bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 25 நவம்பர், 2018

காரணம் தமிழர்கள்!

ஒரு படத்திற்கு 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் அஜித் கஜா புயல் நிவாரணத்திற்கு வெறும் 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

கஜா புயல் கரையை கடந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரமான தென்னை, முந்திரி, நெல்,கரும்பு போன்றவற்றை இழந்துவிட்டதால் அடுத்த வேளைக்கு சோறு கூட இல்லாமல் திண்டாடி வருகின்றனர். 

இதனால் தன்னார்வலர்கள் அனுப்பி வரும் நிவாரணப் பொருட்களை நம்பியே பெரும்பாலான கிராம மக்கள் தற்போது பிழைப்பை ஓட்டி வருகின்றனர்.

 இந்த நிலையில் புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசும் நிதி வழங்குவதை தாமதம் செய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பொதுமக்கள் புயல் நிவாரணத்திற்கு தாரளமான நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். 


இதனை தொடர்ந்து தொழில் அதிபர்கள், திரையுலகினர், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் தங்களால் முடிந்த உதவியை தமிழக அரசுக்கு செய்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் அஜித் தனது பங்களிப்பாக 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. அஜித் தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஒரு நடிகர். 
ஒரு படத்திற்கு 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். 

ஆனால் அவர் வெறும் 15 லட்சம் கொடுத்துள்ளது பலராலும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது . 


அண்மையில் திரையுலகில் வந்து முன்னேறிக்கொண்டிருக்கும்   சிவகார்த்திகேயன் கூட 20 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். 
நடிகர் விஜய் சேதுபதியோ தனது பங்கிற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார். 
திரையுலகில் அஜித்தின் போட்டியாளராக கருதப்படும் விஜய்  தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக செலவழிக்க தனது சொந்தப்பணம் கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். 

ஆனால் அஜித் வெறும் 15 லட்சம் கொடுத்துவிட்டு ஒதுங்கியது எப்படி சரியாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது. 

இப்போது படங்களே இல்லாத நடிகை கஸ்தூரி தனது சேமிப்பில் இருந்து 15 லட்சம் கொடுத்துள்ளார்.அவர் முன்பு கதாநாயகியாக நடித்தப் படங்களில் கூட 10 லட்சங்களுக்குடப்பட்டேதான் கஸ்தூரி சம்பளம் பெற்றார்.ஆனால் நடிகர் அஜித் இன்றைய சம்பளம் 30 கோடிகளுக்கு மேல்.


முதல் நாளே நிவாரணமாக 50 லட்சங்கள் கொடுத்த சூர்யா ,அஜித்தை விட குறைவாகத்தான் சம்பளம் வாங்குகிறார்.
 

ஆனால் அஜித் வெறும் 15 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பதும்,முந்தைய வரதா புயல்,கேரளா பேரிடர் போன்றவைகளுக்கு பைசா கொடுக்காததும் அவரது தீவிர ரசிகர்களை கூட கவலை அடைய வைத்துள்ளது. படம் வெளியான படம் வெளியான முதல்  நாளில் தமிழக மக்கள் அஜித்திற்கு 15 கோடி ரூபாய் வரை வசூல் கொடுக்கின்றனர். 

ஆனால் அஜித் 15 லட்சம் நிவாரணம் வழங்கியிருப்பது அள்ளிக் கொடுக்கும் தமிழர்களை அதிருப்தியில் தள்ளியுள்ளது.

ஆனால் அஜித்தை நன்கு தெரிந்த ஊடக நண்பர்கள் சொல்லுவது அஜித்தின் மறுபக்கத்தைக்காட்டுகிறது.

அஜித் மற்றவர்களுக்கு உதவுகிறாரோ இல்லையோ,ஊடகத்தினரை குளிப்பாட்டிவிடுவாராம்.
எப்போதும் தன்னைப்பற்றி உயர்வாகவே செய்திகள் வரும்படி கவனித்துக்கொள்வாராம்.

இதை அவரது மனைவி ஷாலினியின் தம்பிதான் கவனித்துக்கொள்கிறாராம்.

அவரது வேலைக்காரர்களுக்கு வீடுகட்டிக்கொடுத்தார் ,கார் வாங்கிக்கொடுத்தார் என்பதெல்லாம் பாதிதான் உண்மை.சம்பளத்தில் பிடித்தம் செய்து வருவதையும் இன்னமும் பத்திரங்களை தனது பெயரிலேயே வைத்திருப்பதையும் எந்த ஊடகமும் சொல்லவில்லை.

வடபழனியில் 7 பேர்களைக்கொண்ட அலுவலகம் கணினி வசதியுடன் ஷாலினியின் தம்பி மேற்பாரவையில் நடக்கிறது.

 ஒவ்வொருவருக்கும் பல்வேறு பெயர்களிலும்  ஆயிரக்கணக்கில் போலி கணக்குகள் உள்ளனவாம்.

மோடி க்கும் இவ்வாறு லடசக்கணக்கில் கணக்குகள் இருந்தது.தற்போது அவை முகநூல் ,டுவிட்டர் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டு வடிகட்டியதும் தெரிந்ததே.அதுதான் அஜித் கதையும்.

இதன் வேலை நடிகர் விஜய் படங்களைத்தாக்கி பல்வேறு கணக்குகளில் சமூக வலைத்தளங்களில் இடுகை,மீம்ஸ் வெளியிடுவது,அஜித்தைப்பற்றி வானத்தை வில்லாக வளைப்பார்,மண்ணை தங்கமாக்கிக்காட்டுவார் என்பது போல் கதைகளை ஊடகங்களில் தொடர்ந்து வரவைப்பதும்தான்.
இதற்காக செய்தியாளர்கள் பலவகைகளில் கவனிக்கப்படுகிறார்கள்.
காசு வாங்காதவர்களும் ஒரு சிலர் அங்கும் இருப்பார்களேஎன்கிறீர்களா?அவர்களையும் வலைப்பதில் அஜித் வல்லவர்.
அதற்கு ஒரு சம்பவம்.
ஒரு பிரபல புகைப்பட செய்தியாளர் . திறமைக்கேற்ற நல்ல வருமானம்.காசு வாங்குவது கிடையாது.
அஜித் தன்னைப்படமெடுத்து செய்தி போடவந்தவருக்கு கவரை வழமை போல் கொடுத்துள்ளார்.
வாங்க மறுத்து போய்விட்டார்.
பின்னர் ஒரு முறை அஜித் தொடர்பான செய்தியை (நடிகர் விஜயை தாக்கி அஜித் சொன்னவற்றை போட்டு வளரும் நடிகர் அஜித்துக்கு இது தேவையா?என்றிருந்தார்.)
அடுத்து அந்த புகைப்பட செய்தியாளருக்கு பிறந்த நாள்.பல நடிகர்கள் வாழ்த்தினர்.அஜித்திடமிருந்து வாழ்த்து ஷாலினி தம்பி மூலம் வந்தது.போக்கே வாழ்த்துடன் பரிசுப்பொட்டலம்.

பின்னர் பிரித்துப்பார்த்தால் அவர் வெகுநாட்களாக வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட காமிரா.
இப்போது அவர் அஜித்தை புகழ்ந்து செய்திபோடுவதில் முதல்வர்.
இப்படியாகத்தான் ஒவ்வொருவரும் அஜித்தால் வளைக்கப்படுகின்றனர்.


செம்பரம்பாக்க வெள்ளத்தில் தனது திருமண மண்டபங்களில் மக்களைத்தங்க வைத்து பிரியாணியாகப் போட்டார் அஜித் என்றெல்லாம் செய்தி வந்தது.
அப்போது அஜித் அந்த இதற்கு ஒரு பைசாகூட கொடுக்கவில்லை.
அதை விட உண்மை.அவருக்கு சென்னையில் திருமணமண்டபமே கிடையாது.விஜய் செய்ததை பெயரை மாற்றிப்போட்டனர்.நம் ஊடக சேஞ்ச்சொறுக்கடனாளர்கள் .



ஜெயலலிதா அப்போலோவில் இருக்கையில் கூட வடபழனி நிறுவனம் ஒரு செய்தியைப் பரப்பினர்.
ஜெயலலிதா தனக்குப்பின்னர் அதிமுக தலைமைப்பொறுப்பை அஜித்துக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக.
இது பல ஊடகங்களில் வந்த செய்திதான்.

நடிக்கவும்,ஆடவரும்,சண்டை போடவும் ,ஏன் சரியான நடை கூட இல்லாத ஒருவர் எப்படி இப்படி என்று யோசிக்காதவர்கள் இருக்க முடியாது.அவர்களுக்கு இப்போது உண்மை புரிந்திருக்கும்.
இதை விட முக்கிய உண்மை நிலை தமிழகத்தில் உள்ளது.
தமிழனாக இருந்தால் நம் ஊடகங்கள் அவர்களை வளர்த்து விடுவதில்லை.திறமை மிக்க அவர்களை அவர்களை மட்டம் தட்டி செய்திகளை வெளியிட்டு பிற மொழி நடிகர்களை உச்சாணியில் வைப்பார்கள்.
இதுதான் சிவாஜி-எம்ஜிஆர்.


கமல்ஹாசன்-ரஜினிகாந்த்.

விஜய் -அஜித் என்று வருகிறது.

இதில் எம்ஜிஆர் தமிழக மக்களுக்கு மனப்பூர்வமாக வாரி வழங்கியவர் என்பது உண்மை.

மற்றபடி கமல்ஹாசன்,விஜய் தங்கள் பணத்தில் தமிழக மக்களுக்கு செய்த உதவியில் கால் வாசியைக்கூட ரஜினிகாந்தும்,அஜித்தும் செய்ததில்லை.

ஆனால் ஊடகங்கள் என்னவோ இவர்களைத்தான் தூக்கிவைத்து எழுதுகிறது.

காரணம் கமலும்,விஜயும் தமிழர்கள்.





 

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...