bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 20 ஏப்ரல், 2013

நாம் தனியே இல்லை




பூமியைப் போன்று மனிதன் வாழ ஏற்ற சூழ்நிலை கொண்ட 2 புதிய அமெரிக்க   விண்வெளி ஆய்வு மையம் நாசா கண்டுபிடித்துள்ளது.
இந்த இரண்டு கோள்களும் பார்ப்பதற்கு பூமியைப் போலவே உள்ளதாகவும் தெரிகிற து.
கெப்லர்- 62 ( சூரியனை சுற்றி வரும் நட்சத்திரம் போன்ற கோள்கள்) க்கு அருகே சிறிய புள்ளி போன்ற ஒரு அமைப்பு காணப்படுவதை நாசா விஞ்ஞானிகள் கடந்த ஓராண்டுக்கு முன் கண்டுபிடித்தனர்.
அந்த புள்ளி போன்ற அமைப்பு குறித்து தொடர்ந்து நடந்த  ஆய்வில் இந்த புதிய 2 கோள்களின் தன்மை கண்டறியப்பட்டது.
 அந்த புள்ளி போன்ற நட்சத்திரம் போன்ற அமைப்பை சுற்றி 5 கோள்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு கெப்லர் 22பி சுற்றி உள்ள 600 ஒளி ஆண்டு தொலைவில் உள்ள சில கோள்கள் குறித்த ஆய்வை நாசா துவக்கியது.
அப்போது பூமியை விட 2.4 மடங்கு பெரிய கோள்கள் கண்டறியப்பட்டது.
சூரியனுக்கு அருகில் உள்ள 5 கோள்களில் பூமியைப் போலவே இருக்கும் 2 கோள்களில் அதிக வெப்பமோ, அதிக குளிரோ இல்லாமல் இருப்பதாகவும், நீர் ஆதாரம் போதிய அளவு இருப்பதாகவும்விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 இந்த இரண்டு கோள்களும் தலா 1.41 மற்றும் 1.61 சுற்றளவை கொண்டுள்ளன.
 இது பூமியை விட சுற்றளவில் பெரியதாகும்.
 இந்த கோள்கள்  நிலப்பரப்பு அதாவது பாறை போன்ற அமைப்பை கொண்டதா அல்லது வெறும் நீர் அமைப்பை மட்டும் கொண்டதா என்பது குறித்து மேலும் ஆய்வு செய்து வருகின்றனர்.
  இந்த கோள்கள் உறுதியாக  மனிதன் வாழ ஏற்ற சூழலை கொண்டதாகத தான்  இருக்கும் என  அவர்கள் தெரிவித்துள்ளனர்  .
இந்த இரண்டும் ஏமாற்றி விட்டாலும் இந்த லட்சக் கணக்கான கோள்கள் வலம் வரும் பால் வீதியிலும்,அதை விட்டால் பி ரபஞ்சத்திலும்  நிச்சயம் உயிர் கள் வாழும் கோள்கள் இருப்பது என்னவோ நிச்சயம்தான்.
பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனியே இல்லை. எங்கோ மனிதன் அல்லது அதற்கொப்பான உயிரினங்கள் வாழுந்துதான் வருகிறது.அது வெறும் பரிணாம வளர்ச்சியில் மனிதனை விட முன்னேறியதோ அல்லது மனிதனாக்கிக் கொண்டிருக்கும் முயற்சியில் இருக்கும் உயிராக கூட இருக்கலாம்.
நன்றி:அமீம் முகமது.[முகனூல்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...