bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 30 ஆகஸ்ட், 2014

காப்பீடை காப்போம்.



சுரன்28082014

மோடியின் மத்திய அரசு தனது முதல் வரவு-செலவு அறிக்கையிலேயே காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக அதிகரிப்போம் என பராக்..பராக்..என அறிவித்து விட்டது.
இந்த அறிவிப்பு பல்வேறுஎச்சரிக்கைகளை, இந்திய நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும், அரசியலுக்கும் குறிப்பாக பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.க்கும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
இந்திய நாட்டின்,அனைத்து மாநிலங் களிலும்,மக்கள் பெரும்பாலானோர் தங்களது கடின உழைப்பால் சேமிக்கப்பட்ட நிதியை, போலி நிதி நிறுவனங்கள், சீட்டு கம்பெனிகள் என போட்டு ஏமாறுவது வாடிக்கையாகிவிட்டது. 
அண்மையில் இந்த வகையில் மேற்கு வங்கத்தின் சாரதா சிட் ஃபண்ட் கம்பெனியில் பணம் செலுத்தியமக்கள், முதலீடு செய்த பணம் கூட திரும்பக்கிடைக் காமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள். இந்த கம்பெனியின் தலைமை நிர்வாகி,நிறுவன அதிபர் சுதிப்தா சென் எத்தனை வருடங்கள் ஆனாலும் சிறையில் இருக்கிறேன். 
ஆனால் பணம் மட்டும் திருப்பித்தர இயலாது என்கிறார். அவரது தொலைக்காட்சி ஊடகத்தை தனது அடாவடி அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வெற்றிபெற்றது மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ்.
திருடனுக்கு தேள் கொட்டியது போல வெளியேதெரியாமல் சமாளித்தாலும் அதன் எம்.பி.க்கள் வரிசையாக சிறைக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். இதில் குணால் கோஷ் முந்திக்கொண்டார்.
சதாப்தி ராய்,மிதுன் சக்கரவர்த்தி போன்ற சின்னத்திரை, பெரிய திரை பிரபலங்கள் இந்த கம்பெனியின் பிராண்ட் அம்பாசடர்கள். இவர்கள் எல்லாம் இப்போது திரிணாமுல் அரசியல் பிரபலங்கள். 
சிறைக்கு போகும்வரை மம்தாவை ஆஹா, ஒஹோ என்று வர்ணித்த இந்த மோசடி அரசியல்வாதிகள் உள்ளே போனதும் மம்தாவுக்காகத்தானே இப்படி ஈடுபட்டோம் என வசை பாடுகிறார்கள். 
இந்த போலி சீட்டுக் கம்பெனியின் விளம்பரத்தில் மயங்கி பணம் சேமித்து இன்று நடுத்தெருவில் புலம்புபவர்கள் மேற்கு வங்க மக்கள் மட்டுமல்ல, பீகார், அசாம், ஒரிசா, திரிபுரா, ஜார்க்கண்ட் என வங்க மொழி தெரிந்தவர்கள்தான் இந்த மாய வலைக்குள் விழுந்து விட்டார்கள். அவர்களில் சிலர் ஏமாற்றம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டனர்.
இதுபோல் தமிழ் நாட்டிலும், பல மாநிலங்களிலும் கார் கம்பெனிகள், கோழிப் பண்ணைகள் என விளம்பரத்தை நம்பி மோசடி போனவர்களும் இருக்கிறார்கள். 
இவர்கள் மேலும் மேலும் வசதியாக வாழமுயற்சி செய்யும், நுகர்வு கலாச்சார அடிமைகளான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இது உலகமயம் கற்றுக்கொடுத்த நாகரீகம். இது தவிர அன்றாடம் வேலை செய்து தன் வருங்காலத்திற்காக, மகள், மகன், கல்வி, திருமணம் இவைகளுக்காக சேமித்து அதை குட்டி சீட்டு கம்பெனிகளில் போட்டு கையை பிசைந்து கொண்டிருப்போர் கூலித்தொழிலாளர்கள்.இவர்களுக்கு இந்த சமூகத்தில் கல்வி, மருத்துவம்,வேலை வாய்ப்பு,வீடு, திருமணம் எல்லாமே அரசால் உத்தரவாதம் செய்யப்படாததால், வை ராஜா வை என பணம் போட்டு பணம் எடுக்கும் மோடிமஸ்தான் வித்தைகளில் இறங்கி பார்க்கின்றனர்.
2003-ல் எல்.ஐ.சி.யில்.உருவாகிய லிகாய் என்ற அகில இந்திய முகவர்கள் சங்கம்,தனது 35-அம்ச கோரிக்கைகளுக்காகவும்,இன்சூரன்ஸ் துறையில் 26சதவீத அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்தும் மிகப்பெரிய போராட்டங்களை தொடர்ந்து நடத்தியது.
2006-ல் அப்போதைய சி.ஐ.டி.யு.வின் அகில இந்திய தலைவர் தோழர் எம்.கே.பாந்தேவின் ஆலோசனைப்படி, பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் பங்கேற்ற நாடாளுமன்ற தர்ணா நடைபெற்றது. எல்.ஐ.சி.சரித்திரத்திலேயே முகவர்கள் நாடு முழுவதும் திரண்டு நடத்திய முதல் நாடாளுமன்ற போராட்டமாக பதிவு செய்யப்பட்டது. இன்சூரன்ஸ் துறை 2012-13-ல் 6.32 சதவீதம் இறங்கு முகத்தை சந்தித்தது.எல்.ஐ.சியும் முதல் பிரிமியத்தில் அதே அளவு சரிந்தாலும், மொத்த பாலிசிகள் எண்ணிக்கையில் 2.88 சதவீதம் அதிகரிக்க முடிந்தது. 
ஆனாலும் மற்ற தனியார் நிறுவனங்கள் போல் வீழ்ச்சியடையாமல் காப்பாற்றப்பட்டது. இன்சூரன்ஸ் சந்தையில் எல்.ஐ.சியின் பங்கு பாலிசிகள் எண்ணிக்கையில் 2010-ல் 73.02 சதவீதத்திலிருந்து 2012-மார்ச்சில் 80.90 சதவீதமாக உயர்ந்தது. மேலும் 2013-ல் 83.24 சதவீதமாக அதிகரித்தது.அதேபோல் முதல் வருட பிரிமியத்தை 2010-ல் 64.86 சதவீதத்தை 2012-13-ல் 71 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். 
எல்.ஐ.சி.2012-13-ல் 1.70 கோடி பாலிசிதாரர்களுக்கு முதிர்வுத்தொகையையும், வாழ்வுகாலப் பயனையும் வழங்கியுள்ளது.
இதன் மதிப்பு 49,642 கோடி ரூபாய். மேலும்7.26 லட்சம், இறப்பு உரிமங்களுக்காக ரூ.6,360 கோடி வழங்கியுள்ளது.கொடுக்கப்பட வேண்டிய முதிர்வு கேட்புரிமம் வெறும்0.49 சதவீதமும் இறப்பு உரிமம் 1.05 சதவீதமும்தான் உள்ளது. இது உலக அளவிலேயே எந்த கொம்பனும் எட்டிப்பிடிக்க முடியாத சேவை. 
எல்.ஐ.சி. சரித்திரத்திலேயே கடந்த 11 வருடங்களில் மிகப்பெரிய சாதனை இது.மேலும் ஐந்து கோடி அரசு முதலீட்டில் 1956-ல் மக்கள் நலனில் அக்கறையுடன் மக்கள் வரிப்பணத்தால் ஆரம்பிக்கப்பட்ட எல்.ஐ.சி. இன்று பதினைந்து லட்சம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பாகவும், அதே அளவு வாழ்வாதார நிதியாக வும் ஆலமரமாய் வளர்ந்து, தொடர்ந்து இந்திய நாட்டின் கட்டுமான வளர்ச்சிக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை வழங்கி வருகிறது.
உலகம் முழுவதும் வலம் வந்த அமெரிக்கன் இண்டர்நேசனல் குரூப் என்ற ஏ.ஐ.ஜி போண்டியாகி தெருவில் நிற்கும் நேரத்தில், இந்திய இன்சூரன்ஸ் சந்தை அவர்களை வாழவைக்கவே திறந்து விடப்படுகிறது.
நம் நாடு உலக அளவில் இரண்டாவது மக்கள் தொகையும்,அதிக வர்த்தக வாய்ப்புக்களை கொண்ட தாகவும் உள்ளதுதான்.60 சதவீத மக்கள் இளைய தலைமுறையினராய் உள்ளனர். 
2020-ல் இந்திய மக்கள் தொகையில் 42.7 சதவீதம்பேர் முப்பது வயதுக்குக்குறைந்தவர்களாயிருப்பார்கள். இந்த நிலை இன்சூரன்ஸ் வர்த்தகத்திற்கு மிகவும் சாதகமாக இருக்கும்.மேலும் இந்த மசோதா தாக்கலானால் எல்.ஐ.சி. “கம்பெனி சட்டத்திற்கு” உள்ளாக்கப்பட்டு அதன் பங்குகளும் சந்தைக்கு வரும்.
இதற்காகவே சென்ற நாடாளுமன்ற தொடரில் “2013 கம்பெனி சட்டம்”என்ற பெயரில் திருத்தம் செய்து தயாராக வைத்துள்ளனர். இந்த சட்டப்படி எல்.ஐ.சி,.கம்பெனி சட்டத்திற்குள் வந்துவிட்டால் அதன் பங்குகளை போட்டிபோட்டு இந்நாட்டு மற்றும் வெளிநாட்டு கம்பெனிகள் வாங்கிவிட்டால்.எல்.ஐ.சி.யின் தனித்தன்மையான பொதுத்துறை நிறுவனம் என்ற அந்தஸ்தும் போய்விடும்.
சுரன்28082014
பி.எஸ்.என்.எல்.லில் என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலை எல்.ஐ.சி.க்கும் ஏற்பட்டு செயலிழக்கவைத்துவிடும். 
கடந்த நான்கு ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல். என்ற பொதுத்துறை சேவை நிறுவனம் பெரிய நட்டத்தில் இயங்குவதை இங்கு நினைவு கூறவேண்டும். 26சதவீத அந்நிய முதலீட்டுடன் வந்த கம்பெனிகள் இன்சூரன்ஸ் சந்தையில் முதன் முதலாக பங்கு மார்க்கெட்(ULIP POLICIES) பாலிசிகளை அறிமுகப்படுத்தி, எல்.ஐ.சி.யின்.சந்தை பங்கை 50சதவீதத்திற்கும் கீழே குறைத்த போதும்,முகவர்கள் அயராது பாடுபட்டு இன்று 70 சதவீதம் வரை சந்தை பங்கை உயர்த்தியுள்ளார்கள்.
எல்.ஐ.சி.யை.பொருத்தவரை இங்கு முகவர்கள்தான் சர்வீஸ் செக்டார். முகவர்கள் சிஸ்டம் வெற்றிகரமாக செயல்படுவது இந்தியாவில் மட்டுமே. உலகத்திற்கே முன் மாதிரியானது.
இந்திய இன்சூரன்ஸ் வாங்குபவர்கள் நிர்ணயிப்பது விற்பவர்கள் நிர்ணயிப்பது அல்ல. முகவர்கள் செயலிழக்க நேரிட்டால் எல்.ஐ.சி.யின்,கதி என்னவென்று கற்பனைசெய்துகூட பார்க்க முடியாது.கடந்த 57 ஆண்டுகளாக சிறிது சிறிதாக மக்களின்சேமிப்பில் வளர்ந்து, முகவர்கள் மற்றும் ஊழியர்களின், வேர்வையாலும், ரத்தத்தாலும் நிலை நிறுத்தப்பட்ட எல்ஐசியின் சந்தை, அந்நிய மற்றும் இந்திய கார்ப்பரேட்டுகளால் அரிக்கப்பட்டு நிலைகுலையும். இந்திய நாட்டின் பொருளாதாரமே சீர்குலையும்.
 இதைத்தான் இந்திய ஆளும் மோடி அரசு விரும்புகிறது.முன்பு காங்கிரசு அரசும் விரும்பியது.
                                                                                                                            சோ.சுத்தானந்தம்
                                                                                                                                                    லிகாய் அமைப்பின்பொதுச் செயலாளர்.
சுரன்28082014

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காப்பவருக்கு காப்பீடு?

மும்பை வடாலாவில் ஜி.எஸ்.பி. சேவா மண்டல் சார்பில் விநாயகர் சிலைக்கு
 ரூ.260 கோடி அளவில் காப்பீடு செய்துள்ளது. விநாயகர் சிலை மற்றும் 
சிலைக்கு அணிவிப்பதற்காக பக்தர்களால் அளிக்கப்படும் தங்க ஆபரணங்கள் 
ஆகியவற்றை தீ விபத்து, தீவிரவாதம் மற்றும் கலவரங்களிலிருந்து காக்கும் 

வகையில் காப்பீடு செய்துள்ளதாக ஜி.எஸ்.பி. சேவா மண்டல் கூறுகிறது.
ரூ.22 கோடி மதிப்பில் தங்கம்
சுரன்28082014
மும்பை மாநகரிலேயே பணக்கார
 அமைப்பாக உள்ள ஜி.எஸ்.பி. மண்டல்
 ரூ.259 கோடிக்கு காப்பீடு பெற்றுள்ளது. 
கிங் சர்க்கிள் பகுதியில்
 அமைக்கப்பட்டுள்ள கணபதி சிலையை 5 
நாள்கள் பூஜை செய்வதற்காக
 வைத்திருப்ப தற்காக  நாளொன்றுக்கு
 ரூ.51.7 கோடி மதிப்பில் காப்பீடு 
செய்யப்பட்டுள்ளது.  சிலை மட்டும் ரூ.22 
கோடி மதிப்பில் தங்கம் இதுவரை
 செலவாகி உள்ளதாம்.
காப்பீடு தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு
 செய்யப்பட்டுள்ளது. மும்பை மாகரி 
லேயே மற்ற மண்டல்களை விட அதிக 
மதிப்புள்ள மண்ட லாக வடாலாவில் அமைக்கப்பட்டு உள்ளது. மும்பை
 மாநகரில் பிரபலமான லால்பக்ச ராஜா ரூ.51 கோடிக்கு காப்பீடு
 செய்யப்பட்டுள்ளது. அதையும்கூட மிஞ்சிவிட்டது வடாலா ஜிஎஸ்பி மண்டல்
. தீவிபத்து, தீவிரவாதத் தாக்குதல் மற்றும் கலவரங்களிலிருந்தும் 
காக்கும்வகையில்  ஜி.எஸ்.பி. யின் காப்பீடுமூலம் சிலை, தங்கம், மண்டபம்
 காப்பீடு உள்ளடக்கி உள்ளது. முதல் நாளில் தொடங்கும் காப்பீடு விழா
 முடிந்ததுமே முடியாது. அமைப்பைச் சேர்ந்தவர்கள் விழா கடைசி நாளில்
 சிலையின் தங்க ஆப ரணங்களை பாதுகாப்பாக வங்கியின் பாதுகாப்புப் 
பெட்டகத்துக்குள் வைப் பதுவரை காப்பீடு இருக் கும். முதல் நாளில் தொடங்கி
 சிலை நகைக்கடைகளி லிருந்து வரும் தங்க ஆபரணங்களைக்கொண்டு 
 சிலையை தண்ணீரில் மூழ் கடிக்கும் வரையிலும் அலங் காரங்கள்
 செய்யப்படும். தண்ணீரில் மூழ்கடிப்பதற்கு சற்றுமுன்பாக சிலையிலிருந்து 
தங்க ஆபரணங்கள் அகற் றப்பட்டு, அடுத்த ஆண்டுக்கு பாதுகாப்பாக 
வைக்கப்படும்.
மண்டலுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.258.9 கோடி
ஜி.எஸ்.பி.மண்டல் மூத்த அறக்கட்டளை உறுப்பினரான சத்தீஷ் நாயக்
 கூறும்போது, தேசிய மயமான காப்பீடு நிறுவனங்கள்மட்டும்
 பங்கேற்பதற்கான ஒப்பந்தப் புள்ளியைக் கோரினோம். காப்பீட்டுத்துறையில்
 உள்ள தனியாரை உள்ளேக் கொண்டுவரவில்லை. காப்பீட்டுத்
 தவணைத்தொகையை வெளியிடவில்லை. ஆனாலும், காப்பீட்டுக்கான
 பிரீமியத் தொகை மட்டும் இலட்சங்களில் இருக்கும். மண்டலுக்கான
  காப்பீட்டுத் தொகை ரூ.258.9 கோடியாக அமைக்கப்பட்டுள்ளது என்
று கூறினார்.
லால்பக்சா ராஜா மண்டல் ரூ. 51 கோடி காப்பீட்டுத் தொகைக்கு தவணைத் 
தொகையாக(பிரீமியம்) ரூ. 12 இலட்சத்தை செலுத்தியுள்ளது. அதன்படி
 பார்க்கும்போது, ஜிஎஸ்பி மண்டல் காப்பீட்டுத் தவணைத் தொகை (பிரீமியம்)
 குறைந்தபட்சம் ரூ.50 இலட்சத்தையாவது செலுத்த வேண்டியிருக்கும் என்று 
கருதப்படுகிறது.
தவணைத்தொகை ரூ.இரண்டரை இலட்சத்துக்கும்மேல்...
காப்பீட்டு நிறுவனத்தின் மூத்த மேலாளர் ஒருவர் கூறுகையில், சாதாரண
 பாலிசியைப் போன்று மண்டல் காப்பீட்டுப் பிரீமியித்தை கணக்கிட
 முடியாது.  சாதாரண மாக காப்பீட்டுத்தொகை ரூ.இரண்டு கோடி என்றால்
, அதற்கானத்  தவணைத்தொகை ரூ.இரண்டரை இலட் சத்துக்கும் மேல்
 இருக்கும். ஆனால், மண்டல் காப்பீடு செயல்பாடு வேறு விதமானது. அவர்கள்
 காப்பீடு செய் துள்ளதானது தீ விபத்து, தீவிரவாத செயல்கள் போன்ற 
வற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே, ரூ. 259 கோடி காப்பீட்டுக்கு அரை
 கோடியைத் தாண்டியே தவணைத் தொகை இருக்கும். ஆனாலும், இது
 யூகத்தின் அடிப் படையிலான வேலையே ஆகும்.
சுரன்28082014
தூணிலும் துரும்பிலும் இருந்தவர் இப்போது தேங்காயிலும் 

தேங்காய் ஒப்பந்தப்புள்ளி
ஜிஎஸ்பி மண்டல் சார்பில் 1.75 
இலட்சம் 
எண்ணிக்கை யில் தேங்காய்கள்

 பெறுவதற்காக
 ஒப்பந்தப்புள்ளியைக் கோரி 
உள்ளது. இறுதியாக ரூ.31.5
 இலட்சத்துக்கு முடி வானது. 
அதன்படி, 
தேங்காய் ஒன்றின் விலை ரூ.18-
லிருந்து ரூ.20 ஆக இருக்கும்.
5 இலட்சத்தில் தங்க மலர்
ஜிஎஸ்பி மண்டல் 150 கிராம் எடை 
அளவுள்ள தங்க மலர் ரூபாய் 5 இலட்சம்
 மதிப்பில் கொடையாகப் பெற் றுள்ளது
 என்று அதன் அறக்கட்டளை சார்பில்
 தெரிவிக் கப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுரன்28082014

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...