bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 21 மே, 2016

இந்தியா: அழிவை நோக்கி?

தேர்தலில் ஜெயலலிதாவே மீண்டும் வந்ததால் அமைச்சர்கள்,அதிகாரிகள் தன்மானத்துக்கு பெரும் இழிவு வந்தது போல் அடுத்த இழப்பு செய்தி வந்துள்ளது.

ஆனால் இது ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கு .
பருவநிலை மாற்றத்தால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடல் மட்டம் அதிகரித்து, பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது என, ஐ.நா., ஆய்வறிக்கை தெரிவிக்கிறது..
இந்தியாவில், கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட நகரங்களில், 2050ம் ஆண்டிற்குள், நான்கு கோடி பேர், ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காடுகள் அழிப்பு, நச்சுகளின் அளவு அதிகரிப்பது போன்ற காரணங்களால், பூமியின் வெப்பநிலை, இயல்புக்கு மாறாக அதிகரித்து வருகிறது. 
மேலும், பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் சில பகுதிகளில் கடும் வறட்சியும், வேறு சில பகுதிகளில் வரலாறு காணாத மழையும் பெய்து வருகின்றன.
இதனால், பெரிய அளவில், இயற்கைச் சீற்றங்கள் நடைபெறுகின்றன. 
இதன் பாதிப்புகளை அறிந்து, முன்கூட்டியே தடுக்கும் வகையில், உலகளாவிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, ஐ.நா., சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு, கென்யா தலைநகர் நைரோபியில், அடுத்த வாரம் நடைபெறுகிறது. 

இந்நிலையில், ஐ.நா.,வின் சர்வதேச சுற்றுச்சூழல் சார்ந்த, ஆய்வறிக்கை ஒன்று, வெளியாகியுள் ளது. இதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளஅதிச்சி செய்திகள் :


* பசிபிக் மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக, மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன 

* சீனா, இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகள் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் உள்ளது 
* இந்த நாடுகளில், கடல் பகுதியையொட்டியுள்ள நகரங்களில், வேகமாக நகரமயமாக்கலும், பொருளாதார வளர்ச்சி திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. 
* பெரும்பாலான கடற்கரை பகுதியில், நகர்ப்புறங்களில், மக்கள் அதிகமாககுடியேறி வருகின்றனர். நகரமயமாதலால், கடலோர பகுதிகள் பாதிப்படைகின்றன.

* வருங்காலங்களில் அந்த நகரங்களில் பாதிப்புகள் அதிக அளவு இருக்கும். இந்தியாவில், கோல்கட்டா மற்றும் மும்பையில், கடல் மட்டம் அதிகரித்து, கடல் நீர் உட்புகும் ஆபத்து உள்ளது.
 
* வரும், 2050ம் ஆண்டுக்குள், கடல்மட்ட அதிகரிப்பால், உலகளவில் அதிகமாக பாதிக்கப்படக் கூடிய, 10 நாடுகளில், ஏழு நாடுகள் ஆசிய பசிபிக் பகுதியில் உள்ளன.

 
* கடல் மட்டம் அதிகரிப்பால் பாதிக்கும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதனால், இந்தியாவில், நான்கு கோடி பேர், ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர் 
* அடுத்த படியாக வங்கதேசத்தில், 2.5 கோடி பேரும், சீனாவில், இரண்டு கோடி பேரும், பிலிப்பைன்சில், 1.5 கோடி பேரும் ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. 


கடல் மட்டம் அதிகரிப்பதால், சீனாவில் ஷாங்காய், வங்கதேசத்தில் தாகா, மியான்மரில் யாங்கூன், தாய்லாந்தில் பாங்காக், வியட்நாமில் ஹோ - சி மின்நகரங்களும் பாதிப்படையும்.இந்நகரங்களில், பெரிய அளவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், 2070ல், மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

பெருவெள்ள ஆபத்து தொடர்பாக ஆய்வு செய்த, பிரிட்டனைச் சேர்ந்த, 'கிறிஸ்டியன் எய்டு' என்ற தன்னார்வ அமைப்பு ஏற்கனவே அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. 

'வெள்ளத்தால், 2060ம் ஆண்டிற்குள், 100 கோடி பேர் பாதிக்கப்படுவர்' என, அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. 

பெரிய அளவு வெள்ளச்சேதம் ஏற்படும், 10 நாடுகளின் பட்டியலில், சீனா, முதலிடத்திலும், இந்தியா, இரண்டாவது இடத்திலும் உள்ளன.வங்கதேசம், இந்தோனேஷியா, வியட்நாம், அமெரிக்கா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.


பருவநிலை மாற்றத்தால், அன்டார்டிகாவிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அங்கு, குளிர்ச்சி அளவு அதிகரித்து வருகிறது. இதனால், பனியின் அளவு, 2100ம் ஆண்டிற்குள், 1 மீட்டர் அளவுக்கு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

 பசிபிக் கடல் பகுதியில் உள்ள சாலமோன் தீவுக் கூட்டங்களில், கடல் மட்டம் உயர்ந்து, ஐந்து தீவுகள் காணாமல் போயுள்ளது. 
இந்த ஐந்து தீவுகள் மறைவு அண்டார்டிகா பாதிப்பு உலக அளவில் வரைபடங்களில் கொண்டுவரப் போகும் மாற்றத்தை அபாயத்தை உண்மை என்று புரிய வைத்துள்ளது.
இந்த ஐந்து தீவுகள் மட்டுமல்ல மேலும்  ஆறு தீவுகள், கடல் அரிப்பால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 
முன்பு மனிதர்கள் வசித்த இந்த தீவுகளை தற்போது அவ்வப்போது மட்டும் கச்சத் தீவைப்போல்  மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். 
இத்தீவுகளில், மக்கள் யாரும் நிரந்தரமாக வசிக்கவில்லை.இந்த தீவுகளும் கடலில் தனது வாழ்நாளை எண்ணி   சிறிது,சிறிதாக மறைந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...