bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 29 டிசம்பர், 2012



கமல் நடித்து, தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘விஸ்வரூபம்’. இப்படத்திற்கு ரூ.95 கோடி வரை செலவிட்டுள்ளனர். அடுத்த மாதம் ஜனவரி 11-ந் தேதி இப்படம் ரிலீசாகிறது. இப்படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக டி.டி.எச்.சில் ஒளிபரப்பப்படும் என கமல் முன்பே தெரிவித்திருந்தார்.

இதற்கு தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். டி.டி.எச்.சில் ஒளிபரப்பினால் தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிடமாட்டோம் என எச்சரித்தனர். கமல் இதற்கு விளக்கம் அளித்தும் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
எனினும், டி.டி.எச்.சில் ‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிடுவதில் தீவிரமாக இருந்தார். இந்நிலையில், விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 10-ந் தேதி டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று கமல் வெளியிட்டார்.
இன்று சென்னை ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடைபெற்ற ‘விஸ்வரூபம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்று, கமல் கூறியதாவது, விஸ்வரூபம் வரும் ஜனவரி 10-ந் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தியா முழுவதும் டி.டி.எச்.சில் வெளியிடப்படுகிறது. சன் டைரக்ட், டிஷ் டிவி, ஏர்டெல், வீடியோகான், ரிலையன்ஸ்  ஆகிய டி.டி.எச்.களில் 155-வது சேனலில் இப்படத்தை கண்டுகளிக்கலாம். இதற்கு முன்பணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்.
விஸ்வரூபம் படத்தை, டி.டி.எச்., முறையில் ஒளிபரப்புவது குறித்து,
suran
  சென்னையில் அவர் அளித்த பேட்டி: 
'ஏர்டெல்,சண் , ரிலையன்ஸ், வீடியோகான், டிஷ் டிவி உள்ளிட்ட, ஐந்து டி.டி.எச்., நிறுவனங்கள், விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்புகின்றன.
டி.டி.எச்., மூலம் திரைப்படத்தை வெளியிடும் இந்த புதிய முயற்சி, நம் மாநிலத்திற்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் புதிய பரிமாணத்தை திரையுலகில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்படத்தை, ஜன., 10ம் தேதி இரவு, 9:30 மணிக்கு, ஏர்டெல் உள்ளிட்ட, ஐந்து டி.டி.எச்., நிறுவனங்கள் ஒளிபரப்புகின்றன. இதற்கான, முன்பதிவு கட்டணம், 1,000 ரூபாய். ஜன., 8ம் தேதி வரை, முன்பதிவு நடக்கும். 8ம் தேதிக்குள் முன்பதிவு செய்யாவிட்டால், அடுத்த, இரண்டு நாட்களில், 1,200 ரூபாய் கட்டணத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
எங்கள் இந்த முயற்சியை, தவறாக பயன்படுத்த நினைப்பவர்கள், போலீசில் சிக்கிக்கொள்வர். தமிழகம் முழுவதும், இப்படத்தை, 450 தியேட்டர்களில், திரையிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், 390 தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கமல் கூறினார். ஏர்டெல் நிறுவனத்தின், செயல் அதிகாரிகள் சசிஅரோரா, விகாஷ்சிங், விஸ்வரூபம் கதாநாயகி பூஜா ஆகியோர், பேட்டியின் போது, உடனிருந்தனர்.

கமலின் இந்த முடிவுக்கு இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கேயார் போன்றோர் ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டே லீடர்

பயத்தில் பதுங்குகிறது? 

சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க நான்கு ஆண்டுகளுக்க முன்பு கொல்லப்பட்ட பிறகு, அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த அந்த பத்திரிக்கை அவர் வகுத்த பாதையில் இருந்து விலகுவதாக விமர்சகர்கள் குறை கூறுகின்றனர்.
சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
suran
இலங்கையில் ஊடகச் சுதந்திரம் மோசமான நிலையில் இருப்பதை இது வெளிக்காட்டியது. ஆனால் நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் அக்கொலை வழக்கு முற்றுப் பெறாமல் இருக்கிறது.
லசந்தாவின் கொலைக்குப் பிறகு – அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் வழக்கத்தைக் கொண்ட சண்டே லீடர்- அதிகாரவர்கத்தை மீறி தனது பயணத்தை தொடர்ந்தது. கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் இருந்த சண்டே லீடர் ஜீலை மாதத்தில் உயர் இடத்தில் தொடர்புகளைக் கொண்ட ஒரு வர்த்தகரால் வாங்கப்பட்டது.
புதிய முதலாளி;
 புதிய பாதை?
புதிய முதலாளியின் அரசியல் போக்கை அனுசரித்துப் போக மறுத்ததால் தனது பதவி பறிக்கப்பட்டதாக இப்பத்திரிகையின் அப்போதைய ஆசிரியர் பிரட்ரிகா ஜான்ஸ் செப்டம்பர் மாதம் புகார் தெரிவித்தார். தனது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுருத்தல்கள் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.
தற்போது புதிய ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு வெளியிடப்பட்ட சில செய்திகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. வெளிப்படையான பத்தி எழுத்தாளர்கள் சிலரும் பத்திரிக்கையில் இருந்து விலகிச் சென்றுவிட்டனர். எனவே சண்டே லீடர் தனது தனித்துவத்தை இழந்துவிட்டாதா என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.
லசந்தாவால் 1994 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சண்டே லீடர் கொழும்பின் புறநகர் பகுதியான ரத்மலானவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தின் லிப்டுக்கு மேலே லசந்தாவின் சிறிய புகைப் படம் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மாலை சார்த்தப்பட்டுள்ளது. அலுவலகத்தின் உள்ளே அவரின் பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. இப்பத்திரிகை பல முறை தாக்குதலுக்குள்ளானதை நினைவுபடுத்தும் செய்திகள் – பிரேம் போட்டு மாட்டப்பட்டுள்ளன. 1995 மற்றும் 1998, 2005, 2007 ஆகிய ஆண்டுகளில் லசந்த உடல்ரீதியாக தாக்கப்பட்டார்.
1998 ஆம் ஆண்டில் சிஐடி போலீசாரால் லசந்தா விசாரிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டிலும் 2006 ஆம் ஆண்டிலும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் பலமுறை தாக்கப்பட்டும் தாக்குதலில் சம்மந்தப்பட்ட யாருமே இதுவரை தண்டிக்கப்படவில்லை.
சர்ச்சைக்குரிய மன்னிப்புகள்
இந்நிலையில் இப்பத்திரிகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அது மீண்டும் வெளியிடப்பட்டது. அதாவது பத்திரிகை பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும் என்கிறார் புதிய ஆசிரியர் சகுந்தலா பெரிரா. அரசாங்கத்தை தொடர்ந்து தாம் விமர்சிப்போம் என்றும், கொள்கைகள் மாறியதாகவோ ஆசிரியர்பீட நிலைப்பாடு மாறியதாகவோ பொருள்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறுகிறார்.
தேசிய ரக்பி யூனியனுக்குத் தலைவராக இருக்கும் அசங்க சேனவிரட்னே தற்போது இந்த பத்திரிக்கையின் 72சத பங்குகளை வைத்துள்ளார். ஜனாதிபதியின் மகனை தேசிய ரக்பி அணியின் தலைவராக இவர் நியமித்துள்ளார். சண்டே லீடரின் மீதமுள்ள 28 சதவீத பங்குகள் லசந்தாவின் சகோதரர் லால் வசமுள்ளது.
செனிவிரட்னே செய்தித் தெரிவில் தலையிடுவதில்லை என்றும் நிர்வாக மாற்றத்தினால் பத்திரிகையின் கடும்போக்கு நிலைக்கு பங்கம் வரவில்லை என்றும் சகுந்தலா பெரிரா தெரிவிக்கிறார். தலைமை நீதிபதிக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தில் அரசின் நகர்வுகளை தாம் விமர்சித்ததையும், கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் 27 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாம் எடுத்த நிலையையும் சுட்டிக் காட்டும் சகுந்தலா பெரிரா – பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்போம் என்கிறார்.
சிறை வன்முறையை அடுத்து நடந்த தேடல் வேட்டையின் போது சிலர் பிடித்து வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக உறவினர்களை மேற்கொள்காட்டி சண்டே லீடர் செய்தி வெளியிட்டிருந்தது. யாழில் நிலவும் நிலை குறித்து பிற ஊடகங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையில் சண்டே லீடர் இது குறித்து விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது.
ஆள்போர் ஆதரவு நிலை?
அதே நேரம் பல விடயங்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட பலரிடம் சண்டே லீடர் மன்னிப்பும் கோரியுள்ளது. இது விமர்சகர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கடந்த ஜூலை மாதம் பிரட்ரிகா ஜான்ஸ், அரச விமான சேவை பாதுகாப்பு செயலருக்கு தனிப்பட்ட உதவியை செய்ததாக ஒரு செய்தி வெளியிட்டார். இது தொடர்பாக அவர் பாதுகாப்பு செயலருடன் பேசிய போது, கோத்தாபய ராஜபக்ஷ அசிங்கமான வார்த்தைகளை உபயோகப்படுத்தியதோடு – மக்கள் உன்னைக் கொன்று விடுவார்கள் என்று எச்சரித்த்தாகவும் சண்டே லீடர் செய்தி வெளியிட்டிருந்தது. இக் கட்டுரை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இப்படி செய்வது மிகவும் அவமானம் என்று குமுறும் பிரட்ரிகா ஜான்ஸ் – அரசியல் அதிகாரத்தில் இருப்போரை சமாதானப்படுத்த ஊடக விதிகள் மீறப்பட்டு “ஊடக விபச்சாரம்” செய்யப்படுவதாக கூறுகிறார். ஆள்போரின் காலில் விழுந்து கிடப்பதாகவும் அவர் சாடுகிறார்.
லசந்தா உருவாக்கியது அழிக்கப்பட்டு புதைக்கப்படுவதாகவும், புதிய நிர்வாகத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரேட்டிகா ஜான்ஸ் கூறுகிறார்.
லசந்தாவின் மனைவி சோனாலி சமரசிங்கே தற்போது அமெரிக்காவில் வாழ்கிறார். சண்டே லீடர் திரும்பப் பெற்றுள்ள கட்டுரைகளில், ரிசர்வ் வங்கி ஆளுநரைத் தொடர்பு படுத்தி இவர் எழுதிய ஒரு கட்டுரையும் அடங்கும். உண்மையான விபரங்கள் அடிப்படையில் அக்கட்டுரை எழுதப்பட்டதாகக் கூறும் சோனாலி அக்கட்டுரை திரும்பப் பெறப்பட்டது முன்னேற்றத்தைக் காட்டவில்ல என்கிறார். கடந்த காலங்களில் சட்டரீதியான எதிர் நடவடிக்கைகளுக்குப் பயந்து எவ்வித விடயங்களையும் விட்டு அது ஒதுங்கவில்லை என்றும் சோனாலி கூறுகிறார். கோத்தாபய ராஜபக்சேவிடம் மன்னிப்பு கோரும் முடிவை தான் எடுக்கவில்லை என்று கூறும் பத்திகையின் புதிய ஆசிரியர் பிறவிடயங்கள் குறித்து கருத்துக் கூற மருத்து விட்டார்.
விமர்சன கட்டுரையாளர்கள்
அதே நேரம் விமர்சனக்கட்டுரைகள் எழுதுவோர் மத்தியலும் அதிருப்தி எழுந்துள்ளது. ராஜபக்ஷக்கள் தொடர்பான தனது கட்டுரை தணிக்கை செய்யப்பட்ட்தால் கோபமடைந்த திஸ்ரானி குணசேகரா, கடந்த மாதம் முதல் திடீரென கட்டுரைகள் எழுதுவதை நிறுத்திவிட்டார். எமது ராஜ குடும்பம் குறித்து மோசமான கருத்துக்களை கூற இனியும் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்கிறார் திஸ்ரானி.
லசந்த கொலைக்கு நியாயம் கேட்கும் ஊடகவியலாளர்கள்
இந்த விடயம் குறித்து வருத்தம் வெளியிடும் சாகுந்தலா பெரிரா மீண்டும் திஸ்ரானி குணசேகர பங்களிப்பை வழங்கவேண்டும் என்கிறார். ஆனால் பத்திரிகையின் அதிபரான அசங்க செனிவிரட்னே, நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஜானாதிபதி என்பவர் ஜனாதிபதி. அவர் நமக்கு நமது நாட்டை மீளக் கொடுத்தவர். யார் என்ன சொன்னாலும் நான் வாழ்நாள் முழுவதும் அவரை அதற்காகவே மதிப்பேன் என்று ஒரு சஞ்சிகையில் எழுதியுள்ளார். பிரட்ரிகா ஜான்ஸை விலகிச் செல்லுமாறு தான் சொல்லவில்லை என்று கூறும் அவர், அதே நேரம் அவரின் நடவடிக்கைகளை நம்புவது தனக்கு கடினமாக இருந்ததால் – பத்திரிகையில் என்ன நடக்கிறது என்பதை தான் பார்க்கவேண்டியிருந்தது என்கிறார்.
பொருளாதார ரீதியாக சண்டே லீடர் மோசமான நிலையில் இருக்கிறது. அதற்கு விளம்பரங்களைக் கொடுக்கக் கூடாது என்று அரசு அழுத்தம் கொடுக்கிறது. இப்பத்திரக்கைக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த ஒரு வழக்கில் பாதுகாப்புச் செயலர் வெற்றிபெற்றுள்ளார். அவர் தொடுத்துள்ள மேலும் இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒட்டு மொத்தமாக 15 வழக்குகள் சண்டே லீடருக்கு எதிராகப் போடப்பட்டுள்ளன.
இது மற்ற பத்திரிக்கைகளைப் போன்றதொரு பத்திரிகை அல்ல என்று மக்கள் நம்புகின்றனர் அந்த நம்பிக்கையை நாம் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் சகுந்தலா பெரைரா. ஆனால் புதிய நிர்வாகம் புதியபாதையில் செல்லும் என்றே சோனாலி சமரசிங்கே கணிக்கிறார். பெருமளவிலான சுய தணிக்கை இடம்பெறும் இலங்கை ஊடக சூழலில் ஆள்போரிடம் உண்மையைக் கூறுவதை தமது கடமை என்றே தானும் தனது கணவர் லசந்தாவும் கருதியதாக அவர் கூறுகிறார். இந்த மரபு தொடருமா என்ற கேள்விதான் தற்போது முன்நிற்கிறது.

பி.பி.சி  தமிழோசையில் இருந்து மறு பதிவு 

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

சமுதாய மாறுதலுக்கு உதவிய புரட்சி இலக்கியங்கள்,

கே.முத்தையா
புரட்சிக் கலை - இலக்கியம் என்றவுட னேயே மருட்சிகொள்ளுவோர் பலர் உண்டு.

புரட்சி என்ற சொல் சமுதாய மாறுதலைக் குறிக்கிறது. மக்கள் முன்னேற்றத்துக்கு குறுக்கே நிற்கும் ஒரு சமுதாய அமைப்பினை நிராகரித்து விட்டு, மக்கள் முன்னேற்றத்திற்கு துணைபுரியும் புதியதொரு அமைப்பை உருவாக்குவதே புரட்சி. இத்தகைய சமுதாய மாறுதலுக்கு உதவிய கலை-இலக்கியமே நாம் குறிப்பிடும் புரட்சிக் கலை இலக்கியம்.

சென்ற நூறாண்டு காலத்திய கலை, இலக் கியங்களை எடுத்துக்கொள்வோம். அவற்றில் மிகச் சிறந்தவையாக திகழ்பவை யாவை? மக்க ளால் போற்றப்படுபவை யாவை? வெறும் மதக் கருத்துகளைப் பரப்பிய கலை -இலக்கியங் களா? அன்று கடவுளை துதித்த கலை - இலக் கியங்களா? அவைகள் பழைய பாணியிலே நின் றவை. மக்கள் உள்ளத்திலே ஒரு புதிய எழுச் சியை ஏற்படுத்திவிடவில்லை. மாறாக, பண்டைய நிலப்பிரபுத்துவ ஜாதிய எண்ணங்களைச் சாடி, சமத்துவ நீதிகளைப் போதித்த இராமலிங்க வள்ள லாருக்கும் கோபாலகிருஷ்ண பாரதிக்கும் அன்று பெரும் வரவேற்புக் கிடைத்தது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி இந்நாட்டில் ஏற்பட்டபின், புதிய வர்க்க உறவு முறைகள் தோன்றின. ஏகாதிபத்தியச் சுரண்டலில் நிலப் பிரபுத்துவ சமுதாயமும் நமது சிறு கைத்தொழில் களும் சீரழிந்து சின்னாபின்னமாயின. பழைய அமைப்பு சிதைந்தபோதிலும் மக்களுக்கான புதிய அமைப்புத் தோன்றவில்லை. அக்காலத் தில் நாட்டு விடுதலை இயக்கம் எதுவும் தோன்ற வில்லை.

மக்களிடையே குமுறிக்கொண்டிருந்த எண் ணங்களையும், முன்னேற்ற வேட்கையையும் பிரதிபலித்த ஒரு சில சீர்திருத்தவாதிகள், கலை ஞர்கள், எழுத்தாளர்கள் தோன்றினர். வங்காளத் தில் ஈஸ்வரசந்திர வித்யாசாகர், பாஞ்சாலத்தில் லாலாகங்காராம், தெலுங்கு நாட்டிலே வீரேச லிங்கம் பந்துலு போன்றோர் தோன்றி சமூக சீர் திருத்தக் கருத்துக்களைப் போதித்தனர். அதே போல் தமிழ்நாட்டில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஜி.சுப்ரமண்ய ஐயர் போன்றோர் பண்டைய மூடப் பழக்க வழக்கங்களைச் சாடினர். இவர்களுக் கெல்லாம் முன்பே வள்ளலார்,


“ நால்வருண ஆச்சிரமம்

ஆசாரம் முதலாம்,

நவின்றகலைச் சரிதமெலாம்

பிள்ளை விளையாட்டே”

என்று முழங்கினார்.

வட்டிமேல் வட்டிகொள்

மார்க்கத்தில் நின்றீர்

வட்டியை வளர்க்கின்ற,

மார்க்கத்தை அறியீர்

பெட்டிமேல் பெட்டி வைத்து

ஆள்கின்றீர் வயிற்றுப்

பெட்டியை நிரப்பிக்கொண்டு

ஒட்டி உள்ளி நந்தீர்

பட்டினி கிடப்பாரை

பார்க்கவும் நேரீர்

பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்”

என முழங்கி அன்றைய சமுதாய வாழ்வில் சீர்குலைந்து நின்ற மக்களின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார் வள்ளலார்.

“கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக!

அருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க!”

என்றார். வரப்போகும் மக்களின் சீர்திருத்த விடுதலை இயக்கத்தின் முதல் குரலாக ஒலித் தார் வள்ளலார்.

தேசிய விடுதலை இயக்கமும் தோன்றியது. அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் கிளர்ந் தெழுந்தனர். இந்தக் காலத்தில் தோன்றிய இலக் கியங்களெல்லாம், கலைகளெல்லாம் ஆதிக்க வர்க்கமான ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மகத் தான கலை இலக்கியங்களாகும்.

பண்டைய வைதீக எண்ணங்களை சாடி, நாட்டு மக்களின் விடுதலை இயக்கத்திற்கு ஊக் கமளித்த தாகூரின் படையல்கள், பக்கிம் சந்தி ரரின் நாவல்கள், இக்பாலின் பாடல்கள், பாரதி யின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாமக் கல் கவிஞரின் பாடல்கள், கல்கியின் எழுத் தோவியங்கள் ஆகியவை ஒரு சில உதாரணங்கள்.

மதங்களையும், சாமிகளையும் போற்றிய கலை-இலக்கியங்களுக்கோ, பண்டைய பிற் போக்கு நியதிகளை நியாயப்படுத்திய புராணங் களுக்கோ இக்காலத்தில் பெரும் ஆதரவு கிடைக்கவில்லை. மாறாக, மக்களின் தேவை களைப் பூர்த்தி செய்த, விடுதலை இயக்கத்தை பிரதிபலித்த மறுமலர்ச்சி இயக்கங்களுக்கு மகத் தான ஆதரவு கிடைத்தது. அவைகளே இன்று ஒப்பற்ற இலக்கியங்களாகத் திகழ்கின்றன. கார ணமென்ன? இந்த இலக்கியங்களுக்கோர் குறிக் கோள் உண்டு. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குறிக்கோள் அது. ஒடுக்கப்பட்ட இந்திய நாட்டின் சகல வர்க்கங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்த கலை - இலக்கியங்கள் அவை.

சமுதாய வாழ்விற்கு அப்பாற்பட்ட கலை- இலக்கியமென்பதே கிடையாது. இதுதான் வர லாறு. ஒரு நாட்டின் கலைகளும், இலக்கியங் களும், அவை உண்டான காலத்திலிருந்த சமு தாய வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய வர்க்கங் களுக்கோ அல்லது அந்த ஆதிக்க வர்க்கங் களை எதிர்த்துப் புரட்சி செய்து புதிய சமுதாய அமைப்பைக் கண்ட ஒடுக்கப்பட்ட வர்க்கங் களுக்கோ பயன்பட்ட கலைகளாகவே, இலக்கி யங்களாகவே இருந்தன.

ஆதிக்கத்திலிருந்த ஒரு வர்க்கம் தனது ஆதிக்கம் நியாயமானது, புனிதமானது. கடவுளின் சிருஷ்டி என்றெல்லாம் பறைசாற்றுகிறது. அதை நியாயப்படுத்திய கலைகளெல்லாம் அந்த வர்க் கத்திற்குப் பயன்பட்ட கலைகள். உதாரணமாக சென்ற 200 ஆண்டு காலத்தில் நம் நாட்டில் மேலோங்கியிருந்த கலை - இலக்கியங்கள் யாவை? வளர்ந்துவிட்ட முதலாளித்துவ அமைப் பைப் பெற்றிருந்த ஆங்கிலேய நாட்டின் சில நல்ல கலைகளும் இலக்கியங்களும் இங்கு வந்த போதிலும்கூட, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதி களால் நம் மக்கள் மீது திணிக்கப்பட்டு மேலா திக்கம் செலுத்திய கலை-இலக்கியங்கள் பெரும் பாலும் ஏகாதிபத்திய அமைப்பையும் காலனி ஆதிக்கத்தையும் நியாயப்படுத்திய கலை- இலக்கியங்களாலும். அவர்களது மொழியை நம்மீது திணித்தனர். “மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் வாழ்க” என முழங்க வைத்தனர். நம் நாட் டைச் சூரையாடி அடிமைப்படுத்திய கிளைவ் களையும், மிண்டோ பிரபுக்களையும் வெலிங்டன் பிரபுக்களையும் பற்றிப் புகழ்பாடும் எழுத்துக் களை திணித்தனர். ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் புகுந்து மக்களை சுட்டுப்பொசுக்கி ஆதிக்கஞ் செலுத்திய, காலனி ஆதிக்க வெறியர்களை, “மேனாட்டுப் புதிய நாகரிகத்தின் தூதுவர்கள்” என்று துதி பாடிய, கலை-இலக்கியங்களை இங்கு பரப்பினர்.

எனவே, ஆதிக்கம் புரியும் வர்க்கம் தன் ஆட்சியை நியாயப்படுத்த உண்டாக்கிய கலை- இலக்கியங்களெல்லாம் மக்கள் விரோதத் தன்மை கொண்டவை. பிற்போக்கான இவை களை எதிர்த்த கலை - இலக்கியங்கள் முற் போக்கானவை. புரட்சித்தன்மை வாய்ந்தவை.

இந்திய வரலாற்றின் படிப்பினையும் இதுவே. வால்மீகியின் இராமகாதையும், வியாசரின் பார தமும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும் வர்க்க இலக்கியங்களே!
அம்பும் வில்லுமே வாழ்வதற்குப் பயன்பட்ட கருவிகளாகக் கொண்டு, மிருகங்களை மட்டு மல்ல, தங்கள் எதிரிகளையும் நரவேட்டையாடிப் புசித்துக் கூட்டாக காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்த “ஆதிப் பொதுவுடமை சமுதாயத்தினர்” என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படும் ஆதி வாசிகளை எதிர்த்து, முறியடித்து, அடிமைகளாக ஆக்கி, மாடுங் கலப்பையுங்கொண்டு, நிலத்தை உழுது, பண்படுத்தி, அதை உடமையாக்கி, புதிய தொரு நாகரிகத்தை உருவாக்கிய, அடிமை - நிலப்பிரபுத்துவ, சமுதாய அமைப்பை உருவாக் கிய மாபெரும் சமுதாயப் புரட்சியைச் சித்தரிக் கிறது வால்மீகியின் இராமகாதை. சமுதாய வளர்ச்சிக்குக் குறுக்கே நின்ற பண்டைய அமைப்பை ஒழித்துக்கட்டி புதியதொரு அமைப்பை உருவாக்கிய வரலாற்றைக் கூறும் ஒரு இலக்கியம் அது. அது அன்று - இன்றல்ல - மகத்தான ஓர் புரட்சி இலக்கியமாகும்.

அதேபோல், அடிமை நிலப்பிரபுத்துவ சமு தாய அமைப்பிலேயே உடமையின் புனிதத் தன் மையையும் அதில் ஓர் ஒழுங்கு முறையையும், நியதியையும் நிலைநாட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த சமுதாயத் தேவையைப் பூர்த்தி செய்ய இலக்கியமே வியாசரின் பாரதக் கதை. ஒருவருடைய உடமையை மற்றவர் அபகரிக் கக்கூடாது. யார் எந்த வரைமுறையின் அடிப்ப டையில் நிலத்தின் அதிபதியாவது என்ற நியதி களை வகுத்த ஒரு மாபெரும் போராட்டத்தின் இலக்கியமது, வரைமுறையற்ற, கட்டுப்பாடற்ற, காட்டுமிராண்டித்தனமான போக்குகளை (துரி யோதனன்) களைந்தெறிந்து, நிலவுடைமைக்கு புதிய நியதிகளை வகுத்த இலக்கியமது.

அன்றைய நிலையில் அது சமுதாயத்தின் வாழ்வை ஒழுங்குபடுத்த துணைபுரிந்தது. மாறி விட்ட இன்றைய சூழ்நிலைக்கு அது பயன்படுமா?

அழியும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்திற்குள் ளேயே புதிய வர்க்கங்கள் தோன்றுகின்றன. கைத் தொழில்கள் தோன்றுகின்றன. சமுதாயத்தில் இவ் விதம் உற்பத்தியான பொருட்களை பரிவர்த்தனம் செய்துகொள்ளும் தேவை எழுகின்றது. ஒரு ஊரி லிருந்து நெடுந்தூரத்திலுள்ள மற்றொரு ஊருக்கு தாம் உற்பத்தி செய்த பொருட்களை எடுத்துச் சென்று விற்பனை செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இந்தச் சமுதாயக் கடமையை நிறைவேற்றத் தோன்றிய பிரிவினரே வணிகர்கள், இவர்கள் பயமின்றி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்று தம் கடமையை நிறை வேற்ற அவசியம் ஏற்படுகின்றது. ஆனால், அன் றைய நிலப்பிரபுத்துவ அமைப்பின் அதிபதியான மன்னனும், அவனது அரசாங்க அமைப்பும் மேலாதிக்கங்கொண்டவை. எந்த உடமையை யும் அவர்கள் எடுத்துக்கொள்ளலாம். பறித்துக் கொள்ளலாம். எது வேண்டுமானாலும் செய்ய லாம். இதுவே நிலப்பிரபுத்துவ நியதி.
நன்றி:தீக்கதிர்  

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...