bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 22 ஜூலை, 2016

எதிராகவே திரும்பிவிடும்

அமிர்தம் மட்டுமல்ல எல்லாமும் விளம்பரமும் கூட அளவுக்கு மிஞ்சினால் விசம்தான்.
இதை கபாலிக்கு எல்லா பக்கமும் இருந்தும் பல்வேறு வகைகளில் விதவிதமாக காசு கொடுத்து தானு செய்கிற விளம்பரம் படம் வெளியான பின்னர் அவருக்கு எதிராகவே திரும்பிவிடும்.
அந்த முனையில்தான் தானு தற்போது நிற்கிறார்.
வியாபார ஒப்பந்தக்காரர்களான(பிஸ்னஸ்புரொமொட்டர்ஸ்)ஏர்ஆசியாவும்,இணையதள ஒப்பந்தக்காரர்களும் விமானத்தில் கபாலி விளம்பரம் செய்வதும் ,ஐ.டி.நிறுவனம்விடுப்பு என்றுபடம்போடுவதும்,அங்குபணிபுரிபவர்கள்முகமூடிஉடன்போஸ்கொடுப்பது,விமானத்தில்வந்துதிரும்பவதுபோன்றபில்டப்புகளும் சரியான பலனைத் தருமா?

படத்தை வாங்கியவர்கள் ஆளுங்கட்சி அதிகாரமய்யம் அதானால் எவ்வாளவு கட்டணம் நிணயித்தாலும் அதை யாரும் தட்டிக்கேட்கமுடியது.அதற்கானதீர்ப்புகளை வழங்க குமாரசாமிகளும் கிருபாகரன்களும்தான் இங்கு நீதியரசர்களாக இருக்கிறார்கள். 

கபாலி படத்துக்கு பரபரப்பாகப் பரப்பப்பட்ட செய்திகளின் பின்னணி இதோ இந்த இணைப்பை சொடுக்கிப் பார்க்கலாம்.
மலேசியாவில் ரசிகர் தற்கொலை,தாய்லாந்து அரசி வலிய வந்து சந்திப்பு,ஐ.டி நிறுவனங்கள் விடுப்பு. தபால் உறை வெளியீடு என்று பல பரபர செய்திகள்.அனைத்தையும் உருவாக்கிய 
 தானு- கபாலி வண்டவாளங்கள் தண்டவாளத்தில்

https://www.patrikai.com/rumor-kabali-newsbond/
தபால் உறை,தபால் தலை போன்றவற்றை நாம் கூட பணம் கட்டி நம் படத்துடன் வெளியிட வைக்கலாம்.அது ஒன்றும் பெரிய சாதனையான காரியம் அல்ல.பணம்தான் தேவை.
கெத்து,மனிதன் போன்ற தமிழ்ப்பெயர்களுக்கு வரிவிலக்களிக்காத ஜெயலலிதா அரசு கபாலீஸ்வரர் என்பதன்சுருக்கமான கபாலி தமிழ்ப்பெயர் இல்லாவிட்டாலும் கூட இவ்வளவு வருமானமுள்ள,பிரமாண்ட தயாரிப்புக்கு வரி விலக்கு கொடுத்து அரசு தனதுகாலியாக உள்ள கல்லாப்பெட்டியை இன்னமும் காலியாக்கிக் கொள்ளும்.
படம் எவ்வளவுதான் மிக அல்லது மெகா சிறப்பாகஇருந்தாலும்கூட அதிக பட்சம்10 ,20 லட்சம் வரை விறபனையாகிற இடங்களில்80,90 லட்சங்களில் விலை பேசுவது வியாபார தர்மம் கிடையாது.
தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும்1000,2000 கட்டணம் கொடுத்து பார்க்க ரசிகர்களால் முடியாது.அப்படியே 1000 ரூபாய்கட்டனம்கொடுத்துஒருநாளில்1000 பேர்கள்பார்த்தாலும்10 லட்சம்தான்வரும்.சனி ஞாயிறு ஆகியடுத்த நாட்களிலும் அவ்வளவு கூட்டம் வந்தாலும்50000 லட்சம்வரை தான்பணம்பார்க்கமுடியும். அதன்பின்னர்100பேர்கள்வந்தாலே அதிகம்.கட்டணமும்100க்குமேல்வாங்கமுடியாது. பின்80 லட்சம் எப்படி வசூல் செய்வது அதற்கு மேல் தனக்கு லாபம் எ ப்படிபார்ப்பது?
இதில் படம் சரியில்லை என்றால் எந்த ரசிகனும் இரண்டாம்முறை ,பொதுவானவர்களும் திரையரங்கு பக்கம் திருபிக்கூட பார்க்க மாட்டார்கள்.
பாபா,லிங்கா,கோச்சடையான்என்று பலமுறை அனுபவங்களை சந்தித்தும் இப்படி தங்க முட்டை யிடும் வாத்துக்களை அறுப்பதை தொடர்வதுஏன்?

100 கோடிக்கு குறைவாக முதலீடை போட்டு விட்டு அதை 1000 கோடி அளவுக்கு லாபம் பார்க்க நினைப்பது மிகமடத்தனம்.இவர்கள் கோடிகளில் குவிக்க அப்பாவி ரசிகர்களை கடன்காரர்களாகவும்,திருடர்களாகவும் மாற்றுவதும் கட்டணம் கொடுத்து படம் பார்க்க முடியவில்லை என்று தற்கொலை அளவு போக வைப்பது சரியாகுமா?
தானுவும் படத்தை வாங்கிய ஜாஸ்சும் கொண்டிருக்கிற லாப வெறி காட்டேறிகளின் ரத்த வெறிக்கு சமம்.
மேலும் காசை வாங்கிக் கொண்டு தனது தொழிலான நடிப்பை செய்த ரஜினிக்கு ஏதோ உலக போட்டியில் எல்லா நாடுகளையும் குப்புறத் தள்ளி தங்கப்பதக்கம் வாங்கியவர் போல்,ஒலிப்பிக்கில் இந்தியாவை தூக்கி நிறுத்திய சாதனையை செய்தவரைப் போல் பாலாற்றில் கட்டுகிற அணையை தடுத்து நிறுத்தியவரைப் போல்,காவிரிநீரை கையோடு வாங்கிக் கொண்டு வந்தவரைப் போல்,முல்லைப் பெரியாறு பிரச்னையை முடித்து வளம் கொழிக்க வைத்தவரைப் போல் இன்னும் பல போல்களைப் போல் இந்த ஊடகங்கள் காசை வாங்கிக் கொண்டு அடிக்கிற ஜாலரா அலப்பறை வியப்புக்குப் பதில் எரிச்சலைத்தான் தருகிறது.
அதைத்தான் பலரும்சொல்லுகிறார்கள்.

ரஜினி தனது தொழிலை செய்து தனது வங்கிக் கணக்கில் இன்னும் சில கோடிகளை ஏற்றியிருக்கிறார்.இதில் ரசிகனுக்கோ,தமிழ்நாட்டு மக்களுக்கோ என்ன லாபம்?ஒழுங்காகஅதற்கு வரிகட்டினாலாவது நாட்டுக்குலாபம்.
இழப்புஎன்னவோ ரசிகனுக்குத்தான் முதல்காட்சி என்று ஆயிரங்களை தாரை வார்க்கப் போவது அந்த இளிச்சவாயர்கள்தானே?அதில்தானே அவர்கள் ஜென்மபயனே அடங்கியிருக்கிறது.

https://www.patrikai.com/rumor-kabali-newsbond/

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...