bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 29 மே, 2016

மோசடி ஆணையமா டிஎன்பிஎஸ்சி?



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழகத்தின் அரசு நிர்வாகத்திற்கு தேவையான எழுத்தர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் முதல்மாவட்ட துணை ஆட்சியர்கள், மாவட்டகாவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் வரையிலான அனைத்துப் பணிகளுக்கும் ஆட்களை தேர்வு செய்யும் முக்கிய அமைப்பாகும்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் இதை நம்பி அரசுப் பணிக்கு செல்ல முடியும்; அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், படித்து முடித்த ஒரு கோடிப் பேர் வேலை கேட்டு பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

வேலையின்மை மிகப் பெரும் சமூகப் பிரச்சனையாக மாறியுள்ள இன்றைய சூழலில், தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசுப் பணிக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கான சிறப்புப் பயிற்சி மையங்களிலும், லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவுபகலாக பயின்று வருகின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒரு நேர்மையான அமைப்புதானா என்பது இன்று பெரும் கேள்வியாகவும் மாறியுள்ளது.

ஊழல்களும் மோசடிகளும் நடைபெறும் ஆணையமாக மாறிவிட்டது என்றுசந்தேகம் வரும் அளவுக்கு அதன் செயல்பாடுகளில் குளறுபடிகள் நீடிக்கின்றன.

கடந்த 2014 டிசம்பர் 21ம்தேதி குரூப்4க்கான தேர்வுகள் நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. மதிப்பெண்கள் அடிப்படையில் முதற்கட்ட நேர்முகத் தேர்வு நடந்து முடிந்துள்ளது.

 தற்போது இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வு 6.5.2016க்கு மேல் நடைபெறும் என்ற அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்தது.

இதன் விபரம் குறித்த அட்டவணை இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.அதிலே மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களையும் நேர்முகத் தேர்வுக்குஅழைத்துள்ளார்கள். 
ஆனால் உண்மையாக இரவு பகலாக நம்பிக்கையோடு படித்து அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவில்லை. 
அதிக மதிப்பெண்கள் எடுத்த பலரும் இணையதளத்தை பார்த்துவிட்டு கொந்தளித்துவிட்டனர். 
உதாரணமாக 240403249 எண் உள்ளவர் 231 மதிப்பெண்கள் பெற்று ரேங்க்பட்டியலில் 5228 இடத்திலும் கம்யூனிட்டி ரேங்கில் 646வது இடத்திலும் உள்ளார். அவருக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பு வரவில்லை. 

ஆனால் இதைவிட மதிப்பெண் குறைந்துள்ளவர்கள் பலருக்கும் நேர்முகதேர்வுக்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

உதாரணமாக.1. Roll Number 271022277, kh®¡ 135, nu§»š 343792 community Rank 71601
2. Roll Number 2600525037, kh®¢ 141, nu§»š 284255 Community Rank 58389
3. Roll Number 270139086, kh®¡ 154.5, nu§»š 180056 Community Rank 36044
4. Roll Number 010807168, kh®¡ 157.5, nu§»š 162245 Community Rank 73135
5. Roll Number 030162283, kh®¡ 159, nu§»š 155318 Community Rank 69998.
இது ஒரு சாம்பிள் மட்டுமே. 

இதைவிட நிறைய எண்கள், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். இதில் சிறப்பு கோட்டா என்று கூறவும் முடியாது. ஒரே கம்யூனிட்டியை சேர்ந்தவர்களில் மதிப்பெண் அதிகமாக பெற்ற பலரும்அழைக்கப்படவில்லை. 

குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.ஏதோ குளறுபடியோ, மோசடியோ நிகழ்ந்துள்ளது என்று நினைத்து பாதிக்கப்பட்ட தேர்வர்கள் சிலர் சமீபத்தில் தூத்துக்குடியிலிருந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைமையகத்துக்குச் சென்றுள்ளனர். அங்கே போனபோதுதான் இதேபோன்று பாதிக்கப்பட்ட பலரும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருப்பது தெரியவந்தது. 

அங்குள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகிய போது, அங்குள்ள அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்துள்ளனர்.

தேர்வர்களின் கேள்விகளைச் சமாளிக்க முடியாமல் நான்காம் தளத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடமிருந்தும் அழைப்பு வந்தது. எல்லோரையும் சேர்ந்து சந்திக்க முடியாது. யாராவது ஒருவரை வரச் சொல்லுங்கள் என்றார் அவர். அந்த ஒருவரையும் தேவையில்லாமல் பிரச்சனை செய்யாதீர்கள் என்று சொல்லி மிரட்டியிருப்பதாகத் தெரிகிறது. 

மேலே சென்ற அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது.மற்றவர்களுக்கு உரிய பதில் இல்லை. இதனால் அச்சமடைந்த இளைஞர்கள் இங்கு முறைகேடு நடப்பது உறுதி என்று, இந்த தகவல்களை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் அதிகம் பேர் பகிர்ந்து வருகின்றனர். 

இதற்கிடையே 2013-14 , 2014-15-20.4.2016 மேலும் கம்யூனிட்டி ரேங்க்பார்த்து தெரிந்து கொள்ளும் நிலையிலிருந்தது. 

தற்போது உண்மையை மறைக்க சர்ச்சைக்குரிய மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலை இணையதளத்திலிருந்து எடுத்துவிட்டார்கள்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தகுதி வாய்ந்தவர்களை எவ்வித விருப்புவெறுப்புமின்றி நேர்மையாக தேர்வு செய்கிற அமைப்பு. 

அதிமுக அரசின் காலங்களில் இத்தகைய நம்பிக்கையை இழந்து அதன் பெருமை சீரழிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் அதிமுக ஆட்சியில் இருக்கும்போது அதிமுகவின் துணைஅமைப்பாக தேர்வாணையம் மாற்றப்படுகிறது.
உதாரணத்திற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரும், 14 உறுப்பினர்களும் இருக்க வேண்டும். 

இதில் 11 உறுப்பினர் பணியிடங்கள் காலியாக இருந்ததையடுத்து அவற்றை நிரப்புவதற்காக 11 பேரை கடந்த அதிமுக அரசு நியமித்தது. அதிலே ஐஏஎஸ் அதிகாரிராஜாராம் உள்ளிட்ட நால்வர் தவிர மீதமுள்ள 7 பேர் ஆளுங்கட்சி வழக்கறிஞர்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ற சட்டப்பூர்வ ஆணையத்தின் உறுப்பினராவதற்கான தார்மீக தகுதி அவர்களுக்கு இல்லை. ஆனால் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ஆளுங்கட்சி அதிகார துஷ்பிரயோகத்தை செய்துள்ளது. 
இந்த 14 பேரில் ஒருவர் கூட பெண்கள் நியமிக்கப்படவில்லை என்பதும் கண்டனத்திற்குரியதே.அதிமுக ஆட்சியில் இதற்கு முன் இப்பதவியில் நியமிக்கப்பட்டவர்களும் அதிமுகவின் செயல்பாட்டாளர்களே என்பதையும் பார்க்க முடியும்.காவல்துறை தலைமை இயக்குநராக இருந்தபோது காட்டிய விசுவாசத்திற்காக ஆர்.நட்ராஜ் இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பதவிக்காலம் முடிந்தவுடன் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

அவருக்கு பிறகு ஜெயலலிதாவின் ஊழல் வழக்குகளை நடத்திய அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியான நவநீதகிருஷ்ணன் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இப்படியாக பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு அதிமுகவின் துணை அமைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது.

தகுதியும், நேர்மையும் இல்லாமல் விசுவாசத்தின் அடிப்படையில் நியமிக்கப்படுவதால்தான் ஊழல் ஆணையமாக மாறி வருகிறது.

 தேர்வாணையத்தின் தலைவராக செல்லமுத்து இருந்தபோது லஞ்சம் வாங்கிக் கொண்டு பணி வழங்கப்பட்டது. பெரும் ஊழல் நடைபெற்றது. 

42 அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைநடத்தினர். 
அதன் தொடர்ச்சியாக குரூப் 4 நேர்முக தேர்வில் தகுதியானவர்களை புறக்கணித்து தகுதியற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க முயற்சிகள் நடைபெறுகிறதா? 

இதுகுறித்து வெளிப்படைத்தன்மையோடு தேர்வாணையம்தகவல்களை வெளியிட முன்வருமா? 

சனி, 21 மே, 2016

இந்தியா: அழிவை நோக்கி?

தேர்தலில் ஜெயலலிதாவே மீண்டும் வந்ததால் அமைச்சர்கள்,அதிகாரிகள் தன்மானத்துக்கு பெரும் இழிவு வந்தது போல் அடுத்த இழப்பு செய்தி வந்துள்ளது.

ஆனால் இது ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கு .
பருவநிலை மாற்றத்தால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடல் மட்டம் அதிகரித்து, பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது என, ஐ.நா., ஆய்வறிக்கை தெரிவிக்கிறது..
இந்தியாவில், கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட நகரங்களில், 2050ம் ஆண்டிற்குள், நான்கு கோடி பேர், ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காடுகள் அழிப்பு, நச்சுகளின் அளவு அதிகரிப்பது போன்ற காரணங்களால், பூமியின் வெப்பநிலை, இயல்புக்கு மாறாக அதிகரித்து வருகிறது. 
மேலும், பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் சில பகுதிகளில் கடும் வறட்சியும், வேறு சில பகுதிகளில் வரலாறு காணாத மழையும் பெய்து வருகின்றன.
இதனால், பெரிய அளவில், இயற்கைச் சீற்றங்கள் நடைபெறுகின்றன. 
இதன் பாதிப்புகளை அறிந்து, முன்கூட்டியே தடுக்கும் வகையில், உலகளாவிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, ஐ.நா., சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு, கென்யா தலைநகர் நைரோபியில், அடுத்த வாரம் நடைபெறுகிறது. 

இந்நிலையில், ஐ.நா.,வின் சர்வதேச சுற்றுச்சூழல் சார்ந்த, ஆய்வறிக்கை ஒன்று, வெளியாகியுள் ளது. இதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளஅதிச்சி செய்திகள் :


* பசிபிக் மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக, மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன 

* சீனா, இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகள் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் உள்ளது 
* இந்த நாடுகளில், கடல் பகுதியையொட்டியுள்ள நகரங்களில், வேகமாக நகரமயமாக்கலும், பொருளாதார வளர்ச்சி திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. 
* பெரும்பாலான கடற்கரை பகுதியில், நகர்ப்புறங்களில், மக்கள் அதிகமாககுடியேறி வருகின்றனர். நகரமயமாதலால், கடலோர பகுதிகள் பாதிப்படைகின்றன.

* வருங்காலங்களில் அந்த நகரங்களில் பாதிப்புகள் அதிக அளவு இருக்கும். இந்தியாவில், கோல்கட்டா மற்றும் மும்பையில், கடல் மட்டம் அதிகரித்து, கடல் நீர் உட்புகும் ஆபத்து உள்ளது.
 
* வரும், 2050ம் ஆண்டுக்குள், கடல்மட்ட அதிகரிப்பால், உலகளவில் அதிகமாக பாதிக்கப்படக் கூடிய, 10 நாடுகளில், ஏழு நாடுகள் ஆசிய பசிபிக் பகுதியில் உள்ளன.

 
* கடல் மட்டம் அதிகரிப்பால் பாதிக்கும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதனால், இந்தியாவில், நான்கு கோடி பேர், ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர் 
* அடுத்த படியாக வங்கதேசத்தில், 2.5 கோடி பேரும், சீனாவில், இரண்டு கோடி பேரும், பிலிப்பைன்சில், 1.5 கோடி பேரும் ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. 


கடல் மட்டம் அதிகரிப்பதால், சீனாவில் ஷாங்காய், வங்கதேசத்தில் தாகா, மியான்மரில் யாங்கூன், தாய்லாந்தில் பாங்காக், வியட்நாமில் ஹோ - சி மின்நகரங்களும் பாதிப்படையும்.இந்நகரங்களில், பெரிய அளவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், 2070ல், மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

பெருவெள்ள ஆபத்து தொடர்பாக ஆய்வு செய்த, பிரிட்டனைச் சேர்ந்த, 'கிறிஸ்டியன் எய்டு' என்ற தன்னார்வ அமைப்பு ஏற்கனவே அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. 

'வெள்ளத்தால், 2060ம் ஆண்டிற்குள், 100 கோடி பேர் பாதிக்கப்படுவர்' என, அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. 

பெரிய அளவு வெள்ளச்சேதம் ஏற்படும், 10 நாடுகளின் பட்டியலில், சீனா, முதலிடத்திலும், இந்தியா, இரண்டாவது இடத்திலும் உள்ளன.வங்கதேசம், இந்தோனேஷியா, வியட்நாம், அமெரிக்கா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.


பருவநிலை மாற்றத்தால், அன்டார்டிகாவிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அங்கு, குளிர்ச்சி அளவு அதிகரித்து வருகிறது. இதனால், பனியின் அளவு, 2100ம் ஆண்டிற்குள், 1 மீட்டர் அளவுக்கு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

 பசிபிக் கடல் பகுதியில் உள்ள சாலமோன் தீவுக் கூட்டங்களில், கடல் மட்டம் உயர்ந்து, ஐந்து தீவுகள் காணாமல் போயுள்ளது. 
இந்த ஐந்து தீவுகள் மறைவு அண்டார்டிகா பாதிப்பு உலக அளவில் வரைபடங்களில் கொண்டுவரப் போகும் மாற்றத்தை அபாயத்தை உண்மை என்று புரிய வைத்துள்ளது.
இந்த ஐந்து தீவுகள் மட்டுமல்ல மேலும்  ஆறு தீவுகள், கடல் அரிப்பால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 
முன்பு மனிதர்கள் வசித்த இந்த தீவுகளை தற்போது அவ்வப்போது மட்டும் கச்சத் தீவைப்போல்  மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். 
இத்தீவுகளில், மக்கள் யாரும் நிரந்தரமாக வசிக்கவில்லை.இந்த தீவுகளும் கடலில் தனது வாழ்நாளை எண்ணி   சிறிது,சிறிதாக மறைந்து வருகிறது.

புதன், 4 மே, 2016

நடுநிலை முகமூடி



இன்றைய அக்னி நடசத்திர விவாதமே தினமலர்-நியூஸ் 7 "மாபெரும் கருத்துக்கணிப்பு பற்றித்தான் இருக்கிறது.

அதன் முடிவுகளை பற்றி திமுகவினர் மகிழ்ச்சியை விட நடுநிலையாளர்கள்[?]பொருமல்தான் அதிகம்.
இதற்கு சில நாட்கள் முன்னாள் தந்தி தொலைக்காட்சி தனக்குள் நடத்திய கருத்துக்கணிப்பை பற்றி யாருமே எந்த விவாதமும் நடத்தவே இல்லை.

அதை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள்.
மாபெரும் அரசியல் தரகர் வைகோ கூட அதிர்ச்சி தெரிவிக்கவில்லை."அதெப்படி எங்கள் கே.ந.கூ ட்டணிக்கு ஒரு இடம் கூட தரப்படவில்லை "என்று வெறும் கண்டனம் கூட சொல்லவில்லை.

காரணம் அதில் அனைத்து தொகுதிகளுமே அதிமுக தான் வெற்றி என்பது போல் கருத்து திணிப்பு நடந்தது.
ஆனால் தினமலர்-நியூஸ் -7 மட்டும் கடும் கண்டனங்களை பதிவு செய்யக் காரணம்.மக்கள் மத்தியில் திமுகவுக்கு உண்டான ஆதரவை சுட்டிக்காட்டியதால்தான்.

பொதுவாக கருத்துக்கணிப்பையே பொய் என்று சொல்லும் அரசியல் நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட இந்த கருத்துக்கணிப்பை  அவசரமாக கண்டித்துள்ளார்கள்.
சில நடு நிலையாளர்கள் ஒரு படி மேலேயே போய் தினமலர் கோடிகளில் திமுகவுக்கு விலை போய் விட்டார்கள் என்று தங்கள் கண்டு பிடிப்பை சொல்லியுள்ளார்கள்.

ஏன் இவர்களால் மற்ற கருத்துக்கணிப்பை போல் தினமலர் கருத்துக்கணிப்பை கடந்து செல்ல முடியவில்லை?
தாங்கள் நடுநிலையுடன் ஆதரவு தரும் அதிமுகவுக்கு எதிரான முடிவுகள் வந்ததாலா?
இதுவரை தங்களால் சாதி அடிப்படையில் தினமலர் ஜெயலலிதாவுக்கு ஆதரவானது என்று கொண்டிருந்த எண்ணம் இந்த கணிப்பினால் சிதறி விட்டது என்பதாலா?

தினமலர் விலை போயிருப்பதாக இவர்கள் சொல்லுவதை ஏற்றுக்கொண்டாலும் கூட இணைந்து கணிப்பை நடத்திய நியூஸ்-7 தொலைக்காட்சி ஜெயா தொலைக்காட்சியில் பெரும்பான்மையான பங்குகளைக்கொண்ட  கார் மணல் வைகுண்டராஜனுக்கு முழுக்க சொந்தமான தொலைக்காட்சி என்பதை இவர்கள் மறந்து விட்டார்களா என்று கேட்கத்தோன்றுகிறது.
அவரும் கூட திமுகவுக்கு விலை போய்விட்டிருப்பாரோ?
இதுவரை எந்த பத்திரிகையும்,தொலைக்காட்சியும் கருத்துக்கணிப்பை நடத்தியதில்லையா என்ன?
மக்கள் முன் தந்தி தொலைக்காட்சி தனது பக்கா அதிமுக ஆதரவு செய்திகள்,விவாதங்கள்,கருத்துக்கணிப்புகள்,போன்றவற்றை பார்த்து சிரித்ததை மறந்து விட்டார்களா?

எல்லாப் பத்திரிகைகளையும்போலத்தானே தினமலரும் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.இதில் ஏன் கடுப்பு.
தந்தி போன்று செய்தியாளர் அறைக்குள் நடத்தி ஒரு சார்பாக கணிப்பை எல்லோரும் நம்பிக்கையின்றி பார்க்கவைத்தைதை போல் அல்லாமல் தினமலர்-நியூஸ்-7 மகா கருத்துக்கணிப்பு பலமாக திட்டமிட்டு நூற்றுக்கணக்கானவர்கள் மூலம் படிவம் மக்களிடம் தொகுதிக்கு 1000 பேர்கள் எனக்கணக்கிட்டு கொடுக்கப்பட்டு நிரப்பி வாங்கப்பட்டடுள்ளது.

உடனே நிரப்பாதவர்கள் தபாலில்  அனுப்பவும் எற்பாடு எய்யப்பட்டது.
பின் அவை அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு அதன் மூலமாக ஆதரவு எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் காணொளி மூலம் பதிவு செய்யப்பட்டு அதுவும் ஒளி பரப்பப் பட்டும் விலை போன விமர்சனம் எழுகிறது என்றால் ஒரே காரணம் மட்டுமே உள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு அதரவாக இருப்பது மட்டுமே.
அது அப்படியே அதிமுகவாக இருந்திருந்தால் தினமலர் மீது நம்பிக்கை அதிகரித்துக்கும் நியாயமான  கணிப்பு என்று கொண்டாடப்படிருக்கும்.

ஆக கோபம் கருத்துக்கணிப்பின் முடிவுகள் மீதும்,அதை அப்படியே வெளியிட்டதால் விலை போன தினமலர் மீதும் மட்டும்தான்.அதன் உள்ளார்ந்த கோபம் திமுக மீது மட்டும்தான் என்பதை விளங்கிக்கொள்ள நாம் நடு நிலையாளர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இன்றைய பத்திரிகைகள்,மின்னணு ஊடகங்கள் ,தொலைக்காட்சிகள்,சமூக வலைத்தளங்களில் உள்ள நடுநிலையாளர்கள்,சமூக ஆர்வலர்கள் ஏன்றாலே அவர்களின் அடிப்படை தகுதி திமுக எதிர்ப்பு,ஜெயலலிதா ஆதரவு என்பதுதான்.
எனவேதான் இக்கருத்துக்கணிப்பு இவ்வளவு அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது.
அதிமுக சார்பான நாளிதழ் என்று  இருந்த தினமலரில் இப்படி செய்தி  வெளியானதில் உண்டான அதிர்வுகள்தான் இவை.
1972 முதல் தினமலரின் வளர்ச்சி என்பது உச்சத்தை எட்ட வேகமேடுத்தக் காலம் எம்.ஜி.ஆரின் அரசியல் வளர்ச்சியும் தினமலரின் நாளிதழ் பல பதிப்பு வேக வளர்ச்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருந்தது.
தினமலரால் எம்ஜிஆர வளர்ந்தார்.எம்ஜிஆர் எதிர்ப்பை கொண்டிருந்த தினத்தந்திக்கு எதிராக எம்ஜி ஆர் செய்திகளை முக்கியத்துவத்துடன் கொடுத்ததால் தினமலர் வளர்ந்தது.

இதனால்தான் இன்றும் எம்ஜிஆர் பிறந்த,இறந்த நாட்களில் சிறப்புக்கட்டுரை -படங்களை தினமலர் வெளியிட்டு நன்றியை செலுத்துகிறது.அவ்வளவுதான் தினமலருக்கு உள்ள அதிமுக தொடர்பு.
மற்றபடி ஜெயலலிதா அட்சியில் நடந்த ஊழல்களை தினமலர் அடிக்கடி ஆதாரங்களுடன் வெளியிட்டுத்தான் வந்துள்ளது.

சத்துணவு முட்டை ஊழல்,பருப்பு ஊழல்,மின்துறை ஊழல் என்று எத்தனையோ ஜெயலலிதா ஊழல்கள்,அரசு முறைகேடுகள் செய்திகள் தினமலரில் வந்துள்ளது,வந்து கொண்டும் இருக்கிறது.
ஆக இது தினமலரின் ஆசைக்கான கருத்துக்கணிப்பல்ல.
மக்கள் மனதில் உள்ள ஆசையின் வெளிப்பாடு.

எய்தவன் இருக்க அம்பை நோவது தவறு.

தினமலர் ,நியூஸ்-7 இரண்டுமே திமுகவை எதிர்ப்பவர்கள் பக்கம் இருந்து வந்தவைதான்.இப்படியானசெய்தியை வெளியிடுவதுதான் நடுநிலை.
திமுக எதிர்ப்பு மனதை மறைக்க போட்டுக்கொள்ளும் இன்றைய நடுநிலை முகமூடி உண்மையான நடுநிலையல்ல.
=======================================================================================

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...