதில் முதல்வர்.
இப்படியாகத்தான் ஒவ்வொருவரும் அஜித்தால் வளைக்கப்படுகின்றனர்.


செம்பரம்பாக்க வெள்ளத்தில் தனது திருமண மண்டபங்களில் மக்களைத்தங்க வைத்து பிரியாணியாகப் போட்டார் அஜித் என்றெல்லாம் செய்தி வந்தது.
அப்போது அஜித் அந்த இதற்கு ஒரு பைசாகூட கொடுக்கவில்லை.
அதை விட உண்மை.அவருக்கு சென்னையில் திருமணமண்டபமே கிடையாது.விஜய் செய்ததை பெயரை மாற்றிப்போட்டனர்.நம் ஊடக சேஞ்ச்சொறுக்கடனாளர்கள் .



ஜெயலலிதா அப்போலோவில் இருக்கையில் கூட வடபழனி நிறுவனம் ஒரு செய்தியைப் பரப்பினர்.
ஜெயலலிதா தனக்குப்பின்னர் அதிமுக தலைமைப்பொறுப்பை அஜித்துக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக.
இது பல ஊடகங்களில் வந்த செய்திதான்.

நடிக்கவும்,ஆடவரும்,சண்டை போடவும் ,ஏன் சரியான நடை கூட இல்லாத ஒருவர் எப்படி இப்படி என்று யோசிக்காதவர்கள் இருக்க முடியாது.அவர்களுக்கு இப்போது உண்மை புரிந்திருக்கும்.
இதை விட முக்கிய உண்மை நிலை தமிழகத்தில் உள்ளது.
தமிழனாக இருந்தால் நம் ஊடகங்கள் அவர்களை வளர்த்து விடுவதில்லை.திறமை மிக்க அவர்களை அவர்களை மட்டம் தட்டி செய்திகளை வெளியிட்டு பிற மொழி நடிகர்களை உச்சாணியில் வைப்பார்கள்.
இதுதான் சிவாஜி-எம்ஜிஆர்.


கமல்ஹாசன்-ரஜினிகாந்த்.

விஜய் -அஜித் என்று வருகிறது.

இதில் எம்ஜிஆர் தமிழக மக்களுக்கு மனப்பூர்வமாக வாரி வழங்கியவர் என்பது உண்மை.

மற்றபடி கமல்ஹாசன்,விஜய் தங்கள் பணத்தில் தமிழக மக்களுக்கு செய்த உதவியில் கால் வாசியைக்கூட ரஜினிகாந்தும்,அஜித்தும் செய்ததில்லை.

ஆனால் ஊடகங்கள் என்னவோ இவர்களைத்தான் தூக்கிவைத்து எழுதுகிறது.

காரணம் கமலும்,விஜயும் தமிழர்கள்.





 

 
 

சனி, 24 நவம்பர், 2018

ரிசர்வ் வங்கியா ? ரிலையன்ஸ் வங்கியா ?

பா.ஜ.க. கூட்டணி அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஊடல் குறித்து, “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவே ரிசர்வ் வங்கியோடு மோடி அரசு முரண்பட்டு நிற்பதாக’’க் கூறுகிறது, ஆர்.எஸ்.எஸ். “தனது நிறுவன சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், நாட்டின் எதிர்கால நலன் கருதியும்தான் மோடி அரசோடு ஒத்துப்போக மறுப்பதாக’’க் கூறி வருகிறது, ரிசர்வ் வங்கி.
இந்த இரண்டு விளக்கங்களிலும் இம்மியளவும் உண்மை இல்லை. எனினும், இப்பிரச்சினையில் மோடி அரசு அம்பானி, அதானி உள்ளிட்ட சில குறிப்பிட்ட அதிகாரவர்க்கத் தரகு முதலாளிகளின் ஏஜெண்டாக நடந்துகொள்வதும், ரிசர்வ் வங்கியைத் தனது தலையாட்டி பொம்மையாக மாற்ற முயலுவதும்தான், ரிசர்வ் வங்கியின் வர்க்கச் சார்பைக் காட்டிலும் அபாயகரமானதாகும்.
வாராக் கடன் பிரச்சினையைத் தீர்ப்பது, கடன் வழங்குவதில் 11 பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது, ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரிக் கையிருப்பை அரசிற்கு மாற்றுவது, பணப் பட்டுவாடாவைக் கண்காணிக்கத் தனியொரு ஒழுங்குமுறை அமைப்பை நிறுவி ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை வெட்டுவது – இவைதான் பா.ஜ.க. கூட்டணி அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே எழுந்துள்ள ஊடலுக்குப் பின்னுள்ள காரணங்கள்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல்
கடந்த பிப்ரவரி மாதம் வாராக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையொன்றை வங்கிகளுக்கு அனுப்பியது. அதில், மார்ச் 1 ஆம் தேதிப்படி 2,000 கோடி ரூபாய்க்கு மேல் வாராக் கடன்களை வைத்திருக்கும் நிறுவனங்கள், அந்தத் தேதியிலிருந்து 180 நாட்களுக்குள் தமது கடன் நிலுவைகளைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், அக்கெடு தவறும்பட்சத்தில், அந்நிறுவனங்கள் மீது அடுத்த பதினைந்து நாட்களுக்குள் திவால் சட்டத்தின் கீழ் வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வழிகாட்டியிருந்தது. மேலும், வாராக் கடன் நிலுவைகளைத் திருப்பிச் செலுத்துவதற்குச் சலுகை அளிக்கக்கூடிய வகையில், அக்கடன்களை மறுசீரமைக்கக் கூடாது (restructure) என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்தச் சுற்றறிக்கை வங்கிகளுக்குக் கிடைத்த மாத்திரத்திலேயே, இதனை அமல்படுத்தக் கூடாதெனக் கோரித் தனியார் மின் உற்பத்தி நிறுவனச் சங்கங்கள், ஜவுளி ஆலை அதிபர் சங்கம், தமிழகத்தைச் சேர்ந்த தனியார் கரும்பாலை சங்கம், குஜராத்தைச் சேர்ந்த கப்பல் கட்டும் தொழில் அதிபர் சங்கம் ஆகியவை பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுத்தன. அவற்றுள், அலகாபாத் உயர் நீதிமன்றம் அச்சுற்றறிக்கையைத் தடை செய்ய மறுத்தாலும், “வங்கிகளிடம் பேசித் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்குமாறு” மோடி அரசிற்கு ஆலோசனை வழங்கியது.
இதனையடுத்துத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் சங்கம் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அவ்வழக்கில், இச்சுற்றறிக்கைக்கு எதிராகப் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தானே விசாரிக்கப் போவதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை நவம்பர் இரண்டாவது வாரத்திற்கு ஒத்தி வைத்தது.
உச்ச நீதிமன்றத்தின் தன்னிச்சையான இந்த உத்தரவு காரணமாக ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை மறைமுகமாக முடக்கப்பட்டு, வாராக் கடன்களை வசூலிக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டன.

வங்கிகளிடம் நிலுவையாக உள்ள மொத்த வாராக் கடனில் (9.61 இலட்சம் கோடி ரூபாய்) கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மட்டும் 7.03 இலட்சம் கோடி ரூபாய் என்ற உண்மையை உடைத்திருக்கிறார், சி.ஏ.ஜி. தலைவர். இதில் 32 தனியார் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அளிக்கப்பட்டு நிலுவையாக உள்ள கடன் தொகை 1.74 இலட்சம் கோடி ரூபாய். இந்த 32 தனியார் மின் உற்பத்தி திட்டங்களுள் 14 திட்டங்கள் லான்கோ, ஜி.எம்.ஆர்., ஜே.பி., அதானி, எஸ்ஸார் ஆகிய ஐந்து குழுமங்களுக்குச் சொந்தமானவை.
ஒருபுறம் உச்ச நீதிமன்றம் என்றால், இன்னொருபுறத்தில் மோடி அரசு, “தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களைத் திவால் சட்டத்தின் கீழ் ஏலத்திற்குக் கொண்டுவரக் கூடாது; தனியார் மின் உற்பத்தியாளர்களின் கடன்களை மறுசீரமைக்க வேண்டும்” என ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்ததோடு, அச்சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுமாறும் நிர்பந்தித்து வருகிறது.
மேலும், வாராக் கடன்களை அதிகமாக வைத்திருக்கும் 11 பொதுத்துறை வங்கிகள் புதிய கடன்களை வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை ரிசர்வ் வங்கி விலக்கிக் கொள்ள வேண்டும். வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்து சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்குக் கடன் கிடைக்குமாறு செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கியிடம் உபரிக் கையிருப்பாக உள்ள மூன்று இலட்சம் கோடி ரூபாயில் ஒரு இலட்சம் கோடி ரூபாயை மைய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அடுத்தடுத்துப் பல நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது, மைய அரசு.
ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் திணிக்கப்பட்டிருக்கும் சங்கிகளான குருமூர்த்தி, சதீஷ் மராத்தே, சச்சின் சதுர்வேதி ஆகியோரைக் கொண்டும், ரிசர்வ் வங்கிச் சட்டம் மைய அரசிற்கு அளித்திருக்கும் அதிகாரத்தைக் கொண்டும் இந்த நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது, மோடி அரசு. இந்தியப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் சிக்கியிருந்த 1991, 2008 காலக்கட்டங்களில்கூட அப்பொழுதிருந்த காங்கிரசு அரசு இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியதில்லை என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களே அதிர்ந்துபோய்க் குறிப்பிடுமளவிற்கு மோடி அரசின் நடவடிக்கைகள் அசாதாரணமாக அமைந்துள்ளன.

***

மும்பய் நகரில் நடந்த கருத்தரங்கமொன்றில், ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் மோடி அரசு தலையிடுவதை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசிய அவ்வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, “மைய வங்கிகளின் சுதந்திரத்தை மதிக்காத அரசாங்கங்கள் விரைவாகவோ தாமதமாகவோ நிதிச் சந்தையின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடுவதோடு, ஒரு முக்கியமான ஒழுங்கு நிறுவனத்தின் சுதந்திரத்தை மதிக்கத் தவறியதற்காக வருந்த நேரிடும்” எனக் குறிப்பிட்டு, மோடி அரசை மறைமுகமாக எச்சரிக்கவும் செய்தார்.
ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா.
அவரது உரைக்குப் பிறகுதான் மோடி அரசு ரிசர்வ் வங்கியை ஆட்டிப் படைக்க முயலுவது வெளியுலகிற்குத் தெரியவந்தது.
இந்த உண்மை அம்பலமானதைச் சகித்துக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் ஒருபுறம் ரிசர்வ் வங்கி அதிகாரிகளை அந்நிய நாட்டுக் கூலிகளாக வசைபாடிவிட்டு, இன்னொருபுறம் நாட்டின் நலனுக்காகவே மோடி அரசு ரிசர்வ் வங்கியோடு சட்டத்திற்கு உட்பட்டுக் கலந்துரையாடிவருவதாகக் கதை கட்டின.
மேலும், “முதலாளிமார்களுக்குப் புதிய கடன்களை வழங்குவதன் மூலம் பொருளாதாரம் ஊக்கம் பெறும். அதன் மூலம் புதிய கடன்களை மட்டுமல்ல, பழைய கடன் களை அடைப்பதற்கான வாய்ப்பும் உருவாகும்” எனக் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் முட்டாள்தனமான, நகைக்கத்தக்க யோசனையையும் அவிழ்த்துவிட்டன.
பொருளாதார முடக்கத்திலிருந்தும் ஊழலிலிருந்தும் நாட்டை மீட்க வந்த தேவதூதனாகக் காட்டப்பட்ட மோடியின் ஆட்சியில், நாட்டின் ஜி.டி.பி. உயரவில்லை; மாறாக, வங்கிகளின் வாராக்கடன்தான் ஊதிப் பெருத்தது. ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் மேலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த மோடி, அதற்கு நேரெதிராகப் பொதுமக்களுக்கு ஏற்கெனவே கிடைத்துவந்த வேலைவாய்ப்புகளையும் தட்டிப் பறித்தார்.
கருப்புப் பணத்தையும், ஊழலையும் ஒழிக்கப் போவதாகக் கூறிக் கொண்டுவரப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், சரக்கு சேவை வரி விதிப்பும் விவசாயத்தையும், கைத்தொழிலையும் நாசப்படுத்திய சாதனையைச் செய்தன. மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, திறன் மிகு இந்தியா என அடுத்தடுத்து மோடி அரசு அறிவித்த ஒவ்வொரு திட்டமும் வெறும் பஞ்ச் டயலாக்குகள் என்பதைத் தாண்டி வேறு எதையும் சாதிக்கவில்லை.

ஊதிப் பெருக்கப்பட்ட 2ஜி ஊழலைவிட மிகப்பெரும் ஊழலாகப் பரிணமித்திருக்கிறது, வாராக் கடன் தள்ளுபடி. போஃபர்ஸ் ஊழலைவிட மிகப்பெரும் முறைகேடாக அம்பலமாகியிருக்கிறது ரஃபேல் போர் விமான பேர ஒப்பந்தம். “நானும் தின்ன மாட்டேன் மற்றவர்களையும் தின்னவிட மாட்டேன்” என வசனம் பேசி ஆட்சிக்கு வந்த யோக்கியவான் மோடியின் இலட்சணம் இதுதான்.
கடந்த நான்காண்டுகளில் பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரிகளின் மூலம் மைய அரசு பொதுமக்களிடமிருந்து அடித்த கொள்ளை ஏறத்தாழ 7.5 இலட்சம் கோடி ரூபாய். இந்த ஆண்டுக்கான வருமானத்தையும் சேர்த்தால், அவ்வரிக் கொள்ளை மட்டும் 10 இலட்சம் கோடி ரூபாயை எட்டுகிறது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மாதமொன்றுக்கு 80,000 கோடி ரூபாய் முதல் ஒரு இலட்சம் கோடி ரூபாய் வரை மறைமுக வரியாக வருமானம் ஈட்டி வருகிறது, மோடி அரசு. நேர்முக வரியாக 10 இலட்சம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இவற்றுக்கு அப்பால் மைய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு 50,000 கோடி ரூபாய் வரை இலாப ஈவாக அளிக்கின்றன.
வருடமொன்றில் சற்றொப்ப 20 இலட்சம் கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டும் மோடி அரசுக்கு, ரிசர்வ் வங்கியிடம் ஒரு இலட்சம் கோடி ரூபாயைக் கேட்க வேண்டிய தேவையென்ன? கடந்த நான்காண்டுகளில் வசூலிக்கப்பட்ட வரி வருமானம் – ஏறத்தாழ 80 இலட்சம் கோடி ரூபாய் எங்கே மாயமானது?
வரி வருமானத்தின் பெரும்பகுதியை மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவழிப்பதாகக் கணக்குக் காட்டுகிறார்கள், சங்கிகள். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றிய கூலித் தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய கூலியைக்கூட ஒழுங்காகக் கொடுக்காமல் நிலுவை வைத்திருக்கும் மோடி அரசு, மக்கள் நலத் திட்டங்களில்தான் பணத்தைக் கொட்டுகிறதாம், அதை நாம் நம்ப வேண்டுமாம்!
ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் திணிக்கப்பட்டிருக்கும் சங்கிகள் (இடமிருந்து) குருமூர்த்தி, சச்சின் சதுர்வேதி மற்றும் சதீஷ் மராத்தே.
மோடி ஆட்சியில் ஒருபுறம் மக்கள் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் வெட்டப்படுகின்றன. இன்னொருபுறமோ மக்கள் நலத் திட்டம் என்ற பெயரில் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு வரிப் பணம் மொய்யாக எழுதப்படுகிறது. “பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஊழலைக் காட்டிலும் மிகப் பெரிய ஊழல்” எனக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், பத்திரிகையாளர் சாய்நாத்.
மகாராட்டிரத்தில் 2.8 இலட்சம் விவசாயிகள் சோயா பயிரிட்டுள்ளனர். இப்பயிர்க் காப்பீட்டிற்காக ஒரேயொரு மாவட்டத்தில் மட்டும் விவசாயிகளும் மத்திய மாநில அரசுகளும் இணைந்து ரிலையன்ஸ் இன்சூரன்சுக்கு செலுத்திய பிரிமியம் தொகை 173 கோடி. மாவட்டத்தில் மொத்த பயிரும் அழிந்துபோனாலும்கூட, விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் காப்பீடு நிறுவனம் 30 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடாகத் தரும். எந்தவொரு முதலீடும் செய்யாமல் ரிலையன்சுக்குக் கிடைக்கும் இலாபம் 143 கோடி ரூபாய். ஒரு மாவட்டத்தின் கணக்கு இது. மாநிலம் முழுவதற்கும், நாடு முழுவதற்கும் கணக்குப் போட்டுப் பாருங்கள், இச்சட்டபூர்வ ஊழலின் பரிமாணம் தெரியும் என்கிறார் அவர்.
மோடி அரசு, இப்பொழுது, தேர்தலை முன்னிட்டு, மக்களின் பணத்தை ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.விற்கும் மானியமாக எழுத முயலுகிறது. ரிசர்வ் வங்கியிடமுள்ள உபரிக் கையிருப்பைத் தட்டிப் பறித்து, அந்தப் பணத்தைக் கொண்டு ஏதோவொரு கவர்ச்சித் திட்டத்தை அறிவித்து எதிர்வரும் தேர்தல்களில் தனது வெற்றியை உத்தரவாதப்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகிறது. இந்த அயோக்கியத்தனத்தை எப்படி அனுமதிக்க முடியும்?

***

ங்கிகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கடன்களை வாரி வழங்க வேண்டும், அக்கடன்களை அவர்கள் திருப்பிச் செலுத்துவதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கக்கூடாது” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் கடன் கொள்கை!
கார்ப்பரேட் நிறுவனங்களின் கழுத்தில் துண்டைப் போட்டு, அக்கடன்களை வசூலிக்க முயற்சி செய்தார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் ரகுராம் ராஜனுக்குப் பதவி நீட்டிப்பு வழங்க மறுத்தது, மோடி அரசு.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்.
பா.ஜ.க.வின் சமூக அடித்தளமான வணிகர்கள், சிறுதொழில் அதிபர்களைக் கவருவதற்காக அறிவிக்கப்பட்ட முத்ரா கடன் திட்டம், பொதுத்துறை வங்கிகளின் கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் இன்னொரு சுருக்குக் கயிறு என எச்சரித்திருக்கிறார், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் முன்பாக, வாராக் கடன் வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பட்டியல் இட்டு, அவை குறித்து ஒரு பல்நோக்கு விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தின் மீது இதுநாள் வரை நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் மோடி, இப்பொழுது உர்ஜித் படேல் வங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையையும் ரத்து செய்யுமாறு மிரட்டுகிறார். “மோடியோடு ஒத்துழைக்காவிட்டால் பதவி விலகிச் செல்” என உர்ஜித் படேலை வெளிப்படையாகவே அச்சுறுத்துகிறார்கள், சங்கிகள்.
தனியார்மய-தாராளமய காலக் கட்டத்தில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் என்பது பன்னாட்டு ஏகபோக முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது அன்றி வேறொன்றுமில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பட்ஜெட் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் இந்தச் சுதந்திரம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, மோடியின் ஆட்சியில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் எந்த இலட்சணத்தில் இயங்கியது என்பதும் நாம் அறியாத இரகசியமல்ல.
உர்ஜித் படேல் குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பதோடு, ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் என்ற காரணங்களுக்காகவே ரகுராம் ராஜனுக்கு அடுத்து ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் மோடியின் ஆள் என நம்பப்பட்டதை நிரூபிக்கும் வண்ணம், மோடி அரசு இரவோடு இரவாக இந்திய மக்கள் மீது நடத்திய பணமதிப்பழிப்பு தாக்குதல் நடவடிக்கையை மறுபேச்சின்றி ஆதரித்தார்.

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த குருமூர்த்தி, சதீஷ் மராத்தே, சச்சின் சதுர்வேதி ஆகியோர் நியமிக்கப்பட்டதையும், அக்கும்பல் மோடியின் விருப்பத்தை நிறைவேற்றுமாறு ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்ததை எதிர்த்துவந்த காரணத்திற்காக நாச்சிகேட் மோர் இயக்குநர் குழுவிலிருந்து நீக்கப்பட்டதையும் சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டார்.
எனினும், வாராக் கடன்களை வசூலிப்பதிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் புதிய கடன்களை வழங்குவதிலும் மோடி அரசோடு ஒத்துழைக்க மறுக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காகவே உர்ஜித் படேல் மீது ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆத்திரம் கொண்டிருப்பதோடு, அவரை மாற்றிவிட்டு வேறொரு தலையாட்டி பொம்மையை ஆளுநராக நியமித்து, ரிசர்வ் வங்கியைத் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் திட்டமிடுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், ரிசர்வ் வங்கியை, ரிலையன்ஸ் வங்கியாக மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். அத்திட்டம் நிறைவேறினால், பொதுத்துறை வங்கிகளும், அதிலுள்ள மக்களின் சேமிப்பும் கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக் களமாக மாற்றப்படும். பொதுத்துறை வங்கிகளைச் சட்டபூர்வமாகத் தனியார்மயப்படுத்தாமலேயே, அவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் கைகளில் ஒப்படைத்துவிடும் சதி அரங்கேற்றப்படும்.
                                                                                                                         – ரஹீம்
நன்றி:புதிய ஜனநாயகம்,


வியாழன், 22 நவம்பர், 2018

இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசஸர்!

அசத்திய  சென்னை ஐஐடி
ஜென் இஸட் தலைமுறையின் உயிர்நாடி எலெக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ். இந்த கேட்ஜெட்ஸை இயக்கும் மந்திரக்கோல்தான் மைக்ரோ பிராசஸர்.  பாதுகாப்பு, அணு ஆயுதக் கட்டமைப்பு, அரசு அலுவலகம் மற்றும் பிற துறைகளில் இதன் பயன்பாடு இன்றியமையாதது. 
 இதுவரை வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ பிராசஸர்களை இறக்குமதி செய்யும் நிலையே இந்தியாவில் நிலவி வந்தது. இனிமேல்  உலகத்தரத்தில் பிராசஸர்களை உருவாக்கும் ஒரு தேசமாக மிளிரப் போகிறது நம் நாடு!ஆம்; ‘சக்தி’ என்ற இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசஸரை அறிமுகப்படுத்தி அசத்தி யிருக்கிறது சென்னை ஐஐடி.

சாஃப்ட்வேரில் தவறு செய்தால் அந்த தவறை அழித்துவிட்டு புதிதாக எழுதிக் கொள்ளலாம். ஆனால், பிராசஸர் போன்ற ஹார்டுவேரில் சிறு தவறு  நிகழ்ந்தாலும் அதைக் குப்பையில் போட்டுவிட்டு மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அவ்வளவு நுணுக்கமான வேலையைச் சிறப்பாகச்  செய்திருக்கிறது சென்னை ஐஐடி.

  சண்டிகரில் உள்ள இந்திய விண்வெளித் துறையின் செமிகண்டக்டர் ஆய்வகத்தில் இந்த பிராசஸரை ஃபேப்ரிகேட் செய்திருக்கிறார்கள். இதன்  வடிவமைப்புக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ரூ.11 கோடி நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக சென்னை ஐஐடி மாணவர்களும், முன்னாள் மாணவர்களும், ஆர்வமுள்ளவர்களும் தங்களின் வேலையைவிட்டு இரவு பகல்  பாராமல் உழைத்து இந்த பிராசஸரை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களை வழிநடத்தி இந்த புரொஜெக்ட்டை ஒருங்கிணைத்தவர் சென்னை ஐஐடியில்  கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பணிபுரியும் பேராசிரியர் காமகோடி.

‘‘நம்ம வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒண்ணுனா அது கேட்ஜெட்ஸ்தான். வண்டி ஓட எப்படி பெட்ரோல் அவசியமோ அப்படி டிவி ரிமோட்,  வாஷிங் மெஷின், செக்யூரிட்டி கேமரா, லேப்டாப், மொபைல்னு எல்லா கேட்ஜெட்களும் சரியா வேலை செய்ய மைக்ரோ பிராசஸர் அவசியம். ஒரு  குட்டி கம்ப்யூட்டர் மாதிரி கேட்ஜெட்ஸ்க்குள்ள இருந்துட்டு அவை வேலை செய்யுது...’’ என்று மைக்ரோ பிராசஸரைப் பற்றிய தெளிவான  அறிமுகத்தோடு ஆரம்பித்தார் காமகோடி.

‘‘பொதுவா இங்க வெளிநாட்டு பிராசஸர்களைத்தான் பயன்படுத்திட்டு வர்றோம். அதுல சில பிரச்னைகள் இருக்கு. முக்கியமா செக்யூரிட்டி. நாம  சொல்ற வேலைகளை அந்த பிராசஸர் செய்யுது. அதனால எந்த சந்தேகமும் நமக்கு வர்றதில்லை. ஆனா, நாம சொல்லாத வேலையையும் அது  செய்யாமல் இருக்குமான்னு யாருக்கும் தெரியாது!

உதாரணத்துக்கு, ரெண்டு பேர் மொபைல்ல பேசறாங்க. அவங்க பேசுனது மூணாவதா இன்னொரு ஆளுக்கும் போகலாம். அது நமக்குத் தெரியாது.  ஏன்னா மொபைலுக்குள் உள்ள மைக்ரோ பிராசஸரின் கன்ட்ரோல் எல்லாமே வெளிநாட்டுல இருக்கு. அவங்களால என்ன வேணாலும் செய்ய  முடியும். இந்த மாதிரி நூற்றுக்கணக்கான செக்யூரிட்டி பிரச்னைகளைப் பட்டியலிடலாம். உள்நாட்டுலயே பிராசஸரைத் தயாரிக்கும்போது இதைக் கட்டுக்குள்ள கொண்டு வர முடியும். பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும்.

அடுத்து மொபைல் போன்ல இருக்குற பிராசஸர் லேப் டாப்ல இருக்காது. லேப் டாப்ல இருக்குற பிராசஸர் கம்ப்யூட்டருக்குப் பொருந்தாது.  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அளவுல பிராசஸர் தேவைப்படும். தவிர, நம்மகிட்ட இருக்குற அப்ளிகேஷன்களுக்கு, ஹார்டுவேர்களுக்குத் தகுந்த  மாதிரியான பிராசஸர்கள் வெளிநாட்டுல கிடைக்காது.

அதனால வெளிநாட்டுப் பிராசஸரின் அளவுக்குத் தகுந்த மாதிரி நம் அப்ளிகேஷன்களையும், ஹார்டுவேர்களையும் வடிவமைச்சிட்டு இருக்கோம்.  செருப்பை வாங்கிட்டு கால வெட்டிக்கிற கதைதான்!இங்க பிராசஸர்களைத் தயாரிக்கும்போது இந்தப் பிரச்னையும் ஒரு முடிவுக்கு வரும்.

நமது அப்ளிகேஷன்களுக்குத் தகுந்த மாதிரி பிராசஸரை வடிவமைத்துக் கொள்ளலாம். இது பரவலாகும்போது விலையும் மலிவாகும்...’’ என்று உள்நாட்டிலேயே பிராசஸர் தயாரிப்பதற்கான காரணங்களை அடுக்கிய காமகோடி, சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

‘‘மைக்ரோ பிராசஸர் மாதிரி யான ஒரு புரொடக்ட்டை இந்தியாவிலும் பண்ண முடியும்னு நிரூபித்திருக்கிறோம். இந்தியாவில் தயாராகுதுங்கிற ஒரே  காரணத்துக்காக மட்டுமே மக்கள் இதை வாங்கக்கூடாது; தரத்துக்காகத்தான் வாங்கணும்.

அந்த வகைல சர்வதேசத் தரத்துல இது வந்திருக்கு. அவ்வளவு ஏன்... ஆசியாவிலேயே தயாராகிற முதல் பிராசஸர்னு இதை உறுதியாகச் சொல்லலாம்.  இனி இந்தியாவுல தயாராகுற எலெக்ட்ரானிக் சாதனங்களுக்குள் ‘சக்தி’ பிராசஸரைக் கொண்டு போகணும். இதுக்காக பல ஏஜென்சி களிடம் பேசிட்டு  இருக்கோம்.

பிராசஸர் வடிவமைப்பில் டிசைனுக்குத்தான் செலவு அதிகம். அந்த டிசைனை எங்க வெப்சைட்டுல போட்டிருக்கோம். யார் வேணாலும் அதை  எடுத்து இலவசமாகப் பயன்படுத்திக்க முடியும்.

சூப்பர் கம்ப்யூட்டருக்கான ‘பராசக்தி’ பிராசஸர் வடிவமைப்பும் போய்க்கிட்டு இருக்கு. எங்க பிராசஸர் மேல மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரணும்.  அதுதான் இவ்வளவு நாளா நாங்க உழைச்சதுக்கு கிடைக்கும் வெகுமதி..!’’ புன்னகைக்கிறார் காமகோடி.l


த.சக்திவேல்
 நன்றி:குங்குமம்.

திங்கள், 19 நவம்பர், 2018

நன்றி உணர்ச்சி அதிகரிக்குமா

அண்மையில் சென்னையில் 2000 கிலோ சொச்சம் நாய் இறைச்சி பிடிபட்டது பலரை திகைக்க வைத்திருக்கும்.
பலர் அங்குள்ள ஓட்டல்களில் நாம் உண்டது நாய்கறியா என்று புலம்பிக்கொண்டு இருக்கலாம்.
ஆனால் அது நாய்க்கறி இல்லை வடக்கே உள்ள ஒருவகை ஆட்டிறைச்சிதான் என்று ஒருபுறம் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

வழக்கு ஒருபுறம் நாய் போல் இழுத்துக்கொண்டிருக்கும் போதே நாம் நாய்க்கறி பயன்பாடு பற்றி உலகை ஒருவளம் வருவோம்.


21ஆம் நூற்றாண்டில் நாய்கறி மனித உணவின் ஒரு அங்கமாக வகித்துள்ளது. 

காலப்போக்கில் நாய்கறி என்பது உணவுப்பழக்கங்களில் இருந்து மறைந்தாலும் தற்போது வரை ஏணைய நாடுகளிலும், பல இன மக்களிடமும் பாரம்பரிய உணவாக நாய் இறைச்சி இருக்கிறது. 

2014 இன் கணக்கெடுப்பின் படி ஒரு வருடத்திற்கு 25 மில்லியன் நாய்கள் அசைவ உணவிற்காக கொல்லப்படுகிறது.

மனிதர்களின் செல்லப்பிராணியாக இருக்கும் நாய் இறைச்சியாக உண்பது கலாச்சார சீரழிவு என்று அமெரிக்கா நாய்கறிக்கு தடை விதித்தது. 

அதைத்தொடர்ந்து நாய்கறி உண்பதை குற்றமாகவும் பல நாடுகளில் சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும் பென்சில்வேனியா போன்ற நகரங்களில் நாய்கறி மற்றும் பூனைகறி விற்பதற்கும் உண்பதற்கும் அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 சீனாவில் பல  நகரங்களில் 'நாய் கறி திருவிழா' என்று கொண்டாடப்பட்டு வகைவகையான நாய்கள் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகிறது.  

அதேபோல் பல நாடுகளில் உள்ள உணவு விடுதிகளின் மெனு கார்டில் நாய்கறி வகைகளும் சேர்க்கப்பட்டு வருகிறது. 

இந்தியா:
நாய் இறைச்சி நுகர்வு இந்தியாவில் சட்டவிரோதமானது. 
இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளான நாகலாந்து, மிசோரம், மனிப்பூர் போன்ற பகுதிகளில் நாய்கறி உணவுப்பழக்கத்தில் ஒன்றாகும். 
குறிப்பாக நாகலாந்தில் பாரம்பரிய உணவுப்பழக்கம் என்ற பேரில் நாய்கறி அதிகமாக உண்ணும் பழக்கம் உண்டு. 
இந்த பகுதியில் வருடத்திற்கு சுமார் 30,000 நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படுவதுண்டு. நாய்யின் தலையை மட்டும் துண்டித்து கொதிக்கும் நீரில் உள்ளே போட்டுவிடுவார்கள் பின் தோல்கள் உரிந்த பின்பு அதை பேக் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
 மேலும் நாய்கறியில் அதிக ஊட்டச்சத்தும் மருத்துவதன்மையும் இருப்பதாக இவர்கள் கூறுகின்றனர்.



சீனா:

சீனாவின் அசைவ உணவு வகைகளை கேட்கும் போது பொதுவாகவே சிலர்  முகம் தானாகவே சுளித்துக்கொள்ளும். காரணம் சிலவகைப்புழுக்கள்,கரப்பான் முதல் எலி வரை சீரணிப்பவர்கள் சீன மக்கள்.நாயை விட்டு விடுவார்களா?
சீனாவில் நாய்கறி என்பது ஏராளமான இறைச்சியகங்களில் காணப்படும். பெய்ஜிங் ஒலிம்பிக் போதுமட்டும் நாய்கறி விற்பதற்கு சீன அரசாங்கம் தடை விதித்திருந்தது.  

கனா: 

நாய்கறி என்பதை ஆன்மீக வழி உணவாக எண்ணுகின்றனர். 

நாய்கறி சாப்பிட்டால் வாழ்க்கையில் உண்மையோடு நடந்து கொள்ளலாம், சாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம், சதை இருக்கமடையும் போன்ற மூடநம்பிக்கைக்காக இங்கு நாய்கறி சாப்படப்படுகிறது.

நைஜீரியா

இவர்களை  பொருத்தவரை நாய்கறி என்பது தினமும் உணவில் சேர்த்துகொள்ளும் ஒன்றாகும். 
அதுமட்டுமின்றி நாய்கறி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியும், ஆண்மையும் அதிகரிக்கச் செய்யும் என்று பலர் நம்பி வருகின்றனர்.

போலாந்து:

நாய் மற்றும் பன்றிக்கொழுப்புகளை சிறந்த மருத்துவ உணவாக உட்கொண்டு வருகின்றனர்.

அன்டார்டிக்கா

ஆர்டிக் மற்றும் அன்டார்டிக்கா போன்ற குளிர் பிரதேசத்தில் நாய்கறி சாப்பிட்டால் புரோடின் அதிகரிக்கச் செய்யும் என்று கூறி இயல்பான உணவு பழக்கமாக நாய் இறைச்சியை சாப்பிடுகிறார்கள்.



வியட்நாம்: 

இங்கு நாய்கறிக்கு வரவேற்பு  அதிகம். 
விருந்துகளிலும், விழாக்களிலும் நாய்கறி பறிமாறும் பழக்கமுண்டு. 
இந்த பகுதிகளில் பலரின் வீட்டில் உள்ள நாய்களை இறைச்சிக்காக திருடப்படுவது வழக்கமாக நிகழ்ந்து வரும் சம்பவம். 
நம்பகுதி ஆடு திருடுபவர்களைப்போல் நாய்களை திருடி விற்கும் கும்பல் இங்கு  அதிகம் . 

ஸ்விட்சர்லேன்ட்

இங்கு பகுதிகளில் இருக்கும்  விவசாயிகள் நாய்கறியை தங்களது உணவு பழக்கமாக வைத்துள்ளனர்.

இந்தோனேசியா

நாய்கறி தடை தான்.

ஆனால் திருமண நிகழ்ச்சிகளிலும் விடுமுறை நாட்களிலும் நாய்கறி சிறப்பு உணவாக உண்ணும் பழக்கும் பகிரங்கமாகவே உள்ளது .

தென் கொரியா:

இங்கு  தான் வருடத்திற்கு 2 முதல் 2.5 மில்லியன் வரை நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படுவதாக கூறப்படுகிறது.

ஆடுகளைப் போலவே இங்கு இறைச்சிக்காக நாய்கள் பண்ணைகளில் வளர்க்கபப்டுகினறன.

அதெல்லாம் சரிதான்.

நன்றிக்கு பேர் போன நாய்க்கறி தின்றால் நன்றி உணர்ச்சி அதிகரிக்குமா என்ன?

அல்லது நாயா குரைக்கத் தோன்றுமா?



நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...