bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 29 டிசம்பர், 2012



கமல் நடித்து, தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘விஸ்வரூபம்’. இப்படத்திற்கு ரூ.95 கோடி வரை செலவிட்டுள்ளனர். அடுத்த மாதம் ஜனவரி 11-ந் தேதி இப்படம் ரிலீசாகிறது. இப்படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக டி.டி.எச்.சில் ஒளிபரப்பப்படும் என கமல் முன்பே தெரிவித்திருந்தார்.

இதற்கு தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். டி.டி.எச்.சில் ஒளிபரப்பினால் தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிடமாட்டோம் என எச்சரித்தனர். கமல் இதற்கு விளக்கம் அளித்தும் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
எனினும், டி.டி.எச்.சில் ‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிடுவதில் தீவிரமாக இருந்தார். இந்நிலையில், விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 10-ந் தேதி டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று கமல் வெளியிட்டார்.
இன்று சென்னை ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடைபெற்ற ‘விஸ்வரூபம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்று, கமல் கூறியதாவது, விஸ்வரூபம் வரும் ஜனவரி 10-ந் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தியா முழுவதும் டி.டி.எச்.சில் வெளியிடப்படுகிறது. சன் டைரக்ட், டிஷ் டிவி, ஏர்டெல், வீடியோகான், ரிலையன்ஸ்  ஆகிய டி.டி.எச்.களில் 155-வது சேனலில் இப்படத்தை கண்டுகளிக்கலாம். இதற்கு முன்பணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்.
விஸ்வரூபம் படத்தை, டி.டி.எச்., முறையில் ஒளிபரப்புவது குறித்து,
suran
  சென்னையில் அவர் அளித்த பேட்டி: 
'ஏர்டெல்,சண் , ரிலையன்ஸ், வீடியோகான், டிஷ் டிவி உள்ளிட்ட, ஐந்து டி.டி.எச்., நிறுவனங்கள், விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்புகின்றன.
டி.டி.எச்., மூலம் திரைப்படத்தை வெளியிடும் இந்த புதிய முயற்சி, நம் மாநிலத்திற்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் புதிய பரிமாணத்தை திரையுலகில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்படத்தை, ஜன., 10ம் தேதி இரவு, 9:30 மணிக்கு, ஏர்டெல் உள்ளிட்ட, ஐந்து டி.டி.எச்., நிறுவனங்கள் ஒளிபரப்புகின்றன. இதற்கான, முன்பதிவு கட்டணம், 1,000 ரூபாய். ஜன., 8ம் தேதி வரை, முன்பதிவு நடக்கும். 8ம் தேதிக்குள் முன்பதிவு செய்யாவிட்டால், அடுத்த, இரண்டு நாட்களில், 1,200 ரூபாய் கட்டணத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
எங்கள் இந்த முயற்சியை, தவறாக பயன்படுத்த நினைப்பவர்கள், போலீசில் சிக்கிக்கொள்வர். தமிழகம் முழுவதும், இப்படத்தை, 450 தியேட்டர்களில், திரையிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், 390 தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கமல் கூறினார். ஏர்டெல் நிறுவனத்தின், செயல் அதிகாரிகள் சசிஅரோரா, விகாஷ்சிங், விஸ்வரூபம் கதாநாயகி பூஜா ஆகியோர், பேட்டியின் போது, உடனிருந்தனர்.

கமலின் இந்த முடிவுக்கு இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கேயார் போன்றோர் ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டே லீடர்

பயத்தில் பதுங்குகிறது? 

சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க நான்கு ஆண்டுகளுக்க முன்பு கொல்லப்பட்ட பிறகு, அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த அந்த பத்திரிக்கை அவர் வகுத்த பாதையில் இருந்து விலகுவதாக விமர்சகர்கள் குறை கூறுகின்றனர்.
சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
suran
இலங்கையில் ஊடகச் சுதந்திரம் மோசமான நிலையில் இருப்பதை இது வெளிக்காட்டியது. ஆனால் நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் அக்கொலை வழக்கு முற்றுப் பெறாமல் இருக்கிறது.
லசந்தாவின் கொலைக்குப் பிறகு – அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் வழக்கத்தைக் கொண்ட சண்டே லீடர்- அதிகாரவர்கத்தை மீறி தனது பயணத்தை தொடர்ந்தது. கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் இருந்த சண்டே லீடர் ஜீலை மாதத்தில் உயர் இடத்தில் தொடர்புகளைக் கொண்ட ஒரு வர்த்தகரால் வாங்கப்பட்டது.
புதிய முதலாளி;
 புதிய பாதை?
புதிய முதலாளியின் அரசியல் போக்கை அனுசரித்துப் போக மறுத்ததால் தனது பதவி பறிக்கப்பட்டதாக இப்பத்திரிகையின் அப்போதைய ஆசிரியர் பிரட்ரிகா ஜான்ஸ் செப்டம்பர் மாதம் புகார் தெரிவித்தார். தனது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுருத்தல்கள் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.
தற்போது புதிய ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு வெளியிடப்பட்ட சில செய்திகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. வெளிப்படையான பத்தி எழுத்தாளர்கள் சிலரும் பத்திரிக்கையில் இருந்து விலகிச் சென்றுவிட்டனர். எனவே சண்டே லீடர் தனது தனித்துவத்தை இழந்துவிட்டாதா என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.
லசந்தாவால் 1994 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சண்டே லீடர் கொழும்பின் புறநகர் பகுதியான ரத்மலானவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தின் லிப்டுக்கு மேலே லசந்தாவின் சிறிய புகைப் படம் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மாலை சார்த்தப்பட்டுள்ளது. அலுவலகத்தின் உள்ளே அவரின் பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. இப்பத்திரிகை பல முறை தாக்குதலுக்குள்ளானதை நினைவுபடுத்தும் செய்திகள் – பிரேம் போட்டு மாட்டப்பட்டுள்ளன. 1995 மற்றும் 1998, 2005, 2007 ஆகிய ஆண்டுகளில் லசந்த உடல்ரீதியாக தாக்கப்பட்டார்.
1998 ஆம் ஆண்டில் சிஐடி போலீசாரால் லசந்தா விசாரிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டிலும் 2006 ஆம் ஆண்டிலும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் பலமுறை தாக்கப்பட்டும் தாக்குதலில் சம்மந்தப்பட்ட யாருமே இதுவரை தண்டிக்கப்படவில்லை.
சர்ச்சைக்குரிய மன்னிப்புகள்
இந்நிலையில் இப்பத்திரிகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அது மீண்டும் வெளியிடப்பட்டது. அதாவது பத்திரிகை பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும் என்கிறார் புதிய ஆசிரியர் சகுந்தலா பெரிரா. அரசாங்கத்தை தொடர்ந்து தாம் விமர்சிப்போம் என்றும், கொள்கைகள் மாறியதாகவோ ஆசிரியர்பீட நிலைப்பாடு மாறியதாகவோ பொருள்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறுகிறார்.
தேசிய ரக்பி யூனியனுக்குத் தலைவராக இருக்கும் அசங்க சேனவிரட்னே தற்போது இந்த பத்திரிக்கையின் 72சத பங்குகளை வைத்துள்ளார். ஜனாதிபதியின் மகனை தேசிய ரக்பி அணியின் தலைவராக இவர் நியமித்துள்ளார். சண்டே லீடரின் மீதமுள்ள 28 சதவீத பங்குகள் லசந்தாவின் சகோதரர் லால் வசமுள்ளது.
செனிவிரட்னே செய்தித் தெரிவில் தலையிடுவதில்லை என்றும் நிர்வாக மாற்றத்தினால் பத்திரிகையின் கடும்போக்கு நிலைக்கு பங்கம் வரவில்லை என்றும் சகுந்தலா பெரிரா தெரிவிக்கிறார். தலைமை நீதிபதிக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தில் அரசின் நகர்வுகளை தாம் விமர்சித்ததையும், கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் 27 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாம் எடுத்த நிலையையும் சுட்டிக் காட்டும் சகுந்தலா பெரிரா – பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்போம் என்கிறார்.
சிறை வன்முறையை அடுத்து நடந்த தேடல் வேட்டையின் போது சிலர் பிடித்து வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக உறவினர்களை மேற்கொள்காட்டி சண்டே லீடர் செய்தி வெளியிட்டிருந்தது. யாழில் நிலவும் நிலை குறித்து பிற ஊடகங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையில் சண்டே லீடர் இது குறித்து விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது.
ஆள்போர் ஆதரவு நிலை?
அதே நேரம் பல விடயங்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட பலரிடம் சண்டே லீடர் மன்னிப்பும் கோரியுள்ளது. இது விமர்சகர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கடந்த ஜூலை மாதம் பிரட்ரிகா ஜான்ஸ், அரச விமான சேவை பாதுகாப்பு செயலருக்கு தனிப்பட்ட உதவியை செய்ததாக ஒரு செய்தி வெளியிட்டார். இது தொடர்பாக அவர் பாதுகாப்பு செயலருடன் பேசிய போது, கோத்தாபய ராஜபக்ஷ அசிங்கமான வார்த்தைகளை உபயோகப்படுத்தியதோடு – மக்கள் உன்னைக் கொன்று விடுவார்கள் என்று எச்சரித்த்தாகவும் சண்டே லீடர் செய்தி வெளியிட்டிருந்தது. இக் கட்டுரை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இப்படி செய்வது மிகவும் அவமானம் என்று குமுறும் பிரட்ரிகா ஜான்ஸ் – அரசியல் அதிகாரத்தில் இருப்போரை சமாதானப்படுத்த ஊடக விதிகள் மீறப்பட்டு “ஊடக விபச்சாரம்” செய்யப்படுவதாக கூறுகிறார். ஆள்போரின் காலில் விழுந்து கிடப்பதாகவும் அவர் சாடுகிறார்.
லசந்தா உருவாக்கியது அழிக்கப்பட்டு புதைக்கப்படுவதாகவும், புதிய நிர்வாகத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரேட்டிகா ஜான்ஸ் கூறுகிறார்.
லசந்தாவின் மனைவி சோனாலி சமரசிங்கே தற்போது அமெரிக்காவில் வாழ்கிறார். சண்டே லீடர் திரும்பப் பெற்றுள்ள கட்டுரைகளில், ரிசர்வ் வங்கி ஆளுநரைத் தொடர்பு படுத்தி இவர் எழுதிய ஒரு கட்டுரையும் அடங்கும். உண்மையான விபரங்கள் அடிப்படையில் அக்கட்டுரை எழுதப்பட்டதாகக் கூறும் சோனாலி அக்கட்டுரை திரும்பப் பெறப்பட்டது முன்னேற்றத்தைக் காட்டவில்ல என்கிறார். கடந்த காலங்களில் சட்டரீதியான எதிர் நடவடிக்கைகளுக்குப் பயந்து எவ்வித விடயங்களையும் விட்டு அது ஒதுங்கவில்லை என்றும் சோனாலி கூறுகிறார். கோத்தாபய ராஜபக்சேவிடம் மன்னிப்பு கோரும் முடிவை தான் எடுக்கவில்லை என்று கூறும் பத்திகையின் புதிய ஆசிரியர் பிறவிடயங்கள் குறித்து கருத்துக் கூற மருத்து விட்டார்.
விமர்சன கட்டுரையாளர்கள்
அதே நேரம் விமர்சனக்கட்டுரைகள் எழுதுவோர் மத்தியலும் அதிருப்தி எழுந்துள்ளது. ராஜபக்ஷக்கள் தொடர்பான தனது கட்டுரை தணிக்கை செய்யப்பட்ட்தால் கோபமடைந்த திஸ்ரானி குணசேகரா, கடந்த மாதம் முதல் திடீரென கட்டுரைகள் எழுதுவதை நிறுத்திவிட்டார். எமது ராஜ குடும்பம் குறித்து மோசமான கருத்துக்களை கூற இனியும் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்கிறார் திஸ்ரானி.
லசந்த கொலைக்கு நியாயம் கேட்கும் ஊடகவியலாளர்கள்
இந்த விடயம் குறித்து வருத்தம் வெளியிடும் சாகுந்தலா பெரிரா மீண்டும் திஸ்ரானி குணசேகர பங்களிப்பை வழங்கவேண்டும் என்கிறார். ஆனால் பத்திரிகையின் அதிபரான அசங்க செனிவிரட்னே, நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஜானாதிபதி என்பவர் ஜனாதிபதி. அவர் நமக்கு நமது நாட்டை மீளக் கொடுத்தவர். யார் என்ன சொன்னாலும் நான் வாழ்நாள் முழுவதும் அவரை அதற்காகவே மதிப்பேன் என்று ஒரு சஞ்சிகையில் எழுதியுள்ளார். பிரட்ரிகா ஜான்ஸை விலகிச் செல்லுமாறு தான் சொல்லவில்லை என்று கூறும் அவர், அதே நேரம் அவரின் நடவடிக்கைகளை நம்புவது தனக்கு கடினமாக இருந்ததால் – பத்திரிகையில் என்ன நடக்கிறது என்பதை தான் பார்க்கவேண்டியிருந்தது என்கிறார்.
பொருளாதார ரீதியாக சண்டே லீடர் மோசமான நிலையில் இருக்கிறது. அதற்கு விளம்பரங்களைக் கொடுக்கக் கூடாது என்று அரசு அழுத்தம் கொடுக்கிறது. இப்பத்திரக்கைக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த ஒரு வழக்கில் பாதுகாப்புச் செயலர் வெற்றிபெற்றுள்ளார். அவர் தொடுத்துள்ள மேலும் இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒட்டு மொத்தமாக 15 வழக்குகள் சண்டே லீடருக்கு எதிராகப் போடப்பட்டுள்ளன.
இது மற்ற பத்திரிக்கைகளைப் போன்றதொரு பத்திரிகை அல்ல என்று மக்கள் நம்புகின்றனர் அந்த நம்பிக்கையை நாம் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் சகுந்தலா பெரைரா. ஆனால் புதிய நிர்வாகம் புதியபாதையில் செல்லும் என்றே சோனாலி சமரசிங்கே கணிக்கிறார். பெருமளவிலான சுய தணிக்கை இடம்பெறும் இலங்கை ஊடக சூழலில் ஆள்போரிடம் உண்மையைக் கூறுவதை தமது கடமை என்றே தானும் தனது கணவர் லசந்தாவும் கருதியதாக அவர் கூறுகிறார். இந்த மரபு தொடருமா என்ற கேள்விதான் தற்போது முன்நிற்கிறது.

பி.பி.சி  தமிழோசையில் இருந்து மறு பதிவு 

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

சமுதாய மாறுதலுக்கு உதவிய புரட்சி இலக்கியங்கள்,

கே.முத்தையா
புரட்சிக் கலை - இலக்கியம் என்றவுட னேயே மருட்சிகொள்ளுவோர் பலர் உண்டு.

புரட்சி என்ற சொல் சமுதாய மாறுதலைக் குறிக்கிறது. மக்கள் முன்னேற்றத்துக்கு குறுக்கே நிற்கும் ஒரு சமுதாய அமைப்பினை நிராகரித்து விட்டு, மக்கள் முன்னேற்றத்திற்கு துணைபுரியும் புதியதொரு அமைப்பை உருவாக்குவதே புரட்சி. இத்தகைய சமுதாய மாறுதலுக்கு உதவிய கலை-இலக்கியமே நாம் குறிப்பிடும் புரட்சிக் கலை இலக்கியம்.

சென்ற நூறாண்டு காலத்திய கலை, இலக் கியங்களை எடுத்துக்கொள்வோம். அவற்றில் மிகச் சிறந்தவையாக திகழ்பவை யாவை? மக்க ளால் போற்றப்படுபவை யாவை? வெறும் மதக் கருத்துகளைப் பரப்பிய கலை -இலக்கியங் களா? அன்று கடவுளை துதித்த கலை - இலக் கியங்களா? அவைகள் பழைய பாணியிலே நின் றவை. மக்கள் உள்ளத்திலே ஒரு புதிய எழுச் சியை ஏற்படுத்திவிடவில்லை. மாறாக, பண்டைய நிலப்பிரபுத்துவ ஜாதிய எண்ணங்களைச் சாடி, சமத்துவ நீதிகளைப் போதித்த இராமலிங்க வள்ள லாருக்கும் கோபாலகிருஷ்ண பாரதிக்கும் அன்று பெரும் வரவேற்புக் கிடைத்தது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி இந்நாட்டில் ஏற்பட்டபின், புதிய வர்க்க உறவு முறைகள் தோன்றின. ஏகாதிபத்தியச் சுரண்டலில் நிலப் பிரபுத்துவ சமுதாயமும் நமது சிறு கைத்தொழில் களும் சீரழிந்து சின்னாபின்னமாயின. பழைய அமைப்பு சிதைந்தபோதிலும் மக்களுக்கான புதிய அமைப்புத் தோன்றவில்லை. அக்காலத் தில் நாட்டு விடுதலை இயக்கம் எதுவும் தோன்ற வில்லை.

மக்களிடையே குமுறிக்கொண்டிருந்த எண் ணங்களையும், முன்னேற்ற வேட்கையையும் பிரதிபலித்த ஒரு சில சீர்திருத்தவாதிகள், கலை ஞர்கள், எழுத்தாளர்கள் தோன்றினர். வங்காளத் தில் ஈஸ்வரசந்திர வித்யாசாகர், பாஞ்சாலத்தில் லாலாகங்காராம், தெலுங்கு நாட்டிலே வீரேச லிங்கம் பந்துலு போன்றோர் தோன்றி சமூக சீர் திருத்தக் கருத்துக்களைப் போதித்தனர். அதே போல் தமிழ்நாட்டில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஜி.சுப்ரமண்ய ஐயர் போன்றோர் பண்டைய மூடப் பழக்க வழக்கங்களைச் சாடினர். இவர்களுக் கெல்லாம் முன்பே வள்ளலார்,


“ நால்வருண ஆச்சிரமம்

ஆசாரம் முதலாம்,

நவின்றகலைச் சரிதமெலாம்

பிள்ளை விளையாட்டே”

என்று முழங்கினார்.

வட்டிமேல் வட்டிகொள்

மார்க்கத்தில் நின்றீர்

வட்டியை வளர்க்கின்ற,

மார்க்கத்தை அறியீர்

பெட்டிமேல் பெட்டி வைத்து

ஆள்கின்றீர் வயிற்றுப்

பெட்டியை நிரப்பிக்கொண்டு

ஒட்டி உள்ளி நந்தீர்

பட்டினி கிடப்பாரை

பார்க்கவும் நேரீர்

பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்”

என முழங்கி அன்றைய சமுதாய வாழ்வில் சீர்குலைந்து நின்ற மக்களின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார் வள்ளலார்.

“கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக!

அருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க!”

என்றார். வரப்போகும் மக்களின் சீர்திருத்த விடுதலை இயக்கத்தின் முதல் குரலாக ஒலித் தார் வள்ளலார்.

தேசிய விடுதலை இயக்கமும் தோன்றியது. அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் கிளர்ந் தெழுந்தனர். இந்தக் காலத்தில் தோன்றிய இலக் கியங்களெல்லாம், கலைகளெல்லாம் ஆதிக்க வர்க்கமான ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மகத் தான கலை இலக்கியங்களாகும்.

பண்டைய வைதீக எண்ணங்களை சாடி, நாட்டு மக்களின் விடுதலை இயக்கத்திற்கு ஊக் கமளித்த தாகூரின் படையல்கள், பக்கிம் சந்தி ரரின் நாவல்கள், இக்பாலின் பாடல்கள், பாரதி யின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாமக் கல் கவிஞரின் பாடல்கள், கல்கியின் எழுத் தோவியங்கள் ஆகியவை ஒரு சில உதாரணங்கள்.

மதங்களையும், சாமிகளையும் போற்றிய கலை-இலக்கியங்களுக்கோ, பண்டைய பிற் போக்கு நியதிகளை நியாயப்படுத்திய புராணங் களுக்கோ இக்காலத்தில் பெரும் ஆதரவு கிடைக்கவில்லை. மாறாக, மக்களின் தேவை களைப் பூர்த்தி செய்த, விடுதலை இயக்கத்தை பிரதிபலித்த மறுமலர்ச்சி இயக்கங்களுக்கு மகத் தான ஆதரவு கிடைத்தது. அவைகளே இன்று ஒப்பற்ற இலக்கியங்களாகத் திகழ்கின்றன. கார ணமென்ன? இந்த இலக்கியங்களுக்கோர் குறிக் கோள் உண்டு. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குறிக்கோள் அது. ஒடுக்கப்பட்ட இந்திய நாட்டின் சகல வர்க்கங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்த கலை - இலக்கியங்கள் அவை.

சமுதாய வாழ்விற்கு அப்பாற்பட்ட கலை- இலக்கியமென்பதே கிடையாது. இதுதான் வர லாறு. ஒரு நாட்டின் கலைகளும், இலக்கியங் களும், அவை உண்டான காலத்திலிருந்த சமு தாய வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய வர்க்கங் களுக்கோ அல்லது அந்த ஆதிக்க வர்க்கங் களை எதிர்த்துப் புரட்சி செய்து புதிய சமுதாய அமைப்பைக் கண்ட ஒடுக்கப்பட்ட வர்க்கங் களுக்கோ பயன்பட்ட கலைகளாகவே, இலக்கி யங்களாகவே இருந்தன.

ஆதிக்கத்திலிருந்த ஒரு வர்க்கம் தனது ஆதிக்கம் நியாயமானது, புனிதமானது. கடவுளின் சிருஷ்டி என்றெல்லாம் பறைசாற்றுகிறது. அதை நியாயப்படுத்திய கலைகளெல்லாம் அந்த வர்க் கத்திற்குப் பயன்பட்ட கலைகள். உதாரணமாக சென்ற 200 ஆண்டு காலத்தில் நம் நாட்டில் மேலோங்கியிருந்த கலை - இலக்கியங்கள் யாவை? வளர்ந்துவிட்ட முதலாளித்துவ அமைப் பைப் பெற்றிருந்த ஆங்கிலேய நாட்டின் சில நல்ல கலைகளும் இலக்கியங்களும் இங்கு வந்த போதிலும்கூட, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதி களால் நம் மக்கள் மீது திணிக்கப்பட்டு மேலா திக்கம் செலுத்திய கலை-இலக்கியங்கள் பெரும் பாலும் ஏகாதிபத்திய அமைப்பையும் காலனி ஆதிக்கத்தையும் நியாயப்படுத்திய கலை- இலக்கியங்களாலும். அவர்களது மொழியை நம்மீது திணித்தனர். “மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் வாழ்க” என முழங்க வைத்தனர். நம் நாட் டைச் சூரையாடி அடிமைப்படுத்திய கிளைவ் களையும், மிண்டோ பிரபுக்களையும் வெலிங்டன் பிரபுக்களையும் பற்றிப் புகழ்பாடும் எழுத்துக் களை திணித்தனர். ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் புகுந்து மக்களை சுட்டுப்பொசுக்கி ஆதிக்கஞ் செலுத்திய, காலனி ஆதிக்க வெறியர்களை, “மேனாட்டுப் புதிய நாகரிகத்தின் தூதுவர்கள்” என்று துதி பாடிய, கலை-இலக்கியங்களை இங்கு பரப்பினர்.

எனவே, ஆதிக்கம் புரியும் வர்க்கம் தன் ஆட்சியை நியாயப்படுத்த உண்டாக்கிய கலை- இலக்கியங்களெல்லாம் மக்கள் விரோதத் தன்மை கொண்டவை. பிற்போக்கான இவை களை எதிர்த்த கலை - இலக்கியங்கள் முற் போக்கானவை. புரட்சித்தன்மை வாய்ந்தவை.

இந்திய வரலாற்றின் படிப்பினையும் இதுவே. வால்மீகியின் இராமகாதையும், வியாசரின் பார தமும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும் வர்க்க இலக்கியங்களே!
அம்பும் வில்லுமே வாழ்வதற்குப் பயன்பட்ட கருவிகளாகக் கொண்டு, மிருகங்களை மட்டு மல்ல, தங்கள் எதிரிகளையும் நரவேட்டையாடிப் புசித்துக் கூட்டாக காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்த “ஆதிப் பொதுவுடமை சமுதாயத்தினர்” என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படும் ஆதி வாசிகளை எதிர்த்து, முறியடித்து, அடிமைகளாக ஆக்கி, மாடுங் கலப்பையுங்கொண்டு, நிலத்தை உழுது, பண்படுத்தி, அதை உடமையாக்கி, புதிய தொரு நாகரிகத்தை உருவாக்கிய, அடிமை - நிலப்பிரபுத்துவ, சமுதாய அமைப்பை உருவாக் கிய மாபெரும் சமுதாயப் புரட்சியைச் சித்தரிக் கிறது வால்மீகியின் இராமகாதை. சமுதாய வளர்ச்சிக்குக் குறுக்கே நின்ற பண்டைய அமைப்பை ஒழித்துக்கட்டி புதியதொரு அமைப்பை உருவாக்கிய வரலாற்றைக் கூறும் ஒரு இலக்கியம் அது. அது அன்று - இன்றல்ல - மகத்தான ஓர் புரட்சி இலக்கியமாகும்.

அதேபோல், அடிமை நிலப்பிரபுத்துவ சமு தாய அமைப்பிலேயே உடமையின் புனிதத் தன் மையையும் அதில் ஓர் ஒழுங்கு முறையையும், நியதியையும் நிலைநாட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த சமுதாயத் தேவையைப் பூர்த்தி செய்ய இலக்கியமே வியாசரின் பாரதக் கதை. ஒருவருடைய உடமையை மற்றவர் அபகரிக் கக்கூடாது. யார் எந்த வரைமுறையின் அடிப்ப டையில் நிலத்தின் அதிபதியாவது என்ற நியதி களை வகுத்த ஒரு மாபெரும் போராட்டத்தின் இலக்கியமது, வரைமுறையற்ற, கட்டுப்பாடற்ற, காட்டுமிராண்டித்தனமான போக்குகளை (துரி யோதனன்) களைந்தெறிந்து, நிலவுடைமைக்கு புதிய நியதிகளை வகுத்த இலக்கியமது.

அன்றைய நிலையில் அது சமுதாயத்தின் வாழ்வை ஒழுங்குபடுத்த துணைபுரிந்தது. மாறி விட்ட இன்றைய சூழ்நிலைக்கு அது பயன்படுமா?

அழியும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்திற்குள் ளேயே புதிய வர்க்கங்கள் தோன்றுகின்றன. கைத் தொழில்கள் தோன்றுகின்றன. சமுதாயத்தில் இவ் விதம் உற்பத்தியான பொருட்களை பரிவர்த்தனம் செய்துகொள்ளும் தேவை எழுகின்றது. ஒரு ஊரி லிருந்து நெடுந்தூரத்திலுள்ள மற்றொரு ஊருக்கு தாம் உற்பத்தி செய்த பொருட்களை எடுத்துச் சென்று விற்பனை செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இந்தச் சமுதாயக் கடமையை நிறைவேற்றத் தோன்றிய பிரிவினரே வணிகர்கள், இவர்கள் பயமின்றி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்று தம் கடமையை நிறை வேற்ற அவசியம் ஏற்படுகின்றது. ஆனால், அன் றைய நிலப்பிரபுத்துவ அமைப்பின் அதிபதியான மன்னனும், அவனது அரசாங்க அமைப்பும் மேலாதிக்கங்கொண்டவை. எந்த உடமையை யும் அவர்கள் எடுத்துக்கொள்ளலாம். பறித்துக் கொள்ளலாம். எது வேண்டுமானாலும் செய்ய லாம். இதுவே நிலப்பிரபுத்துவ நியதி.
நன்றி:தீக்கதிர்  

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

இன்று உலக புகைப் பட தினம்.


ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.
பக்கம், பக்கம் உருவகப்படுத்தி எழுதும் செய்திகளோ, கட்டுரைகளோ ஏற்படுத்த முடியாத தாக்கத்தை ஒரு புகைப்படம் உணர்த்தும். சோகம், மகிழ்ச்சி, களிப்பு, கொண்டாட்டம், அழகு, குழந்தை, பூ, விலங்குகள், இயற்கைக் காட்சிகள், தடியடி, கலவரம், குண்டு வெடிப்பு, இயற்கைச் சீற்றம் என அனைத்தையும் வாய்பேச முடியாத நபருக்குக்கூட அதன் சாராம்சத்தை ஒரு புகைப்படம் எளிதில் உணர்த்தி விடும்.


புகைப்பட கேமராவுக்கு முன்னோடியாக இரு படப்பெட்டி என்பதுதான் கேமராவாக இருந்தது. கி.மு. 5-ம் நூற்றாண்டில் சீன தத்துவ மேதை மோ ட்டி, ஒரு துளை வழியாக ஓர் இருண்ட பகுதிக்குள் ஒளி கடந்து செல்லும்போது ஒரு தலைகீழ் மற்றும் முகப் படத்தை உருவாக்க முடியும் எனக் குறிப்பிட்டார். எனவே, கேமராவின் செயல்பாட்டைப் பதிவு செய்தவர் இவரே.
இவருக்கு அடுத்தபடியாக பிரிட்டிஷ் விஞ்ஞானி ராபர் பாயில், அவரது உதவியாளர் ராபர்ட் ஹுக் ஆகியோர் இணைந்து 1660-ல் ஒரு சிறிய கேமரா, இரு படப் பெட்டிகளை உருவாக்கினர்.
பின்னர், 1839-ல் கேமரா எனும் புகைப்படக் கருவிகள் உலகச் சந்தைக்கு வந்தன. இதன் வெளிப்பாடாக உலக புகைப்பட நாள் என ஜனவரி 9-ம் தேதியைக் கொண்டாடினர். பின்னர், ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினமாகக் கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1920-ல் பல வகைகளில் கேமராக்கள் தயாரிக்கப்பட்டன.


உலக புகைப்பட தினத்தையொட்டி, சிறந்தப் படத்துக்குப் பரிசுகளை பிரிட்டிஷ் அரசு வழங்கியது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு வகையான கேமராக்கள் வந்தன. மரப்பெட்டியில் கேமரா கருவி பொருத்தி கறுப்புத் துணியால் மூடி புகைப்படம் எடுத்த காலம் மலையேறிப் போச்சு. இப்போது, செல்போன், ஐ-பேட், கையடக்க கணினி என பலவற்றிலும் கேமராக்கள் வந்தாச்சு.
2009-ம் ஆண்டுதான் உலக புகைப்பட தினத்துக்கான அமைப்பு தொடங்கப்பட்டது. முன்பு கேமராவை லேசாக அசைத்தாலோ, கை நடுங்கினாலா, குறிப்பிட்ட அளவுக்கு மேல் திருப்பினாலோ அந்தப் புகைப்படம் சரியாக வராது. இப்போது டிஜிட்டல் கேமராக்கள் வந்துவிட்டதால் கை நடுக்கம் இருந்தாலும் கவலையில்லை. மூதாட்டி கூட கேமரா பொத்தானை லேசாக தொட்டாலே தெளிவான புகைப்படம் கிடைத்துவிடும்.
மேலும், முன்பு பிலிம் ரோல்களை பயன்படுத்தித்தான் புகைப்படம் எடுக்க வேண்டியிருந்தது. இப்போது, அவை தேவையில்லை. மெமரி கார்டுகளே போதுமானது.


இருப்பினும் பழைய காலத்து கேமராக்கள் அருங்காட்சியகத்துக்கான காட்சிப் பொருளாக இருப்பதை மறுக்க முடியாது.
எந்தத் துறையாக இருந்தாலும் இப்போது புகைப்படம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. விளம்பரத்துக்கும், மக்களிடம் தங்களது உற்பத்தியைக் கொண்டு சேர்ப்பதற்கும் புகைப்படம் அவசியமாகிவிட்டது. அதுமட்டுமல்ல ஒரு நாட்டு மக்களின் உணர்வுகளை ஒரே புகைப்படத்தில் எடுத்துக்காட்ட முடியும். தமிழகத்தை மட்டுமல்லாது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சுனாமியின் கோரத் தாண்டவத்தை தமிழகத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒரே படத்தில் பதிவு செய்து காட்டியிருந்தார். இத்தகைய புகைப்படங்களே உலக புகைப்பட தினத்துக்கான தேர்வாக அமைகின்றன. 


சில படங்கள்
-----------------------








சனி, 30 ஜூன், 2012


பொருளாதார வீழ்ச்சியும் மக்கள் எழுச்சியும்!
-க.ராஜ்குமார்
முதலாளித்துவ வளர்ச்சி என்பது அதன் அழிவினை நோக்கி என்றார் காரல் மார்க்ஸ். இன்றைய நிகழ்வுகள் இது உண்மை என்பதையே நமக்கு உணர்த்துகின்றன. 1992-ல் சோவியத் ரஷ்யாவின் சிதைவுக்குப் பிறகு, முதலாளித்துவத்திற்கு மாற்று ஏதும் இல்லை என்று உரத்த குரலில் பலர் கொக் கரித்தனர். முதலாளித்துவமே இறுதி கட்டம்; இதுவே முடிவானது என்றனர். உலகெங்கும் சோசலிசத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த கட்சிகள் கூட தங்களை கம்யூனிஸ்டுகள் அல்லது சோசலிஸ்டுகள் என்று சொல்ல அஞ்சின. கட்சியின் பெயரைக் கூட மாற்றிக் கொள்ள முடிவு செய்தன. இருபது ஆண்டு கள் கடந்த நிலையில் முதலாளித்துவ நாடு களில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி யும், அதிலிருந்து மீள முடியாமல் அவை தடு மாறுவதும் இனி முதலாளித்துவம் நீடித் திருக்க முடியாது என்பதையே நமக்கு உணர்த் துகின்றன. 21ஆம் நூற்றாண்டு என்பது சோச லிச அமைப்பிற்கு உலகை கொண்டு செல்வ தற்கான ஆண்டு என்பதில் ஐயமில்லை. உலகம் முழுவதும் மக்கள் எழுச்சிகொண்டு நடத்தி வரும் போராட்டங்கள் இதை உறுதிப் படுத்துகின்றன.

அமெரிக்காவிற்கு

என்ன நேர்ந்தது?

இன்று சோவியத் ரஷ்யா என்ற அமைப்பு இல்லை. உலகில் உள்ள எந்த ஒரு நாட்டிற் குள்ளும் அமெரிக்க ராணுவம், அனுமதியில்லா மல் அத்துமீறி நுழையலாம். கேட்பாரில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட லாம். பொருளாதாரத் தடை விதிக்கலாம். ஐ.நா. சபையின் தீர்மானத்தை காலில் போட்டு மிதிக்கலாம். தட்டிக் கேட்க ஆள் இல்லாவிட் டால் தம்பி சண்டபிரசங்கன் என்பார்கள். அப்படி ஆட்டம் போடும் அமெரிக்காவிற்கு இப் போது என்ன வந்துவிட்டது.? ‘ஹிலாரி கிளிண்டன் ஏன் உலகம் முழுவதும் பறந்து பறந்து நாடுகளுடன் பொருளாதார நடவடிக் கைகளுக்கான ஒப்பந்தங்களை செய்து வரு கின்றார்? அமெரிக்க அதிபர் சிக்கன நடவ டிக்கை என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து வெளி நாடுகளுக்கு அவுட்சோர்சிங் முறை யில் வேலை தரும் தனது நாட்டிலுள்ள கம் பெனிகளுக்கு வரி விதித்து வருகின்றார். தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்திற்கு மேல் எட்டவில் லையே ஏன்? டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்து விட்டதே. உலகம் முழுவதும் நாடுகள் தங்க ளுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி (செலாக், பிரிக்ஸ் போன்று) வர்த்தகத்திற்கு தங் கெளுக்கென தனி நாணயமுறையை ஏற் படுத்தி வருகின்றனவே அது ஏன்? அமெரிக் காவில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டதே! நாள் தோறும் அந்நாட்டில் உள்ள வங்கிகளில் ஒரு வங்கி மூடப்பட்டு வரு கின்றதே? “வால் ஸ்டிரீட்டை கைப்பற்று வோம்” என்று போராட்டத்தை துவக்கிய அமெ ரிக்க மக்கள் “வாஷிங்டன்னையே கைப் பற்றுவோம்” என்று வீறு கொண்டு எழுந்து போராடுகிறார்களே ஏன்? முதலாளித்துவம் தான் இறுதியானது என்றால் இவர்களுக்கெல் லாம் தீர்வு காண முடியாமல் திணறுவது ஏன்? இந்தியா போன்ற நாடுகளிடம் கையேந்தி நிற்பது ஏன்?

மாற்றம் ஏன்?

உலகம் முழுவதும் முதலாளித்துவ நாடு களில் நடைபெற்று வரும் தேர்தல்களில் இடதுசாரி சக்திகள் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதற்கு என்ன காரணம்?. பிரான்ஸில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்துள் ளனர். கீரிஸ் நாட்டில் இடதுசாரிகள் கை ஓங்கிவருகின்றது. அமெரிக்காவைச் சுற்றி யுள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடது சாரி சிந்தனைகள் ஆழமாக வேரூன்றி வரு கின்றன. வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் நிலச் சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளன. எண்ணெய்க் கிணறுகள் பொதுவுடைமையாக் கப்பட்டுள்ளன. இவையெல்லாம் சோவியத் ரஷ்யா சிதைந்த இருபது ஆண்டுகள் கடந்த பிறகுதானே நடைபெறுகின்றன. போட்டியே இல்லாத நிலையில் ஏன் முதலாளித்துவம் காலாவதியாகி வருகின்றது. தன்னைச் சுற்றி இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட நாடு கள் வளர்ந்துவருவதை ஏகாதிபத்திய அமெரிக் காவால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை.

உலகம் முழுவதும் பொருளாதார பின்ன டவை முதலாளித்துவ நாடுகள் சந்தித்து வரு கின்ற நிலையில் சீனப் பொருளாதாரம் மட்டும் வளர்ந்து வருகின்றதே, அதற்கு என்ன கார ணம். முதல் இடத்தை நோக்கி சீனாவின் வளர்ச்சி இருப்பதை சமீபத்தில் நடந்த ஜி-20 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், முதலாளித்துவம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள மடி பிச்சையேந்தி நிற்கின்றது என் பதுதானே உண்மை.

முதலாளித்துவத்திற்குக் முட்டுக்கொடுக்க முடியுமா?

முதலாளித்துவத்திற்கு இன்று ஏற்பட் டுள்ள இத்தகையப் போக்கைத்தான் காரல் மார்க்சும், ஏங்கெல்சும் முன்னறிந்து நமக்கு தெளிவுபடுத்தினர். முதலாளித்துவம் சுயமாக இயங்கும் தன்மையுடையது. அது பங்கேற் பாளர்களின் விருப்பத்திற்கும் உணர்வுக்கும் அப்பாற்பட்டு தன்னைத்தானே இயக்கிக் கொள்கிறது என்பதே மார்க்சியம். மூலதனத் திரட்சி என்பது முதலாளித்துவத்தின் நெருக் கடியின் உச்சகட்டம் என்றும் முதலாளித் துவம் தனக்குத்தானே சவக்குழியை பறித்துக் கொள்ளும் என்றும் அவர்கள் பகன்றனர். அது தான் இன்றைய முதலாளித்துவத்தின் கதி யாக உள்ளது. 2008-ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிலிருந்து மிக விரைவில் மீளும் என்று சிலர் ஆரூடம் கூறினர். ஆனால் ஆண் டுகள் 4 ஆகியும் முதலாளித்து வீழ்ச்சியி லிருந்து அது மீள முடியாமல் திணறிவருகின் றன. வெறும் தங்கத்தையும் பணத்தையும் கொண்டு பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாத முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை உலகமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சமீபத்தில் மெக்ஸிகோ நாட்டில் நடை பெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில், கடன் சுமையில் சிக்கித் திவாலாகும் நிலையில் உள்ள 17 ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலைமையை சரிப்படுத்த ஐஎம்எப்-க்கு 43 ஆயிரம் கோடி டாலர் நிதி உதவி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. நமது இந்திய நாடு பங்கேற்றுள்ள ‘பிரிக்ஸ்’ அமைப்பு இதற்காக 7500 கோடி டாலர் நிதியுதவி அளிப்பதாக அறி வித்துள்ளது. இதில் இந்தியா மட்டும் 1000 கோடி டாலர் ( இந்திய ரூபாயில் மதிப்பு ரூ.57 ஆயிரம் கோடி ரூபாய்) ஆகும். ‘அம்மாபாடு அவலம் கும்பகோணத்தில் கோதானம்’ என்று சொல்வதைப்போல; ஒரு நேர உணவோடு உறங்கச்செல்லும் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இந்தியா, அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளுக்கு உதவப் போகிறதாம். அது சரி இப்படி சில நாடுகள் உதவுவதன் மூலம் முதலாளித்துவத்திற்கு (நாடுகளுக்கு) ஏற்பட்ட நெருக்கடியை சரிக் கட்ட முடியுமா என்பதுதான் நமது கேள்வி. எந்த அளவிற்கு தூக்கிப் பிடித்தாலும் முதலா ளித்துவத்தின் வீழ்ச்சியை தடுத்த நிறுத்த முடியாது. இன்று உலகம் முழுவதும் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்ற போராட் டங்கள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.

சரித்திரம் திரும்புகிறது

ஜி-20 நாடுகள் எடுத்துள்ள முடிவு ‘பிரெட்டன் உட்ஸ் கோட்பாடுகளுக்கு’ முர ணானது என்பதுதான் வேடிக்கையாகும்.

(பிரெட்டன் உட்ஸ் என்பது ஐ.நா.சபை, உலக வங்கி, பன்னாட்டு நிதி ஆணையம் ஆகிய வற்றை உருவாக்குவதற்காக நடத்திய சிறப்புக் கூட்டத்தின் முடிவுகள் பற்றியதாகும்) ஐஎம் எப்-ம் உலகவங்கியும் மூன்றாம் உலக நாடு களின் (இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடு கள்) நிர்வாகத்தை கண்காணிக்கும் வேலை களுக்காகவும், அத்தகைய நாடுகளுக்கு முத லாளித்துவ நாடுகள் மூலமாக, அந்நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுவது என்ற பெயரில் நிதி மூலதனத்தை அனுமதித்து, அந்நாட்டு அரசு நிர்வாகத்தில் தலையிட்டு, நிபந்தனைகள் விதித்து, அந்நாடுகளின் இறையாண்மையை அழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புக ளாகும். ஆனால் இன்று ஐஎம்எப்-க்கு மூன் றாம் உலக நாடுகள் நிதியுதவி செய்து அதன் மூலம் முதலாளித்துவ நாடுகளின் பொருளா தார நெருக்கடிக்கு முட்டுக்கொடுக்கும் வகை யில், ஜி-20 நாடுகள் நிறைவேற்றிய தீர்மானம் அமைந்துள்ளது. சரித்திரம் திரும்புகிறது என்பதையே இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.

தனது பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மக்களை திசை திருப்ப தனது சொந்த நாட்டி லேயே பொது எதிரியாக ‘பயங்கரவாதத்தை’ முன்னிறுத்திய அமெரிக்கா, ஒசாமா பின்லேட னின் கொலைக்குப் பிறகு, ஆப்கானிஸ் தானில் தொடர்ந்து ராணுவத்தை வைத்து பரா மரிக்க முடியாமல் திணறும் நிலைக்கு வந்த பிறகு, மேலும் மேலும் உலக அரங்கில் அம் பலப்பட்டு வருகின்றது. என்ன காரணத்திற் காக நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டதோ, அதை மீறி அதனை விரிவாக்கம் செய்து, தனக்கு முட்டுக்கொடுக்க அதை பயன்படுத்த அமெ ரிக்கா முயற்சி செய்கிறது. இன்று அதன் கூட் டாளி நாடுகளில் இத்தகைய ராணுவ நட வடிக்கைகளில் தங்கள் நாடு ஈடுபடுவதை மக்கள் விரும்பாமல் கிளர்ந்து எழுந்து போராடு வதும், தங்கள் இராணுவ வீரர்கள் பிறநாட்டில் சென்று செத்து மடிவதை விரும்பாத மக்கள், அவர்களை திரும்பப்பெற வலியுறுத்தியதன் காரணமாக தங்கள் இராணுவ வீரர்களை திரும்ப அழைத்துக்கொள்ளும் போக்கும் அமெ ரிக்காவை அச்சத்தில் ஆழத்தியுள்ளது. தனது கட்டுப்பாட்டில் இருந்து கூட்டாளிகள் வில கிச்செல்வதை செய்வதறியாது அமெரிக்கா பார்த்துவருகிறது.

பிரச்சனைக்கு காரணம் என்ன?

அதி நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக உற்பத்திப்பெருக்கம், அதனால் செல்வக் குவிப்பு ஒரு புறமும் வேலை யின்மை, வறுமை பெருக்கம் என மறுபுறமும் சமூகத்தில் சரிசமமற்ற நிலையை உருவாக்கி வரும் இந்த முதலாளித்துவப் பொருளாதார ஒழுங்கமைப்பு, “இயற்கையான ஒழுங் கமைப்பு அல்ல” “இயற்கை விதிகளுக்கு உட் பட்டதும் இல்லை”. ஆகவே மனிதகுலம் விடு தலை பெற வேண்டுமெனில் இத்தகைய அமைப்பை தூக்கியெறிய வேண்டிய அவ சியம் உலகம் முழுவதும் இன்று ஏற்பட்டுள் ளது. மார்க்சியக் கோட்பாட்டின்படி. முதலாளித் துவ அமைப்பின் இயக்கம் என்பது அதன் இயற்கையான நிகழ்வுப்போக்கிலிருந்து அதன் முடிவை நோக்கி தவிர்க்க முடியாத அதன் இறுதிக் கட்டத்தை நோக்கிச்செல்லும் என்பதே இன்றைய நிகழ்வுகளாக உள்ளன. இருபதாம் நூற்றாண்டு துவக்கம் என்பது உலகம் சோசலிச அமைப்பில் காலடி எடுத்து வைக்கும் நுழைவு வாயில் என்ற எண்ணத் துடன், எழுச்சியுடன் செயல்படுவோம்.

" தீக்கதிர் " -இதழ் பொன் விழா,,,,,,.


ஊடக பூதமும் நம் கை ஆயுதமும்
-சு.பொ.அகத்தியலிங்கம்
“உலகம் உயர்ந்தோர்கள் மாட்டே” என்பார்கள் அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். “உலகம் பிரச்சாரத்தின் மாட்டே” என்பதுதான் உண்மை. ஆகவே தான் நான் ஓயாமல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன் என்றார் பெரியார்.

வெறும் பிரச்சாரம் என்ன விளைவை ஏற்படுத்திவிடப்போகிறது? நடை முறைப்படுத்த அமைப்பு வேண்டாமா? வேண்டும். அவரிடம் அமைப்பும் இருந் தது. பிரச்சாரமும் இருந்தது. இரண்டும் இணைந்தபோது அது ஒரு மாபெரும் சக்தியாக எழுந்தது.

சுயமரியாதைத் தோழர்களின் பிரச் சார வலிமை என்னை வியக்க வைக் கிறது. இப்படியே போனால் அவர்கள் ஆட்சியைப் பிடித்துவிடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், அடுத்து கூறினார்- அவர்கள் சமூகசீர்திருத்தத்தோடு சமத்து வப் பொருளாதாரப் பிரச்சனைகளின் பால் கவனம் செலுத்துவதும் அவசியம் என வலியுறுத்தினார்.
சுரன்


இந்த பிரச்சாரத்தை வலிமைப் படுத்துவதும் ஒழுங்குபடுத்துவதும் ஏடுகளே! ஏடுகள் இல்லாமல் விடு தலைப் போராட்டமும் இல்லை. ஏடுகள் இல்லாமல் திராவிட இயக்கமும் இல் லை. ஏடுகள் இல்லாமல் கம்யூனிஸ்ட் இயக்கமும் இல்லை. தமிழகத்தைப் போல் அரசியல் சார்பு ஏடுகள் வேறெந்த மாநிலத்திலும் இல்லை என்றே சொல்லலாம்.

* தேசிய இயக்க ஏடுகள்

* திராவிட இயக்க ஏடுகள்

* பொதுவுடைமை இயக்க ஏடுகள் என சில வருடங்கள் முன்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் ராஜமாணிக் கம் அறக்கட்டளையும் இணைந்து தொடர் கருத்தரங்குகளை சில வாரங்கள் நடத்தின. ஆம் அவ்வளவு விரிவும் ஆழமும் கொண்ட வரலாறு இந்த ஏடு களுக்கு உண்டு.

அந்த வரலாற்று நெடுஞ்சாலையில் ‘தீக்கதிர்’ என்கிற அக்னிக்குஞ்சு பயணம் புறப்பட்டு ஐம்பதாவது ஆண்டில் நுழைவது சாதாரணச் செய்தியா?

சமுதாய வரலாற்றில் வேண்டு மானால் ஐம்பதாண்டு, நூறாண்டு என்ப தெல்லாம் சிறிய காலகட்டமாக இருக்க லாம்.

தனிமனித வாழ்வில் 75 ஆண்டே பெரிது எனலாம்.
சுரன்


ஐம்பதாண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறி உள்ளன. இன்று ஏடுகள் நடத்துவது சுலபமல்ல. மிகப் பெரிய செலவு கொண்ட நடவடிக்கை. மறு புறம் ஊடகங்கள் ஆதிக்கம் ஊதிப் பெருத்துவிட்டது. பொய்யை மெய் யென்றும் மெய்யை பொய்யென்றும் நம்பவைக்கும் பேராற்றல் கொண்ட பூதமாக அவை எழுந்துள்ளன. ஆகவே இப்போது “ஏடுகள் நடத்துவதும்” “பிரச்சாரம் செய்வதும்” மிக நுட்பமான சவாலான பணி.

இந்தச் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உதயத்தை முன்னறி வித்து, போர்க்களத்தில் ‘பைலட் ஸ்குவாடு’ செல்வதுபோல் முன்சென்ற “தீக்கதிர்” ஐம்பதாண்டில் அடியெடுத்து வைக்கும் அரிய தருணத்தில் இன்றைய சவால்களை சற்று ஆழ்ந்து கவனிப்பது அவசியமாகும்.

மேற்குவங்கத்தில் நிலச்சீர் திருத்தத்தை அமல்நடத்தியதில் மார்க் சிஸ்ட் கட்சி அரசு மகத்தான சாதனை புரிந்தது; ஆனால் அதி அற்புதமான அந்தச் செயலை எந்த ஊடகமும் பாராட்டவும் இல்லை; மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இல்லை. ஆனால் நந்திகிராமம், சிங்கூர் பிரச்சனையை பூதாகரமாக்கி கம்யூனிஸ்டுகள் விவ சாயிகளின் எதிரி; நிலத்தை பறிப்பவர்கள் என்ற திரிக்கப்பட்ட பிரச்சாரத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்து விட்டனவே!

இந்தியாவில் விடுதலைக்குப் பிறகு மக்கள் நல்வாழ்வுக்கான போரில் - மக்கள் ஒற்றுமைக்கான போரில் கம்யூ னிஸ்டுகளை விட அதிகம் உயிர்த் தியாகம் செய்த கட்சி எது? கம் யூனிஸ்ட்டுகள் கொல்லப்பட்ட போது தமுக்கடிக்காத ஊடகங்கள், தனி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை மையப் படுத்தி அதில் கட்சியினரை மாட்டி வைத்து, கம்யூனிஸ்டுகளின் அரசியல் கொலைவெறி என கேரளா முழுவதும் ஆளும் வர்க்கமும் ஊடகமும் செய்யும் விஷமப் பிரச்சாரத்தை என்னென்பது?

பத்தாயிரம் மலைவாழ் மக்கள் சென்னையில் பிருந்தா காரத் தலைமை யில் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வென்றதை செய்தியாக வெளியிடாத ஊடகங்களே அதிகம். 
சுரன்


மேற்குவங்கமாயினும், கேரளமாயினும், கம்யூனிஸ்டுகள் வலிமையாக இருப்பது பன்னாட்டு சுரண்டல் கூட்டத்துக்கும் உள்நாட்டு சுரண்டும் வர்க்கத்துக்கும் மதவெறியர் களுக்கும் இடைஞ்சலாக இருக்கிறது. இந்தியா முழுவதும் இடதுசாரிக் கருத் துக்களை, அவர்களது செயல்பாட்டுக்கு தடையாகப் பார்க்கிறார்கள். இடதுசாரி களை ஒழித்துவிட்டால் அவர்களின் ஆதிக்கமும் கொள்கையும் தங்கு தடையின்றி நடக்கும் அல்லவா? ஆம், இடதுசாரிகளுக்கு எதிராக அவதூறு களை அள்ளிவீச ஊடகங்களை கைப் பிள்ளை ஆக்குகிறார்கள். குறிப்பாக இடது சாரிக் கருத்துக்களின் மையப்புள்ளியாக செயல்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கொச்சைப்படுத்துவதும்; இதுவும் ஊழல் கட்சி, இதுவும் பதவி வெறியர் கூடாரம்; இதுவும் சமூக விரோதிகள் மேடை; இவர்கள் இப்போது கொள்கையை இழந்துவிட்டார்கள். காலத்துக்கு ஒவ்வாத வறட்டுக் கோ ஷங்கள் மட்டுமே மிச்சமிருக்கிறது என மக்களின் பொதுப்புத்தியில் விதைக்க ஊடகங்கள் படாதபாடுபடு கின்றன.

நீண்ட கட்டுரைகள் ஒரு சாராருக்குப் போதும்; ஆனால் செய்திகளூடே தன் விஷமக் கருத்தையும் கலந்து விதைத் தால் எளிதாக கருத்துகள் மக்களின் பொதுப்புத்தியைத் தொட்டுவிடும் என்பதை உணர்ந்து கொண்டார்கள். அப்படியே செயல்படுகிறார்கள். இந்த ஊடகங்கள் பெரும் வாசகர் பரப்பைக் கொண்டிருப்பதால், தவறான கருத்து களும் திசை திருப்பும் தகவல்களும் மிக எளிதில் மக்களின் மனதில் பதி யவைக்கப்பட்டு விடுகின்றன. இதனை அழித்து சரியான சித்திரத்தைத் தீட்டு வது அவ்வளவு எளிதல்ல.

ஆம், அந்த சவால்மிக்கப் பணியில் நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் எது? நமது சொந்த ஏடு மட்டும்தானே!

ஒரு கருத்து மக்களைக் கவ்விப் பிடிக்கும் போது அது இயற்பியல் சக்தி யாகும் என்று மார்க்ஸ் கூறியது இப்போது சாலப்பொருந்தும்; அந்த கருத்துப்போரில் ஆளும் வர்க்க ஊடகங்களை நம்பி இறங்க முடியுமா? உள்ளூரில் நடக்கும் ஒரு சின்ன நிகழ்வுக்கு பெரிய படமும் செய்தியும் போட்டு நம்மை ஈர்க்கும் அவர்கள்; நெருக்கடியான நேரத்தில் - முக்கியமான நேரத்தில் அடக்கி வாசித்தோ- அவதூறு பொழிந்தோ கழுத்தை அறுத்துவிடுவார்கள் அல்ல வா? இதை நாம் உணர்ந்தாக வேண் டாமா?
சுரன்


ஒரு கட்சிக்கு கொள்கையை, கருத் தை பிரச்சாரம் செய்வதைவிட முதன் மைப் பணி வேறென்ன இருக்க முடியும்?

பத்திரிகை, பிரசுரங்கள் படிப்பதையும் விற்பதையும் தவிர வேறு எது தலையாயப் பணியாக இருக்க முடியும்?

தீக்கதிரை பாதுகாப்போம்...

தீக்கதிரை பலப்படுத்துவோம்...

தீக்கதிரை செழுமைப்படுத்துவோம்...

தீக்கதிர் பொன்விழாவை ஊரெங்கும் கொண்டாடுவோம். தீக்கதிரை வீடு தோறும் கொண்டு செல்வோம்!

இது பொன்விழா சபதமல்ல; பொன் னுலகம் காணப் பூணும் புரட்சிகர சபத மாகும்.

ஞாயிறு, 17 ஜூன், 2012

நடிகர் விஜய்க்கு ஒரு மடல்,இல்லை கடிதாசி

அன்புள்ள விஜய் அண்ணாவுக்கு உங்கள் ரசிகன் என்று சொல்லிக் கொள்வதற்கு கூட தகுதியற்ற கடை நிலை பொது சனத்திலிருந்து தம்பி கோவணான்டியின் வேண்டுகோள் கடிதம்.
தங்களின் நேர்காண்லை ஆவியில் (ஆனந்த விகடனில்) கண்டு விட்டு நேற்று முழுவதும் புரண்டு புரண்டு படுத்தாலும் உறக்கமே வரவில்லை.

தமிழகத்தின் அடுத்த காவலனுக்கா இந்த நிலை என மனசு வலித்துக் கொண்டே இருந்தது.

காவலன் படம் ரீலீஸ் ஆகக் கூடாதென சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்த‌தாக மன வேதனையுடன் குறிப்பிட்டிருந்தீர்கள். முத‌ல்ல எம்.ஜி.ஆர். அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன் அவங்கள மாதிரி தான் அடுத்து இப்போ எனக்கு நடக்குதா? என்ற கேள்வியுடன் உங்களின் அரசியல் அரிதார ஆசையை சூசகமாக வெளிப்படுத்தியிருந்தீர்கள்.
வாழ்த்துக்கள்..அடுத்த முதல்வர் நான் தான் என யார் சொன்னாலும் அவர்கள் யார்? அவர்களின் தகுதி என்ன? ஏன் எதற்கு என்கிற கேள்விக‌ளை எழுப்பாமல் கைதட்டி வரவேற்கும் ம‌ரமண்டைகள் நாங்கள்....

காவலன் படம் ரீலீஸ் ஆகவில்லை அதற்கு ஆளும் கட்சி காரணம் எனவும் வெற்றி தியேட்டரில் நடைபெற்ற பேனர் கிழிப்பு சம்பவங்களை அதற்கு உதாரணமாக குறிப்பிட்டிருந்தீர்கள்.....ஒட்டு மொத்த சினிமாவின் ஆதங்கம் இது. நான் சொல்லிட்டேன் நிறைய பேர் சொல்ல முடியாம அழுதுட்டு இருக்காங்க எனவும் கூறியிருந்தீர்கள்......
நிற்க!

உங்களிடம் சில கேள்விகள்..........

உங்களின் படம் ரீலீஸ் ஆகவில்லை என்றவுடன் ஒட்டு மொத்த உலகமும் செயல் இழந்து விட்டதாகவும், நாடே நாசமாக‌ போய்க் கொண்டிருக்கிறது என ஆதங்கப்ப‌டும் நீங்கள் தானே அண்ணா எங்கள் நிலத்தடி நீரையெல்லாம் உறிஞ்சி. எங்களிடமே குளிர்பானமாக பாட்டிலில் அடைத்து கொடுத்து, எங்கள் மண்ணையும், மக்களையும் நாசப்படுத்திய பன்னாட்டு கம்பெனியுடன் சேர்ந்து எங்களை கானாவிலே கலாய்த்துக் கொண்டிருந்தீர்கள். அப்போது உங்களுக்கு தெரியவிலையா நாடே நாசமாகப் போகிறது என்று?...........

ஜெயக்குமாரின் உடல் மிதந்த வங்கக் கடலில் கடப்பாறை நீச்சல் அடித்து சுறாவாய் நீங்கள் வெள்ளித் திரையில் தோன்றிய போதும், பார்க்க முடியாத அந்தப் படத்தை சகோதர தொலைக்காட்சி வெற்றிப்ப‌டம் வெற்றிப்ப‌டம் என நிமிஷத்துக்கு நிமிஷம் விளம்பரப்படுத்தி...ஒட்டு மொத்த தமிழக மக்களும் இந்த படத்தினால் மோட்சம் அடைந்ததாக சித்தரித்ததே அப்போது உங்களுக்கு தெரியவில்லையா தமிழ்நாடே நாசமாகப் போகிறது என்று?........

என்றைக்காவது ,அத்தியாவசிய‌ப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, உத்தப்புரம் பிரச்சனை. , முல்லைப் பெரியாறு பிரச்சனை. என மக்களின் பிரச்சனைக் குறித்து நீங்கள் எதாவது பேசியதுண்டா?....... இலங்கை இனப் படுகொலைக்காக உண்ணாவிரதம் இருந்தீர்கள் ஆனால் அதைப் ப்ற்றி கூட சில நண்பர்கள் வேறு மாதிரி கதைக்கிறார்கள்....உண்மை உங்களுக்கே வெளிச்சம்........ மக்களின் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, உங்களின் காவலனுக்கு காவல் எனும் போது மட்டும்
ஒட்டு மொத்த உலகமும் செயல் இழந்து விட்டதாகவும், நாடே நாசமாக‌ போய்க் கொண்டிருக்கிறது என ஆதங்கப்படுவது நியாயமா?

உங்களைப் போன்ற நடிக‌ர்களுக்கு ஒரு நாள் உண்ணாவிரதத்திலேயே எல்லாம் முடிந்து விடிகிறது. ஆனால் எங்களைப் போன்ற கோவணான்டிகளுக்கு மூணு வேளை உணவு என்பது கூட விரதம் தான்.

முத‌ல்ல எம்.ஜி.ஆர். அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன் அவங்கள மாதிரி தான், அடுத்து இப்போ எனக்கு நடக்குதா? என பேட்டியளித்து அரசியலில் களம் காண நினைக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்..அடுத்த முதல்வர் நான் தான் என யார் சொன்னாலும் அவர்கள் யார்? அவர்களின் தகுதி என்ன ஏன் எதற்கு என்கிற கேள்விக‌ளை எழுப்பாமல் கைதட்டி வரவேற்கும் ம‌ரமண்டைகள் நாங்கள்....

இந்த கடிதத்தை எப்படி முடிப்பது என தெரியவில்லை, ஆவி நேர்காணலில் நீங்கள் கூறிய வரிகளை உங்களிடமே கடன் வாங்கி முடிக்கிறேன்..........

சம்பந்தப்பட்டவங்க இந்தப் பக்கத்தை படித்து விட்டு என் வீட்டில் கல் எறியலாம். என்னை வழி மறிச்சுத் தாக்கலாம்...எந்த ரூபத்திலும் எனக்கு ஆபத்து தரலாம், இந்த வலைப் பக்கத்தை கரப்ட் கூட செய்யலாம்.......வாழ்க உங்களை வாழவைக்கும் ரசிக தெய்வங்கள்

அண்ணா எனது வேண்டுகோள் எல்லாம்.........
மக்களை நினை
மக்களுக்காக உழை
மக்களுக்காக வாழு நாளைய சரித்திரத்தில் மக்களே உங்களை இடம் பெறச் செய்வார்கள்.

பின் குறிப்பு.....
அண்ணா இந்த கடிதத்தை படித்து விட்டு பத்திரப்படுத்தி வைக்கவும்...... ஏனெனில் யார் வெற்றி தியேட்டரில் நடைபெற்ற பேனர் கிழிப்பு சம்பவங்களை அரங்கேற்றினார்களோ அவர்களது தொலைக்காட்சியில் காவலன் வெற்றி பெற்றதற்காக‌ ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தீர்கள்....

ஆளும், கட்சி மீதான கோபம் போச்சா???????????அடுத்த படம் 3 இடியட்ஸ் .............புக் ஆயிடுச்சு (நன்றி ஆ.வி)

இடியட்ஸ் இந்த கோவணாண்டியும் அவன் கூட்டாளிகளும் தான்.......

நன்றி அண்ணா....
இப்படிக்கு தம்பி
கோவணாண்டி
                                                                                                                                                     நன்றி;தமிழ் குறிஞ்சி

ஞாநி ‘ஓ’ ஞாநி


ஞாநிமிகப் பெரிய எழுத்தாளர் சமுகசிந்தனையாளர்.இதுதான் எனது முந்தையக்கருத்து.அவரது அலைகள்,தீம்தரிகிட,இதழ்கள் மற்றும் அவர் பொறுப்பேற்று நடத்திய தினமணி ,ஜூனியர் போஸ்ட் போன்றவை அப்படித்தான் என்னைக் கருதவைத்தன.
ஆனால் அவருக்கும் மனதின் ஒரத்தில் சில பிற்போக்கான எண்ணங்கள் உள்ளது
என்பது சமிபகாலங்களில் அவரையும் அறியாமல் வெளியாகிவிட்டது. அவருக்கு தமிழ் ,தமிழர் என்ற உணர்வு கொண்டவர்களை என்னகாரணமோ பிடிக்காது.அவர்களை எந்தவகையிளாவது மட்டம் தட்டி பத்திரிகைகளில் எழுதிவிடுவார். குட்டு,சொட்டு,மொட்டு என்று எழுதித்தள்ளிவிடுவார்.
ஆனால் அவரிடமே சில குட்டுக்கான அவலங்கள் உண்டு.
தான் நடத்திய தீம்தரிகிட இதழில் முன்பு தலையங்கம் பக்கம் கீழே ஒரு அறிவிப்பு இருக்கும். அது’குமுதம் இதழ் எழுத்தாளர் உரிமையை பறிப்பதால்
அவர்களைத்தவிர மற்றவர்கள் இதழில் இருந்து படைப்புகளை எடுத்தாளலாம்.’என்பதாகும்.அப்படி எழுதிய அவரே சில காலம் கழித்து அதே குமுதம் இதழில் தனது’ஓ’பக்கத்தை எழுத ஆரம்பித்துவிட்டார். குமுதம் எழுத்தாளர்களை கொண்டாட ஆரம்பித்து விட்டதா? இல்லை,ஞாநி தான் தனது நிலையில் இருந்து திண்டாடிவிட்டார்.
தமிழிழம் அவரைப்பொறுத்த மட்டில் வெற்றுக்கோசம்.அதைவிட ஈழம் வருவதை அவரும்,ராம்[இந்து]மும் பக்சேவைவிட அதிகமாக விரும்பவில்லை.
அதற்கு அவர் தமிழ் நாட்டில் இல்லாமல் கர்நாடகத் தமிழர்களால் விரட்டப்பட்டிருப்பது கொஞ்சம் ஆறுதல். அங்குள்ள தமிழர்கள் கேள்விக்கு பதில் கூற பயந்து கூட்டத்திற்கு வராமல் போய்விட்டது முக்கியநிகழ்வுதான்.ஆனால் அவர் இன்னும் தனது சக்திமிக்க பேனாவால் விசம் கக்காமல் இருப்பாரா? அதுதானே முக்கியம்.

'கார்க்கி"


எழுத்தும் புரட்சியும்...........,


பேராசிரியர்ஆர்.சந்திரா
18.6.1936... ஆயிரக் கணக்கான எழுத் தாளர்களை இடது சாரி அரசியலின் பால் ஈர்த்தமார்க்சிம் கார்க்கி மறைந்த நாள். அவர் மறைந்து முக்கால் நூற்றாண்டு கடந்த பின்னும் அவரது எழுத்துக்களின் தாக்கம் இன் றும் தொடர்கிறது. கார்க்கியின் இயற்பெயர் அலெக்சாண்டர் பெஷ்கோவ்.
சுரன்

16.3. 1868ல் நிழ்னி நோவ் கோர்டானில் பிறந்த கார்க்கி யின் தந்தை கப்பல் நிறுவன ஏஜெண்ட். கார்க்கி ஐந்து வயதில் தந்தையை இழந் தார். அவரது தாய் மறுமணம் செய்து கொண் டார். கார்க்கி, பாட்டியின் அரவணைப்பில் தான் வளர்ந்தார்.பதினோறு வயதாகும் போது வீட்டை விட்டு வெளியேறி கார்க்கி, ‘காநான்’ என்ற சிறிய கிராமத்திற்கு சென்று ரொட் டிக் கடையில் ரொட்டி சுடும் பணியை செய்தார். அப்போது (டடப) லேண்ட் அண்டு லிபர் டிக்ரூப் என்ற புரட்சிகர குழு விவசாயிகளுக்கு கல்வியளிக்க, கிராமங் களுக்கு இளைஞர்களை அனுப்பிக் கொண்டிருந்தது. அவர்கள் நடத்திய கூட்டங்களும், நிகோலாய் செனிஷ் வ்ஸ்கி, பீட்டர் லவ்ரோவ், அலெக்சாண் டர் ஹெர்சன், கார்ல் மார்க்ஸ், ஜார்ஜ் பிளெஹானவ் ஆகியோரின் எழுத்துக் களும், கார்க்கி சோஷலிச, புரட்சிகர கருத்துக்களை உள்வாங்க உதவின. கிராமத்தில் ரொட்டிசுடும் வாசிலி செமெ னோவும் தாய் கார்க்கி மார்க்சிஸ்டாக உருவானதில் பங்காற்றியதாக கார்க்கி எழுதியுள்ளார்.
1887 இனவெறி
1887ல் இனப்படுகொலை நடப்பதை கண்டு கார்க்கி அதிர்ச்சி அடைந்தார். அவர் இறக்கும் வரை, இனவெறிக் கெதிராக பிரச்சாரம் செய்ததற்கு அச்சம் பவம் காரணமாக இருந்தது. தொழிலாளர் விடுதலைக்குழு என்ற அமைப்பில் இணைந்து பணியாற்றிய கார்க்கி 1889ல் புரட்சிகர சிந்தனைகளை பிரச்சாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். ‘ஒக்ரானா’ உளவு பிரிவு கார்க்கியை போலீஸ் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தது.1891ல் கார்க்கி ட்ரைபிள்ஸ் என்ற ஊருக்குச் சென்று அங்கு ரயில்வே யார்டில் பெயின்ட்டராக பணிபுரிந்தார்.
சுரன்

முதல் சிறுகதை
1892ல் ‘மகர்சுத்ரா’ என்ற முதல் சிறு கதையை எழுதினார். அது ‘கவ்கஸ்’ என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. மாக்சிம் கார்க்கி என்ற புனைப்பெயரில் எழுதினார். மிகுந்த வரவேற்பை பெற்ற அச்சிறுகதை ‘ரஷ்யன் வெல்த்’ என்ற பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டது. அரசியல் ,இலக்கியம் பற்றி அவர் நிறைய எழுதத் தொடங்கினார். 1895ல் ‘பைதவே’ என்ற தலைப்பில் தினமும் செய்தித் தாளில் தொடர்ந்து எழுதினார். அப்பகுதி யில் நிலங்களை விட்டு விவசாயிகள் வெளியேற்றப்படுவதை கண்டித்தும், தொழிற்சங்க செய்திகள், ரஷ்யாவில் அதிகரித்து வரும் அந்நிய முதலீடு என பல தரப்பட்ட விஷயங்களைப் பற்றியும் எழுதினார்.சமூக சீர்திருத்தங்களைக் கோரி கார்க்கி நிறைய எழுதியுள்ளார். “26 ஆண்களும் ஒரு பெண்ணும்” என்ற சிறுகதை அதற்கு சிறந்த எடுத்துக்காட் டாகும். இலக்கியத்தின் நோக்கம் என்ன? கார்க்கி கூறுகிறார்: “ இலக்கியம் என்பது மனிதன் தன்னைப் பற்றி உணர்ந்து கொள்ளவும், தன்னம்பிக்கை கொள்ள வும், உண்மையை நோக்கி செயல்பட வும், மக்களிடமுள்ள மோசமான விஷ யங்களை எதிர்க்கவும், கோபம், வீரம், வெட்கம்... என அனைத்து உணர்வு களும், மனிதனை நல்லவனாக மாற்றச் செய்வதே யாகும்”1898ல் கார்க்கியின் முதல் சிறுகதை தொகுப்பு வெளியிடப்பட்டது. மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. அவரது கதைகளின் நாயகன், நாயகி ஏழைகளாக ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தனர். அவர் வெளிப்படையாக விஷயங்களை எழுதியதும், குறிப்பாக போலீசாரை தாக்கி எழுதியதும், உளவுப்பிரிவின் கவனத்தை ஈர்த்தாலும், கார்க்கிக்கு மக்கள் மத்தியிலிருந்த செல்வாக்கை கண்டு உளவுத்துறை அவரை கைது செய்யத் தயங்கியது.
ரஷ்ய புரட்சிக்கு உதவி
சுரன்

கார்க்கி “ சோஷலிச புரட்சியாளர் கள்” ,சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சி ஆகிய அன்றைய சட்ட விரோத அமைப்புகளுக்கு ரகசியமாக உதவி செய்தார். கட்சியின் நிதியாக நிறைய நன்கொடை வழங்கியது மட்டுமின்றி இஸ்க்ரா போன்ற புரட்சிகர பத்திரிகை கள் வெளிவர உதவினார். புரட்சிக்கு கார்க்கி ஆற்றிய பங்கைப் பற்றி குறிப் பிட்ட ஒரு போல்ஷ்விக் “ஒவ்வொரு மாதமும், கட்சிக்கு நிதியளித்ததுடன், ப்ரிண்ட்டிங் ஷாப் செயல்பட தொழில் நுட்ப உதவி (சட்டவிரோதமான) புரட்சி கர கட்டுரைகளை கொண்டு சேர்த்தல், புரட்சியாளர்கள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தல், உதவி செய்வோரின் முகவரி களை சேகரித்து கட்சிக்கு அனுப்பி வைத்தல்.... என ஏராளமான பணிகளை செய்தார். 4.3.1901 அன்று களானில் , மாணவர்களை போலீஸ் தாக்குவதைக் கண்ட கார்க்கி அதை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அதற்காக, கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டார். சிறையில் அவரது உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. அவர் இறந்து விட்டால் பிரச்சனையாகும் என பயந்து, அவர் விடுதலை செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். அவரது கடிதங்கள், அவரது செயல்பாடு என அவரின் ஒவ்வொரு அசைவும் கண் காணிக்கப்பட்டது. ‘க்ரிமியா’ செல்ல அவருக்கு அனுமதி கிடைத்து, அங்கு செல்கையில் வழிமுழுவதும் பானர்களு டன் மக்கள் வரவேற்றனர். விசாரணை யின்றி நாடு கடத்தப்படுகிறார் என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.1902ல் கார்க்கி இலக்கிய அகாத மிக்கு தேர்வு செய்யப்பட்டார். அதை கேள்வியுற்ற நிக்கொலஸ் கடும் கோப மடைந்தார். அவரது வயது, செயல்பாடு ஆகியவை, அத்தகைய தேர்வுக்கு லாயக் கில்லை என்றும் போலீஸ் கண்காணிப் பில் உள்ள அவரை தேர்வு செய்யக் கூடா தென்றும் நிக்கொலஸ் கூறினார். கல்வி அமைச்சருக்கு கார்க்கியின் தேர்வை ரத்து செய்யும் படி அவர் உத்தரவிட்டார். கார்க்கியின் தேர்வு ரத்து செய்யப்பட்டது. 
சுரன்

இதை எதிர்த்து அகாதமியிலுள்ள பல இலக்கியவாதிகள் ராஜிநாமா செய்தனர். 22.1.1905 அன்று நடைபெற்ற சம்பவங் கள் கார்க்கியை மிகவும் பாதித்தன. வன்முறை பற்றிய அவர் பார்வை மாறி யது. கார்க்கி “ரத்தம் தோய்ந்த ஞாயிறு ” பற்றி எழுதுகையில் , “ 200 கண்கள் மட்டும் ரஷ்யாவுக்குதேவைப்படுகிறது....” என்று குறிப்பிட்டார். அரசுக் கெதிராக மக்களைத் தூண்டுவதாக கார்க்கி கைது செய்யப்பட்டார். ரஷ்யாவிலிருந்து வெளி யேற்றப்பட்டார்.1906ல் கார்க்கி ஐரோப்பா, அமெரிக் காவுக்குச் சென்றார். நண்பர்களிட மிருந்து கட்சிக்கு நிதி திரட்டினார். ஆனால், அங்கு அவரைப்பற்றி துஷ்பிரச் சாரம் செய்யப்பட்டது. ஹெச். ஜி. வெல்ஸ் போன்றவர்கள் கார்க்கிக்கு உதவினார் கள். அமெரிக்காவிலிருந்து திரும்பிய கார்க்கி “அமெரிக்கன் ஸ்கெட்சஸ்” என்று அமெரிக்கா பற்றி எழுதினார். அமெரிக்காவில் நிலவும், கடுமையான சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வு களைப் பற்றி எழுதிய கார்க்கி “யாருக் காவது உடனடியாக சோஷலிஸ்டாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்தால் அவர் அமெரிக்கா செல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டார். 1907ல் சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சியின் ஐந்தா வது மாநாட்டில் பங்கேற்றார். அப்பொழுது லெனின், டால்ஸ்டாய் ஆகியோரை சந் தித்தார். முதல் உலகப்போரை எதிர்த்தார். தேசப் பற்று அற்றவர் என முத்திரை குத் தப்பட்டார்.
இறுதிநாட்கள்
சுரன்

1915ல் இலக்கிய இதழ் ஒன்றைத் துவங்கினார். 1906ல் எழுதிய ‘தாய்’ 1908ல் வெளிவந்த ‘கன்ஃபெஷன்ஸ்’ (ஒப்புதல் வாக்கு மூலம்) 1909ல் வந்த “ஒகுரோவ் நகரம்” ஆகிய மூன்றுமே கார்க்கிக்கு பெரும் புகழைச் சேர்த்தன. அதிலும் ‘மதர்’ தாய் ஏராளமான மொழி களில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூலா கும்.இன்றும் உலகெங்கும் மாக்சிம் கார்க்கி என்றவுடன் நினைவுக்கு வரு வது தாய் நாவலே. தாய் நாவலைப் படிக் காமல் , பேசாமல் நவீன இலக்கியவாதி இருக்கவே முடியாது.18.6.2012ல் அவர் மறைந்து 76 ஆண் டுகள் நிறைவு பெறுகிறது. ரொட்டி சுடு பவராக, பெயின்ட்டராக வாழ்க்கையைத் துவங்கி, தலைசிறந்த இலக்கிய வாதி யாக மரணமடைந்த கார்க்கிக்கு செவ் வணக்கம்!

நன்றி:'தீக்கதிர்'
____________________________________________________________________________________________________________
உலகமே புத்தகம்
ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் என்னும் நாவல் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது.
இந்த நூலுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் இலக்கியத்துக்கான டாக்டர் பட்டம் கொடுத்துப் பெருமைப்படுத்தியது. பட்டத்தினைப் பெற்றுக்கொண்ட கார்க்கி, வெளியே வந்தபோது நிருபர் ஒருவர், எந்தக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றீர்கள் என்று கேட்டார்.
'நான் எந்தக் கல்லூரிக்கும் செல்லவில்லை. உலகம் என்ற பெரிய பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மனிதரும் ஒரு புத்தகமாகத் தோன்றினார்கள். அவர்களைத்தான் படித்தேன்' என்றார்.
_________________________________________________________________________________________
சுரன்


ஞாயிறு, 25 மார்ச், 2012


89 ஆண்டில் சவுந்திரராஜன்


டி.எம்.எஸ்... தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட எழிலிசை வேந்தன்; தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்!

* டி.எம்.எஸ். என்பதில் உள்ள 'எஸ்' என்றால், சௌந்தரராஜன்; 'எம்' என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்; 'டி' என்பது அவரின் குடும்பப் பெயர்'தொகு ளுவா'. கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது!

* டி.எம்.எஸ்-ஸுக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு(எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி),முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார்!

* மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார்.

* டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் 'ராதே என்னை விட்டு ஓடாதேடி' ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக்கிடந்த அதே பழைய ஒலிப்பதிவு அறையில் நின்று மீண்டும் அதேபாடலைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்!

* மதுரை, வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஓர் ஓரமாக பெஞ்சுகள் போட்டு, இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்ததுஇல்லை. மற்றபடி எல்லாக் கோயில் விசேஷங்களுக்கும் சென்று, பஜனைப்பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்,வெற்றிலை, பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஓடியது!

* டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...', 'உள்ளம் உருகுதய்யா முருகா', 'சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா', 'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்' போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்!


* டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இந்தப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெறும். அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்!

* 'அடிமைப் பெண்' படத்தின் போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். 'பாடி முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்' என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு, அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்தது, அந்தப் பாடல்தான், 'ஆயிரம் நிலவே வா!'


* பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர். "இல்லாட்டா ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா! 'பாவம், டி.எம்.எஸ்ஸுக்கு என்ன கஷ்டமோ!'ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளி வேஷம் தேவையா இருக்கு" என்பார்.

* கவிஞர் வாலியைத் திரைஉலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்று வரையிலும் மறவாமல், 'இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ். போட்டது' என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நெகிழ்வார் வாலி!

* 'நீராரும் கடலுடுத்த...' என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், 'ஜன கண மன' என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன்வராத நிலையில், டி.எம்.எஸ்ஸும் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது!

* தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், டி.எம்.எஸ்ஸுக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக் கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்!

* 'வசந்தமாளிகை' படத்தில் வரும் 'யாருக்காக' பாடலைப் பாடும்போது, அதற்கு எக்கோ எஃபெக்ட் (எதிரொலி) வைக்கச் சொன்னார். 'அதெல்லாம் வீண் வேலை' என்று தயாரிப்பாளர் மறுத்துவிட, 'எக்கோ எஃபெக்ட்' வைத்தால்தான் பாடுவேன் என்றார் தீர்மானமாக. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு வியந்தார் தயாரிப்பாளர்!


* வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் 'யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு'. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்ததைவிட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ்!

* காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை 'கற்பகவல்லி' பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்!

* கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். கண்ணதாசன் எழுதிய 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்; அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்' என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் 'சாக வேண்டும்' என்பதை 'வாட வேண்டும்' என்று மாற்றித் தந்த பிறகே பாடினார்!


* நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டுவிட்டு, பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண் டார். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போதுதான்!

* எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர்!

* 'பாகப் பிரிவினை' படத்தின் 100-வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட, பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ்., விழாவில் 'கடவுள் வாழ்த்து' பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன!

* 'நவராத்திரி' படத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாச வேடங்களுக்கு ஏற்ப தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!

* 'பட்டினத்தார்', 'அருணகிரிநாதர்' என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்!

* மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ். பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும்!

* சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர, தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரம் என்று டி.எம்.எஸ்ஸுக்கு எதுவும் இல்லை.

* எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ். சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார்!
 

* தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்


வெள்ளி, 23 மார்ச், 2012

கதிரியக்கம் இல்லா அணு மின் உலை சாத்தியமில்லையா?

 
முன்னுரை:  பரிதியில் எழும் அணுப் பிணைவு சக்தி (Nuclear Fusion Energy) பல்லாண்டுகளுக்கு முன்பே, மாந்தர் கனவில் தோன்றிச் சித்தாந்த நிலை கடந்து, கணித முறையில் வரை வடிவம் பெற்று, பூமியிலே அமைக்கப்பட்டுத் தவழும் பருவத்தைத் தாண்டி, இப்போது நடக்கத் துவங்கி யுள்ளது! கட்டுப்படுத்த முடியாத பேரழிவுச் சக்தி உடைய வெப்ப அணுக்கரு ஆயுதங்கள் பலவற்றைச் சோதித்த பொறியியல் உலக விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள், பிணைவு சக்தியைக் கட்டுப்படுத்திக் கதிரிக்கம் இல்லாது பேரளவு மின்சாரம் உற்பத்தி செய்ய ஆராய்ந்து வருகிறார்கள்.
முப்பது ஆண்டுகளில் [1975-2005] உலக விஞ்ஞானப் பொறியியல் வல்லுநர்கள் டோகாமாக் அணுப்பிணைவு உலையில் [Tokamac Fusion Reactor] 10 watt வெப்பசக்தி ஆக்கத்தில் ஆரம்பித்து, 16 மில்லியன் watt [16 MW] வெப்ப சக்தியை உண்டாக்கிப் பிணைவு சக்திப் படைப்பில் மகத்தான சாதனையை நிலைநாட்டி யுள்ளார்கள்! அந்த வெற்றிகரமான சாதனை வெப்ப அணுக்கரு மின்சக்தி வணிகத்துறை நிலையங்கள் பெருக உலக வாயிலைத் திறந்து விட்டிருக்கிறது! பிணைவு சக்தி ஆராய்ச்சி தற்போது அடிப்படை ஆய்வு நிலையைத் [Research Stage] தாண்டி, ‘முன்னோடி மாடல் சோதனை ‘ [Prototype Model Testing] நிலைக்கு உயர்ந்து முன்னேறியுள்ளது !
 
சூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து!
சூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor]! அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத் தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன! 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது! தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K! சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth 's Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது! சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன் வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்குகிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்து தரும் சக்திக்குச் சமமாகும்! ஆனால் பூமியில் பிணைவுச் சக்தியைத் தூண்டி வெளிப்படுத்த, உலைகளில் சூரியவாயு போல் பேரழுத்தமும், பெருமளவு உஷ்ணமும், விஞ்ஞானிகளால் உண்டாக்க முடியுமா ?
1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்ப அணுக்கரு ஆயுதமான [Thermo-Nuclear Weapon] ஹைடிரஜன் குண்டைத் [H-Bomb] தயாரித்து முதன் முதல் ஒரு குட்டிச் சூரியனை உண்டாக்கி வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. ஆனால் அணுப்பிணைவுப் பிழம்பை ஓர் உலை அரணுக்குள் அடக்கி நீடிக்கச் செய்ய எந்த நாட்டு விஞ்ஞானியாலும் இதுவரை முடியவில்லை! அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது!
மின்சக்திப் பற்றாக் குறை உலக நாடுகளில் மெதுவாகத் தலை தூக்கி யிருக்கிறது! செல்வம் கொழித்த மேலை நாடுகளிலும் பற்றாக் குறையால் பல தொழிற்சாலைகள் பாதிக்கப் பட்டு வருகின்றன! சமீபத்தில் அமெரிக்காவில் மின்சக்திப் பற்றாக் குறை கலிஃபோர்னியாவில் தலை விரித்தாடி வர்த்தகங்களும், வாணிபத் தொழில்களும் கதவுகளை மூடி, பலர் வேலைகள் இழந்ததை யாவரும் அறிவர்! சென்ற நூற்றாண்டில் திரீமைல் தீவு, செர்நோபிள் அணுசக்தி நிலையங் களில் பெரும் விபத்து நேர்ந்து, கதிரியக்கத்தால் தீங்குகள் விளைந்து, புது அணுசக்தி நிலையங்கள் அமெரிக்காவில் கட்டப் படாமல் நிறுத்தப்பட்டன.
ஆயினும் உலகில் பெருமளவு மின்சக்தியை இன்னும் பழைய அணுமின் நிலையங்கள்தான் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. எதிர் காலத்தில் மின்சக்திப் பற்றாக் குறை வினாவுக்கு முடிவான விடை, பெருமளவில் மின்திறம் வெளியாக்கும் பிணைவுச் சக்தி ஒன்றே ஒன்றுதான்! ஆனால் அந்த நிலையத்தை வர்த்தக முறையில் உருவாக்கி இயக்குவதுதான் உலக எஞ்சினியர்களுக்கு மாபெரும் போராட்டமாகவும், திறமையைச் சோதிப்பதாகவும் இருந்து வருகிறது!
பிளவு சக்தி, பிணைவு சக்தியை ஈன்று அணுயுகம் பிறந்தது!
அகில விஞ்ஞான மேதை, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1905 ஆம் ஆண்டிலேயே, பிண்டத்தைச் [Matter] சக்தியாக மாற்றலாம் என்று முதன் முதல் கணித மூலமாகவே ஒரு மாபெரும் மெய்ப்பாட்டைக் கணித்துக் காட்டினார்! அதுதான் ஐன்ஸ்டைன் ‘பளு சக்தி சமன்பாட்டு ‘ [Mass Energy Equation] நியதி. 40 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் நியூ மெக்ஸிகோ, லாஸ் அலமாஸில் அணுகுண்டு விஞ்ஞானிகள் அதைச் செயற்கை முறையில் செய்து காட்டி நிரூபித்தார்கள்! ஆனால் அண்ட வெளியில், ஆதவனும், எண்ணற்ற சுய ஒளி நட்சத்திரங்களும் அந்த நியதியைக் கோடான கோடி ஆண்டுகளாய் மெய்ப்பித்து வருகின்றன!
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, 1945 இல் முதல் அணுகுண்டு வெடித்து அணுயுகம் பிறந்தது! லாஸ் அலமாஸில் விஞ்ஞானிகள் பிளவு அணுகுண்டை [Fission Bomb] ஆக்கும் முன்பே, ஹைடிரஜன் குண்டு தயாரிக்கும் முறையையும் உருவாக்கிப் பின்னால் தேவைப்படலாம் என்று ஒதுக்கி வைத்தார்கள். 1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்கா தன் முதல் ஹைடிரஜன் குண்டை வெடித்து, அணுப் பிணைவு சக்திக்கு விதை ஊன்றியது! பிளவுச் சக்தியில் வெடிப்பது, அணுகுண்டு! பிணைவுச் சக்தியில் வெடிப்பது, ஹைடிரஜன் குண்டு! அணுகுண்டு ஆக்கிய பிதா, அமெரிக்க பெளதிக விஞ்ஞானி, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Openheimer]. ஹைடிரஜன் குண்டு தயாரித்த பிதா, ஹங்கேரியன் பெளதிக விஞ்ஞானி, எட்வெர்டு டெல்லர் [Edward Teller]. எட்வெர்டு டெல்லர்தான் பிணைவுச் சக்தியை மின்சக்தி ஆக்கத்திற்குப் பயன்படுத்த அடிகோலிய பெளதிக விஞ்ஞானி. அணுப்பிளவு சக்தி, அணுப்பிணைவு சக்தி இரண்டுமே யுத்த ‘அழிவியல் விஞ்ஞானம் ‘ [Science of Destruction] ஈன்றெடுத்த அழிவுச் சக்தி! அழிவுச் சக்தியை ஆக்க சக்தியாக மாற்ற முற்படுவதும் விஞ்ஞானிகள்தான்!
யுரேனியம் [Uranium235], புளுட்டோனியம் [Plutonium239] போன்ற கனமான உலோகங்களின்அணுக்கருவை நியூட்ரான் கணைகள் தாக்கிப் பிளக்கும் போது எழுவது, ‘பிளவு சக்தி ‘. ஹைடிரஜன், டியூட்டிரியம், டிரிடியம், லிதியம் போன்ற எளிய மூலகங்களின் [Light Elements] அணுக்கருவை உஷ்ணத்தில் பிழம்பாக்கிப் பிணைத்தால், வெளிவருவது, ‘பிணைவு சக்தி ‘. பிளவு சக்தியும், பிணைவு சக்தியும் அணுக்கருவைப் [Nucleons] பிளப்பதாலும், இணைப்பதாலும் முறையே வெளியாகின்றன. பிளவு அணுக்கரு இயக்கத்தில் [Nuclear Reactions] கனப் பிண்டம் [Matter] உடைக்கப் பட்டு, முடிவில் சிறிய அணுக்கருப் பண்டங்கள் [Fission Products] விளைகின்றன. பிணைவு அணுக்கரு இயக்கத்தில் எளிய பிண்டங்கள் இணைந்து முடிவில் பெரிய அணுக்கருப் பண்டம் உருவாகிறது. இரண்டு அணுக்கரு இயக்கச் சமன்பாடுகளிலும் இறுதி மொத்தத்தில் ‘பளுஇழப்பு ‘ [Mass Defect] நேர்ந்து, அதற்குச் சமமான சக்தி வெளியாகிறது. இதுதான் ‘இணைப்புச் சக்தி ‘ [Binding Energy] என்று அணுக்கரு பெளதிகத்தில் கூறப் படுகிறது. சில சமயம் சக்தியுடன், நியூட்ரான், புரோட்டான் போன்ற பரமாணுக்களும் [Sub-atomic Particles] தோன்றுகின்றன.
பிண்டத்தைச் சக்தியாக மாற்றலாம்! எதிர்மறையில், சக்தியைப் பிண்டமாக மாற்றலாம்! இப்புதிய விஞ்ஞானத் தத்துவத்தை 1905 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது உலகப் புகழ் பெற்ற ‘பளு சக்தி சமன்பாட்டில் ‘ [Mass Enery Equation] கணித்துக் காட்டினார். பளுஇழப்பு நிறையை ஒளி வேகத்தோடு இரண்டு முறை அடுத்து அடுத்துப் பெருக்கினால் சக்தியின் அளவைக் கணக்கிட்டு விடலாம். இந்தச் சமன்பாட்டின்படி ஒரு பவுண்டு யுரேனியம்235 அணுக்கரு பிளவு பட்டால், சுமார் 11,000 மெகாவாட் வெப்ப சக்தி ஒரு மணி நேரம் வெளியாகும்!
Einstein ’s Mass Energy Equation
அணுமின் உலை இயக்க அரங்குகளில் சூழ்மண்டலப் பாதுகாப்பு  
1973 முதல் 2003 வரை சுமார் 30 ஆண்டுகள் உலகில் நானூறுக்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் இயங்கி 78.7 மில்லியன் டன் ஸல்·பர் டையாக்ஸைடு வெளிவீச்சையும், 39.7 மில்லியன் டன் நைட்டிரஸ் ஆக்ஸைடு வெளியேற்றத்தையும் தவிர்த்துள்ளன! பாரதம் எரிவாயுவைப் பயன்படுத்தி 1000 MWe வெப்ப மின்சக்தி நிலையம் ஒன்றைக் கட்டினால், அது நாளொன்றுக்கு 5.5 டன் ஸல்·பர் டையாக்ஸைடு வாயு : 21 டன் நைட்டிரஜன் ஆக்ஸைடு வாயு : 1.6 டன்.  கார்பன் டையாக்ஸைடு வாயு போன்ற துர்வாயுக்களைச் சூழ்மண்டலத்தில் பரப்பும் ! ஆனால் அணுமின் உலையில் ஒரு டன் அணுக்கரு யுரேனிய எரு உண்டாக்கும் வெப்பசக்தி, (2-3) மில்லியன் டன் இயல்வள எருக்கள் [நிலக்கரி, எரிவாயு அல்லது எரி ஆயில்] தரும் வெப்பசக்திக்குச் சமம். 1000 MWe ஆற்றல் அளிக்கும் அணு உலை, ஸல்·பர் டையாக்ஸைடு, நைட்டிரஜன் ஆக்ஸைடு, கார்பன் டையாக்ஸைடு போன்ற எந்தவிதப் பசுமை அழிப்பு வாயுக்களை வெளியேற்றுவ தில்லை [No Greenhouse Gas Emission]!
ஓர் ஆண்டுக்கு 30 டன் உயர்நிலைக் கதிரியக்கக் கழிவு (தீய்ந்த எருக்கழிவு) [Spent Fuel: High Level Radioactive Wastes], 800 டன் தணிந்த & இடைநிலை கதிர்வீச்சுக் கழிவுகள் [Low & Intermediate Radiation Wastes] சேருகின்றன. 800 டன் தணிந்த இடைநிலைக் கழிவுகள் அழுத்தப்பட்டு வடிவம் 20 கியூபிக் மீடராகச் சுருக்கப்படுகிறது.  ஓர் அணுமின் நிலையம் சாதாரணமாக ஆண்டுக்கு 20 மெட்டிரிக் டன் கதிரியக்கத் தீய்ந்த எருக்கழிவை [Radioactive Spent Fuel Wastes] உண்டாக்கும். உலக அணு உலைகள் அனைத்தும் ஆண்டுக்கு 2000 மெட்டிரிக் டன் எருக்கழிவை விளைவித்து வருகின்றன. கடந்த 40 ஆண்டுகளாக அகில அணு உலைகள் இதுவரைச் சுமார் 40,000 மெட்டிரிக் டன் எருக்கழிவை உண்டாக்கிப் பாதுகாப்பாகப் புதைத்து வைத்துள்ளன. அவை யாவும் தணிந்த கதிர்வீச்சு நிலைக்குத் தேய்ந்து குறைய 100 முதல் 500 ஆண்டுகள் வரை ஆகலாம்!
இருபதாம் நூற்றாண்டின் முடிவில் பிணைவு சக்தி ஆய்வில் முன்னேற்றம்!
முப்பது ஆண்டுகளில் [1975-2005] உலக விஞ்ஞானப் பொறியியல் வல்லுநர்கள் டோகாமாக் அணுப்பிணைவு உலையில் [Tokamac Fusion Reactor] 10 watt வெப்பசக்தி ஆக்கத்தில் ஆரம்பித்து, 16 மில்லியன் watt [16 MW] வெப்ப சக்தியை உண்டாக்கிப் பிணைவு சக்திப் படைப்பில் மகத்தான சாதனையை நிலை நாட்டி யுள்ளார்கள்! அந்த வெற்றிகரமான சாதனை வெப்ப அணுக்கரு மின்சக்தி வணிகத்துறை நிலையங்கள் பெருக உலக வாயிலைத் திறந்து விட்டிருக்கிறது! பிணைவு சக்தி ஆராய்ச்சி தற்போது அடிப்படை ஆய்வு நிலையைத் [Research Stage] தாண்டி, ‘முன்னோடி மாடல் சோதனை ‘ [Prototype Model Testing] நிலைக்கு உயர்ந்துள்ளது! கடந்த எட்டாண்டுகளாக பிணைவு சக்தி ஆய்வுகளின் சிறப்பான வெற்றியால், பொறியியல் துறை வளர்ச்சி பெற ‘உறுதிச் சான்றிதழ் ‘ [Certified for Engineering Development] அளிக்கப் பட்டுள்ளது! 2001 நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகிய விஞ்ஞான முற்போக்கு நாடுகள் கனடா, டொரான்டோ [Toronto] நகரில் கூடி 5 பில்லியன் டாலர் செலவில் உருவாகப் போகும் மாபெரும் ‘அகில நாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வு உலை ‘ [International Thermonuclear Experimental Reactor, ITER] ஒன்றைப் பற்றி முடிவு செய்தன!
பிரம்மாண்டமான 1000 MW ஆற்றல் கொண்ட அப்பிணைவு அணு உலைக்குத் தேவையான 100 Kg டிரிடியம் [Tritium] எரிவாயுவில், கனடா தனது அழுத்தக் கனநீர் அணு உலைகளில் [Pressurised Heavy Water Reactors] சேமித்துள்ள 55 Kg டிரிடியத்தை அளிக்க முன்வந்துள்ளது! அவ்வணு உலைக்கு இடமளிக்கக் கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தயாராக உள்ளன! கனடாவின் பிளவு அணு உலைகளில் உள்ள மிகையான அளவு கனநீரில் இருக்கும் டியூடிரியம், டிரிடியம் [Deuterium, Tritium], பிணைவு அணு உலைகளுக்கு எருவாகப் பயன்படுவதால், ITER நிறுவகமாகக் கனடா தேர்ந்தெடுக்கப்பட காரண முள்ளது! மேலும் புதிய பிணைவு உலையில் உண்டாகும் மின்சக்தி ஆற்றல் 200 MW முதல் 1000 MW வரை இறங்கி ஏறப் போவதால், உறுதியாக இணைந்த வினியோகக் கம்பிகள் [Supply Grid Lines] தேவைப் படுகின்றன! அந்த வசதியும் கனடாவில் அமைந்துள்ளதால், அங்கே அகில உலக எதிர்கால முன்னோடிப் பிணைவு உலை நிறுவகமாக வாய்ப்புள்ளது!
அணுப்பிணைவுச் சக்தி நிலையத்தின் நிறைபாடுகள்!
பிணைவு சக்தி பிளவு சக்தியை [Fission Energy] விட பல முறைகளில் மேன்மை உடையது. அணுப்பிணைவு சக்தியில், அணுப் பிளவு சக்திபோல் உயிரிஇனங்களைத் தாக்கி வதைக்கும் பயங்கரக் கதிரியக்கம் [Radioactivity] இல்லை! பிணைவுச் சக்தியில் கதிர்வீசும் கழிவுகள் இல்லை! அதில் எழும் கதிரியக்கம் மிகச் சிறிதளவே! அமெரிக்காவின் திரீமைல் தீவு, ரஷ்யாவின் செர்நோபிள் அணுப்பிளவு சக்தி நிலையங்களில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தின் போது, உலையின் எரிக்கோல்கள் உருகிப் பெரும் சிக்கலை உண்டாக்கியது! பிணைவு உலைகளில் வெடிப்பு விபத்துகள் ஏற்படா! இயக்கத்தின் போது எரிக்கோல் உருகிப் போகும் அபாயம் எதுவும் இல்லை! அணுப் பிணைவு நிலையங்களிலிருந்து தினம் வெளியேறும் கழிவு வாயுக்கள் மனிதர் மற்றும் இதர உயிரினங்களுக்குத் தீங்கு தருவன அல்ல! அவைச் சூழ்வெளியைச் [Environment] சுத்தமாக வைத்திருக்க உதவி புரிபவை! பிணைவு இயக்கத்தில் ரசாயனத் தீயின் கடும் விளைவுகள் உண்டாவ தில்லை! மேலும் பிணைவு உலைகளில் பயன்படும் எரி ஆவிகள் டியூட்டிரியம், டிரிடியம் இரண்டும் உலகெங்கும் நீரில் அளவற்ற கன அளவு கிடைக்கின்றன. எதிர் கால மின்சக்தி உற்பத்திக்குப் பல நூற்றாண்டுகளுக்கு வேண்டிய, வெப்ப அணுக்கரு எருக்களுக்குப் பஞ்சமே இருக்காது!
மாபெரும் ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு நிலையத்துக்குத் தேவையானது சிறிதளவு எருதான்! உதாரணமாக 1000 MWe நிலையத்தின் ஓராண்டுக்கு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம்! அது அணுப்பிளவு நிலையமானால், 30 டன் யுரேனியம் டையாக்கஸைடு [UO2] தேவைப்படும்! அது வெப்ப மின்சக்தி நிலையமானால், 2.1 மில்லியன் டன் நிலக்கரி வேண்டியதிருக்கும்! இவற்றை ஒப்பு நோக்கினால், ஒரு டன் டியூடிரியம், அணுப்பிணைவு நிலயத்தில் 29 பில்லியன் டன் நிலக்கரி வெளியாக்கும் வெப்ப சக்தியைத் தருகிறது!
பிணைவு சக்தியின் தீப்பிழம்பு மின்கொடைத் துகள்களின் [Plasma charged Particles] வேகங்களைத் தணித்து, நேரடியாக அவற்றை மிகையான மின்சக்தி அழுத்தமாக [High Voltage Electricity] மாற்றிவிடலாம்! அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம் [Steam Boiler], வெப்பசக்தியை யந்திர சக்தி, மின்சக்தி யாக மாற்ற டர்பைன், தணிகலம், மின்சார ஜனனி [Turbine, Condenser & Generator], மிகை வெப்ப மூட்டிகள் [Super Heaters], அனுப்புநீர் வெப்ப மூட்டிகள் [Feed Water Heaters] போன்ற பொது வெப்பச் சாதனங்கள் வேண்டியதில்லை! வெப்பத்திலிருந்து நேரடி மின்சக்தி! நிலக்கரி, ஆயில், அணுப்பிளவு நிலையங்களில் அடையும் வெப்பத் திறனுக்கும் [Thermal Efficiency 30%-45%] மிக மேலாக நேரடி மின்சக்தி உற்பத்தியில் பிணைவு நிலையங்களில் பெறலாம்!
அணுப்பிணைவு சக்திக்கு வேண்டிய எளிய எருப் பண்டங்கள்
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பியக் குழுவினர் தமது ‘டோகாமாக் ‘ வெப்ப அணுக்கரு ஆய்வு உலையில் [Tokamac, Thermo Nuclerar Fusion Test Reactor] 100-200 மில்லியன் டிகிரி உஷ்ணத்தை உண்டாக்கி எருவாக ஹைடிரஜனின் இரண்டு ஏகமூலகங்களான டியூடிரியம், டிரிடியம் [Hydrogen Isotopes: Deuterium,Tritium] ஆகிய இரண்டையும் பயன்படுத்தி வருகின்றன.
1[டியூடிரியம்]2 + 1[டிரிடியம்]3 –>2[ஹீலியம்]4 + 0[நியூட்ரான்]1 + 17.6 MeV (சக்தி)
பிணைவு சக்தி உற்பத்திக்குத் தேவையான எருக்கள் மூன்று: 1. டியூடிரியம், 2. டிரிடியம், 3. லிதியம் [Lithium]. ஆறு, ஏரி, கடலிலும் கொட்டிக் கிடக்கும் நீரில் 7000 இல் ஒரு பங்கானது டியூடிரியம். 500 லிட்டர் நீரில் 15 கிராம் டியூடிரியம் கிடைக்கிறது! டிரிடியம் இயற்கையில் கிடைப்பதில்லை. கனநீர் மிதவாக்கியாகப் பயன்படும் வெப்ப அணு உலைகளில் உபரியாக விளைகிறது. மேலும் செயற்கையில் லிதியம் உலோகத்தை நியூட்ரான் கணைகளால் தாக்கினால், டிரிடியத்தை உண்டாக்கலாம். அணுப்பிணைவு உலையின் உள்ளே சுற்றுச் சுவரில் லிதிய உலோகம் அமைக்கப் பட்டுள்ளதால், இயக்கத்தின் போது எழும் அதிவேக நியூட்ரான்கள் லிதியத்தைத் தாக்கித் தொடர்ந்து டிரிடியம் யந்திரத்தி னுள்ளே விளைகிறது.
3[லிதியம்]6 + 0[வேக நியூட்ரான்]1 –>1[டிரிடியம்]3 +2[ஹீலியம்]4
3[லிதியம்]7 + 0[வேக நியூட்ரான்]1 –>1[டிரிடியம்]3 +2[ஹீலியம்]4 +0[மெது நியூட்ரான்]1
இயற்கை லிதியத்தில் இரண்டு ஏகமூலங்கள் [92.5% லிதியம்7, 7.5% லிதியம்6] உள்ளன. எல்லா உலோகத்திலும் மிகவும் நலிந்த [Lightest Metal] லிதியம் 30 கிராம், நியூட்ரான் தாக்குதலில் 15 கிராம் டிரிடியம் எருவை உண்டாக்குகிறது.
டோகாமாக் அணு உலையில் பிணைவு சக்தி உற்பத்தி
அணுப்பிளவில் யுரேனியம்235, புளுடோனியம்239 போன்ற கனப் பிண்டங்கள் நியூட்ரான்களால் இரு சிறு கூறாகளாகப் பிளக்கப் பட்டு வெப்ப சக்தி எழுகிறது! அணுப்பிணைவில் ஹைடிரஜன், லிதியம் போன்ற எளிய பிண்டங்கள் பேரளவு அழுத்தம், மிகையான உஷ்ணம் கொண்ட சூழ்நிலையில் இணைந்து பெரிய மூலகமாக மாறி வெப்ப சக்தி உண்டாகிறது! இரண்டு வித அணுசக்திகளும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‘பளு சக்தி சமன்பாடுக்கு ‘ [Mass Energy Equation] உடன்படுகின்றன! பிளவு, பிணைவு ஆகிய இரண்டு அணுக்கரு இயக்கத்தின் முடிவில் விளையும் பளு இழப்பே [Mass Defect] சக்தியாக மாறுகிறது!
விளையும் சக்தி = [பளு இழப்பு] X [ஒளிவேகம்] X [ஒளிவேகம்]
யுரேனியம்235 மூலக அணுப்பிளவில் 200 MeV சக்தி ஒவ்வொரு தரமும் விளைகிறது! அதே போல் ஹைடிஜரன், ஹீலிய அணுப்பிணைவில் ஒவ்வொரு முறையும் 17.6 MeV சக்தி உண்டாகிறது! ஒவ்வொரு ‘கருத்துகள் ‘ [Nucleaon] அளிக்கும் சக்தியைத் தனியாகக் கணக்கிட்டால், அணுப்பிளவில் 200 MeV/235=0.85 MeV சக்தியும், அணுப்பிணைவில் 17.6 MeV/5=3.5 MeV சுமார் 4 மடங்கு சக்தி கிடைக்கும்.
திடவம், திரவம், வாயு, பிழம்பு [Solid, Liquid, Gas, Plasma] என்னும் நான்கு விதத் தோற்றங்களில் நிலை மாறும் பிண்டத்தின் [Four States of Matter], பிழம்பு நிலையே, பிணைவுச் சக்தி ஆக்குவதற்கு ஏதுவானது. திடப் பிண்டம் ஒன்றை வெப்பத்தில் சூடேற்றும் போது, உருகும் நிலை எய்தவுடன் அது திரவ நிலை அடைகிறது. தொடர்ந்து வெப்பத்தைச் செலுத்தினால், வாயு வாகி இறுதியில் தீப்பிழம்பாகி அதன் வாயுத் துகள்கள் மின்கொடை பெற்று [Electrically Charged Ions] மின்மயமாகின்றன!
1997 ஆம் ஆண்டில் முதன் முதலாக இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள, உலகிலே மிகப் பெரிய JET [Joint European Torus] டோகாமாக் யந்திரத்தில் டியூட்டிரியம், டிரிடியம் வாயுக்களைப் பயன்படுத்தி 200 மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் பிழம்பை சில வினாடிகளுக்கு நீடிக்க வைத்து 10 MW பிணைவுச் சக்தியை உண்டாக்கினார்கள்! உச்ச அளவு 16 MW வரை ஏறியது! இதுவரைச் சாதித்த மிகையான அளவு சக்தி இதுதான்! ஆனால் சில வினாடிகள் நீடித்த அப்பிணைவு சக்தியை மேற்கொண்டு அதிகமாக்கவோ, அல்லது நீடிக்கச் செய்யவோ அதன் வடிவம் போதாது! அணுப்பிணைவு இயக்கம் தொடரக் குறைந்தது பிழம்பு நீடிப்பு 1000 வினாடிகளுக்கு நிகழ்த்த வேண்டும்! அதற்கு அதை விடப் பிரம்மாண்டமான டோகாமாக் அணு உலை ஒன்று நிறுவப் பட வேண்டும்!
2001 ஆம் ஆண்டில் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, கனடா, ஜப்பான் ஆகிய உலக நாடுகள் இகூடி 1000 மெகாவாட் ITER [International Thermonuclear Experimental Reactor] என்னும் மாபெரும் அகில டோகாமாக் யந்திரத்தை நிறுவி ஆராய்ச்சி செய்யத் திட்டங்கள் தயாராகி வருகின்றன. அதைக் கட்டி முடிக்க 6.6 பில்லியன் டாலர் தொகை ஒதுக்கப் பட்டுள்ளது. அந்த ஆய்வு நிலையம் 2005 ஆம் ஆண்டில் இயங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கனடாவின் கான்டு அழுத்தக் கனநீர் அணுமின் நிலையங்களில் [CANDU Pressurised Heavy Water Reactors] பல ஆண்டுகளாக உபரிப் பண்டமாய்ச் சேமிக்கப் பட்ட டிரிடியத்தையும் [Tritium], நீரில் கிடைக்கும் டியூடிரியம் [Deuterium] ஆகிய இரண்டையும் புதிய டோகாமாக் பிணைவு உலையில் பயன்படுத்துவதாக உள்ளது.
அணுப்பிணைவுச் சக்தி நிலையத்தில் ஏற்படும் சிக்கல்கள்!
ஆராய்ச்சி அணுப்பிணைவு உலைகளுக்கு இதுவரை உலக நாடுகள் 2 பில்லியன் டாலர்கள் செலவழித் துள்ளன! கால தாமதம் ஆவதால், இஇன்னும் 50 பில்லியன் டாலர் தொகை செலவாகலாம் என்று ஊகிக்கப்படுகிறது. மேலும் மிகச் சக்தி வாய்ந்த மின்காந்தத் தளம், அணுப்பிணைவு நிலையத்தில் இஇயங்குவதால், அதை ஆட்சி செய்யும் மனிதருக்கு அதனால் விளையும் தீங்குகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது! அடுத்து உலையில் பயன்படும் லிதியம் [Lithium] திரவத்துடன் ரசாயன இஇயக்க உக்கிரம் உடையது! அதன் விளைவுகளையும் அறிய வேண்டும். அனல் பிழம்புக்கு பிணைவு அணு உலை வளையத்தில்
நீடிக்கப்பட வேண்டிய அதி உன்னத சூன்ய நிலை நுணுக்கம் [High Vacuum Technique], மாசு மறுவற்ற தூசிகள் அற்ற எருக்களை ஊட்டும் ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து பராமரிப்பதில் சிரமங்களும் பிரச்சனைகளும் நேர வாய்ப்புள்ளன!
வெப்ப அணுக்கரு சக்தியே எதிர்கால மின்விளக்குகளுக்கு ஒளி ஊட்டும்
கடந்த 50 ஆண்டுகளாக அணுப்பிளவு உலைகளிலும், அணு ஆயுதப் பெருக்கங்களிலும் சேர்ந்த பல மடங்கு கதிரியக்கக் கழிவுகள் இன்னும் பாதுகாப்பான முறையில் புதைக்கப் படாமல் சூழ்மண்டலத்தை மாசு படுத்தித் தொடர்ந்து சேர்ந்து கொண்டே போகின்றன! இயற்கைத் தாது யுரேனியத்தின் பரிமாணம் உலகில் நாளொரு பொழுதும் குறைந்து கொண்டே போகிறது! எருப் பெருக்கும் எண்ணற்ற அணு உலைகள் [Breeder Reactors] யுரேனியம், தோரியம் ஆகிய செழிப்புத் தாதுக்களைப் [Fertile Materials] பயன்படுத்திச் சிறிய அளவு ஆற்றலில் [250 MWe] இயங்கி வந்தாலும், அணுப்பிளவு எரி பொருள் [புளுடோனியம்239, யுரேனியம்233] பெருமளவில் சேர்ந்து இன்னும் 50 ஆண்டுகளுக்கு ஈடு செய்ய முடியும் என்பதை உறுதியாகக் கூற முடியாது!

2001 ஜூலையில் ஐரோப்பியக் குழுவினர், ரஷ்யக் கூட்டரசுகள், கனடா, ஜப்பான் ஆகிய உலக நாடுகள் தமது டிசைனை ஒப்புக் கொண்டு 3.8 பில்லியன் ஈரோ [Euro] நாணயத்தில் ‘அகில நாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வு உலையைக் ‘ [International Themonuclear Experimental Reactor, ITER] கட்ட முடிவு செய்துள்ளன. அது அடுத்து ஆறு, ஏழு ஆண்டுகளில் இயங்க ஆரம்பித்து, வெற்றிகரமாய் மின்சக்தி பரிமாறி, 2030-2040 வருடங்களில் உலகெங்கும் பல புதிய வணிகத்துறை அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் ஓடத் துவங்கி, நமது மின்விளக்குகளுக்கு ஒளி ஊட்டப் போவதை நாம் உறுதியாக நம்பலாம்.

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...