bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 29 நவம்பர், 2017

பொருளாதார சுனாமி உருவாக்குமா பிட்காயின்?

உலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற பெயரில் கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியும் என்ற வேட்கையோடு முதலாளித்துவம் நடத்தி வரும் சதுராட்டங்களால் 2008ம் ஆண்டு ஏற்பட்டு மிகக்கடுமையான நெருக்கடியைப் போலவோ அல்லது அதைவிட இன்னும் கடுமையானதாகவோ பொருளாதார நெருக்கடி ஏற்படும் என சர்வதேச பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

வெறும் 900 டாலர் மதிப்பு கொண்ட பணத்தை அல்லது பொருளை பிட்காயின் என்று சொல்லப்படுகிற டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் உலவ விடுவதன் மூலம் 10,000 ஆயிரம் டாலர் மதிப்பு அளவிற்கு இன்றைய டிஜிட்டல் பரிவர்த்தனை யுகத்தில் லாபம் பார்க்க முடியும் என்ற சூழலை பெரும் கார்ப்பரேட்டுகள் உருவாக்கியுள்ளன. 

நவீன வரலாற்றில் இப்படி ஒரு கொள்ளை லாபம் எதிலும் பார்க்கப்பட்டதில்லை.
இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் ஏடு வெளியிட்டுள்ள செய்தியில், எந்தப் பொருளையும் உற்பத்தி செய்யாமல் – புதிதாக எந்தவொரு மதிப்பையும் உற்பத்தி செய்யாமல் டிஜிட்டல் பணம் என்ற பெயரில் பல நூறு மடங்கு லாபம் பார்க்கப்படுகிறது; 
இதற்கு முன்பு பணத்தின் மதிப்பில் இத்தனை பெரிய லாபம் பார்க்கப்பட்டது என்றால் அது 1915ம் ஆண்டுதான்; 
அப்போதும் கூட 82 சதவீதம் அளவிற்குத்தான் லாபம் பார்க்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் பெரும் பணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமையிடமாக அமைந்துள்ள வாஷிங்டனின் வால்ஸ்ட்ரீட் பகுதியே உலக அளவிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் இயங்கு தளமாக இருக்கிறது; வால்ஸ்ட்ரீட்டை மையமாகக் கொண்டு செயல்படும் மிகப்பெரும் நிதி நிறுவனங்கள் உலகம் முழுவதும் நிதிச் சந்தைகளில் லட்சக்கணக்கான கோடி டாலர்களை கொட்டுகின்றன; 
டிஜிட்டல் பணம் என்ற வடிவத்தில் கொட்டப்படும் இந்தப் பணம் எந்த உற்பத்தியும் செய்யப்படாமல் மீண்டும் அங்கிருந்து லட்சக்கணக்கான கோடி டாலர்களை லாபமாக அள்ளிச் செல்கிறது.
இது முற்றிலும் தங்கு தடையற்ற – உலகையே லாப வேட்டைக்காடாக மாற்றியிருக்கிற – யாராலும் நிறுத்த முடியாத மோசடியாக அரங்கேறி வருகிறது; டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் கடன் கொடுப்பதற்கோ, வட்டி வசூலிப்பதற்கோ, பண பரிவர்த்தனை செய்வதற்கோ எந்தவிதமான வரையறைகளோ, விதிமுறைகளோ, சட்டதிட்டங்களோ இல்லை; 

இதனால் நுகர்வோரின் பணத்திற்கு எந்த பாதுகாப்போ அல்லது உத்தரவாதமோ இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்கள் தங்களது ஒட்டுமொத்த மக்களையும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை நோக்கி தள்ளிவிட்டுள்ளன. 
இதன்பின்னணியில் மிகப்பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபமே இருக்கிறது. இந்தத் துறையில் முதலீடு என்ற பெயரில் பெரும் நிறுவனங்கள் மத்திய வங்கிகளில் அல்லது பொதுத்துறை வங்கிகளிலிருந்து பெருமளவு பணத்தை கடனாக பெற்று அதை முதலீடு செய்கின்றன.
பங்குச் சந்தையிலும் அந்தப் பணத்தை வைத்து சூதாட்டம் நடக்கிறது. 
வங்கிகளின் கணக்குகளில் மிகப்பெருமளவு பணம் இருப்பது போல இந்த நிறுவனங்கள் காட்டினாலும் உண்மையில் ஒட்டுமொத்த பணத்தையும் இந்நிறுவனங்கள் அல்லது பெரு முதலாளிகள் சூறையாடி வேறு இடத்திற்கு கொண்டுசென்று மீண்டும் மீண்டும் டிஜிட்டல் பண வடிவில் நிதிக்கட்டமைப்பிற்குள் செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள். 
அதன்மூலமாக ஒட்டுமொத்த உலகின் நிதி கட்டமைப்பையும் இவர்களே ஆதிக்கம் செய்கிறார்கள் என்றும் நியூயார்க் டைம்ஸ் ஏடு விவரித்துள்ளது.
சர்வதேச டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உலகில் பிட்காயின் என்று அழைக்கப்படும் இந்த டிஜிட்டல் பண முறையை 2009ஆம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த சதோஷி நகாமோட்டோ என்பவர் தலைமையிலான முதலாளிகள் குழு அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

முதலில் டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது என்று முன்மொழியப்படும்.
எளிதானது என்று நம்பவைக்கப்படும்; மக்கள் இந்த வடிவத்திற்கு பழகியதற்கு பிறகு மத்திய வங்கிகள் மற்றும் அரசின் சட்டவிதிமுறைகள் அனைத்தும் தூக்கி எறியப்பட்டு டிஜிட்டல் பண வரித்தனை என்பதே முற்றிலும் அராஜகம் நிறைந்த, சர்வாதிகாரம் நிறைந்த வடிவமாக மாறும். 
விதிமுறைகள் அனைத்தும் மீறப்படும் நிலையில் இந்தப் பணம் எளிதில் கையாள முடியாத ஒன்றாக – பெரும் துயரத்தை தரக்கூடியதாக மாறும். 
அது படிப்படியாக ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்யும். 
அதன் விளைவாக இந்த உலகம் இதுவரை எதிர்கொள்ளாத மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்று சர்வதேச நிதி விவகார வல்லுநரான ஆன்ட்ரே தாமோன் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் எச்சரித்திருக்கிறார்.

வெள்ளி, 17 நவம்பர், 2017

நிர்வாணத்தை உணர வைத்த தேர்தல் அலை !

நிர்வாணப் பேரரசரின் கதையைக் கேட்டவர்கள் அந்தக் கதையின் முடிவைக் கேட்டிருக்க மாட்டார்கள். இதோ அந்தக் கதையின் முடிவு இப்படியாக இருந்தது.
பேரரசர் மெல்லக் குனிந்து பார்த்தார்; முதன்முறையாகத் தான் அம்மணமாக இருப்பதை அறிந்து கொண்டார். சுற்றிலும் தலையைத் திருப்பிப் பார்த்தார்; அவையில் உள்ளோர் எல்லாம் அரசர் அணிந்துள்ள ஒளிபொருந்திய அங்கியைக் குறித்து சிலாகிப்பதைப் பார்த்தார். “ஒருவேளை எல்லோரும் நம்மை ஓட்டுகிறார்களோ” என தனக்குத் தானே சந்தேகமாய்ச் சொல்லிக் கொண்டார். தனது தலைமை அமைச்சரும் அவையினர் போலவே சிலாகிப்பதைக் கண்டதும் பேரரசரின் சந்தேகம் அதிகரித்தது. சாளரத்தின் வழியாய் வீசிய காற்று நிர்வாண உடலில் படர்வதை உணர்ந்தார்; பேரரசரின் முகம் அவமானத்தில் கறுத்தது.

***

குஜராத் தேர்தல் எண்ணற்ற ஆச்சரியங்களைத் தன்னோடு அழைத்து வந்துள்ளது. முதன்முறையாக எதற்குமே வளைந்து கொடுக்காதவர் எனக் கருதப்பட்ட மோடி மெல்ல இறங்கி வந்துள்ளார். கடந்த நவம்பர் 10 -ம் தேதி கூடிய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் இது வரை 28 சதவீத வரி விதிப்பு வளையத்தில் இருந்த சுமார் 178 பொருட்களின் வரிவிகிதம் குறைக்கப்பட்டு, அவை 18 சதவீத வரி விதிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் வெறும் 50 பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரி வளையத்தின் கீழ் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்துக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “பாராளுமன்றத்தாலும், பொது அறிவாலும் சாதிக்க முடியாததைச் சாதித்ததற்காக நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 
எதிர்வரும் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றாக வேண்டும் என்கிற கட்டாயத்தை பாரதிய ஜனதா தனக்குத் தானே உண்டாக்கி வைத்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தாம் 150 -க்கும் மேற்பட்ட இடங்களை வென்று சாதனை படைப்போம் என அமித்ஷா வெற்றிக்கான இலக்கை நிர்ணயித்து விட்டார்.
கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் பாரதிய ஜனதா ஆட்சியில் இரண்டு முக்கியமான விளைவுகள் நடந்தேறியுள்ளன. ஒன்று பொருளாதாரத் துறையில்; மற்றொன்று சமூகத் துறையில்.
பொருளாதாரத் துறையைப் பொருத்தவரையில் மோடி ஆட்சிக்கு வந்ததை அடுத்து தனிநபர் வருமானம் தொடர்ந்து குறைந்து, தற்போது ஏழாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பெரும் ஆரவாரத்துடன் 2003 -ம் ஆண்டு ‘வைப்ரண்ட் குஜராத்’ எனும் கொண்டாட்ட நிகழ்வு மோடியால் துவங்கி வைக்கப்பட்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முதலாளிகள் இந்நிகழ்வுக்கு வரவழைக்கப்பட்டு புதிய தொழில்கள் துவங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
2003 -ம் ஆண்டு துவங்கி 2017 வரை 8 முறை வைப்ரண்ட் குஜராத் கொண்டாடப்பட்டுள்ளது. 2003 -ம் ஆண்டு நடந்த நிகழ்வில், இந்தியா தவிர 53 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 தொழிற்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டு சுமார் 66 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் முனைவுக்கான 76 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்வில் 55 ஆயிரம் பார்வையாளர்களும், 110 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஆறாயிரம் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு 25,578 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

2017 வைப்ரண்ட் குஜராத் நிகழ்ச்சியில் உரையாற்றும் மோடி
கடைசியாக நடந்த ஏழு வைப்ரண்ட் குஜராத் நிகழ்வுகளில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு மட்டும் 84 லட்சம் கோடி; இதில் மிகப் பெரிய முரண் நகை என்னவென்றால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பே 153 லட்சம் கோடி தான். 2014 – 15 காலகட்டத்திற்கான குஜராத் மாநில மொத்த உற்பத்தியின் மதிப்பு வெறும் 7.82 லட்சம் கோடி தான். மேலும், அதற்கும் முந்தைய ஆண்டுகளின் வளர்ச்சி விகிதத்தை விட இது குறைவான அளவு என்பது அம்மாநில அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.
புள்ளி விவரக் கணக்குகள் ஒருபுறமிருக்க, குஜராத்தின் வளர்ச்சி என்பது வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட சர்க்கரை தான் என்பதை பட்டேல்களின் இட ஒதுக்கீடு போராட்டம் பட்டவர்த்தனமாக காட்டியது. குஜராத் முழுக்க சுமார் 60 லட்சம் இளைஞர்கள் வேலை கிடைக்காமலும், தொழில் வாய்ப்புகள் ஏதுமின்றியும் உள்ளனர் என்கிறார் அல்பேஷ் தாக்கோர். மத்திய அரசின் தேசிய மாதிரி சர்வே வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி நகர்புற குஜராத்தில் 5.8 சதவீத இளைஞர்களும், கிராமப்புற குஜராத்தில் 11.6 சதவீத இளைஞர்களும் வேலையற்று உள்ளனர்.
குஜராத்தின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த போது தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையும் அதைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும் அறிமுகமாகின. இவ்விரு நடவடிக்கைகளும் ஏற்கனவே மரணப்படுக்கையில் இருந்த குஜராத்தின் பொருளாதாரத்தை மொத்தமாக குழியில் தள்ளி மண்ணை அள்ளிப் போடுவதாக அமைந்து விட்டன. சூரத், அகமதாபாத் என குஜராத் முழுவதும் தொழிற்துறையினர் லட்சக்கணக்கில் திரண்டு போராடினர்.

சூரத் நகரில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை எதிர்த்து நடந்த போராட்டம் 
தனது சொந்த மாநிலமே தனக்கெதிராக போர்க்கோலம் பூண்டு நிற்பதைக் கண்டு திகைத்த மோடி- அமித்ஷா இணை, பணமதிப்பழிப்பு நடவடிக்கை கருப்புப்பண முதலைகளுக்கு எதிரானதென்றும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை தொழிற்துறையை ஒழுங்குபடுத்துவதற்கென்றும் இதை எதிர்ப்பவர்கள் ஊழல்வாதிகளென்றும் சொல்லி சமாளிக்க பார்த்தது. இவர்கள் இப்படியான வியாக்கியானத்துடன் மக்களை ஏமாற்ற எத்தனித்த வேளையில் அமித்ஷா மகனின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும், குஜராத் மாநில முதல்வர் விஜய்ரூபானி மும்பை பங்குச்சந்தையில் முறைகேடுகளில் ஈடுபட்ட புகாரும் மேலெழுந்து வந்தன.
ஆக மொத்தம் மோடி அமித்ஷா இணை பொருளாதார வளர்ச்சி, தூய்மையான நிர்வாகம் எனும் பெயரில் இத்தனை ஆண்டுகளாக தங்களை ஏமாற்றி வந்துள்ளனர் என்கிற உண்மையை குஜராத்திகள் மிகத் தாமதமாகப் புரிந்து கொண்டனர். எனவே தான் கடந்த பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் “குஜராத் மாடல்” எனும் பூச்சரத்தை இந்தியர்களின் காதில் சுற்றிய மோடி – அமித்ஷா இணை, அந்தப் பூச்சரத்தை குஜராத்திகளின் முன் எடுக்கவே இல்லை. ஆம், குஜராத் தேர்தல் பிரச்சாரங்களில் காங்கிரசையும் ராகுல் காந்தியையும் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் மோடி, “வளர்ச்சி” என்றோ “குஜராத் மாடல்” என்றோ பேசுவதை மிக கவனமாகத் தவிர்த்து வருகிறார்.
பாரதிய ஜனதா தலைவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை காலி நாற்காலிகளே வரவேற்கும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடாமல் தடுத்துள்ள அமித்ஷா, தற்போது பிரச்சாரக் கூட்டங்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை இறக்கியுள்ளார். மேலும், மாநில அமைச்சர்கள் பிரச்சாரங்களுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் கடுமையான மக்கள் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருப்பதால் போலீஸ் காவலுடன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னொருபுறம் பாரதிய ஜனதா அதிகாரத்துக்கு வருவதற்கு முன் சத்திரியர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் இசுலாமியர்கள் (KHAM) ஆகிய பிரிவினரின் ஓட்டு வங்கியின் பலத்தில் தான் தேர்தல்களை காங்கிரசு வென்று வந்தது. இதற்கு எதிராக பட்டேல் வாக்குவங்கியை ஒருங்கிணைத்து நிறுத்தியது பாரதிய ஜனதா. “இந்து ஒற்றுமை” என்கிற காவி அரசியல் அதன் நடைமுறையில் ஆதிக்க சாதிகளின் கூட்டிணைவாகவே இருந்து வந்துள்ளது. மோடியின் வருகைக்குப் பின், இதே ஆதிக்க சாதிகளின் கூட்டிணைவு தனது காலாட்படையாக ஒடுக்கப்பட்ட மக்களையும் ஆதிவாசிகளையும் இணைத்துக் கொண்டது.
மதமோதல்களின் அடிப்படையில் ஒருமுகப்படுத்தப்பட்ட வாக்குவங்கியின் மூலம் வெற்றி பெற்ற மோடி, அதன் பின் வேறு வழியின்றி “தொழில்கள் நடப்பதற்கான அமைதியான சூழலை பராமரிக்கும்” கட்டாயத்துக்கு ஆளானார். தொடர்ந்து மதவெறி நெருப்பை எரிய விட்டு அதன்மூலம் இனப்படுகொலைகளை முன்னெடுத்துச் செல்வதில் இருக்கும் “நடைமுறை” சிக்கல்களைக் கணக்கில் கொண்டு தான் “வளர்ச்சியை” கையில் ஏந்தினார் மோடி.
எனவே தான் “வளர்ச்சி” கைவிட்டுவிட்ட நிலையில் உத்திரபிரதேச தேர்தலுக்கு முன் அரங்கேற்றியதைப் போன்ற நேரடி மதமோதல்களைத் தூண்டி விடுவது காரிய சாத்திமற்றதாகியுள்ளது. வேறு வழியின்றி ராகுல் காந்தியைக் கிண்டல் செய்வது, பட்டேல் சாதித் தலைவராகவும் தமக்குக் கட்டுப்படாதவராகவும் உருவெடுத்துள்ள ஹர்திக் பட்டேலுக்கு எதிராக செக்ஸ் சி.டி. -யை வெளியிடுவது, குஜராத்தின் வளர்ச்சியின்மைக்கு காங்கிரசை காரணம் காட்டுவது என செயல்திட்டம் வகுத்துள்ளது பாரதிய ஜனதா.
தேர்தலை வெல்லும் அளவுக்குக் காங்கிரசு இன்னும் பலம் பெறவில்லை என்றே தேர்தல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். எனினும், முந்தைய தேர்தல்களைப் போல் பாரதிய ஜனதாவால் சுலபமாக வெற்றி பெற்று விடவும் முடியாது என்பதையே குஜராத்தில் இருந்து வரும் செய்திகள் உணர்த்துகின்றன.
எனவே தான் கறாரான பேர்வழியாக அறியப்பட்ட மோடி, ஜி.எஸ்.டி விவகாரத்தில் மெல்ல இறங்கி வந்துள்ளார். ஒருவேளை காங்கிரசு வென்று விட்டால்? அது காங்கிரசின் வெற்றியாக இருக்காது; மாறாக பாரதிய ஜனதாவின் தோல்வியாகவே இருக்கும்.
மேலும் :
  • Vibrant Gujarat — Brushing up the numbers
  • GST has hurt textile industry in election bound Gujarat, say traders
  • Why Gujarat May End Up Being a Hard Nut to Crack for the BJP
  • With No Jobs in Sight, How Vibrant Is Gujarat Really?
  • Why Isn’t Narendra Modi Talking About the ‘Gujarat Model’ Anymore?
  • நன்றி:வினவு 

வியாழன், 9 நவம்பர், 2017

அண்டப்புளுகன் !

ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி!!
துணிந்து பொய்சொல்வது; அம்பலமான பின்னும் பொய்யையே திரும்பத் திரும்ப சொல்வது, உண்மை போலவே பொய்யைச் சொல்வது, சந்தர்பத்துக்குத் தகுந்தாற் போல் மாற்றிப் பேசுவது, அரை உண்மைகளைப் பேசுவது. உண்மையில் பொய்யைக் கலப்பது, பொய்யில் அவதூறுகளைக் கலப்பது, ஆளுக்குத் தகுந்தாற் போல் பேசுவது – இவையெல்லாம் பார்ப்பனியத்தின் முதன்மையான குணாம்சங்களில் சில.
பார்ப்பனர்களின் சூது-வாது குறித்து தனது ஆரிய மாயை நூலில் கீழ் வருமாறு எழுதுகிறார் அண்ணாதுரை.
அண்ணாவின் ஆரியமாயை
பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேச நா இரண்டுடையாய் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வண்கன நாதா போற்றி!
கொடுமை குணாளா போற்றி!
கோழையே போற்றி போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படுமோசம் புரிவாய் போற்றி!
சிண்டு முடிந்திடுவோய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!
உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தாய் போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இரை இதோ,போற்றி! போற்றி!!
ஏத்தினேன் போற்றி! போற்றி!!
-அறிஞர் அண்ணாதுரை, ஆரிய மாயை.
பார்ப்பனியத்தின் புளுகுனித்தனங்களுக்கும் காவாலித்தனங்களுக்கும் எடுப்பான உதாரணங்களை அடுக்கி மாளாது. இந்த நூற்றாண்டை மட்டும் எடுத்துக் கொண்டாலும் கூட, செத்துப் போன பெரிய சங்கராச்சாரியில் துவங்கி இன்றைக்கும் உள்ள பெரிய மற்றும் சிறிய ஊத்தை வாயர்கள், சோ ராமசாமி என பட்டியல் அனுமார் வாலாக நீளும். சமீபத்திய உதாரணம் ஆர்.எஸ்.எஸ் “சித்தாந்தவாதி” எஸ்.குருமூர்த்தி.
சோ.ராமசாமி செத்துப் போனதை அடுத்து, அவரால் நடத்தப்பட்டு வந்த ’ஆண்மைக் குறைவு மருத்துவர்களின் விளம்பரங்களுக்கு மத்தியில், பார்ப்பனக் கொழுப்பைக் கடைபரப்பி விற்கும்’ துக்ளக் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் குருமூர்த்தி. கார்ப்பரேட் உலகில் கக்கத்தில் லெதர் பேக் வைத்துக் கொள்ளாமல் உலவும் புரோக்கராகவும் செயல்படுகிறவர். இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ் போட்ட புழுக்கைகளில் ஒன்றான “சுதேசி ஜாக்ரன் மன்ச்” அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் குப்பை கொட்டுகிறார்.

மேற்படி டிப்டாப் ஆசாமி இந்தியப் பொருளாதாரத்தை குழிதோண்டிப் புதைக்கும் விஞ்ஞான ஆய்வுகளை நடத்திக் களைத்துப் போன தருணங்களில். ட்விட்டரில் அவிழ்த்து விடும் பொய்கள் பிரசித்தமானது. பலரால் பலமுறை அவரது பொய்கள் சுட்டிக்காட்டப்பட்டு அம்பலப்படுத்தப்பட்ட பின்னும் அந்தப் பொய்ச் செய்திகளை நீக்காமல் வைத்திருக்கும் குருமூர்த்தியின் நெஞ்சழுத்தம் மிகவும் பிரசித்தமானது. சமீப காலத்தில் மேற்படியாரின் புளுகுனி கீச்சுகள் குறித்து ஆல்ட் நியூஸ் இணையதளம் ஒரு சிறிய பட்டியலை வெளியிட்டுள்ளது. நமது வாசகர்களின் கவனத்திற்கு அவற்றைக் கொண்டு வருகிறோம்.

  1. கடந்த நவம்பர் 2 -ம் தேதி அங்கோலாவில் இசுலாமிய மதம் தடைசெய்யப்பட்டு விட்டதாக ஒரு அண்டப்புளுகை பகிர்ந்த குருமூர்த்தி. இதற்கு இந்தியாவில் உள்ள தாராளவாதிகளின் எதிர்விணை என்னவாக இருக்குமோ? எனக் கேட்டிருந்தார். இந்த வதந்தி 2013 -ம் ஆண்டிலிருந்தே சுற்றில் இருந்து வருவது தான். இது உண்மையல்ல என்பதையும், வதந்தி என்பதையும் அம்பலப்படுத்தி இணையத்தில் பலர் எழுதிவிட்டனர்; பி.பி.சி இணையதளத்தில் இதற்காகத் தனியே கட்டுரையே வெளிவந்துள்ளது.
  1. அடுத்து அதே நவம்பர் 2 -ம் தேதி ராகுல் காந்தியின் வெட்டி ஒட்டப்பட்ட பேட்டி ஒன்றை வெளியிட்டு… இந்த வீடியோ மட்டும் உண்மையென்றால் இந்த நபர் காங்கிரசை அழித்தே விடுவார் என்றும், அப்படி ஒரு கட்சி இருப்பது தான் இந்தியாவின் இருகட்சி ஜனநாயகத்துக்கு நல்லது என்றும் முதலைக் கண்ணீர் விட்டிருந்தார். 24 நொடிகள் ஓடும் அந்த வீடியோக் காட்சியின் இறுதியில் தெளிவாக அது வெட்டி ஒட்டப்பட்டது தானென்பது தெரிகிறது.
  1. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 -ம் தேதி 2000 ரூபாய் நோட்டில் ஜி.பி.எஸ் -சிப் இருப்பதாக யாரோ ஒருவர் சொன்னதை அப்படியே நம்பி பகிர்ந்தார். பின்னர் அது பொய் என்பதைப் பலரும் சுட்டிக்காட்டியபின், இப்போது வெளியாகி உள்ள 2000 ரூபாய் நோட்டில் அந்த வசதி இல்லை தான்.. ஆனால் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு வரப் போகிறார்களாக்கும் என அப்படியே தோசையைத் திருப்பிப் போட்டார்.
  1. அடுத்து கடந்த ஜூன் பத்தாம் தேதி தான் மாட்டுக்கறி தின்பதில்லை என்றும். தனது தாயார் ஒரு இந்து என்றும் தனது தாயாரைப் பார்த்தே வளர்ந்ததாக் பசுவைத் தானும் தெய்வீக விலங்காக கருதுவதாகவும் ஏ.ஆர். ரகுமான் சொல்வதைப் போன்ற ஒரு செய்தியை வெளியிட்டார்.
  1. மேலே உள்ளவற்றைக் கூட ஏதோ ஒரு கணக்கில் சேர்க்கலாம். ஆனால் இப்போது வருவது ஒரு பெசல் ஐட்டம். Theonion.com என்பது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பகடி (Satire) இணையதளம். இவர்கள் பொதுக்கருத்தாக இருப்பதையோ அல்லது அந்தந்த சமயத்தில் பரபரப்பாக இருக்கும் ஏதாவது ஒரு செய்தியையோ எடுத்துக் கொண்டு அதைக் கிண்டல் செய்தோ அல்லது அந்த செய்தியைத் தலைகீழாக மாற்றியோ வெளியிடுவார்கள். சமீபத்தில் அந்த இணையதளம் “பண்டைய கிரேக்கர்கள் என்பவர்கள் சும்மா கற்பனை” என ஒரு விவாதத்தை வெளியிட்டிருந்தனர். நம்ம ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவி அதையும் துணிந்து பகிர்ந்துள்ளார்.
இதையெல்லாம் தெரியாமலோ அறியாமலோ செய்யவில்லை; மாறாக தவறு என்று நன்றாகத் தெரிந்திருந்தும் துணிந்து வெளியிடுகிறார் குருமூர்த்தி. ஒவ்வொரு முறை அவர் பொய்யான செய்திகளை வெளியிடும் போதும் பொதுவானவர்கள் அதைச் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. என்றாலும், தன்னை ட்விட்டரில் தொடரும் ஆர்.எஸ்,எஸ் கும்பல் மாங்கா மடையர்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள குருமூர்த்தி, தொடர்ந்து புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருகிறார்.
கட்சிக்குள் இந்த லட்சணத்தில் ஆட்களை வைத்துக் கொண்டுதான் பாரதிய ஜனதாவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தாமல் தன் ஆவி போகாது என அக்கா தமிழிசை சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்.
நன்றி:வினவு 
மேலும் :
  • The curious case of S Gurumurthy and Hoaxes

திங்கள், 6 நவம்பர், 2017

அமுக்குவான் பேய்....,

ஒரு நாள் படுத்தால்போதும் எனக் கலைத்துப்போய் நீங்கள் சோர்வுடன்  படுக்கையில் தஞ்சமடைகிறீர்கள்.
 விளக்குகள் அணைக்கப்பட்டதும், நீங்கள் தழுவிக் கொண்ட போர்வையைப்போல தூக்கமும் உங்களைத் தழுவியதாய் நினைப்பு. 
இருளில் உங்கள் உணர்வுகளை நழுவவிடுகிறீர்கள்.
அரை மணி நேரம் கடந்திருக்காது.

 விழித்தோமா இல்லையா என்று புரியாத ஓர் இருட்டில் முழிப்பு வருகிறது. ஆனால், நகர முடியவில்லை. இப்போது அந்தத் தனியறையில் நீங்கள் தனியாக இல்லையென்ற ஓர் உள்ளுணர்வு. 
எழுந்து பார்க்கலாம் என்று முயன்றால், உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. சவ நிலை என்று சொல்வார்களே, அப்படி ஒரு நிலை, உங்கள் உடலுக்கு மட்டும். 
இது போதாதென்று முகத்தை யாரோ எதையோ வைத்து அமுக்கியது போன்ற எண்ணம்வேறு உதயமாகிறது. 
உயிர்க்காற்று உள்ளே செல்ல மறுக்கிறது. மூச்சுத் திணறல். கதற வேண்டும் என்று நீங்கள் முயற்சி செய்தும் குரல் உங்கள் குரல்வளையை விட்டு வெளியே வர மறுக்கின்றது.
சிறிது நேரத்தில், அறையில் யாரோ இருப்பதாய் தோன்றிய உள்ளுணர்வு உயிர் பெறுகிறது, ஏற்கெனவே, உங்களுக்கு சர்க்கஸ் கோமாளிகள் என்றால் பயம். அப்படி ஓர் உருவம், முதலில் அருவமாக, நிழலாகத் தோன்றி பின்பு உயிர் பெறுகிறது. 
உங்களை அது நெருங்குகிறது. நெருங்க நெருங்க உங்கள் மூச்சுக் குழாய் இறுகுகிறது. 
பயத்தின் உச்சமாக இப்போது வெளியே இடி, மின்னல், மழை என ஒன்றின் பின் ஒன்றாக. வித்தியாசமாக முதலில் இடிக் கேட்கிறது, பின்புதான் மின்னல். 
அந்த நொடி, உங்களுக்கு உண்மையை உரைக்கிறது. ஒளிக்குப் பின்னர்தானே ஒலி?
கட்டிலின் விளிம்பைத் தேடிப்பிடித்து, சட்டென எழுகிறீர்கள். இப்போது அந்த உருவம் இல்லை. 
வெளியே இடி, மின்னல், மழை இல்லை. முகத்தைக் கழுவிவிட்டு, ஒரு குவளை நீர் குடித்து திரும்பப் படுத்தவுடன் தூக்கம் நன்றாக வருகிறது. அதன்பிறகு, எல்லாமே சுபம்தான். 
ஏதோ கதைபோலத் தோன்றினாலும், அந்த ஒளி, ஒலி வேறுபாட்டைத் தவிர, மீதி அனைத்தும் நிச்சயம் உங்களின் வாழ்விலும் நடந்திருக்கும். 
அந்தக் கோமாளி உருவத்துக்குப் பதில் வேறு ஓர் உருவம், அவ்வளவே! இதைப் பற்றி பாட்டியிடம் கேட்டால், “அமுக்குவான் பேய்ப்பா அது… தெரியாதா? வா கோயிலுக்குப் போய் மந்திரிக்கணும்” என்பார். 
ஆனால், இந்த நிலை எதனால் ஏற்படுகிறது? 
இதற்கான அறிவியல் விளக்கம் என்ன?
ஆங்கிலத்தில் இதை ‘Sleep Paralysis’ என்று அழைக்கிறார்கள். 
இது ஏற்பட முக்கியக் காரணம் உடல் அடுத்தடுத்த உறக்க நிலைகளுக்குச் சீராக செல்ல மறுப்பதுதான். 
ஆனால் பல நூற்றாண்டுகளாக இதன் அறிகுறிகள் பேய் பிடித்த நிலை, சாத்தானின் தலையீடு, ஏவல் செய்ததால் துரத்தும் துஷ்ட சக்திகள் போன்றவற்றுக்கு தொடர்புப்படுத்தப்பட்டு வருகின்றன.
 ஆனால், இது உடல் சோர்வினால் ஏற்படக் கூடிய ஒரு சாதாரண பிரச்னைதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த நிலை ஏற்பட முக்கியமான காரணமாக கூறப்படுவது, உணர்வுகளைக் கடத்தும் நம் நியூரான் செல்களில் ஏற்படும் குழப்பம்தான். 
தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் அதைச் சரிவர செய்யாமல் போவதால், பல்வேறு தூக்க நிலைகள் சீராக ஏற்படாமல், ஒன்றோடு ஒன்று பிணைந்து குழப்பம் ஏற்படுத்துகிறது. 
விழிப்பு நிலைக்கும், உறக்க நிலைக்கும் நடுவில் நீங்கள் தடுமாறுவதால், இங்கே உங்கள் உடல் தூக்கத்தில் இருக்கிறது, 
உங்கள் ஆழ்மனது முழு விழிப்பு நிலையில் இருக்கிறது.
தூக்கத்தின் முதல் நிலையான REM ஸ்லீப் எனப்படும் ‘கண்கள் மூடிய நிலையிலும் கருவிழிகள் இயங்கும் நிலை’ தாண்டி இங்கே அடுத்த நிலைக்கு உறக்கம் செல்லவில்லை.
 மூச்சு விடுதல் போன்ற இயல்பான உடல் இயக்கங்கள் தொடர்ந்து நிகழ்ந்தாலும், உங்கள் உடல் செயல்பட மறுக்கிறது. ஏனென்றால், அதற்கு அப்போது ஓய்வு தேவை. 
கிட்டத்தட்டத் தொழிலாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் போலதான் நம் உடலும் இங்கே வேலைநிறுத்தம் செய்கிறது. அதைக் கட்டுக்குள் கொண்டுவர, இங்கே நம் மூளை ஒரு விந்தையை நிகழ்த்துகிறது.
 உங்களின் உடல் எழ வேண்டும், நீங்கள் தூக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதே அதன் விருப்பம். எனவே, உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதுபோல ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. 
மிகுந்த சிரமத்துக்கு உண்டானாலும், உங்கள் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. 
உடனே, உங்கள் மூளை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கிறது. 
உங்கள் அறைக்குள் யாரோ இருப்பது போன்றும், அந்த உருவம் உங்களைத் தாக்க வருவது போன்றும் ஒரு காட்சியை கண் முன்னே ஓட்டிக் காட்டுகிறது. 
அதிலிருந்து தப்பிக்க, அல்லது திரும்பத் தாக்க உடல் எழுந்துதானே ஆக வேண்டும்? 
இது மிரட்டி மடியாத செல்லப் பிள்ளையை அடி கொடுத்து வேலை வாங்குவது போலதான்.
பெரும்பாலோனோர்க்கு இந்த நிலையிலேயே உடல் இயக்கம் வந்துவிடும். 
எழுந்து விடுவார்கள். 
அப்படியும் உடல் ஒத்துழைக்க மறுத்தால், மீண்டும் பயமுறுத்த மூளை தயாராகும். 

சுற்றுப்புறத்தில் ஒரு பெரிய ஆபத்து சூழ்ந்திருப்பது, கால்கள் மற்றும் கைகளில் ஏதேனும் பொருள்கள் கொண்டு வலி உருவாகும் வகையில் தாக்குதல் நடக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவது, விதவிதமான அச்சம் ஏற்படுத்தும் எண்ணங்களைத் தோற்றுவிப்பது என எல்லா முயற்சிகளையும்எடுக்கும். 
ஒரு வழியாக உங்களைக் காப்பாற்றியும் விடும். உடல் இயக்கத்தை சீராக்கி விடும்.
 சரி, இந்த ‘Sleep Paralysis’ எதனால் ஏற்படுகிறது?
தூக்கமின்மை, அதீத உடல் உழைப்பு, சரியான நேரத்தில் உணவு உண்ணாதிருத்தல், உறங்காது இருத்தல், மன அழுத்தம் போன்றவை இதற்கு வழிவகுக்கும். 
மிகவும் அரிதாக மட்டுமே, இது மனநோய்கள் உடன் இணைத்துப் பேசப்படுகிறது. 
இந்த நிலை ஏற்பட்டால், எதுவும் பயப்படத்தேவை இல்லை. சீரான உடல் இயக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். 
எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்யுங்கள். 
இப்பிரச்னை தொடர்ந்தால் மட்டும் மருத்துவரை அணுகுங்கள்.
                                                                                                                            நன்றி:  ர.சீனிவாசன்(விகடன்)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...