bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 29 ஏப்ரல், 2013

சீனாவில் இன்ப உலா...?

பெயரைப்பார்த்தால் "கலைமகள்'.ஆனால் முகம்-உருவம்  சீன வடிவம்.உண்மைதான் அவர் சீன்ப்பெண் தான் .அவரின் பெற்றொர் வைத்த பெயர் "சா ஒ ஜி யாங் "
கலைமகள் தமிழ் மொழி மீது கொண்ட ஆவலால் தானே சூட்டிக்கொண்ட பெயர்.
இங்குள்ள தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாயில் நுழையாத எந்த அர்த்தமும் இல்லாத தமிழலல்லாத பெயர்களை வைத்துக்கொண்டிருக்கும் போது அழகிய தமிழ் பெயரை சூட்டியுள்ளார்.
சீன அரசின் பன்னாட்டு வானொலியில் உள்ள தமிழ் பிரிவில் வேலை பார்க்கும் இவர், தமிழக தமிழர்கள் கலப்புத் தமிழில் உரையாடுவது போல் அல்லாமல் தூய தமிழில் தெளிவாக உரையாடுகிறார் . சுமார் 25,000 ரசிக பெருமக்களை தன்னகத்தே ஈர்த்துள்ளார். அதுவும் இந்த ரசிகர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது . தமிழகத்திற்கும் சீனாவிற்கும் உள்ள தொடர்பை ஊக்கப் படுத்தும் நிமித்தமாகவே இவர் தஇவர் தன்னை தனது தமிழ் பெயரான கலைமகள் என்று அடையாளப் படுத்துவதையே விரும்புகிறார்.
 இவர் தமிழில் புத்தகம் வெளியிட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ?
15 ஆண்டுகளுக்கு முன் தமிழை இவர் பயில தொடங்கிய போது இவரால் தமிழ் எழுத்துருக்களை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தாராம்.
 ஆனால் இப்போதோ இவர் தமிழில் புத்தகமே எழுதிவிட்டார்.த மிழின் மேல் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார் .
கலைமகள், தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு பயணித்துள்ளார்.
பட்டி தொட்டி எங்கும் சென்று வந்துள்ளார். இவரின் தமிழ் வாசகர்களை சந்திக்கும் நிமித்தமாகவே இவர் 2003 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சுற்றலா மேற்கொண்டார் . தற்போது தமிழ் நாட்டில் ஓராண்டு தங்கி தமிழ் படிக்கச் வேண்டும் என விரும்புகிறார் .
பொதுவாக சீன மக்களுக்கு இந்தியா  என்றாலே புது டெல்லி தான், வடஇந்தியா தான் என்ற எண்ணத்தை மாற்றி தென் இந்தியா , தமிழகம் குறித்த விழிப்புணர்வை சீன மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என இவர் புத்தகம் எழுத உள்ளார் . இதன் மூலம் சீன பயணிகள் தமிழகத்திற்கு அதிக அளவில் வருவார்கள், தென் இந்தியாவின் பண்பாடுகளை அறிந்து கொள்வார்கள் என்று கூறுகிறார் கலைமகள்.
suran
இப்புத்தகத்தில் சீனாவின் தலைநகரான பெய்ஜிங், ஷாங்காய் நகரம் மற்றும் திபெத்தின் வரலாறு மட்டும் கலாச்சாரங்கள் குறித்து கலைமகள் எழுதி உள்ளார்.
 தமிழக மக்களின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்கு தான் இப்புத்தகம் எழுதப்பட்டது என்று கூறுகிறார் கலைமகள் .
இவரது முதல் புத்தகமான ‘சீனாவில் இன்ப உலா ‘ என்னும் புத்தகம் இப்போது நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கௌதம் பதிப்பகம் இதை கண்காட்சியில் விற்பனைக்கு வைத்துள்ளது.
கலைமகள் தனது சீ ன அரசிடம் "மற்ற நாடுகளின் எல்லையை தாண்டி தனது சப்பை மூக்கை நீட்ட வே ண்டாம்"என்று சொல்லி வைப்பாரா?

நன்றி:தமிழ் சி என் என் 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
"இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளில் மும்பை, ஹைதராபாத். தில்லி, ஜெய்ப்பூர், வாராணசி,பெங்களூர் என பல இடங்களிலும் பயங்க்ரவாதிகள் வைத்த  இவ்வித வெடிகுண்டுகள் மூலம் எண்ணற்றவர்கள் உயிரிழந்துள்ளனர். அண்மையில் பெங்களூரில் வெடித்த வெடிகுண்டு அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டே என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது."
"அம்மோனியம்  நைட்ரேட் "பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகள் Improvised Explosive Devices  (IED) என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த உரத்தை எளிதில் வாங்க முடிகிறது என்பதால் பயங்கரவாதிகள் ரகசிய ஒளிவிடங்களில் அல்லது வீடுகளில் ரகசியமாக் இந்த வெடிகுண்டுகளைத் தயாரிக்க் முடிகிறது.

  இந்த உரம் விற்பதை தடுக்க இயலாது.காரணம் விவசாயம்.
ஆனால் இதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டுமே.
வழியை ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.
அது பற்றிமேலும்  படிக்க "அறிவியல்புரம் "செல்லுங்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...