bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 31 ஜனவரி, 2015

நாகேஷ்

நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.

நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.
தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாத்வர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள்.

தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேசின் முழுப்பெயர் நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார்.

தாராபுரத்தில் தனது எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை முடித்துக் கொண்டு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின.

நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார்.
மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.

1959-ம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார்.
 தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார்.
இது மிகவும் வெற்றிப்படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.

கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார். திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது.
சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர்.

அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது.

தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் மீது அதிக அன்பு வைத்திருந்தவர் நாகேஷ்.
தான் சந்திக்கும் பிரமுகர்களிடம் கமல்ஹாசனை பாராட்டி ஒரு வார்த்தையாவது பேசிவிடுவார்.
கமல்ஹாசனும் நாகேஷ் மீது அன்பும்,மரியாதையும் கொண்டிருந்தார்.
 ரொம்ப நாட்களுக்குப்பின்னர் கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில்  வில்லனாகநாகேஷ்  தோன்றினார்.
அதற்குப் பின்  மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்றபல கமலஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார்.
கமல்ஹாசனுடன்" நம்மவர் "படத்தில் நடித்தார்.அவரின் நடிப்பு பார்த்தவர் கண்களில் கண்ணீரை வரவைக்கும் விதமாக இருந்தது.அப்படத்தில் அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
 நாகேஷ் நடித்த கடைசிப்படம் தசாவதாரம் ,
 இதுவும் கமலஹாசன் படம்தான் .
 நாகேஷ் உடல்நிலை சரியின்றி  2009-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி காலமானார்.
=========================================================================

திங்கள், 19 ஜனவரி, 2015

2014 உலகம். சின்ன பார்வை

உலகில் மூன்றாம் உலக நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளில் பசி, பட்டினி இறப்புகள் அதிகரித்து கொண்டிருக்க, மற்றொரு புறம் உலகளவில் வீணாகும் உணவுப்பொருட்களின் அளவுகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. 
  வீணாகும் உணவுப்பொருட்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். 
இதற்கு அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம். இல்லையெனில் ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் உணவுப்பொருட்கள் வீணாகிக் கொண்டிருக்கும்.
தொழில்வளம் பெருகிய நாடுகளில் நுகர்வு கலாசாரம் அதிகம் இருக்கிறது. அவர்கள் நுகவர்வதில் 30 சதவீதத்தை வீணடிக்கின்றனர். 
 இந்த 2014 ஆண்டு முடிவில் உணவு  பொருட்கள் வீணான கணக்கு அதிர வைக்கிறது.
உணவு உற்பதியில் 30% அதாவது  28.6 கோடி டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன.
வீணாகும் தானியம் 76,300 கோடி பெட்டி பாஸ்தா[மேல் நாட்டு உண]வுக்கு சமம்.

உணவுப்பொருட்களில் அதிகம் வீணடிக்கப்படுவது பழங்கள், காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் தான். விளையும் காய்கறிகள், பழங்களில் ஏறக்குறைய பாதியை வீணடிக்கிறோம்.இது 3.7 லட்சம் கோடி ஆப்பிள்களுக்கு சமம்.
ஒவ்வொரு ஆண்டும் 22 சதவீதம் அளவுக்கு எண்ணெய் வித்துகளையும், பருப்பு வகைகளையும் வீணடிக்கிறோம்.வீணடிக்கும் எண்ணெய் வித்துகளிலிருந்து எண்ணெய் எடுத்தால் 11 ஆயிரம் நீச்சல் குளங்களை நிரப்பலாம்.

வட அமெரிக்கா மற்றும் ஓசானியா பகுதியில் 58 லட்சத்து 14 ஆயிரம் டன் கிழங்கு வகைகள் வீணடிக்கப்படுகின்றன.இது 100 கோடி உருளை கிழங்கு மூட்டைகளுக்கு சமம்.

ஐரோப்பாவில் மட்டும் 2.9 கோடி டன் பால்பொருட்கள் ஒவ்வொரு ஆண்டும் வீணடிக்கப்படுகின்றன.
இது 57 ஆயிரத்து 400 கோடி முட்டைகளுக்கு சமம்.

உலகளவில் 8 சதவீத இறந்த மற்றும் காயமடைந்த மீன்கள் மீண்டும் கடலிலேயே கொட்டப்படுகின்றன.

வீணடிக்கபடும் கடல் உணவுகள் 300 கோடி அட்லாண்டிக் சால்மோன் மீன்களுக்கு சமம்.

உலகளவில் ஆண்டுதோறும் 26.3 கோடி டன் இறைச்சி விற்பனைக்கு வருகின்றன. 
இதில் 20 சதவீதத்துக்கும் அதிகமாக வீணடிக்கப்படுகின்றன.
இது 7.5 கோடி மாடுகளுக்கு சமம்.

இப்படி வீணாகும் பொருட்கள் பணக்காரர்கள் வழங்கும் ஐந்து நட்சத்திர ஓட்டல் விருந்துகளில் மற்றும் வளர் நாடுகளில் பணக்கார மற்றும் மேல் தட்டு மக்களால்தான்,அவர்களின் ஆடம்பர விருந்துகளால்தான்  அதிக அளவில் உள்ளதாம்.
=======================================================================

2014 ம் ஆண்டு உலக திரைப்படங்கள் பற்றி சின்ன பார்வை.



ஆர்சினிக்கின் கதை!


ஆர்சினிக் நிலத்தடி நீரிலுள்ள விஷத் தன்மையுள்ள ஒரு பொருள் .

 இதன் விஷத்தன்மை காரணமாக வங்க தேசம், இந்தியாவிலும் வேறு சில நாடு களிலும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். 

மனித வரலாறு மற்றும் பண்பாட்டுமாற்றங்களின் பல்வேறு கட்டங் களில் ஆர்சினிக்கும் அதன் கூட்டுப் பொருட்களும் முக்கியப் பங்கினை (அதில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு) ஆற்றியிருக்கின்றன.

பாறைகள், மண், தண்ணீர், காற்று ஆகியவற்றில் இயற்கையிலேயே காணப் படும் தனிமங்களில் ஒன்றுதான் ஆர்சினிக்.
 குறிப்பாக, தீப்பற்றக்கூடிய - எளிதில் உருவமும் குணமும் மாறக்கூடிய பாறைகளில் ஆர்சினிக் அடங்கிய தாதுப்பொருட்கள் மிகச் சாதாரணமாகக் கிடைக்கின்றன. 
ஆர்சினிக் இப்படிக் கிடைப்பது. பழங் கால மனிதர்களுக்கே தெரிந்திருந்தது. 

கி.மு. 4-ம் நூற்றாண்டிலேயே சான் டாரக் (ஆர்சினிக் ட்ரைசல்பைட்) என்றதாதுப்பொருளைப் பற்றி அரிஸ்டாட் டில் குறிப்பிடுகிறார்.
 எனினும், ஒரு தனிமமாக அது 13-ஆம் நூற்றாண்டில்தான் அடையாளம் காணப் பட்டது.
ஆர்சினிக் தயாரிப்பில் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மானிய தத்துவவியலாளர் ஆல் பெர்டஸ் மாக்னஸ், 17-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த பிரான்ஸ் தேசத்து வேதியியலாளர் நிகோலாஸ் லெமெரி, ஜெர்மானிய மருத்துவர் ஜோஹன் ஷ்ரோடர் ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்கது. 

மரக்கரியை வைத்து ஆர்சினிக் ஆக்சைடை எரித்தால் ஆர்சி னிக் கிடைக்கிறது என்று ஜோஹன்ஷ்ரோடர் 1641-ல் தனது மருத்துவக் குறிப்பில் எழுதினார்.

18-ம் நூற்றாண்டில் ஆர்சினிக்கின் பல கூட்டுப் பொருட்கள் சோதனைச்சாலையில் தயாரிக்கப் பட்டன. 

அதன் பல்வேறு வேதியியல் குணங்களை மக்கள் அறியத் தொடங்கினர். மஞ்சள், கருப்பு, சாம்பல் நிறம் ஆகிய மூன்று வண்ணங்களில் அது கிடைத்தாலும் வெண்சாம்பல் வண்ணத்தில் எளிதில் உடையக்கூடிய, படிகப் பொருளாகக் கிடைக்கும் பொருளே ஸ்திரத் தன்மை உடையது. 

காற்றில் திறந்து வைத்திருந்தால் அதன் பிரகாசம் மங்கிவிடுகிறது.
மனிதர்களைக் கொல்லக் கூடிய விஷமாக கொலைகாரர்களால் ஆர்சினிக் உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. 
ஆர்சினிக்அடங்கிய கூட்டுப்பொருட்கள் அழகு சாதனப் பொருட்களாகவும் காயங்களை ஆற்றுவதற்கான மருந்து களாகவும் பழங்காலத்திலேயே பயன்படுத்தப்பட்டன. 
1860ஆம் ஆண்டி லிருந்து மிகப் பிரபலமான பூச்சிக்கொல்லி மருந்தாக ஆர்சினிக் பயன்படுத்தப்பட்டு வந்தது. னுனுகூயும் இயற்கை வேளாண் பூச்சி மருந்து களும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இதுநின்றது.

மானோசோடியம் மெதிலார்சனேட் போன்ற ஆர்சினிக் வேதிப்பொருட்கள் வயல்களில் பயிர்க ளுக்கு ஊடே வளரும் களைகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. 

ஈயம்,தாமிரம் போன்றவற்றுடன் இணைத்துஉலோகக் கலவைகள் செய்யஆர்சினிக் உலோகம் பயன்படுத்தப் படுகிறது.

 அமில பாட்டரிகளில் சிறிதளவு ஆர்சினிக் சேர்ந்த ஈயம்-ஆன்ட்டிமனி உலோகக் கலவை பயன்படுகிறது.

 மிகச் சுத்தமான ஆர்சி னிக் மின்னணுத் துறையில் செமி கண்டக்டர்கள், எல்ஈடி பல்புகள் போன்றவற்றைச் செய்யப் பயன் படுகிறது.
1980-களில் மேற்கு வங்கத் தில் நிலத்தடிநீரில் இருந்த ஆர்சினிக்கின் காரணமாக தோல் புண்களும்நோய்களும் பரவியது கண்டுபிடிக் கப்பட்டது. 

70க்கும் மேலான நாடுகளில் உள்ள 13.7 கோடி மக்கள் குடிநீரில் உள்ள ஆர்சினிக்கின் விஷத்தன்மை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக 2007ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

 வங்கதேசம், இந்தியா, கம்போடியா, சீனா, நேபாளம்,பாகிஸ்தான், வியட்நாம் ஆகிய நாடுகளில் ஒவ்வொரு நாளும் 10 கோடிபேர் பாதிக்கப்படுவதாக ஒரு மதிப்பீடுகூறுகிறது. 

நிலத்தடி நீரை அளவுக்கதிக மாக உறிஞ்சி எடுப்பதின் காரணமா கவே நிலத்தடி நீர் இப்படி மாசு படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆர்சினிக் இல்லாத நிலத்தடி நீரைப் பெறுவதற்கான எளிமையான தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் தற்போது உருவாக்கியுள்ளதால் இப் பிரச் சனையைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

"மம்மிகளை கதி வீச்சு மூலம் பரிசோதனை செய்ததில் ஆர்சனிக் போன்ற இரசாயனப் பொருட்களை ஊசி மூலம் உடலில் செலுத்தியோ அல்லது உடல்களை இவ்விரசாயனப் பொருட்களில் புதைத்தோ பதப்படுத்தியோ உடல்கல் பாதுகாக்கப்பட்டிருப்பதாக  ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். "

.தீக்கதிரில் இருந்து.(நன்றி : 2014 அக்டோபர் ட்ரீம் 2047 இதழில் பிரதீப் குமார் சென்குப்தா எழுதிய கட்டுரை)
===========================================================================================================

சனி, 10 ஜனவரி, 2015

சங்கரரின் அறிவும் - புத்தரின் இதயமும்!

விவேகானந்தர் ஓர் இந்துத்துறவி
மேலைநாடுகளுக்கு பயணித்த துறவி
மேலை நாடு அறிந்த துறவி

ஆங்கிலத்தில் அற்புதமாக உரையாற்றிய துறவி இறுதியான மூன்று சிறப்புகள் விவேகானந்தரை தென்னக மும்மணிகள் மற்றும் ஆரிய சமாஜ தயானந்த சரசுவதிஆகியோரிடமிருந்து உயர்த்திக் காட்டு கின்றன.

விவேகானந்தரின் ஆங்கிலப் புலமை, பேச்சாற்றல், வாதத்திறமை, மேலைநாட்டுத் தொடர்புகள், மேலைநாட்டில் கிடைத்த புகழ் அவரை அயல்நாட்டவரும் அறிந்தஒரு பிரபலமாக மாற்றின.

 அவரது சிகாகோ சர்வமத மாநாட்டு உரை இந்து மதத்தை ஒரு தாராளவாத மதமாகக் காட்டியது.

அனைவரையும் சமமாக தெய்வீகமானவர்களாகச் சித்தரிக்கும் அத்வைத வேதாந்த தத்துவத்தை முன்னிலைப்படுத்தியது. இந்து மதம் என்றவரையறைக்குள்ள முரண்பாடுகளுக் கெல்லாம் நியாயம் கற்பித்தது. அவை முரண்பாடுகள் அல்ல. வேறுபாடுகளே என்ற விளக்கம் அளித்தது.விவேகானந்தர் `இந்து’ என்ற அடை யாளத்துக்குள் இந்தியர்கள் என்பவர்கள் மீதான அக்கரையை வெளிப்படுத்தினார். இந்தியர்களின் ஏழ்மை, பட்டினி, கல்விஅறிவின்மை, மூடத்தனம், பிற்போக்குத் தனம் என்பவற்றையெல்லாம் அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
(கார்ல் மார்க்ஸ் கூட இந்தியர்களை இந்து என்று குறிப்பிட்டுள்ளதை நாம் அறிவோம்) தீண்டாமையைப் பற்றி கவலைப்பட்டார். சாதிப்பாகுபாடுகள் தலைவிரித்தாடிய திருவிதாங்கூர் இந்து தர்மராஜ்ஜியத்தை `பைத்தியகாரர்களின் புகலிடம்‘ என்று சாடினார். புரோகிதக் கொடுமைகளைச் சாடினார்.
விவேகானந்தரது பார்வையில் மதமாற்ற விவகாரம்
திருவிதாங்கூர் பகுதியில் சாதிக் கொடுமைகளின் காரணமாக பெருமளவில் மக்கள் கிறிஸ்துவத்திற்கு மாறுவதைக் குறிப்பிட்ட அவர் அதற்காக கிறிஸ்தவ மிஷனரிகளைச் சாடவில்லை. அவர்கள் மோசடி செய்வதாகக் கூறவில்லை. இந்து சமூக அமைப்பு சீரமைக்கப்படாததின் விளைவு என அதை விளக்கினார். சூத்திரனுக்கு, சண்டாளனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று குமுறினார். 

வேதஉபநிஷத்துகளைப் பிரச்சாரம் செய்வதை விட தரித்திர நாராயண சேவை செய்வதுதான் முதற்தேவை என்றார். கல்வியும் உணவும் அவர்களுக்குக் கொடுக்கப்படுதல் வேண்டும் என்றார்.
இந்தியாவில் இடைக்காலத்தில் பல கோடி பேர் முஸ்லிம்களாக மாறினர். அது வாள்முனையின் மீது நிகழ்ந்தது என்று குற்றம்சாட்டுவது முட்டாள்தனம் என்றார். 
நிலப்பிரபுக்களின் கொடுமைகளும், புரோகிதர்களின் பேராசையும்தான் மதமாற் றங்களின் காரணம் என்று சமூகபொருளாதார உண்மைகளை விளக்கினார்.விவேகானந்தரின் குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் மசூதிகளையும், கிறிஸ்தவ ஆலயங்களையும் அந்நியமாகக் காணாமல் அவற்றையெல்லாம் தெய்வீகமாகவே ஏற்று கொண்டு வந்தவர். முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் அந்நியர்கள் எனப் பார்க்காமல் தம்மவர்களாகவே கண்டவர்.
குறுகிய மத எல்லைகளைக் கடந்த ஆன்மீகவாதி அவர். 
அவரது சீடர் விவே கானந்தர் எப்படி மதவெறியாக மாற முடி யும்? 
அவர் எப்படி பிறமதத்தவரை நம் தேசத்தின் நம்பிக்கைக்குரியவர் அல்ல என்று அந்நியப்படுத்த முடியும்?
இந்துத்துவ உணர் வுள்ளவர் சர்வசமயக் கோவிலைப் பற்றி பேச முடியுமா? சமூகக் கண்ணோட்டத்தைப் பொறுத்தவரையில் விவேகானந்தரின் பார்வை விவாதத்திற்கு உரியதே.
அவர் தீண்டாமையைச் சாடினார். 
ஆனால் சாதிமுறையை கடவுள் இந்தியா வுக்கு அளித்த கொடை என்று போற்றினார். 
தனது காயஸ்த சாதிப்பெருமிதத்தை வெளிப் படுத்தவும் செய்ததுண்டு. சூத்திரனுக்கும் பஞ்சமனுக்கும் சிறிது உணவும், கல்வியும் தந்துவிடுவதன் மூலமாக விடியல் வந்துவிடும் என்று நம்பினார். 
இனி வரவிருப்பது சூத்திர (தொழிலாளர்) யுகம் என்று கணித்தார்.
மகளிருக்கு கல்வியும் வேலைவாய்ப் பும் தேவை என்று அவர் கூறினார். ஆனாலும் இந்திய மகளிருக்கு முன்னு தாரணம் ராமாயணச் சீதை என்று பெண் ணடிமைத்தனத்திற்கு புதிய வண்ணம் பூசினார். 
ஒரேயொரு முறை சூத்திரர்களுக்கு உபநயனம் செய்துவைத்தார்.

விவேகானந்தர் விளக்கம்

நாற்பது ஆண்டுகளுக்குள் இயற்கை எய்திய விவேகானந்தர் அதிகமாகச் சிந்தித்தார்.
 அதிகமாக உரையாற்றினார். 
இந்தியாவின் தாழ்ந்த நிலையைக் குறித்து அதிகமாகக் கவலைப்பட்டார். எனவே அந்தத் துறவியின் மத உணர்வு தம்தேச மக்களின் மீதான அக்கரையாகப் பரிணமித்தது.
 எனவே அவரது மத உணர்வு இந்துத்துவத்தைப் போன்று வகுப்புவாதமாக உருக்கொள்ளவில்லை.
மனிதனில் ஏற்கெனவே இருக்கின்ற தெய்வீகத்தை வெளிப்படுத்தவே மதம் என்ற அவரது விளக்கம் அனைத்து மனிதர்களுக்குமான தெய்வீகத்தை, தெய்வீக சமத்து வத்தை ஏற்றுக் கொள்கிறது.
 (சமத்துவமல்ல - இணக்கமே இன்றையத் தேவை என்றுஅசமத்துவத்தை வலியுறுத்தும் கோல் வால்கரின், ஆர்எஸ்எஸ்-சின் இந்துத்துவக் கொள்கை இவ்வகையில் விவேகானந்தரது விளக்கத்திற்கு முரண்பட்டு நிற்கிறது)பாரம்பரிய வாழ்வியலுக்கு இணங்கச் சொல்லும் இந்துத்துவாவாதிகள் விவே கானந்தரின் சடங்குகளைச் சாடும் மதம் பற்றிய கருத்துக்களை ஏன் முன்னிலைப் படுத்துவதில்லை.

வீணான மதவேஷம்

“சர்ச்சுக்குப் போவதோ, நெற்றியில் சன்னங்களை இட்டுக் கொள்வதோ, விசித்திரமான உடைகளை அணிந்துகொள்வதோ மதம் ஆகிவிடாது. வான வில்லின் அத்தனை வண்ணங்களையும் நீங்கள் உங்கள் மீது தீட்டிக்கொள்ளலாம். ஆனால் உங்கள் இதயம் திறக்கவில்லை யெனில் நீங்கள் கடவுளை உணரவில்லை எனில் எல்லாமே வீண்”மத உணர்வு பிறமதப் பகைமையாக விவேகானந்தருக்கு இருக்கவில்லை. ஸ்டேன்ஸ் பாதிரியாரை குடும்பத்தோடு எரிப்பதிலும், கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்துவதிலும் நியாயம் காணும் இந்துத்துவத்திற்கு விவேகானந்தரது உரைகளும் உணர்வுகளும் இணக்கமாக இருக்க முடியாது.
விவேகானந்தர் பார்வையில்பசுவும் மதமும்
பசுவதை மாட்டு மாமிசம் போன்ற வையெல்லாம் இந்துத்துவம் மதவெறி யாட்டத்திற்கு பயன்படுத்தும் தீப்பொறிகள்.
விவேகானந்தர் அமெரிக்க மண்ணில் இருந்தபோது அவர் மாட்டிறைச்சி உண்டார் என்று இங்கேயுள்ள இந்து உணர்வாளர்கள் அதை ஒரு பிரச்சனையாக மாற்ற முயன்ற போது விவேகானந்தர் சீறினார்.

“என் மதம் என் உணவிலா இருக்கிறது?
”வேறொரு முறை பசுப்பாதுகாப்பிற்கு நிதி உதவி கேட்டு வந்தவர்களிடம் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, தங்கு வதற்கு வீடின்றி பலகோடி சகோதரர்கள் பரிதவிக்கும்போது பசுவின் மீது காண்பிக்கும் அதீத அக்கறை தமக்கு வெறுப்பை அளிப்பதாகக் கூறி, நிதி உதவியும் செய்ய மறுத்துவிட்டார்.

புத்தரின் இதயம்

விவேகானந்தரிடம் வெளிப்பட்டது மனிதத்துவம், இந்துத்துவமல்ல. அதனால் தான் அவர் தெளிவாகக் கூறினார்.“சங்கரரின் அறிவுடன்புத்தரின் இதயமும் தேவைப்படுகிறது” என்றார். புத்தரை பிராமணீய எதிரியாகக் காணும் இந்துத்துவவாதிகளுக்கு விவேகானந்தர் விரும்பிய `புத்தரின் இதயம்‘ இருக்க முடியுமா?குருநானக்கைத் தவிர்த்து குருகோவிந்த் சிங்,புத்தரைத் தவிர்த்து வித்யாரண்யர்என்று இந்துத்துவவாதிகள் செய்யும் வரலாற்றுப் புரட்டல்களின்படியே ராமகிருஷ்ணரைத் தவிர்த்து விவேகானந்தர் என்று உலகறிந்த பிரபலங்களை பிராமணீய ஆதரவாளர்களாக இந்துத்துவ சிந்தனையாளர்களாக வெட்டியும் ஒட்டியும் திரிபுகளை இந்துத்துவவாதிகள் செய்து வருகின்றனர்.
1980வரை பலவீனமானவராகவும்,அதற்குப்பின் தம்மவராகச் சித்தரிப்பது ஓர் அரசியல் தந்திரமே.

பழைய ஜனசங்கம், பாரதிய ஜனதா கட்சியாக அவதாரம் எடுத்தபோது அதன்கொள்கையாக `காந்திய சோசலிசம்‘ என்ற கோஷத்தை வைத்தார்கள். காந்தியும் சோசலிசமும் இந்துத்துவத்தால் மறுக்கப்பட்டவையாகவும் எதிர்க்கப்பட்டவை யாகவும் இருந்தவை. இன்று ஆர்எஸ்எஸ்சின் அரசியல் அணியாக பாரதிய ஜனதா கட்சி காந்தியத்தையும் சோசலிசத்தையும் பேசு வதில்லை. இப்படித்தான் வசதிக்காக சில முறை பாபாசாகேப் அம்பேத்கரைக் கூட குறிப்பிட்டனர்.
எனவே இந்துத்துவவாதிகள் பிராமணிய - சனாதன நலன்களுக்காக குருகோவிந்த சிங், பகத்சிங், விவேகானந்தர், காந்தி, அம்பேத்கர், பட்டேல், மாளவியா உள்ளிட்ட பல பிரபலங்களை சுவீகரிப்பது அரசியல் சதியின் ஓர் அங்கமே.விவேகானந்தர் உள்ளிட்ட அனை வரையும் நாம் விமர்சனப் பார்வையோடுதான் மதிப்பிடுகிறோம். 
யாரையும் புனித மாக்குவதும், அப்பழுக்கற்றவர்களாகக் காட்டுவதும் நமது நோக்கமல்ல... ஆனால் பாசிச சக்திகள் அத்தகைய வரலாற்றுப் பிரபலங்களை வக்கிர நோக்கில் முன் வைக்கும்போது, அதன் உள்ளார்ந்த சதி நோக்கத்தை இத்தலைமுறையினருக்கும் விளக்கும் சமூகப் பொறுப்பு நமக்கு உள்ளது.தேவை சுவதர்மமல்ல, 
சுதர்மமே;விவேகானந்தரை ஓர் இந்துத் துறவி, இந்துமத ஆர்வலர் என்பதை நாம் மறுக்கவில்லை.
 ஆனாலும் அவரதுசிந்தனைகளும் செயல்களும் சிதைக் கப்பட்டு ஒரு குறுகிய பாசிச பழைமைவாத இந்துத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை நம்மால் ஏற்க முடியாது.
இந்துத்துவம் கூறும் ஆஸ்ரமம், சுவதர்மம், சங்கதர்மம், பொது எதிரி இவற்றை ஏற்காத விவேகானந்தரின் `புத்தரது இதயம்’ அத்வைத வேதாந்தம் நடைமுறை வேதாந்தம், சூத்திரயுகம், புரோந்த ஏற்பு ஒழிப்பு போன்றவை அவரது இந்து இந்திய அக்கரையின் வெளிப்பாடுகளே தவிர இந்துத்துவத்தின் வெளிப்பாடு அல்ல. நமது இன்றையத் தேவை `சுவதர்மம்‘ (மரபுவழிப் பண்பாடு) அல்லது கலாச்சார தேசியம் அல்ல. மாறாக `சுதர்மம்‘ (நல்லநெறி- நன்னெறி) அதாவது மனிதத்துவத்தின் அடிப்படையிலான புதிய அணுகுமுறையே ஆகும். விவேகானந்தர் சுதர்மத்திற்கு இணக்கமாக இருக்கிறார். இந்துத்துவ சுவதர்மத்திற்கு இணக்கமாக அவரைக் காணமுடியாது.

இந்துத்துவவாதிகளைப் பொறுத்தவரையில் இந்தியாவில் உள்ள பிற மதத்தவர்கள், குறிப்பாக முஸ்லிம்கள் வாள்முனையில் அச்சுறுத்தப்பட்டு மதம் மாற்றப்பட்ட இந்துக்களின் வாரிசுகளே இந்தியக் கிறிஸ்தவர்கள் மோசடிகள் மூல மாக மதம் மாற்றப்பட்டவர்களே. 

அவர்கள் தாய் மதத்திற்கு திரும்புவது தர்மமாகும். 
அது மதமாற்றமல்ல. 
இவர்கள் முன்னர் பெரும்பான்மையாக இங்கு வாழ்ந்திருந்த பௌத்தர்கள்.
கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இந்து சூத்திர - பஞ்சம பக்தர்களாக்கப்பட்டதையும், பௌத்த சமணக் கோயில்கள் வன்முறையில் சைவ- வைணவக் கோயில்களாக மாற்றப்பட் டதையும் குறிப்பிடுவதே இல்லை. ஏனெனில் அது பராக்கிரமவாதம் அல்லவா? மௌர்ய பிரகதத்தன் முதல் பௌத்த கனிஷ்கன் முதல் மகாத்மா காந்தி வரை படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியிலும், இத்தகைய இந்துத்துவ சுவதர்ம -பராக்கிரம வாதம் இருந்து வந்துள்ளது என்பதை வரலாற்றைத் தெரிந்து புரிந்து கொண்டவர்கள் அறிவார்கள். 

0வரலாற்றுத்துறைத் தலைவர்
(ஓய்வு), 
விவேகானந்தா கல்லூரி, 
சென்னை
நன்றி : இளைஞர் முழக்கம்(ஜனவரி)


வெள்ளி, 9 ஜனவரி, 2015

அறிவியல் உலகில்சிறந்த அறி{வா}விலிகள் ?




ள்மலேசிய நாட்டிற்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த ஆண்டு காணாமல் போய்விட்டது. 
இன்றுவரை அது என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அறிவியல் மிக வேகமாக முன்னேறியுள்ள நிலையிலும் கூட இது மிகப் பெரிய சவாலாகவே உள்ளது.
ஆனால் மும்பையில் நடைபெற்றுவரும் இந்திய அரசியல் மாநாட்டில் கட்டுரை வாசித்த கேப்டன் ஆனந்த் ஜே போடோஸ் என்பவர், 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் விமானப்போக்குவரத்து இருந்தது என்றும், அந்த விமானங்கள் கண்டம்விட்டு கண்டம் தாண்டிக் கூட அல்ல, கிரகம் விட்டு கிரகம் தாண்டிச் செல்லும் அளவிற்கு வல்லமை பெற்றதாக இருந்தது என்றெல்லாம் அள்ளிவிட்டுள்ளார். 
அவருடைய கற்பனைத் திறன் அத்துடன் நிற்கவில்லை.
===================================================================
கேப்டன் ஆன்ந்த் ஜே.போடாஸ் என்பவர்(இவர் அறிவியலாளர் இல்லை) சமஸ்கிருதம்மூலமாக பழமையானஅறிவியல் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை அறிவியல் மாநாட்டில் வாசித்தார். 
இந்த ஆய்வுக்கட்டுரையில் கூறியுள்ளதாவது:
மாநாட்டில் இந்தியாவில் 7000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் மூலம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும் ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கும் ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்கும் சென்று வந்துள்ளனர். 
ஆனால் நமது நவீன வரலாறோ 1904ல்தான் ரைட் சகோதரர்களால் விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகிறது.
பரத்வாஜர் என்பவர் விமான சம்ஹிதா என்ற நூலை எழுதி உள்ளார். அதில் விமானங்களைத் தயாரிக்க பல விமான உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன என்று கூறியுள்ளார்.
ஆனால் தற்போது விமானங்கள் தயாரிக்க உலோகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. விமான சம்ஹிதாவில் என்ன உலோகங்கள் பயனபடுத்தப்பபட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ள நமது இளைய தலைமுறையின்ர் அந்த நூலை படிக்க வேண்டும் 
அந்த உலோகங்களை நமது நாட்டில் தயாரிக்க வேண்டும். 
இந்தியாவில் 60 அடியிலான ஜம்போ ரக விமானங்கள் அக்காலத்தில் இருந்துள்ளன. பண்டைய கால விமானங்களில் 40 இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.பண்டைக்கால இந்தியாவில் ரூபகன் ரகஸ்யா என்ற பெயரில் ரேடார் முறையும் இருந்துள்ளது. 
அந்த ரேடார் முறையில்விமானத்தின் ஒட்டுமொத்த உருவத்தையும் அதைக்கண்காணிப்பவர் பார்க்க முடிந்துள்ளது.
 தற்போதைய நவீன ரேடார் கருவியில்விமானம் குறித்த ஒரு சிறிய புள்ளியை மட்டுமே பார்க்க முடிகிறது . 
மேலும் பரத்வாஜரின் நூலில் அந்த கால விமான ஓட்டிக்ளுக்கு எருமை ,பசு மற்றம் ஆட்டின் பால் போன்றவை உணவுகளாக குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்பட்டன.
தண்ணீருக்கு அடியில் வளரும் தாவரங்கள் மூலம் விமானிகளுக்கு உடைகள் தயாரிக்கப்பட்டன. இவ்வாறு அந்த `ஆய்வுக்கட்டுரையில்’ கூறியிருந்தார். இதேபோல மாநாட்டில் வாசிக்கப்பட்ட மற்றொரு ஆய்வுக்கட்டுரையில் பண்டைக்காலத்தில் அறுவைச் சிகிச்சைக்காக இந்தியர்கள் 20 வகை கூர்மையானகருவிகள் மற்றம் 101 வகையான உணர்வை மழுங்கச் செய்யும் கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.
 இந்த அமர்வில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், பண்டைக்கால இந்தியாவில்தான் பிதாகரஸ் தேற்றம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை கீரிஸ் நாடு அல்ஜீப்ராவாக மாற்றி அதற்கு சொந்தம் கொண்டாடியதை நாம் பெருந்தன்மையுடன் அனுமதித்தோம் என்று கூறினார்.
இதே மாநாட்டில் பேசிய சுற்றுச்சூழல்,வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் சமஸ்கிருதத்தில்ஏராளமான அறிவியல் விஷயங்கள் உள்ளன. 
இதில் அறிவியல் காங்கிரஸ் கவனம் செலுத்திமனித குலத்தின் நன்மைக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.
=====================================================================
ஜம்போ ரக விமானங்கள் கூட அக்காலத்தில் இருந்ததாகவும், 40 இன்ஜின்கள் அந்த விமானங்களில் பயன்படுத்தப்பட்டது என்றும் அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற அறிவியலாளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனியும் அளவில் ஆய்வுக் கட்டுரை வாசித்துள்ளார் அவர்.ரேடார் முறையும் இருந்தது என்றெல்லாம் அவர் பேசியுள்ளார். இந்த கட்டுரையை வாசித்த ஆனந்த் ஜே போடோஸ் ஒரு அறிவியலாளர் அல்ல. ஆனால் ஆர்எஸ்எஸ் சிந்தனை உடையவர். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர். அதனால்தான் அவர் அந்த மாநாட்டில் பங்கேற்று கட்டுரை வாசிக்கும் வாய்ப்பை பெற முடிந்துள்ளது.இந்த மாநாட்டை துவக்கிவைத்தவர் பிரதமர் நரேந்திரமோடி. இத்தகைய அபத்தமான கருத்துக்களை அவரும் ஏற்கெனவே பேசியுள்ளார். பிள்ளையார் உருவத்தை பார்க்கும் போது அந்த காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறை இருந்ததை அறிய முடிகிறது.

குளோனிங் முறையில்தான் கௌரவர்கள் பிறந்துள்ளனர் என்றும் அறிவியல் மாநாடு ஒன்றில் உளறிக் கொட்டினார் மோடி.அப்போது அவரை பின்பற்றி பலரும் புறப்பட்டுள்ளனர்.சீவக சிந்தாமணியில் “வளவன் ஏவா வானூர்தி என்று ஒரு வரி வருகிறது. இதை வைத்துக்கொண்டு ஆளில்லா விமானம் அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது என்று கூறினால், கேட்பவர்கள் எள்ளி நகையாடுவார்கள். திருத்தக்கத் தேவரின் கற்பனை என்கிற அளவில் சொன்னால் பிழையில்லை.
ஆனால் எல்லாமே அந்த காலத்தில் இருந்தது என்று புராணங்களை மேற்கோள் காட்டத்துவங்கினால் அதற்கு ஒரு எல்லையே இருக்காது.மோடி தலைமையில் ஒரு வலதுசாரி, பிற்போக்கு ஆட்சி அமைந்த பிறகுதான் அறிவியல் மாநாட்டையே அசிங்கப்படுத்தக் கூடிய அளவுக்கு சிலருக்கு தைரியம் வந்துள்ளது. அந்த மாநாட்டில் பேசிய சில மத்திய அமைச்சர்களும், சமஸ்கிருதத்தில் உள்ள அறிவியல் கருத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசியுள்ளனர்.
இத்தகைய பேர்வழிகள்தான் ராமர் கட்டிய பாலம் கடலுக்கு அடியில் உள்ளது என்று கூறிதமிழக மக்களுக்கு பலன் அளிக்கக் கூடிய சேதுகால்வாய்த் திட்டத்தையே முடக்கி வைத்துள்ளனர்.
அயோத்தியில் இந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று கூறி பாபர் மசூதியை இடித்து கலக விதைகளை தூவியதும் இதே காவிக் கும்பல்தான். மத்தியில் அதிகாரம் கைக்குவந்துவிட்டது என்ற மமதையில் அறிவியல் துறையையே அழிக்க இந்தக் கும்பல் துணிந்துவிட்டது. இது அறிவியலாளர்கள் தொடர்புடைய பிரச்சனை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தேசத்தின் பிரச்சனை. 
"இன்று மட்டும்தான் விமான சேவைகளை இந்திரன் ரத்து செய்துள்ளார்.
நாளை அப்பா வீட்டுக்கு விமானத்தில் சென்றுவிடலாம்.கவலை கொள்ளாதெ பாரு.'
அறி வியலாளர் டாக்டர் ராம்பிரசாத் காந்தி ராமன், போடாஸ் சமர்பித்தஆய்வுக்கட்டுரை நீக்கப்படவேண்டும் என்றும்மாநாட்டின் அந்த ஆய்வு அமர்வே ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இணையதளத்தில் மனு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:நாங்கள் அறிவியலாளர் சமூகம் என்றமுறையில் அறிவியல் கல்வியில் இது போன்றபோலியான அறிவியல் உள்ளேநுழைப்பதுகுறித்து மிகுந்த அளவில் கவலை கொள்கிறோம். 
இதன் பின்புலத்தில் அரசியல் கட்சிகளும் உள்ளன.
 போலியான அறிவியல் பேச்சுக்களுக்கு அறிவியல் மேடையை கொடுப்பது என்பதுபோலியான அறிவியல்பிரச்சாரர்கள் கடந்த காலத்தில் மேற்கொண்டதைப்போல கடுமையான தாக்குதல் தொடுப்பதை விட மோசமானதாகும்.
இதைப் பார்த்துக் கொண்டு அறிவியலாளர்கள் அமைதியாக இருந்தால் நாம் அறிவியலுக்கு மட்டுன்றி நமது குழந்தைகளுக்கும் துரோகம் இழைத்தவ்ர்களாவோம். 
இநத ஆய்வுத் தாளானது ரத்து செய்யப்பட வேண்டும், அந்த அமர்வும் நீக்கப்பட வேண்டும். 
இவ்வாறுஅந்த மனுவில் கூறியுள்ளார்.இது குறித்து வரலாற்றுப் பேராசிரியர் இப்ரான் ஹபீப் இந்தியர்கள்தான் அனைத்தையும் கண்டுபிடித்தவர்கள் என்று கூறுவதே நமது வரலாற்றை மறைத்து அதன் உண்மையான பெருமைகளை சிதைத்து அதை அவமதிப்பதாகும் என்று கன்டனம் தெரிவித்துள்ளார்

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

"திடீர் வரலாற்று மேதை"

வரலாற்று ஆய்வாளர்களின் வேதனைக்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரும், முதன்மையானவரும், நம் இந்தியப் பிரதமரும் "திடீர் வரலாற்று மேதையுமான  மோடி" என்பதே மேலும் கவலைக்குரியதாய் உள்ளது.
 25.10.2014 அன்று மும்பையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையைத் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, அறிவியலுக்கு முரணான, நகைப்புக்குரிய சில செய்திகளைப் பேசியுள்ளார். 

மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கர்ணன் பாத்திரம், அன்றே ஜெனடிக் அறிவியல் வளர்ந்துள்ளது என்பதற்கான சாட்சி என்றும், இந்துக்கள் வணங்கும் விநாயகர் உருவம், அன்றே பிளாஸ்டிக் சர்ஜரி இந்தியாவில் இருந்துள்ளது என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் உரையாற்றி உள்ளார். யாரோ ஒரு மருத்துவர் யானையின் தலையையும், மனித உடலையும் ஒன்று சேர்த்து விநாயகர் உருவத்தை ஒட்டு அறுவை சிகிச்சை முறையில் உருவாக்கி உள்ளார் என்னும் 'தன் அரிய கண்டுபிடிப்பினை' அவர் அங்கு வெளியிட்டுள்ளார்.

எதிரில் அவர் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த திறன் வாய்ந்த மருத்துவர்கள் எவரும் இன்றுவரை வாயைத் திறக்கவே இல்லை. அதிகாரத்திற்கு முன் அறிவு எவ்வளவு பணிந்து செல்கிறது என்பதற்கு இதனைத் தாண்டிய எடுத்துக்காட்டு வேறு எதுவும் தேவை இல்லை.

மோடியின் கூற்று, அறிவியலை மட்டும் இழிவு படுத்தவில்லை. 
அவர் நம்புகிற இந்து மதத்தையும் சேர்த்தே இழிவு படுத்தியுள்ளது. எது எதற்கோ ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் நடத்தும், சங் பரிவாரங்கள் இதற்குத்தான் முதலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்க வேண்டும். விநாயகர்தான் (கடவுள்) உலகைப் படைத்தார் என்று நம்பும் இந்துக்களின் நம்பிக்கையை எல்லாம் தகர்த்துத் தவிடு பொடியாக்கி, விநாயகரையே ஒரு மருத்துவர்தான் படைத்தார் என்று சொல்ல எவ்வளவு துணிச்சல் வேண்டும்! 

விநாயகரின் உருவத்தை, ஒரு கடவுள் மறுப்பாளர் கூட இப்படிக் கேலி செய்ததில்லை.

மோடியின் உரையை 01.11.2014 ஆம் நாள் தி இந்து ஆங்கில நாளேட்டில் கரன் தாப்பர் கண்டித்து எழுதியிருந்தார். 
மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை (சயிண்டிபிக் டெம்பர்) வளர்க்க வேண்டும் என்று கூறும் இந்திய அரசமைப்புச் சட்ட விதிக்கே பிரதமர் எதிராக நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாற்றியிருந்தார்.

பிரதமர் மோடி அது குறித்தெல்லாம் கவலை கொள்வதாகத் தெரியவில்லை. ஏற்கனவே பல வரலாற்றுப் பிழையான செய்திகளை பல மேடைகளில் அவர் கூறியுள்ளார். 
தேர்தலுக்கு முன்பு, 2013 நவம்பரில் பாட்னாவில் பேசும்போது, அலெக்சாண்டர் பீகாரில், கங்கைக் கரையோரத்தில்தான் இறுதியாக மாண்டு போனார் என்று ஒரு செய்தியைக் கூறினார். 
மாசிடோனியாவின் மாமன்னன் அலெக்சாண்டர் கி.மு.323இல், பாபிலோனில் இறந்தார் என்றுதான் உலகம் இதுவரையில் படித்திருக்கிறது. புதிய சரித்திரத்தை மோடி இப்போது எழுதுகின்றார். 
ஒரு வேளை, அவர் அன்று கேரளாவில் பேசியிருந்தால், அலெக்சாண்டர் ஆலப்புழையில் செத்துப் போயிருப்பார்.

நேருவை எப்போதும் குறை கூறிக் கொண்டிருக்கும் அவர், பட்டேலின் இறுதி ஊர்வலத்தில் கூட நேரு கலந்து கொள்ளவில்லை என்று ஒரு நேர்காணலில் கூறினார். 

அது உண்மைக்கு மாறானது என்பதை எடுத்துக் காட்டிய பிறகு, தன் பிழையை ஏற்றுக் கொண்டார். 
அண்மையில், தமிழ்நாட்டில் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டவர் வ.உ.சி. என்று கூறித் தமிழக மக்களையே வியப்பில் ஆழ்த்தினார்.

'தவறுதலாகச் சொல்லிவிட்டார். 
ஆனைக்கும் அடி சறுக்குவதில்லையா?' என்று அவர் கட்சியினர் கேட்டனர். ஆனைக்கு அடி சறுக்கலாம்தான்,.
 ஆனாலும் அடிக்கடி சறுக்கக் கூடாது. 
அப்படிச் சறுக்கினால் அது ஆனையாக இருக்க முடியாது!

மோடி என்பவர் ஒரு குறியீடுதான். அவருக்குப் பின்னால் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எப்படி ஆட்டுவிக்கிறதோ அப்படி ஆடுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என்பதே உண்மை. 
இப்போதும் ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த தலைவர்களில் ஒருவரான தீன நாத் பத்ராவின் குரலைத்தான் மோடி எதிரொலிக்கிறார் என்பது உலகறிந்த செய்தி.

தீன நாத் பத்ரா, சர்வ சிக்ஷா பச்சோவா அந்தோலன் சமிதி என்னும் அமைப்பின் நிறுவனர். இந்துத்துவா சார்பில் அடிக்கடி நீதிமன்றம் சென்று கருத்துரிமைக்கு எதிராக வாதிடுபவர்.

 வைணவ ஆய்வாளர் ஏ .கே. ராமானுஜம் எழுதிய 'பல ராமாயணங்கள்' என்னும் ஆய்வு நூலைத் தில்லிப் பலகலைக் கழகத்தில் பாடமாக வைக்கக் கூடாது என்று கூறித் தடுத்தவர். 
பென்குவின் நிறுவனம் வெளியிட்ட, அமெரிக்கப் பேராசிரியர் வெண்டி டோனிகர் எழுதிய, 'இந்துக்கள் - ஒரு மாற்று வரலாறு" என்னும் நூலைத் தடை செய்யக் கோரியவர். 
எல்லாவற்றையும் தாண்டி, குஜராத் பள்ளிகளில் பாட நூல்களில், விநாயகரின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பற்றி எழுதியுள்ளவரும் இவரே. அந்த நூலுக்கு, அன்று குஜராத்தின் முதல்வராக இருந்த மோடி ஒரு சிறிய அணிந்துரையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
 ஆகவே, உள்ளே இருப்பவர் தீன நாத் பத்ரா. 
வெளியில் தெரிபவர் மோடி. இதுவும் ஒருவிதமான பிளாஸ்டிக் சர்ஜரிதானோ என்னவோ!

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும் இந்த முயற்சிகளை இந்துத்துவ பாசிச சக்தியினர் மேற்கொண்டனர். 
ரிக் வேதத்தின் காலம் கி.மு.1500 என்னும் உண்மையை மாற்றி, கி.மு.5000 என்று எழுத முயன்றனர்.
 புகழ் பெற்ற ஹரப்பா நகரத்தின் பெயரை சரஸ்வதி சிந்து என மாற்ற முயன்றனர். 
சிந்துவெளி நாகரிகத்தையே மறைத்து, சரஸ்வதி நாகரிகம் என்று இல்லாத ஒன்றைக் கொண்டுவர முயன்றனர்.
 ஆரியர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான் என்று புதிய பொய்யைப் பாட நூல்களில் சேர்க்க விரும்பினர்.

இந்திய விடுதலைப் போரில், சாவர்க்கரைத் தவிர ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த எவரும் பங்கு கொள்ளவில்லை என்பதே வரலாறு. ஆனால் விடுதலை இயக்கங்களில் ஆர்.எஸ்.எஸ்.சும் ஒன்று என்பது போன்ற ஒரு படிமத்தை ஏற்படுத்த எண்ணினர்.
 1947ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஏடான சுவதேஷ் ஏட்டில் முக்கியப் பங்காற்றிய, பா.ஜ.க.வின் சார்பில் மாநிலங்களவை உறுபினராக 1999 இல் நியமிக்கப்பட்ட நானாஜி தேஷ்முக்கே இதனை மறுக்கின்றார். 

ஆர்.எஸ்.எஸ் விடுதலைப் போரில் பங்கேற்கவில்லை என்று அவர் குறிப்பிடுகின்றார். 
ஆனாலும் வரலாற்றுத் திரிபுகளை அவர்கள் கை விடுவதாக இல்லை.

காந்தியாரைப் போலக் கோட்சேயும் தேசபக்தர் என்று கூறத் தொடங்கியிருக்கும் இந்த்துத்துவாவினர், காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட அதே ஜனவரி 30அன்று, நாடெங்கும் கோட்சேக்குச் சிலைகளை வைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

அந்தச் சிலைகளைத் திறந்துவைக்க,சென்ற தேர்தலில் பா.ஜ.க.வை ஆதரித்த, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மனியனைக் கூட அவர்கள் அழைக்க வாய்ப்புண்டு!

அடடே...பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு!
                                                                                                                                                               - சுப.வீரபாண்டியன்
=======================================================================  
படுக்கையிலும் அலைபேசியா?

அது ஆபத்து!


.

ஸ்மார்ட்போன் சிலருக்கு ஆறாவது விரல்...

 சில மணித் துளிகள் கூட அதைப் பிரிந்திருக்க முடியாது 
அவர்களால். எது இருக்கிறதோ, இல்லையோ, பக்கத்தில் போன் இருந்தாக வேண்டும். 
53 சதவிகிதம் பேர் தூங்க செல்லும் போது கூட ஸ்மார்ட் போனை விட்டுப் பிரிவதில்லை என்கிறது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை.
 இதனால் அடுத்தவருடன் பேசுவதைக்கூட குறைத்துக் கொள்கிறார்களாம். இதில் 5 சதவிகிதம் பேர் போன் கையில் இருப்பதால் முழுமையாகத் தூங்குவதே இல்லையாம். 
யாருக்காவது குறுஞ் செய்தி அனுப்பியே, தங்களது இரவைக் கழிப்பவர்கள் 2 சதவிகிதமாம். 

ஸ்மார்ட்போனில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளியானது மெலட்டோனின் என்னும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது. 
தூக்கத்துக்கு மெலட்டோனின் ஹார்மோன் இன்றியமையாதது. மெலட்டோனின் இரவில்தான் சுரந்து தூக்கத்தை வரவழைக்கும். ஸ்மார்ட்போனில் இருக்கும் எல்இடி லைட் நீல நிற ஒளியை அதிக அளவில் வெளிப்படுத்தி உடலுக்கு பகல் போல காண்பித்து ஏமாற்றிவிடுகிறது. இதனால் உடலின் தூக்க சுழற்சி பாதிப்படைகிறது. 
உறக்கம் அவர்களை விட்டு மெதுவாக நழுவும். 

இந்த செயல்பாடு தொடர்ந்தால் ‘இன்சோம்னியா’ என்னும் தூக்கமின்மை நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. 
ஸ்மார்ட்போன், லேப்டாப், எல்இடி டி.வி. போன்றவற்றைப் படுக்கையறையில் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் எச்சரித்து இருக்கிறது அந்த ஆய்வு. 
ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற சாதனங்களை படுக்கையில் வைத்துக்கொள்வதால் வேறு சில பயங்கர விளைவுகளையும் தவிர்க்க முடிவதில்லை.
எல்இடி லைட் வெளிச்சம் உங்களது கண்களில் உள்ள ரெட்டினாவை பாதிப்பதால் பார்வைக் குறைபாடு ஏற்படும். 
மெலட்டோனின் ஹார்மோன் அளவு குறைவதால் தூக்கம் கெடுவது மட்டுமல்ல... 
பெண்களுக்கு மார்பகம், சினைப்பை புற்றுநோயும், 
ஆண்களுக்கு விந்துப்பை புற்றுநோயும் வரும் அபாயத்தையும் ஏற்படுத்தும்.

லெப்டின் என்னும் வேதிப்பொருள் சுரப்பதும் குறைகிறது.
 உணவு சாப்பிட்ட பிறகு திருப்தி உணர்வை ஏற்படுத்துவது இதன் வேலை. இது குறைவதால் பசி உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.
 அதிகம் சாப்பிடத் தூண்டி, பருமன் நோய்க்கு வழி வகுக்கும். சரியான நேரத்துக்கு உணவுகளை எடுத்துக் கொள்ளத் தவறுவதால் நீரிழிவு தாக்கும் அபாயம் அதிகரிக்கும். 


சுரன்
கோட்சேக்கு சிலை.  காந்தி [பெயரு]க்கு பீர்.?



வியாழன், 1 ஜனவரி, 2015

2ஜி ஊழல்.

 இரட்டை நாக்கு ஊடகங்கள் .

                                                                                                                                 -- வினவு கட்டுரை
முன்பு தாங்கள் சொன்னவற்றுக்கு, நடந்து கொண்டதற்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல், அதனைத் தமாஷாகப் பார்க்க வேண்டும் என அத்துவிட்டுப் பேசுவதற்கு எத்துணை கொழுப்பு இருக்க வேண்டும்! இப்படிபட்ட இரட்டை நாக்கு கொண்ட பார்ப்பனக் கும்பல், தம்மை தார்மீகப் பொறுப்பின் காவலனாகச் சித்திரித்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்வதுதான் உண்மையிலேயே தமாஷானது.
ஆட்சியைப் பிடித்த பிறகு ஊழல், கருப்புப் பணம் என்பனவற்றையெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமுமில்லை. கார்ப்பரேட் முதலாளி வர்க்கமும் அதனை விரும்பப் போவதில்லை என்பதால்தான் சோவும், சேகர் குப்தாவும் அவை குறித்து புதிய பொழிப்புரையை எழுதுகிறார்கள். ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கவந்த மாவீரனைப் போலக் காட்டப்பட்ட மோடியும், அவரது பரிவாரங்களும் அடிப்படையிலேயே நாணயமற்றவர்கள்; இரட்டை நாக்குப் பேர்வழிகள் என்பதுதான் இந்தப் பொழிப்புரையிலிருந்து ஓட்டுப்போட்ட பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டிய விடயமாகும்..
கருப்புப் பண விவகாரத்தில் மோடி அரசு அடித்த பல்டியை முட்டுக் கொடுக்க முன்வந்த துக்ளக் சோ, “இவ்விவகாரத்தில் முந்தைய காங்கிரசு அரசு கூறியதையெல்லாம் நம்பாமல், அக்கட்சிக்கு நாம் அநீதி இழைத்துவிட்டதாக”த் தனது ஏட்டில் தலையங்கமே எழுதி முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். இதேபோல நரேந்திர மோடியின் ஊதுகுழல்களுள் ஒன்றான இந்தியா டுடே இதழ், 2ஜி, நிலக்கரி ஊழல்களையும், கருப்புப் பண விவகாரத்தையும் ஆர்வக்கோளாறின் காரணமாக ஊடகங்கள் ஊதிப்பெருக்கிவிட்டதாகக் குறிப்பிட்டு கட்டுரையொன்றை வெளியிட்டிருக்கிறது. பார்ப்பன-பாசிச கும்பல் தனது சுயநலனுக்காக எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசும் தன்மையும் வரலாறும் கொண்டது என்பதற்கு இவை மற்றுமொரு ஆதாரமாக அமைந்துவிட்டன.
காங்கிரசு தலைமையில் நடந்துவந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கே.ஜி. எண்ணெய் வயல் முறைகேடு, ஏர்-இந்தியா ஊழல், டெல்லி விமான நிலைய ஊழல், 2ஜி முறைகேடு, நிலக்கரி வயல் முறைகேடு உள்ளிட்டுப் பல முறைகேடுகளும் ஊழல்களும் நடந்திருந்தபோதும், பார்ப்பன ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலும் 2ஜி அலைக்கற்றை முறைகேடை மட்டுமே உள்நோக்கத்தோடு உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டன. அலைக்கற்றை ஊழலை தி.மு.க.வைத் தாக்கித் தனிமைப்படுத்துவதற்குக் கிடைத்த ஆயுதமாகக் கண்ட அக்கும்பல், இதனை மற்ற ஊழல்களைவிடப் பிரம்மாண்டமானதாக ஊதிப் பெருக்கியது. அதனாலேயே, சி.ஏ.ஜி. அறிக்கையில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பு குறித்து மூன்றுவிதமான மதிப்பீடுகள் சொல்லப்பட்டிருந்தாலும், 1.76 இலட்சம் கோடி ரூபாயை முன்வைத்துப் பிரச்சாரம் நடத்தியது.
மன்மோகன் சிங்கின் பரிசுத்த பிம்பத்தை உடைப்பதற்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளைக் கையில் எடுத்துக் கொண்ட பா.ஜ.க., இந்த ஒதுக்கீடு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என மைய ஊழல் கண்காணிப்பு கமிஷனரிடம் புகார் கொடுத்தது. மேலும், மன்மோகன் சிங் அரசு பதவி விலக வேண்டும் என்றும் கோரி, தொடர்ந்து 13 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை முடக்கியது.
2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்ட அத்வானி, கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து இரத யாத்திரை நடத்தினார். அத்தேர்தல் சமயத்தில் பா.ஜ.க. சார்பாக அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழு, இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்து அறிக்கையொன்றை தயாரித்து வெளியிட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தல்களின்பொழுது கருப்புப் பணத்தை மீட்கும் கதாநாயகனாக மோடி முன்னிறுத்தப்பட்டார். ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பாகவும் அவரும் பா.ஜ.க.வும் அடித்த பஞ்ச் டயலாக்குகள், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களைக்கூட கூச வைத்தன.
பா.ஜ.க. மற்றும் மோடியின் இந்த ஊழல் எதிர்ப்பு, கருப்புப் பண மீட்பு சவடால்களெல்லாம் ஓட்டுப் பொறுக்கும் சுயநல உள்நோக்கத்திற்கு அப்பாற்பட்டு, வேறு எதையும் சாதிக்காது எனப் புரட்சியாளர்களும் ஜனநாயக சக்திகளும் அம்பலப்படுத்தினாலும், மோடிக்காக கார்ப்பரேட் ஊடகங்கள் முனைந்து நடத்திய மிருகத்தனமான பிரச்சாரத்தின் மூலம் இவையெல்லாம் அமுக்கப்பட்டன.
எனினும், கார்ப்பரேட் ஊடகங்களால் மோடிக்குப் பூசப்பட்ட அரிதாரமெல்லாம் ஆறே மாதங்களில் கலைந்துபோனது. கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசே கேலிபேசும் அளவிற்கு மோடி கும்பல் படுகேவலமான பல்டி அடித்திருக்கிறது. நிலக்கரிச் சுரங்க விவகாரமோ விநோதமான முடிவை எட்டிவிட்டது. வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட சுரங்கங்களையும் உள்ளிட்டு 214 சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த மறுநிமிடமே, அச்சுரங்கங்களை உடனடியாக மறுஏலம் நடத்தித் தனியாருக்கு கைமாற்றிவிடுவதற்கு ஏதுவாகப் புதிய சட்டமொன்றையே இயற்றிவிட்டது, மோடி அரசு. பா.ஜ.க. மட்டுமல்ல, 2ஜி, சுரங்க வயல் ஒதுக்கீடுகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைக் கிழிகிழியென கிழித்துவந்த ஊடகங்களும் தட்டைத் திருப்பிப் போட்டு தட்டத் தொடங்கிவிட்டன.
அன்னா ஹசாரே தலைமையில் நடத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைத் தயாரித்து வழங்கியதில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு இணையான பங்கு கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கும் உண்டு. அந்த நாடகத்திற்கு மிகப்பெரும் விளம்பரத்தை அளித்த ஊடகங்களுள் ஒன்றான இந்தியா டுடே குழுமம், காங்கிரசு ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை ஆர்வக்கோளாறு காரணமாக ஊடகங்கள் மிகைப்படுத்திவிட்டதாக இப்பொழுது ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது. 
ஆர்.எஸ்.எஸ்.-இன் அதிகாரபூர்வமற்ற பத்திரிகையாகச் செயல்பட்டுவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியரும், இந்தியா டுடே குழுமத்தின் துணைத் தலைவருமான சேகர் குப்தா இந்த ஊழல்களை தற்பொழுது இப்படி மதிப்பீடு செய்கிறார்:
“2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.ஏ.ஜி. ரூ.57,000 கோடி முதல் ரூ.1.76 இலட்சம் கோடி வரை பல்வேறு எண்ணிக்கையை, ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பாகக் குறிப்பிட்டபோது, எல்லோரும் அதிகபட்ச தொகையைத் தேர்வு செய்தனர். மீடியா இதிலிருந்து கொஞ்சம் விடுபடத் தொடங்கிவிட்டது.” (இந்தியாடுடே, நவ.12)
ஆ.ராசா பதவி விலகிய பிறகு நடந்த அலைக்கற்றை ஏலங்களின் மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானமே, மீடியாக்கள் அலைக்கற்றை ஊழல் குறித்து உருவாக்கி வைத்திருந்த 1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற அனுமான பூதத்தை அடித்து நொறுக்கிவிட்டது. ஆனாலும், ஊடகங்கள் தங்களது குட்டு உடைந்து போனதை கமுக்கமாக மூடிமறைத்ததோடு, 2ஜி ஒதுக்கீடில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டதைப் போலவே நாடாளுமன்றத் தேர்தல்கள் முடியும் வரை பிரச்சாரம் செய்துவிட்டு, இப்பொழுது யோக்கியவானைப் போல, “2007-ல் ரூ.1.76 இலட்சம் கோடி என்பது ஜிடிபியில் 4.4 சதவீதம். சிறிய அளவு ஸ்பெக்ட்ரம்மின் மதிப்பு இந்த அளவுக்கு இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்” என எழுதுகின்றன.
இந்தியா டுடேயின் இந்த திடீர் ஞானோதயம் 2ஜி-யோடு மட்டும் நின்றுவிடவில்லை. நிலக்கரியும் நல்ல உதாரணம். “2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டிகள் மற்றும் இதர விசயங்களில் நடந்தது போல நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும் ஐ.மு.கூ. அரசில் ஊழல் இருந்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு ஒதுக்கீடும் முறைகேடானதா? மீண்டும் கொஞ்சம் பூஜ்யங்களைச் சேர்த்துக் கொள்வதால் என்ன தப்பு என்பது போல சி.ஏ.ஜி. சொன்ன சில இலட்சம் கோடி தொகை கற்பனையானதா? 
தே.ஜ.கூ., குறிப்பாக பா.ஜ.க. அதிகபட்ச தொகையைத் தேர்வு செய்தது. இதன் விளைவாக, நிலக்கரி வயல் ஒதுக்கீடு வழக்கில் 1993 முதல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படுவதைச் செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தது” என பிலாக்கணம் பாடுகிறார், சேகர் குப்தா.(இந்தியா டுடே, நவ.12)
இப்போது அந்தக் காரணங்களில் சிலவற்றை பா.ஜ.க. அரசும் கூறுகிறபோது – இன்றைய சூழ்நிலையில் நமக்கு அந்தக் காரணங்களை ஏற்கத் தோன்றுகிறது. காங்கிரஸ் சரியாக விளக்காததாலோ, விவரங்கள் சரியாக வெளியாகாததாலோ, காங்கிரஸ் கூறுகிற எதுவுமே நிஜமாக இருக்காது என்ற நமது சந்தேகத்தினாலோ – அன்று காங்கிரஸ் கூறிய காரணங்களை நாம் நிராகரித்தோம். அந்தப் பட்டியலில் காங்கிரஸுக்கு வேண்டியவர்கள் – காங்கிரஸ்காரர்களேகூட – இருக்கலாம்; ஆனால் அதனுடன் கூடவே அயல்நாட்டு ஒப்பந்தங்கள் என்ற சிக்கலும் இருந்திருக்கிறது. அதைக் காங்கிரஸ் கூறுகிற நொண்டிச் சாக்காக நினைத்து ஒதுக்கியது நமது தவறு; நம்மால் காங்கிரஸுக்கும், அன்றைய மத்திய அரசுக்கும் இழைக்கப்பட்ட அநீதி அது.”
(துக்ளக், 12.11.2014)
“காங்கிரசு சரியாக விளக்கவில்லையாம், விவரங்கள் சரியாக வெளியாகவில்லையாம்” – ராமஸ்வாமி அய்யர் எப்படியெல்லாம் நாக்கூசாமல் பொய் சொல்கிறார் பாருங்கள். கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசுக்கு இழைக்கப்பட்ட அநீதி கிடக்கட்டும். இதில் மக்களுக்குச் சாத்தப்பட்ட பட்டை நாமத்தைப் பற்றியல்லவா யோக்கியவான் சோ ராமஸ்வாமி பேசியிருக்க வேண்டும்; மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். மாறாக, கருப்புப் பண விவகாரத்தில் இரட்டை வரி விதிப்பு போன்ற நடைமுறை ‘சிக்கல்கள் ’ இருப்பது இப்பொழுதுதான் தெரியவந்தது போல நடிக்கிறார்கள்.
முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய்தான், 2ஜி விவகாரம் குறித்து பேட்டிகள் அளித்து, அதனை பா.ஜ.க.விற்கும் ஊடகங்களுக்கும் பெருந்தீனியாகக் கொடுத்தார். இதற்குக் கைமாறாக பா.ஜ.க.வும் ஊடகங்களும் விநோத் ராயை ஊழலை ஒழிக்க வந்த ஹீரோவாகத் தூக்கி வைத்துக் கொண்டாடின. அப்படிபட்ட ஊடக வெளிச்சத்தில் மிதந்த விநோத் ராய், “தணிக்கை துறை பல முறைகேடுகள் குறித்து அறிக்கை அளித்திருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள்தான் திட்டமிட்ட நோக்கத்தோடு ஒன்றிரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு பெரிதுபடுத்துகின்றன” என சம்பந்தமில்லாத மூன்றாவது நபர் போல இப்பொழுது 2ஜி குறித்து கருத்துத் தெரிவிக்கிறார். (என்.டி.டிவி பேட்டி)
நிதியமைச்சர் நாற்காலியைப் பிடித்துவிட்ட அருண் ஜேட்லி, “கணக்கு தணிக்கை அதிகாரிகள் கணக்குகளை மட்டுமே தணிக்கை செய்ய வேண்டும். அவை பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளிவர வேண்டும் என்பதற்கு முயற்சிக்கக் கூடாது” என இப்பொழுது எச்சரிக்கிறார். (துக்ளக், 19.11.2014)
இந்தப் பித்தலாட்டத்தனங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நாம் ஆட்சிக்கு வந்தால் இந்தப் பிரச்சினையில் என்ன அணுகுமுறையைக் கையாள்வோம் என யோசித்துவைத்துக் கொண்டா ஒரு எதிர்க்கட்சி செயல்படுகிறது. இது எல்லா ஜனநாயக நாடுகளிலும் நடக்கிற தமாஷ்தான்” எனப் பதில் அளிக்கிறார், துக்ளக் சோ. (துக்ளக், 19.11.2014)
“அரசியலில் ஓரளவு மிகைப்படுத்தலை, அதிலும் குறிப்பாக தேர்தல் நேரத்தில் இந்தச் செயலை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இவை நினைத்துப் பார்க்க முடியாத அளவை அடையும்போதுதான் சிக்கல் வருகிறது” எனத் தந்திரமாக எழுதி, ஊடகங்களையும் பா.ஜ.க.வையும் விடுவிக்க முயலுகிறார், சேகர் குப்தா. (இந்தியா டுடே, நவ.12)

                                                                                           நன்றி:
  -- வினவு
============================================================================================================================


நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...