bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 30 அக்டோபர், 2018

மரணம் நோக்கிய பயணம்...,!

பல பிரதமர்களை சந்தித்துள்ள இந்திய அரசியலில் பிரதமர் பதவியில் இருந்தவர்களில் தனது முத்திரையைப்பதித்தவர்கள் மூவர் மட்டுமே.
ஜவகர்லால் நேரு.
இந்திராகாந்தி 
வி.பி.சிங்.
இதில் நேரு முதல் பிரதமர் அவர் செயல் பட வேண்டிய கட்டாயம் அதிகம்.அடிமை இந்தியாவை குடியரசாக்க பல கட்டமைப்புகள் செய்தாகவேண்டும்.
அதன் பின் வந்தவர்களில் இந்திரா காந்தி இந்தியாவை தலை நிமிர வைத்தவர்.பழமைவாதிகள் ஆலோசனைகளைப் புறந்தள்ளி  செயல்பட்டார்.வங்கிகளை நாட்டுடமையாக்கினார்.பல பொதுத்துறை நிறுவங்களை உருவாக்கினார்.அமெரிக்காவின் அடிபணிய மறுத்தார்.
அடுத்து வி.பி.சிங்.மனிதர்களின் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய பலத்த எதிர்ப்புகளிடையே மண்டல் ஆணைய பரிந்துரைகளை செயல்படுத்தினார்.
இதில் இந்திராவின் வங்கிகள் நாட்டுடைமை,வி.பி.சிங் சமூகநீதி செயல்படுத்தல் இரண்டிலுமே கலைஞர் கருணாநிதி தூண்டுதல் ,அறிவுரைகள் செயல்பாடுகள் இருந்தன என்பதை மறுக்கமுடியாது.
இந்திராகாந்தியின் துணிச்சல் மிக்க செயல்கள்தான் அவருக்கு எதிரிகளை உருவாக்கியது.அவரின் துணிச்சல் மிக்க நீலநட்சத்திர அதிரடி ( ஆபரேஷன் புளூஸ்டார்.) அவரின் உயிரையே பறித்தது.
இனி அவரின் மரணம் நோக்கிய பயணம் வரலாறு.
அரசியலில் இந்திரா காந்திக்குத் துணையாக இருந்தவர், அவருடைய இளைய மகன் சஞ்சய் காந்தி. இந்திராவின் அரசியல் வாரிசு என்று கருதப்பட்டவர். துணிச்சல் மிக்கவர். அரசியல் வியூகங்களை வகுப்பதில் வல்லவர். 
ஜனதாவை முறியடித்து, இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற 6 மாத காலத்தில், சஞ்சய் காந்தி எதிர்பாராத விதமாக விமான விபத்தில், 33_வது வயதில் மரணம் அடைந்தது, நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்தது.
இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி, விமானம் ஓட்டுவதில் பயிற்சி பெற்று, விமானி (பைலட்) ஆக வேலை பார்த்தார். அரசியலில் தாயாருக்குத் துணையாக இருந்து வந்த சஞ்சய் காந்தி, “மாருதி” கார் தொழிற்சாலையைத் தொடங்கினார். 
அத்துடன் சிறிய விமானங்களை ஓட்டுவதற்குப் பயிற்சி பெற்றுத்தேறினார். விமான ஓட்டுவோருக்கான சங்கத்தில் (“பிளையிங் கிளப்”) உறுப்பினராக இருந்தார். 

காலை வேளையில், சிறிய விமானத்தில் ஏறி, டெல்லியை ஒரு சுற்று சுற்றி விட்டுத் திரும்புவது சஞ்சய் காந்தியின் பொழுது போக்கு. 1980 ஜுன் 23_ந்தேதி காலை, சிறிய விமானத்தில் ஏறி டெல்லி மீது பறந்தார்.
சஞ்சய் பயணம் செய்த விமானம் “புஷ்பக்” என்ற சிறிய பயிற்சி விமானம் ஆகும். சஞ்சய் காந்தியுடன், விமானப் பயிற்சியாளர் சக்சேனாவும் பயணம் செய்தார். 
விமானத்தை சஞ்சய் காந்தி ஓட்டினார். காலை 8 மணிக்கு விமானம் புறப்பட்டது. இந்திரா காந்தி வீட்டுக்கு மேல் விமானம் பறந்து சென்றது. சிறிது நேரத்திற்கெல்லாம், விமானம் நொறுங்கி விழுந்தது. “12, வெலிங்டன் கிரசென்ட்” என்ற இடத்தில் உள்ள சஞ்சய் வீட்டுக்குப் பின்புறத்திலேயே விமானம் விழுந்தது. விபத்து நடந்த இடம் பாராளுமன்றத்தில் இருந்து 2 மைல். விமானம் மூன்று முறை வட்டமிட்டதாகவும், 4_வது முறை வட்டமிடும்போது மரத்தில் மோதி நொறுங்கி விழுந்ததாகவும், விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். 
விபத்து நடந்த இடத்திலேயே சஞ்சய் காந்தி இறந்துவிட்டார்.
சஞ்சய் காந்தியுடன் பயணம் செய்த சக்சேனாவும் அங்கேயே மரணம் அடைந்தார். விமானம் தரையில் மோதிய வேகத்தில், சஞ்சய் காந்தியின் தலை நொறுங்கி விட்டது. கை_கால் எலும்புகள் நொறுங்கிப் போய்விட்டன. உடலில் தலை முதல் கால் வரை காயங்கள் இருந்தன
. ரத்த வெள்ளத்தில் கிடந்தார். விமானம் நொறுங்கி விழுந்த செய்தி கிடைத்ததும், தீயணைக்கும் படையினர் விரைந்து சென்றார்கள். நொறுங்கிய விமான பாகங்களை உடைத்தும், அறுத்தும் உள்ளே ரத்த வெள்ளத்தில் கிடந்த சஞ்சய் காந்தியின் உடலையும், சக்சேனா உடலையும் வெளியே எடுத்தார்கள். விமானம் நொறுங்கிய தகவல், இந்திரா காந்திக்கு டெலிபோன் மூலம் தெரிவிக்கப்பட்டது. 
அவர், விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தார். இதற்குள் சஞ்சய், சக்சேனா உடல்கள் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு விட்டன. ஆம்புலன்ஸ் வண்டி, ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது. 
டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, சஞ்சய் காந்தி ஏற்கனவே இறந்துவிட்டார் என்றும், காலை 8.15 மணி அளவில் அவர் இறந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சஞ்சய் காந்தி உடல் சிதைந்து போயிருந்ததால், டாக்டர்கள் பல மணி நேரம் ஆபரேஷன் செய்து, சிதைந்த பாகங்களை ஒன்று சேர்த்து தையல் போட்டனர். நெற்றியில் பெரிய தையல் போடப்பட்டது. சஞ்சய் உடல், இந்திரா காந்தி வீட்டுக்கு பகல் 1.40 மணி அளவில் கொண்டு செல்லப்பட்டது. 
சஞ்சய் காந்தியின் உடலைப் பார்த்ததும் இந்திரா காந்தி துயர மிகுதியால் கதறினார். பின்னர் சோகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். எனினும், கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. சஞ்சய் காந்தியின் உடலைப் பார்த்து, அவர் மனைவி மேனகா கதறித் துடித்தார். 

சஞ்சய் காந்தியின் திடீர் மரணம், இந்தியாவையே அதிர்ச்சி அடையச் செய்தது. 
டெல்லியில் கடைகள் மூடப்பட்டன. மந்திரிகள், “எம்.பி”க்கள், பொதுமக்கள் சாரிசாரியாக இந்திரா காந்தி வீட்டுக்குச் சென்று சஞ்சய் காந்திக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
விமானம் நொறுங்கிக்கிடந்த இடத்துக்கு, இந்திரா காந்தி இரண்டு முறை சென்று பார்த்தார். நொறுங்கிக்கிடந்த பாகங்களில் எதையோ தேடினார். (சஞ்சய் காந்தியின் கெடிகாரத்தையும், சாவிக்கொத்தையும்தான் இந்திரா தேடினார் என்றும், சுவிஸ் பாங்கியில் சஞ்சய் காந்தி கணக்கு வைத்திருந்தார் என்றும், அதன் நெம்பர் சாவியிலோ, கெடிகாரத்திலோ இருந்திருக்கலாம் என்றும், பின்னர் சில பத்திரிகைகள் எழுதின.) 
விபத்து நடந்தபோது, ராஜீவ் காந்தி இத்தாலி நாட்டில் இருந்தார். அவருக்கு டெலிபோனில் இந்திரா தகவல் தெரிவித்தார். உடனே, விமானம் மூலம் ராஜீவ் டெல்லிக்குப் புறப்பட்டார். மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட டிரக் வண்டியில், சஞ்சய் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 
மந்திரிகளும், “எம்.பி”க்களும், லட்சக்கணக்கான பொதுமக்களும் ஊர்வலத்தில் நடந்து சென்றனர். ஊர்வலம், யமுனை நதிக்கரையை அடைந்தது. அங்கு, நேரு சமாதிக்கு அருகே அமைக்கப்பட்ட “சிதை”யில் சஞ்சய் காந்தி உடல் தகனம் செய்யப்பட்டது.

சஞ்சய் காந்தியின் ஒரே மகன் வருண். சஞ்சய் இறந்தபோது, வருண் மூன்று மாதக்குழந்தை. எனவே, “சிதை”க்கு ராஜீவ் காந்தி தீ மூட்டினார். முன்னதாக, துணை ஜனாதிபதி இதயதுல்லா, பாராளுமன்ற சபாநாயகர் பலராம் ஜாக்கர், “எல்லை காந்தி” கான் அப்துல் கபார்கான், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி, மாநில முதல்_மந்திரிகள், கவர்னர்கள், மத்திய மந்திரிகள், “எம்.பி”க்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். 
“சிதை”யில் வைக்கப்பட்ட சஞ்சய் முகத்தை இந்திரா காந்தி கடைசி முறையாகப் பார்த்தபோது, துயர மிகுதியால் கதறினார்.
சஞ்சய் மனைவி மேனகா அழுதபடி மயக்கம் அடைந்தார். தனது அரசியல் வாரிசாக உருவாகி வந்த சஞ்சய் காந்தி திடீரென்று மரணம் அடைந்தது, இந்திராவுக்குத் தாங்கமுடியாத துயரம் அளித்தபோதிலும், மனதைத் திடப்படுத்திக்கொண்டார். 
விமானம் ஓட்டும் பைலட்டாக வேலை பார்த்த ராஜீவ்காந்தியை ராஜினாமா செய்யச்சொன்னார். அதன்படி வேலையை விட்டு விலகிய ராஜீவ் காந்தி, தாயாருடைய பணிகளில் அவருக்கு உதவியாக இருந்து வந்தார்.
இந்திராகாந்தியின் கடைசி பேச்சு
இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள் (30_10_1984) ஒரிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார். 1967 தேர்தலின்போது, ஒரிசாவில் பிரசாரம் செய்த நேரத்தில்தான் அவருக்கு எதிராக பெரும் வன்முறை மூண்டு, கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். 
அவர் மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 
இம்முறை, அதே மாநிலத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்றிரவு ஒரிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திரா பேசினார். 
அவர் பேச்சு உணர்ச்சி மயமானதாக இருந்தது. சொற்பொழிவுப்பிரிவு செயலாளர் சாரதா பிரசாத் தயாரித்துக் கொடுத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் பேசினார்.
இந்தியாவின் பெருமை மிக்க வரலாறு சுதந்திரத்துக்காக நடைபெற்ற போராட்டம். இந்தியாவை எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் முத லியவற்றைக் குறிப் பிட்டுவிட்டு, தயாரிக்கப்பட்ட பேச்சிலிருந்து விலகி புதிதாகப் பேசத் தொடங்கினார். 
உணர்ச்சி மிகுதியில் குரல் தழுதழுக்க அவர் கூறினார்: “இன்று நான் இங்கிருக்கிறேன். நாளை இருப்பேனா என்று தெரியாது… என்னை சுட்டுக் கொல்ல எத்தனை முயற்சிகள் நடைபெற்றன என்பதை யாரும் அறியமாட்டார்கள். வாழ்வு, சாவு பற்றி நான் கவலைப்படவில்லை. 

எனக்கு இரண்டும் ஒன்றுதான். நான் கணிசமான காலம் வாழ்ந்து விட்டேன். அந்தக் காலத்தை, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் செலவிட்டதில் பெருமைப்படுகிறேன். இது ஒன்றுதான் எனக்குப் பெருமையே தவிர, வேறு எதற்காகவும் நான் பெருமைப்படவில்லை. 
என் கடைசி மூச்சு உள்ளவரை நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்வேன்.
நான் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்த நாட்டை வளப்படுத்தும்; பலப்படுத்தும்.” _இவ்வாறு இந்திரா காந்தி கூறினார். இந்திராவின் பேச்சை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்த மக்கள், “இந்திரா வாழ்க” என்று குரல் எழுப்பினர். அடுத்த நாள் நடக்கப்போகும் விபரீதத்தை அவர்கள் அறியவில்லை.
 கூட்டம் முடிந்ததும் இந்திரா காந்தி, கவர்னர் பி.என்.பாண்டேயின் இல்லத்துக்குச் சென்று தங்கினார்.
அப்போது கவர்னர், “வன்முறையால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற பொருள்பட பொதுக்கூட்டத்தில் பேசினீர்களே. ஏன்? 
அதைக்கேட்டு நான் ரொம்பவும் கவலையும், அதிர்ச்சியும் அடைந்தேன்” என்று இந்திராவிடம் கூறினார். 
“நான் என் மனதில் பட்டதைச் சொன்னேன். என் தாத்தாவும், அம்மாவும் அணு அணுவாக இறப்பதைக் கண்ணால் கண்டு, மனம் நொந்தவள் நான். நோய்வாய்ப்பட்டு, துயரப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சாவது மிகவும் கொடுமை. ஆரோக்கியமாக இருக்கும்போது, திடீரென்று மரணத்தைத் தழுவுவதையே நான் விரும்புகிறேன்” என்று இந்திரா பதிலளித்தார்.
இந்தச் சமயத்தில், டெல்லியில் இருந்து இந்திராவுக்கு டெலிபோன் வந்தது. பிரியங்காவும், ராகுலும் வீட்டிலிருந்து பள்ளிக்குப் போகும் போது கார் விபத்தில் சிக்கினார்கள் என்று, போனில் சோனியா தெரிவித்தார். 
பொற்கோவில் போரைத் தொடர்ந்து, தன் பேரக்குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படலாம், அல்லது கடத்தப்படலாம் என்று இந்திரா எதிர்பார்த்தார். எனவே, விபத்தில் சிக்கினார்கள் என்ற செய்தி கேட்டு, அவர் பதற்றம் அடைந்தார். 
“இது சிறிய விபத்துதான். யாருக்கும் காயம் இல்லை. நன்றாக இருக்கிறார்கள். உங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே சொன்னேன். கவலைப்படாதீர்கள். திட்டமிட்டபடி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினால் போதும்” என்று சோனியா எவ்வளவோ கூறியும், இந்திராவுக்கு நிம்மதி ஏற்படவில்லை. 
சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு, உடனே டெல்லிக்குத் திரும்பத் தீர்மானித்தார். அதன்படி, அவருடைய சுற்றுப்பயணம்ரத்து செய்யப்பட்டது.
இரவோடு இரவாக, விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டார். 

நள்ளிரவுக்குப்பின் டெல்லியை அடைந்தார். நேராக காரில் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தபோது, பேரக்குழந்தைகள் இருவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். “அவர்களுக்கு காயம் எதுவுமில்லை. கவலைப்படாதீர்கள்” என்று இந்திராவிடம் கூறினார், சோனியா. இந்திரா, தன் செயலாளர் பி.சி.அலெக்சாண்டரை அழைத்துப் பேசினார். 
இந்திரா மிகவும் களைப்புடன் இருப்பதைக் கண்ட அலெக்சாண்டர், பேச்சை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்பினார்.
ஆனாலும், காஷ்மீர் பற்றியும், பஞ்சாப் பற்றியும் விரிவாக விவாதித்த பிறகே, அலெக்சாண்டரை அனுப்பினார். பிறகு செயலாளர் ஆர்.கே.தவானை அழைத்தார். 
மறுநாள் என்னென்ன நிகழ்ச்சிகள் தனக்கு இருக்கின்றன என்று கேட்டறிந்தார். முக்கியமானவற்றைத் தவிர, மற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்து விடும்படி கூறினார். நள்ளிரவு இரண்டு மணிக்குத்தான் படுக்கச்சென்றார். விடியற்காலை 4 மணிக்கு சோனியா எழுந்து பார்த்தபோது, இந்திரா ஏற்கனவே எழுந்துவிட்டதையும், குளிக்கத் தயாராகிக்கொண்டிருப்பதையும் கண்டார்.
இந்திரா காந்தி சுட்டுக் கொலை 
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான நிகழச்சி பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும். 
16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி அவருடைய வீட்டில் பாதுகாவலர்களாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார்.
சீக்கியர் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போருக்குப்பிறகு, இந்திரா மீது சீக்கியர்களில் பலர் ஆத்திரம் கொண்டிருந்தனர். 
அதன் காரணமாக, இந்திரா காந்தியின் வீட்டில் காவல் பணியில் சீக்கியர்களை அமர்த்தக் கூடாது என்று ரகசியத்துறை டைரக்டர் கருத்து தெரிவித்தார்.
ஆனால் அந்த யோசனையை இந்திரா ஏற்கவில்லை. 
டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியின் வீடு ஒரே காம்பவுண்டுக்குள் அமைந்த இரு கட்டிடங்களைக் கொண்டதாகும். இவற்றில் பிரதமர் வசிக்கும் இல்லத்தின் வாசல், சப்தர்ஜங் ரோட்டில் உள்ளது. இந்த இல்லத்தை அடுத்த கட்டிடம், பிரதமரின் அலுவலகமாகும். இதன் வாசல் அக்பர் ரோட்டில் உள்ளது.
ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்துக்குள்ள தூரம் சுமார் 300 அடியாகும். 

இரண்டுக்கும் இடையில் உள்ள பாதை வழியே கார் செல்ல முடியும் என்றாலும், இந்திரா நடந்தே செல்வது வழக்கம். 1984 அக்டோபர் 31_ந்தேதி காலை 8 மணிக்கு, இந்திரா காந்தி பற்றி டெலிவிஷன் படம் ஒன்றை எடுப்பதற்காக, வெளிநாட்டுப் படப்பிடிப்பாளர் ஒருவர் வந்து, பிரதமரின் அலுவலகத்தில் காத்திருந்தார். 
அவருக்குப் பேட்டியளிக்க இந்திரா காந்தி தன் இல்லத்திலிருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்றார்.
இரண்டு கட்டிடங்களுக்கும் இடையே ஒரு நடைபாதை உள்ளது. 
அதில் அவர் நடந்து செல்ல, அவருக்கு சுமார் 7, 8 அடி தூரத்தில் பாதுகாப்பு அதிகாரி தினேஷ் பட் மற்றும் 5 மெய்க்காப்பாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால், பிரதமரின் அந்தரங்கச் செயலாளர் ஆர்.கே.தவான் வந்து கொண்டிருந்தார். 
பாதையின் வலது புறத்தில் புதர் போன்ற செடிகளுக்குப் பின்னால் பிரதமரின் இல்ல பாதுகாவலர்கள் பியாந்த்சிங் (சப்_இன்ஸ்பெக்டர்), சத்வந்த்சிங் (கான்ஸ்டபிள்) ஆகியோர் நின்றிருந்தனர்.
இந்திரா காந்தி நடந்து வந்து கொண்டிருந்தபோது, பியாந்த்சிங் (வயது 33) தன் கைத்துப் பாக்கியை உருவி எடுத்து, இந்திரா காந்தியை நோக்கி ஐந்து முறை சுட்டான். 
அதே சமயம் சத்வந்த்சிங் (26) இயந்திரத் துப்பாக்கியால் (ஸ்டேன்கன்) சரமாரியாகச் சுட்டான். 
கண்மூடிக் கண் திறப்பதற்குள் இவ்வளவும் நடந்து விட்டன. இந்திரா காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன. ரத்தம் பீறிட அவர் கீழே சாய்ந்தார். 
(இந்திரா காந்தியை நோக்கி பியாந்த்சிங்கும், சத்வந்த்சிங்கும் திரும்பிய போது, இந்திராவின் பின்னால் வந்த மெய்க்காப்பாளர்கள் அதை கவனிக்கவே செய்தனர். ஆனால் அந்த இருவரும் இந்திரா காந்தியை நோக்கி வணங்குவதாகவே அவர்கள் நினைத்துவிட்டனர்.) 
இந்திரா காந்தி சுடப்பட்டு விட்டார் என்பதை தெரிந்து கொண்டதும், கொலையாளிகளை நோக்கி கமாண்டோ படையினர் சுட்டனர். இதில் பியாந்த்சிங் மரணம் அடைந்தான். 
சத்வந்த்சிங் படுகாயம் அடைந்தான்.
வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த சோனியா, துப்பாக்கி சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தார். இந்திரா காந்தி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக்கண்டு “அம்மா!” என்று கதறினார். இந்திரா காந்தியை ஆஸ்பத்திரிக்கு காரில் கொண்டு சென்றார்கள். பின் இருக்கையில் இந்திரா படுக்க வைக்கப்பட்டார். அவர் தலையை, தன் மடி மீது வைத்துக்கொண்டார் சோனியா. 
ஆஸ்பத்திரியில் இந்திராவுக்கு அவசர “ஆபரேஷன்” நடந்தது. இந்திரா உடலில் 22 குண்டுகள் பாய்ந்திருந்தன. அவற்றில் 8 குண்டுகள் உடம்பைத் துளைத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தன. இந்திராவைக் காப்பாற்ற டாக்டர்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். 
ஆனால் பலன் இல்லை. 

2.25 மணிக்கு இந்திரா இறந்து விட்டார்” என்று டாக்டர்கள் அறிவித்தனர். 
எனினும் அகில இந்திய ரேடியோ மாலை 6 மணிக்குத்தான் இந்திராவின் மரணச்செய்தியை அறிவித்தது.
இந்திரா கொல்லப்பட்ட போது, ஜனாதிபதி ஜெயில்சிங் வெளிநாட்டில் இருந்தார். ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக, மேற்கு வங்காளத்துக்குச் சென்றிருந்தார். 
மூத்த மந்திரியான பிரணாப் முகர்ஜியும் அவருடன் இருந்தார். அவர்கள் சென்று கொண்டிருந்த காரை, ஒரு போலீஸ் ஜீப் வழி மறித்தது. “பிரதமர் வீëட்டில் ஒரு விபத்து நடந்துள்ளது. 
சுற்றுப் பயணத்தை நிறுத்திவிட்டு, உடனே டெல்லிக்குத் திரும்புங்கள்” என்ற செய்தி ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே ராஜீவ் காந்தியும், பிரணாப் முகர்ஜியும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் கல்கத்தாவுக்குச் சென்றனர். 
அங்கு “இந்தியன் ஏர்லைன்ஸ்” விமானம் ஒன்று தயாராக காத்துக்கொண்டிருந்தது. அதில் இருவரும் டெல்லிக்குப் பயணமானார்கள்
ராஜீவ் காந்தி பிரதமரானார் 
கல்கத்தாவில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ராஜீவ் காந்தி, பெரும்பாலும் விமானிகள் அறையிலேயே இருந்தார். டெல்லியில் இருந்து, வயர்லெஸ் மூலம் அவருக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்திரா காந்தி இறந்து விட்டதாக பிற்பகல் 2.30 மணிக்கு தகவல் வந்தது. 
தன் உணர்ச்சிகளை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார், ராஜீவ்காந்தி. அவர் டெல்லி போய்ச்சேர்ந்தபோது, விமானநிலையத்தில் மந்திரிகளும், காங்கிரஸ் தலைவர்களும் கூடியிருந்தனர். அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்திருந்தனர்.
நேரு மறைந்தபோதும் லால்பகதூர் சாஸ்திரி இறந்தபோதும், மூத்த மந்திரியான நந்தா, இடைக்கால பிரதமராகப் பதவி ஏற்றார். 
பிறகு பிரதமர் தேர்தல் நடைபெற்றது. 
அதே மாதிரி தன்னை இடைக்காலப் பிரதமராக ஆக்குவார்கள் என்று பிரணாப் முகர்ஜி எதிர்பார்த்தார். ராஜீவ் காந்தியைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்ததும் அவர் ஏமாற்றம் அடைந்தார். எனினும், அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. 
காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மன்றக் குழு (பார்லிமெண்டரி போர்டு) கூடி, புதிய பிரதமராக ராஜீவ் காந்தியை தேர்ந்தெடுக்க முடிவு செய்தது. ஆட்சி மன்றக் குழுவில் மொத்தம் ஐந்து பேர் இடம் பெற்று இருந்தனர்.

அவர்களில் பிரதமர் இறந்துவிட்டார். 2 பேர் அப்போது டெல்லியில் இல்லை.
நரசிம்மராவ் (உள்துறை மந்திரி), பிரணாப் முகர்ஜி (நிதி மந்திரி) ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர். அவர்கள் இருவரும், ராஜீவ் பெயரை அறிவித்தனர். யேமன் நாட்டுக்கு சென்றிருந்த ஜனாதிபதி ஜெயில்சிங், இந்திரா மரணச் செய்தியை அறிந்ததும் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக டெல்லிக்குப் புறப்பட்டார். 
அன்று மாலை டெல்லி வந்து சேர்ந்தார். அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவுடன்தான் அவர் வந்தார். காங்கிரஸ் தலைவர்களும் அதே முடிவில் இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும், ராஜீவ் காந்தி பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யுமாறு உத்தரவிட்டார். 
அன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில், இந்தியாவின் புதிய பிரதமராக ராஜீவ் காந்தி பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி ஜெயில்சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
“இந்திரா காந்தி மந்திரி சபையில் இடம் பெற்றிருந்த மந்திரிகள் அனைவரும் தொடர்ந்து நீடிப்பார்கள். புதிய மந்திரிகள் நியமனம் இல்லை. மந்திரிகளின் இலாகாக்களும் மாற்றப்படமாட்டாது” என்று ராஜீவ் அறிவித்தார். அன்றிரவு ராஜீவ் காந்தி ரேடியோவில் பேசினார். அவர் கூறியதாவது:-
“இந்திரா காந்தி, படுகொலை செய்யப்பட்டுவிட்டார். அவர் எனக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கே தாயாக விளங்கினார். தன்னுடைய கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை, இந்திய மக்களுக்காக அவர் பாடுபட்டார். நாம் அனைவரும் துயரத்தில் முழ்கியுள்ள நேரம் இது. இந்த துயரத்தை _ சோதனையை நாம் தைரியத்துடனும், மனோ வலிமையுடனும் எதிர்கொள்ள வேண்டும். 
இந்திரா காந்தி மறைந்துவிட்டார். ஆயினும் அவருடைய ஆன்மா நம்முடன் வாழ்கிறது. அவருடைய ஆன்மாவுக்கு மரணம் இல்லை. 
நம்முடைய இந்திய நாடு, வரலாற்றுச் சிறப்பு மிக்கது. நாம் ஒற்றுமையுடன் இருந்து, இந்தியாவின் ஸ்திரத்தன்மையைக் காப்போம்.” இவ்வாறு ராஜீவ் கூறினார்.
பின்னர், ராஜீவ் தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலத்தை எவ்வாறு நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. 

இந்திரா உடலை அன்றிரவு அவர் வீட்டில் வைத்திருந்து விட்டு, பிறகு இரண்டு நாட்கள் “தீன் மூர்த்தி” இல்லத்தில் (நேரு வசித்த வீடு) பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்கு வைத்திருப்பது என்றும், 3_ந்தேதி இறுதி ஊர்வலம் நடத்துவது என்றும், யமுனை நதிக்கரையில் நேரு சமாதி அருகே தகனம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்திரா மரணச்செய்தி டெல்லியில் காட்டுத்தீ போல பரவியது. 
பல்லாயிரக்கணக்கான மக்கள் சாரி சாரியாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பெண்கள் கதறி அழுதார்கள். பலர் மயக்கம் அடைந்தார்கள். 
இந்திரா காந்தியுடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அவர் மருமகள் மேனகா, இந்திரா மரணச் செய்தி அறிந்ததும் ஓடோடி வந்தார். 
மாமியார் உடலைக் கண்டு அலறித்துடித்தார். நாள் முழுவதும் கண்ணீர் விட்டபடி சோகத்துடன் அமர்ந்திருந்தார். அன்று இந்திரா வீட்டில் இருந்த எவரும் தூங்கவில்லை.

உறவினர்கள் இந்திரா உடல் அருகே கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்தனர். இந்திரா வீட்டைச் சுற்றிலும், தோட்டத்திலும், ரோடுகளிலும் ஏராளமானவர்கள் சோகத்துடன் கூடியிருந்தனர். மறுநாள் காலை இந்திரா காந்தியின் உடல் “தீன் மூர்த்தி” இல்லத்துக்குக் கொண்டு போகப்பட்டது. 
அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட “கிï” வரிசையில் நின்று, இறுதி மரியாதை செலுத்தினர். இதற்கிடையே, இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று ஆத்திரம் அடைந்தவர்கள், சீக்கியர்களின் கடைகளையும், வீடுகளையும் தாக்கினார்கள்.
ஏராளமான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பயந்துபோன சீக்கியர்கள், வீடு_வாசலை விட்டுவிட்டு பஞ்சாப் மாநிலத்துக்கு தப்பி ஓடினர். 
இந்த கலவரங்களில் இறந்த சீக்கியர்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரம் இருக்கும் என்றும், டெல்லியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பின்னர் வந்த தகவல்கள் கூறின. 
சுமார் 50 ஆயிரம் பேர், வீடு_ வாசலை இழந்து அகதிகளானார்கள். 2_ந்தேதி இரவு, ராஜீவ் காந்தி டெலிவிஷனில் பேசினார். “இப்போது நடைபெற்று வரும் கலவரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்தக் கலவரங்கள், இந்திரா காந்தி எந்த லட்சியங்களுக்காக வாழ்ந்தாரோ, அந்த லட்சியங்களுக்கு எதிரானவை.
கலவரம் அடங்காவிட்டால், அதை அடக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டார். வன்முறைக் கும்பலில் காலிகளும் ஊடுருவியிருந்தனர். 
அதனால் கலவரம் நீடித்தது. வன்முறையை ஒடுக்குமாறு ராணுவத்துக்கு ராஜீவ் காந்தி உத்தரவிட்டார். அதன்படி, ராணுவத்தினர் கலவரத்தை அடக்கினர். டெல்லியில் ராணுவத்தினர் டாங்கிகளில் ரோந்து வந்தனர். 3_ந்தேதி காலை, இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலம் நடந்தது. 
அவர் உடல் பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டு, ராணுவத்தினர் அணிவகுத்து செல்ல ஊர்வலம் புறப்பட்டது.
மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் இறுதி ஊர்வலம் சென்ற அதே பாதையில், இந்திராவின் இறுதி ஊர்வலமும் சென்றது. கலவர சூழ்நிலை காரணமாக, ஊர்வலத்தை காண ரோட்டின் இருபுறமும் கூடியிருந்தவர்கள் எண்ணிக்கை முன் அளவுக்கு இல்லாமல் குறைவாகவே இருந்தது. 
யமுனை நதிக்கரையில், காந்தி, நேரு ஆகியோரின் சமாதிகள் உள்ள இடத்திற்கு அருகே, சாந்தி வனம் என்ற இடம் இந்திரா காந்தியின் உடல் தகனத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது.

ஊர்வலம் அந்த இடத்தை அடைந்ததும், இந்திராவின் உடல் பீரங்கி வண்டியில் இருந்து இறக்கப் பட்டு, சந்தனக் கட்டைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த “சிதை”யில் வைக்கப்பட்டது. இங்கிலாந்து பிரதமர் மார்க்கரெட் தாட்சர், ஜப்பான் பிரதமர் நாக சோனே, பாகிஸ்தான் அதிபர் ஜியா, வங்காள தேச அதிபர் எர் ஷாத், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா, பாலஸ்தீன தலைவர் அராபத் மற்றும் ஜாம்பியா, உகாண்டா, பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர்கள், கலைஞர் கருணாநிதி,வெளிநாட்டு தூதுவர்கள், மாநில முதல்வர்கள், கவர்னர்கள், அன்னை தெரசா, திரை உலகப் பிரமுகர்கள் வந்திருந்து இந்திராவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
 (இந்த சமயத்தில், தமிழக முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று, மாற்று சிறுநீரகம் பொருத்த ஏற்பாடு நடந்து வந்தது. இந்த நிலையில், இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட தகவலை அறிந்தால், அவர் உடல் நிலை மேலும் மோசமடையும் என்பதால், அந்தத் தகவல் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை.)
தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், ராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, மரியாதை செலுத்தினர். பின்னர், “சிதை”க்கு ராஜீவ்காந்தி தீ மூட்டினார். “சிதை” எரிந்த போது, கூடியிருந்தவர்கள் “இந்திரா அமரர் ஆனார்”, “இந்திராவின் புகழ் வாழ்க” என்று குரல் எழுப்பினர். 
மறுநாள் இந்திராவின் அஸ்தி (சாம்பல்) பல கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அஸ்தியின் ஒரு பகுதி திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட்டது.
 “நான் இறந்தபின், என் அஸ்தி இமயமலை மீது தூவப்பட வேண்டும்” என்று தன் விருப்பத்தை இந்திரா காந்தி ஏற்கனவே ராஜீவ் காந்தியிடம் தெரிவித்திருந்தார். 
அதன்படி, தாயாரின் அஸ்தியின் ஒரு பகுதியை, இந்திய விமானப்படை விமானத்தில் ராஜீவ் காந்தி எடுத்துச்சென்று, இமயமலைச் சாரலில் தூவினார்.
=========================================================================================

திங்கள், 29 அக்டோபர், 2018


எங்கள் வலைப்பூ சகா "சுரன்"  வலைப்பூவிற்கு 12,50,000 வருகைகள்  .

"சுரன்" மட்டுமல்ல கலாரசிகனும் மகிழ்வில் திளைக்கிறது.

வந்தவர்களுக்கும்,
தொடர்ந்து வந்து கொண்டிருப்பவர்களுக்கும்,
புதிதாக வரவிருப்பவர்களுக்கும் 

ராஜபக்ச பிரதமர் -பின்னணியில் நடந்தது என்ன?


கடந்த 26.10.2010 வெள்ளியன்று இலங்கையின் பிரதமரான ரனில் விக்ரமசிங்கைவைப் பதவி நீக்கம் செய்த அந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, மகிந்த ராஜபக்சவைப் பிரதமாராக நியமித்தார். 
இந்தியா அமெரிக்கா உட்பட இலங்கையைச் சூறையாடும் நாடுகளின் இனப்படுகொலைத் திட்டத்தை கோரமாக நடத்திக்காட்டிய மகிந்த ராஜபக்ச பிரதமராவது நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாவதற்கு இணையானது.
ரனில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசின் நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் வாழ்கைச் செலவை அதிகரித்திருந்தது. 
கடந்த நான்கு ஆண்டுகள் இலங்கையின் பொருளாதாரம் உழைக்கும் மக்கள் குறித்து எந்தக் கவலையுமின்றி பல் தேசிய நிறுவனங்களிடம் தாரை வார்க்கப்பட்டது.
இலங்கை மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்ட ரனில் விக்ரமசிங்க அரசை மக்களின் ஏகோபித்த எதிர்ப்பின்றி மகிந்த ராஜபக்சவால் பிரதியிட முடிந்திருக்கிறது. பெரும்பானமையாக நிறுவிக்கொள்வதற்கு முன்பாகவே, மக்களின் வாழ்க்கைச் செலவு குறித்தும், பண முறி மோசடி குறித்தும், மகிந்த அறிக்கைவிடுத்துள்ளார்.

சதிப்புரட்சி போன்று இரவோடு இரவாக மகிந்த ராஜபக்சவைப் புதிய பிரதமராக மைத்திரி அறிவித்த நிகழ்வு மக்களின் எதிர்ப்பைப் பெறப் போவதில்லை என்பது ஒரு புறமிருக்க அதன் மறுபக்கத்தில் இதன் பின்புலம் என்ன என்ற கேள்விகள் இன்றைய அரசியல் களத்தின் விவாதப் பொருளாக மாற்றமடைந்துள்ளது.
தவிர, பேரினவாதத்தையே தனது அரசியல் கோட்பாடாகக் கொண்டுள்ள மகிந்த ராஜபக்சவின் மீட்சி சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபக்ச மீட்சியின் அரசியல் பின்புலம்:
2011 ஆம் ஆண்டு ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கொழும்பு சர்வதேச கொள்கல முனையம் international South Container Terminal சீனாவிற்கு 35 வருடக் குத்தகைக்கு வழங்கப்பட்டது. 
அதே வேளை ஹம்பாந்தோட்ட துறைமுகம், போர்ட் சிட்டி ஆகியன 99 வருடக் குத்தகை அடிப்படையில் சீனாவிற்குத் தாரை வார்கப்பட்டது. 
கொழும்பு நகரின் பல பகுதிகளில் சீனத் தொழிலாளர்களின் தங்குமிடங்கள், உணவகங்கள் துருத்தலாகத் தெரிந்தன.
போருக்குப் பின்னான ராஜபக்சவின் சீனாவுடனான இறுக்கம் மேற்கு நாடுகளையும், இந்தியாவையும் அச்சுறுத்திக்கொண்டிருக்க, ராஜபக்ச ஆட்சியில் அமைச்சராகப் பதவிவகித்த மைத்திரிபால சிரிசேனவை மேற்கும் இந்தியாவும் வாங்க்கிகொள்ள இலங்கையில் புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. ராஜபக்ச தோல்வியைத் தழுவ, 2015 ஜனவரிமாதம் 9ம் திகதி பதவியேற்றுக்கொள்கிறார் சிரிசேன. 
சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஆதரவுடன் வெற்றிபெற்ற சிரிசேன, ராஜபக்சவின் ஊழல் மிகுந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஜனநாயக ஆட்சியை அமைக்கப்போவதாக உறுதியளிக்க, இலங்கைத் தீவு முழுவதும் புதிய நம்பிக்கை சுடர்விட ஆரம்பிக்கிறது.
தனது எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் அமைச்சரவையை உருவாக்கிய மைத்திரிபால, ரனில் விக்ரமசிங்கவைப் பிரதமராகத் தெரிவுசெய்கிறார். ந;ல்லாட்சி அரசு என்று அழைக்கப்பட்ட புதிய அரசு, மகிந்த ராஜபக்ச சாம்ராஜியத்தில் நடத்தப்பட்ட ஊழல்களை ஆரம்பத்தில் வெளிக்கொண்டு வந்தாலும், யாரும் தண்டிக்கபடவில்லை.
 கடந்த மூன்று வருடங்கள் ரனிலின் ஆட்சியில் பொருட்களின் விலை உயர்ந்தது. வாழ்க்கைச் செலவு அதிகரித்து ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாதவாறு தரமிறங்கியது. மறுபுறத்தில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறை தணிந்திருந்து. நேரடியான அரசியல் அச்சுறுத்தல்கள், கடந்தல்கள் என்பன குறைந்திருந்தன.
சீனாவுடனான ஒப்பந்தங்கள் நீக்கப்படாவிட்டாலும், புதிய ஒப்பந்தங்கள் எதுவும் எழுதப்படவில்லை.
கொழும்பு துறைமுக கொள்கலன் முனையம் இரண்டு பெரும்பகுதிகளைக் கொண்டிருந்தது. 
அதன் தென்பகுதி சீனாவின் கைகளில் இருந்தாலும், அதன் கிழக்குப் பகுதியையும் கையகப்படுத்த சீனா எடுத்த முயற்சிகள் ரனிலின் ஆட்சி காலத்தில் கைகூடவில்லை.
இத் துறைமுகங்கள் இந்தியாவின் தென்பகுதித் துறைமுகங்களோடு நேரடித் தொடர்பிலிருந்தவை. தூத்துக்குடி துறைமுகத்தின் பெரும்பகுதிக் கப்பல்கள் கொழும்பின் ஊடாக வர்த்தகத்தில் ஈடுபட்டவை. தூத்துக்குடிக்கும் கொழும்பிற்கும் இடையிலான கடல்வழிப் பாதை இந்தியாவின் நிறுவனங்களைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்தது.
 கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு வரும் பாரிய கப்களிலிருந்து பொருட்கள் இறக்கப்பட்டு தூத்துக்குடி உட்பட பல்வேறு துறைமுகங்களுக்கு கொண்டுசெல்லப்படுவதால் இத் துறைமுகம் இந்திய பெரு வர்த்தக நிறுவனங்களுக்கு அவசியமாக அமைந்தது. வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் தனது ஆலையை அமைத்துக்கொள்ள இலங்கைத் துறைமுக வசதியும் ஒரு காரணமாக அமைந்தது.
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது. இலங்கைத் துறைமுகங்கள் தொடர்பான இந்த ஒப்பந்தத்தில் கொழும்பு கொள்கல முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் கைச்சாத்தானது.
இந்த வருட நடுப்பகுதியில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இலங்கையின் கிழக்குத் துறைமுகத்தை இந்திய அரசிற்கு வழங்குவதை நிராகரித்ட அதே வேளை மேற்குத் துறைமுகத்தை அபிவிருத்திக்காக இந்தியாவிற்கு வழங்குவதாகக் கூறுகிறார். 
பாரிய கப்பல்களை உள்வாங்கும் திறனற்ற மேற்கு முனையம் இந்தியாவிற்குப் பயனற்றதாக அமைந்ததால் இந்தியா தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோக்கித்தும் பயனற்ற நிலையே தொடர்ந்தது.
ஒக்க்ரோபர் மாதம் 19ம் திகதி இந்தியாவிற்கு சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த ரனில் கிழக்குத் துறைமுகம் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்ட விவகாரம் பின்னதாக வெளியானது. இலங்கை திரும்பிய ரனில், இந்திய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த மைத்திரிபாலவுடன் பேச்சு நடத்துவதாகத் தெரிவிக்கிறார். 
18ம் திகதி ஒக்ரோபர் மாதம், கிழக்கு துறைமுகம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித செனிவரத்ன, ஜனாதிபதிகும் பிரதமருக்கும் இது தொடர்பாகக் கருத்து மோதல் இடம்பெறவில்லை என்றும், துறைமுகத்திற்குப் பாரம்தாங்கிகள் வாங்குவது தொடர்பாகவே பேசப்பட்டதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவிக்கிறார்.
இந்த நிலையில் ரனிலின் தலைமையில் துறைமுகம் தனது கைகளில் வீழ்வதற்கான காலம் தாழ்ந்து போவதாகக் கருதிய இந்தியா, ஏற்கனவே மகிந்தவுடன் பேச்சுக்களை ஆரம்பித்திfருந்தது.
இந்தியாவின் கோப்ரட்அடியாளான(corporate hitman) சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பின் பெயரில் இந்தியா சென்ற மகிந்த, ஆளும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஆதரவாச் செயற்படுகிறார்
, வன்னிப் படுகொலைகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் பங்களித்ததாக தொலைக்காட்சிகளில் மகிந்த நேர்காணல் வழங்க,ப.ஜ.க வின் தமிழ் நாடு அரசியல் வாதிகளும், அ.தி.மு.க வும் இணைந்து தி.மு.க மீது தாக்குதல் நடத்த ஆரம்பிக்கின்றன.
 தி.மு,க வைப் போர்க்குற்றவாளிக் கட்சியாக அறிவிக்க வேண்டும் என்கிறது எடப்ப்பாடி அரசு. 
இன்றைய திகதிக்கு பாரதீய ஜனதாவின் பிரதான எதிரிக் கட்சியாகக் கருதப்படும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ராஜபகசவைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலின் பின்புலத்தில் மகிந்தவிற்கும் பாரதீய ஜனதாவிற்கும் இடையேயான புரிந்துணர்வு வெளிப்பட்டது.
கிழக்குத் துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு ராஜபக்ச ஒப்புக்கொடதன் பின்புலத்திலேயே இவ்வளவு சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றன என்பது தெளிவாக சரியாக ஒரு மாதங்கள் பொறுத்திரு வெண்டியிருந்திருக்கிறது.
ராஜபக்ச பிரதமரானதை உலகின் பல நாடுகள் கண்டித்திருக்கின்றன. 
இந்தியா மூச்சுக்கூட விடவில்லை. 
போதாக் குறைக்கு, தமிழக பா.ஜ.க வின் தமிழிசை சவுந்தரராஜன், மகிந்த இனிமேல் தவறு செய்யமாட்டார் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவிக்கிறார். 
அ.தி.மு.க வும் ஒரே குரலில் மகிந்த இனிமேல் பாரதீய ஜனதா என்ற “தமிழர் நலனில் அக்கறை கொண்ட” கட்சிகளை அனுசரித்து நடந்துகொள்வார் என்கிறது. ஆக, இந்திய அரசு துறைமுகம் உட்பட பல்வேறு திட்டங்களுக்காக மகிந்த என்ற இனக்கொலையாளியை நம்பியதன் விளைபலனே இலங்கையின் இன்றைய அரசியல் சூழல்.

மகிந்த ஆட்சி காலத்தில் கேரின் லங்கா என்ற நிறுவனத்தை ஆரம்பித்த வேதாந்தா நிறுவனமே தூத்துத்துகுடியில் நடத்தப்பட்ட 14 அப்பாவிப் பொதுமக்களின் படுகொலைகளின் பின்னணியில் செயற்பட்டது. 
இலங்கையின் கிழக்குத் துறைமுகக் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை நாளையிலிருந்து வேதாந்தா ஏற்றுக்கொண்டாலும் வியப்பில்லை.
ஏற்கனவே அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்தேறியுள்ளன.                                                                                                                                            -சபா நாவலன்
நன்றி:இனியொரு.
================================================================================================
மாதவன் நாயரிண்ட மர்மங்கள்?
2003-ம் ஆண்டு இஸ்ரோவின் தலைவராகப் பொறுப்பேற்ற மாதவன் நாயர், 2009-ம் ஆண்டு அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். 
பிறகு பாட்னா ஐ.ஐ.டியின் தலைவர் பொறுப்பிலும் இருந்தார். 
இந்த நிலையில், இஸ்ரோவின் வர்த்தக நிறுவனமான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் எஸ் பாண்ட் அலைக்கற்றையை, தேவாஸ் என்ற நிறுவனத்துக்கு மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாகவும், இதனால் மத்திய அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கைக் குழு புகார் கூறியது. 
மாதவன் நாயர் உட்பட நான்கு விஞ்ஞானிகள் மீது புகார் கூறப்பட்ட நிலையில், இவ்விகாரம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கேரளா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவை நேரில் சந்தித்த மாதவன் நாயர், தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார். 
இதுகுறித்துப் பேசிய மாதவன் நாயர், ``நாட்டின் மேம்பாட்டுக்காகப் பிரதமர் மோடி மேற்கொள்ளும் பணிகள் என்னை மிகவும் கவர்ந்தன. அதனால் பா.ஜ.க-வில் இணைந்துள்ளேன்" என்றார். 
மாதவன் நாயரின் திடீர் அரசியல் பிரவேசம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மீதான சிபிஐ விசாரணையில் இருக்கும்  ஆண்ட்ரிக்ஸ் நிறுவன ஊழல் குற்ற சாட்டில் இருந்து தப்பிக்கத்தான் என்று கூறப்படுகிறது. 
இனி  ஆண்ட்ரிக்ஸ் நிறுவன ஊழல் அவ்ளோதான் தானா, என்னவாகும் என்ற கேள்வி மட்டுமே இருக்கிறது.
======================================================================================

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

"பக்கோடா" மட்டுமே மேக் இன் இந்தியா!

 மற்றவை ?
"உலகின் மிக உயரமான சிலையானது இந்தியாவில் அக்டோபர் 31ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதன் மதிப்பு 3000 கோடி ரூபாய். விவசாயிகள் தங்களது பாதிப்புகளை சரி செய்ய அரசு விவசாயக்கடன்களை நீக்க  போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அரசாங்கம் ஒரு சிலைக்காக 3000 கோடி ரூபாய் செலவிடுவது பெரும் அதிர்ச்சியை தருகிறது.இத்தொகையை மணிலா அரசுகளுக்கு பகிர்ந்து கொடுத்தால் ,இன்று இந்தியா முழுக்க விவசாயக்கடன்கள் கைவிடப்பட்டு விவசாயம் காப்பாற்றப்பட்டிருக்கும்."
குஜராத்தை சேர்ந்த 39 வயதான விவசாயி விஜேந்திர தட்வி, தனது 3 ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்ய தண்ணீர் கிடைக்காமல் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்.

மிளகாய், சோளம் மற்றும் கடலை ஆகியவற்றை பயிறுடும் இவர், தண்ணீருக்கு மற்ற விவசாயிகளை போல பருவ மழையையே நம்பியிருக்கிறார். அல்லது நிலத்தடி நீரை பம்ப் மூலமாக பயன்படுத்துவார். ஆனால், மழையை தொடர்ந்து வரும் நீண்ட வறண்ட கோடைக்காலம், வறட்சியை ஏற்படுத்தி, தட்வி போன்ற விவசாயிகளின் வருமானத்தை குறைத்துவிடுகிறது.
அதனால், தன் வருமானத்தை அதிகரிக்க, ஒரு கட்டுமான தளத்தில் ஓட்டுனராக பணியில் சேர்ந்தார் தட்வி.
182 மீட்டர் (600 அடி) உயரம் கொண்ட சிலையை குஜராத் மாநில அரசு கட்டி வந்தது. இதுவே உலகின் உயரமான சிலை என்று கூறப்படுகிறது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சுமார் 3,000 கோடி ரூபாய் செலவில் வெங்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பாதிக்கும் மேற்பட்ட செலவினை குஜராத் அரசாங்கம் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள செலவு மத்திய அரசு அல்லது பொது நன்கொடையினில் இருந்து பெறப்பட்டது.
"ஒரு பெரிய சிலைக்கு செலவு செய்ததிற்கு பதிலாக, விவசாயிகளுக்காக அரசு செலவழித்திருக்கலாம்" என்கிறார் தட்வி. மேலும், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பலருக்கும் அடிப்படை நீர்ப்பாசன வசதிகள்கூட இல்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
சிலை அமைக்கும் பணி முடிந்துவிட்டது. "ஒற்றுமைக்கான சிலை" என்று அறியப்படும் இது, பட்டேலின் நினைவுச்சின்னமாக நிற்கும்.
வல்லமைமிக்க தேசியவாத தலைவரான சர்தார் பட்டேல், குஜராத்தில் பிறந்தவர். இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராகவும் இருந்தார் பட்டேல்.
2010ஆம் ஆண்டு குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, இந்த சிலை செய்வதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோதி முன்னெடுத்தார். பட்டேலின் பெருமைகளை போற்ற பல ஆண்டுகளாக முயற்சி எடுத்துவரும் ஆளும் பா.ஜ.க., 
"இந்தியா சுதந்திரம் பெற்ற 71 ஆண்டுகளில், 49 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியே ஆட்சி செய்தது.
பட்டேலின் நினைவுச்சின்னம் தொர்பான திட்டத்தில், அங்கு 3-ஸ்டார் ஹோட்டல், அருங்காட்சியம் மற்றும் அவருக்கு நெருக்கமான விஷயங்கள், அதாவது "நல்லாட்சி" மற்றும் "விவசாய வளர்ச்சி" ஆகிய பாடங்களில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சி மையம் அமைப்பதும் அடங்கும்.
இவை எல்லாம் ஏழை மக்கள், கிராமப்புற மற்றும் பழங்குடியினர் வாழும் நர்மதா மாவட்டத்தில் உள்ளது.
2016ஆம் ஆண்டு மாநில அரசாங்கத்தின் அறிக்கைப்படி, அங்கு பலரும் பட்டினியில் வாழ்கின்றனர். ஆரம்பப்பள்ளி சேர்க்கை வீழ்ச்சியில் உள்ளதோடு, ஊட்டச்சத்து குறைபாடும் தொடர்கிறது.
ஆனால், இந்த சிலை அமைத்துள்ளது மாவட்ட பொருளாதாரத்தை உயர்த்தும் என்று அரசாங்கம் நம்புகிறது. ஏனெனில் ஆண்டுக்கு 2.5 மில்லியன் பார்வையாளர்கள் அங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
"இதனால் உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு, அப்பகுதியில் சுற்றுலாவாசிகளின் வருகையும் அதிகரிக்கும்" என்கிறார் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள மூத்த அதிகாரி சந்தீப் குமார்.
ஆனால், உள்ளூர்வாசிகளுக்கு இதில் நம்பிக்கை இல்லை. "விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ஒரு தொகையை ஒதுக்கி அரசாங்கம் ஏன் திட்டம் அமைக்கவில்லை" என கேள்வி எழுப்புகிறார் பழங்குடியின ஆர்வலரான லக்கன். 

"பாசனத்திற்கு நீர் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்கள், ஆனால் இன்றும் அதே நிலைதான் உள்ளது" என்கிறார்.
நானா பிபலியா கிராமத்தின் அருகில் அணை இருப்பதால், பாசனத்திற்கு அவர்கள் அங்கிருந்து நீர் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தானும் அங்குள்ள மற்ற விவசாயிகளும், தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டிருப்பதாக தட்வி கூறுகிறார்.
"நான் ஒரே ஒரு பயிர்தான் வளர்க்கிறேன். பாசன வசதிகள் இருக்கும் விவசாயிகள் மூன்று பயிர்கள் வரை வளர்க்கிறார்கள்" என்று கூறும் போலா தட்வி, பாசனத்திற்காக மழைநீரை மட்டுமே நம்பியிருக்கிறார்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி, அம்மாவட்டத்தின் 85 சதவீத மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்.
விவசாயிகளுக்கு நீர் கிடைக்கப்பெறுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என பிபிசி குஜராத்தியிடம் பேசிய மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், லக்கன் கூறுகையில், நீர் இல்லாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் அவதிப்படுவதாக கூறுகிறார்.
இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிபேர் வயல்வெளிகளில் வேலை பார்க்கிறார்கள். ஆனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு 15 சதவீதம் மட்டுமே.
இந்தியாவில் விவசாய வளர்ச்சி 1.2 சதவீதம் நலிவடைந்துள்ளது. விவசாயத்தில் பல ஊழியர்கள் வேலை செய்தாலும், அதன் உற்பத்தி குறைவாகவே உள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயிர்கடன்களை கட்டவே போராடி வருகின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பயிர்கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது.
2017ஆம் ஆண்டு தமிழகத்தில் வறட்சி பாதித்த மாவட்டங்களின் விவசாயிகள் அவர்கள் படும் அவதிகளை வெளிப்படுத்த, மண்டை ஓடுகளை மாலையாக அணிவித்துக் கொண்டும், எலியை கடித்தும் போராடினார்கள்.
ஆனால் கடைசிவரை இந்தியாவின் பிரதமர் மோடி விவசாயிகளை அழைத்துப் பேசவே இல்லை.கோரிக்கை மனுவை கூட நேரில் பெற மறுத்து விட்டார்.
பயிர்கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் 

ஆனால் அக்காலக்கட்டத்தில் கவுதமி போன்ற நடிகைகளை சந்தித்து பேசி புகைப்படங்களும் எடுத்து வெளியிட்டார்.
3000 கோடியில் படேல் பெருமையை மோடி சிலைவைத்து வளர்த்து ஏன்ன சாதிக்கப் போகிறார்.
இதனால் இந்தியாவில் விவசாயம் வளருமா?விலைவாசிகள்,பெட்ரோல் விலை குறையுமா?வேலைவாய்ப்புகள் பெருகுமா?
படேல் பற்றி புத்தகங்கள் ,வரலாறு படிக்காதவர்கள் சிலையைப்பார்த்து ஒரு செல்பி எடுத்து போய் கொண்டே இருப்பார்கள்.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் படேல் பற்றி தெரியாத நிலையில் சிலையை பார்க்க ஆர்வம் காட்டமாட்டார்கள்.
"மேக் இன் இந்தியா "என்ற தாரக மந்திரத்தை தந்த மகான் மோடி இந்த படேல் சிலை க்கான 3000 கோடிகள் தந்தது சீனாவுக்குத்தான் .
எந்த சீன பட்டாசுகளை,பொருட்களை வாங்கக்கூடாது என்று இந்தியாவை சேர்ந்த நமக்கு புத்தி சொல்லி பாஜக,இந்துத்துவ அமைப்புகள் சுவரொட்டி ஒட்டுகிறதோ அதே சீனாதான்.
சீனாவில் இருந்து 600 அடி சிலை வடிவமைக்கப்பட்டு பாகங்களை தனித்தனியாக இந்தியா கொண்டுவந்து ஒன்றாகப் பொருத்தப்படுகிறது.
பொருத்துவது கூட சீனத்தொழிலாளர்கள்தான்.இந்தியாவில் இருந்து ஒருவரும் கிடையாது.காரணம் இது மேக் இன்  இந்தியா .
3000 கோடி திட்டத்தை இந்தியாவில் செய்திருந்தால் எத்தனை பேர்களுக்கு வேலைவாய்ப்பு தற்காலிகமாவது கிடைத்திருக்கும்.
நமக்குத்தான் பக்கோடா தயாரிப்பு துறையை ஒதுக்கி விட்டார்களே.

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...