bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 1 அக்டோபர், 2019

"செஞ்சீனம் 70".


சீன மக்கள் (கம்யூனிச) அரசு உருவான 70ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந்நாட்டில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. 
நாட்டுக்காக உழைத்தவர்களை,உயிரிழந்தவர்களை  நினைவுகூர்ந்துவரும் தேசிய தினத்தை போற்றிவருகிறது சீனா . 

அதைப்போற்றும் வகையில்  
தியாகங்கள் நிரம்பிய சீனாவின் 
தொடக்கக்காலத்தைஒரு பார்வை.
சீன குடியரசின் குவோமின்டாங் படைகளை எதிர்த்து மக்கள் விடுதலைப் படையினர் (பி.எல்.ஏ.) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக அப்போது பீகிங் என்று அழைக்கப்பட்ட நகரில் டியானென்மன் சதுக்கத்தில் பல நூறாயிரம் சீனர்கள் 1949 அக்டோபர் 1 ஆம் தேதி கூடினர்.

சீன நேரத்தின்படி பிற்பகல் 3 மணிக்கு, தலைவர் மாவோ சே- துங் - இப்போது மாவோ ஜெடாங் என உச்சரிக்கப்படுகிறது -
 சீன மக்கள் குடியரசு (பி.ஆர்.சி.) உருவாக்கப்படுவதை அறிவிக்க, வரிசையாக இருந்த மைக்குகள் முன்னால் சென்றார். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த ராணுவ அணிவகுப்பு அப்போது தொடங்கியது. பி.ஆர்.சி. அமைக்கப்பட்டது, ரஷியப் புரட்சிக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிஸத்துக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.

சோவியத் யூனியனுக்கும் சீன கம்யூனிஸ்ட்களுக்கும் இடையிலான சுமுக உறவுகளுக்கு எந்த அளவுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது என்பது பற்றி அப்போதைய பிபிசி கண்காணிப்புப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் ஜின்குவா - பிபிசி கண்காணிப்பு ஆவணக் காப்பகத்தில் புதிய சீன செய்தி ஏஜென்சி என குறிக்கும் வகையில் என்.சி.என்.ஏ., என குறிப்பிடப்பட்டுள்ளது - சீனா (மக்கள் தினசரி) மற்றும் ரஷிய (பிராவ்டா) கம்யூனிஸ்ட் கட்சிகளின் அதிகாரப்பூர்வ பத்திரிகைகள் போன்ற ஊடகங்களில் வெளியான செய்திகள், கட்டுரைகள், கடிதங்கள் , உரைகளில் இருந்து மேற்கோளாக எடுக்கப்பட்ட சமகாலத்தைய கருத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 `பீகிங்கில் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற்ற 200,000 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பிரமாண்டமான பேரணியில், சீன மக்கள் குடியரசின் மத்திய மக்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டதை தலைவர் மாவோ ஜெடாங் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கை செய்தார்.
மத்திய மக்கள் அரசின் ஆறு துணைத் தலைவர்களுடன் தனது இருக்கையில் அமர்வதற்குத் தலைவர் மாவோ வந்தபோது கரவொலி விண்ணைப் பிளந்தது.
அரசு கவுன்சிலின் மற்ற உறுப்பினர்கள், பி.பி.சி.சி.யின் [மக்கள் அரசு ஆலோசனை அமைப்பு]பிரதிநிதிகள் மற்றும் சோவியத் கலாச்சார தூதுக் குழுவின் உறுப்பினர்கள் மேல்தளத்தில் மாவோ -விற்குப் பின்னால் அமர்ந்திருந்தனர்.
மத்திய மக்கள் அரசாங்கத்தின் முதலாவது அறிவிக்கையைப் படிப்பதற்காக மாவோ எழுந்து வந்தார். அந்த நிகழ்ச்சி சீனாவின் அனைத்துப் பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் ஒரே நேரத்தில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

சியாங் கய்-ஷெக் அரசாங்கம் [சீனக் குடியரசின் அரசாங்கம், இப்போது அதன் கட்டுப்பாடு தைவான் தீவுகள் வரை என சுருங்கிவிட்டது] தந்தை நாட்டுக்குத் துரோகம் செய்யத் தொடங்கியதில் இருந்து மக்கள் பட்ட துயரங்களைக் குறிப்பிட்டு மாவோ தொடங்கினார்;
 இருந்தபோதிலும், இப்போது மக்கள் விடுதலைப் போராட்டம் அடிப்படையில் வெற்றி பெற்று, பெரும்பான்மை மக்கள் விடுதலை பெற்றுவிட்டனர்...
``தொடர்ந்து பேசிய மாவோ, சீன மக்கள் குடியரசின் மக்கள் அனைவருடைய சட்டபூர்வமான ஒரே பிரதிநிதித்துவ அரசாங்கமாக இந்த அரசுதான் இருக்கும் என்பதை மற்ற நாடுகளின் அரசுகளுக்கு அறிவிக்கை செய்ய மத்திய மக்கள் அரசு கவுன்சில் முடிவு செய்துள்ளது என்று கூறினார்.

 சமத்துவம், பரஸ்பர நலன் மற்றும் எல்லைகள் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பரஸ்பரம் மதித்தல் என்ற கோட்பாடுகளை ஏற்கத் தயாராக இருக்கும் எந்த ஒரு வெளிநாட்டுடனும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள இந்த அரசு தயாராக உள்ளது என்றும் கூறினார்.


அக்டோபர் 1 ஆம் தேதி மாபெரும் பேரணியில் படைகளை ஆய்வு செய்த பிறகு, பி.எல்.ஏ.வின் ஜி.எச்.க்யூ உத்தரவு ஒன்றை தலைமை கமாண்டர் ச்சூ டெஹ் படித்தார்.
சியாங் கய்-ஷெக் அரசுக்கு எதிராக நடைபெற்ற புரட்சிப் போரில் மகத்தான வெற்றி பெற்றமைக்காக மக்கள் விடுதலை படைக்கு அதில் பாராட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், அவர்களுடைய பணி அத்துடன் முடிந்துவிடவில்லை என்று அவர் நினைவுபடுத்தினார்.
அனைத்து கமாண்டண்ட்களும், வீரர்களும், மக்கள் விடுதலைப் படையின் அலுவலர்களும் மத்திய மக்கள் அரசு மற்றும் மக்களின் மகத்தான தலைவர் மாவோ உத்தரவுகளை உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும் என்று இதன் மூலம் உத்தரவிடுகிறேன்.

குவோமின்டாங்கின் எதிர்விளைவு படைகளை அழிப்பதற்கும், இன்னும் விடுவிக்கப்படாத அனைத்துப் பகுதிகளையும் விடுவிப்பதற்கும், அதேசமயத்தில் அனைத்து கொள்ளையர்கள் மற்றும் புரட்சிக்கு எதிரானவர்களை அழிப்பதற்கும், அவர்களுடைய எதிர்வினை செயல்கள் மற்றும் கலக முயற்சிகளை அடக்குவதற்கும் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடுகிறேன் என்று கூறி அவர் நிறைவு செய்தார்.''

சீன ஊடகங்களின் செயல்பாடு குறித்து அக்டோபர் 1949ல் பிபிசி கண்காணிப்பு அறிக்கை
``சீன கம்யூனிஸ வானொலியின் ஏறத்தாழ அனைத்து ஒலிபரப்புகளுமே அக்டோபர் 1 ஆம் தேதி பீகிங்கில் நடந்த மத்திய மக்கள் அரசின் அறிவிக்கை பற்றியதாக இருந்தது. அக்டோபர் 2 ஆம் தேதி சர்வதேச அமைதி தினம், அதற்கடுத்த நாட்களில் நடந்த சந்திப்புகளில் சோவியத் - சீன நட்புணர்வு சங்கம் முறைப்படி தொடங்கப்பட்டது பற்றியதாகவும் அது இருந்தது. இந்த அனைத்து தருணங்களிலும் சோவியத் யூனியன் மற்றும் சீனப் புரட்சிப் படைகளுக்கு இடையில் சுமுக உறவு குறித்த விஷயங்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.''

பீப்பிள்ஸ் டெய்லி, 5 அக்டோபர் 1949:
``சீனர்களான நாங்கள் மாஸ்கோ குறித்து முழுமையாக அன்பும், உணர்வும் கொண்டிருக்கிறோம். பாட்டாளி வர்க்கத்தினரின் மகத்தான தலைவர்கள் மார்க்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோர், முதலாளித்துவம் மற்றும் நிலவுடமைத்துவம் ஆகியவற்றில் இருந்து எங்கள் நாட்டை விடுவிக்க வழிகாட்டுதலாக இருந்தனர்.

லெனின் பணிகளை ஸ்டாலின் தொடர்ந்து மேற்கொண்டார்.
ரஷியக் கூட்டமைப்பு இல்லாதிருந்தால், சீன மக்களால் இந்த மகத்தான வெற்றியைப் பெற முடிந்திருக்காது.''

பிராவ்தா , 5 அக்டோபர் 1949:
``இந்தக் குடியரசின் அறிவிக்கை தனித்துவமான வரலாற்று நிகழ்வு. 475,000,000 பலம் கொண்ட புகழ்மிக்க சீன மக்களின் வரலாற்றில் புதிதாக ஒரு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. உள்நாட்டின் படைகள் மற்றும் சர்வதேச ஏகாதிபத்திய படைகளைக் கொண்ட கூட்டுப் படையினருக்கு எதிராக சீன ஜனநாயகப் படைகள் நடத்திய நீண்ட உறுதியான போர் முடிவுக்கு வந்துள்ளது.
உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் போராட்ட குணம் கொண்ட கம்யூனிஸ்ட் முன்னணித் தலைவர்களால் முன்னின்று நடத்தப்பட்ட, சோஷலிஸம் மற்றும் ஜனநாயக முகாமில் இருந்து கிடைத்த தீவிர ஆதரவுடன், தேச துரோகம் இழைத்த, நிலபிரபுத்துவத்தின் அடக்குமுறை, காலனி ஆதிக்கத்தின் அதிகார துஷ்பிரயோக சிந்தனை கொண்ட காலமாக இருந்த குவோமின்டாங் முதலாளித்துவ ஆட்சி தூக்கி வீசப்பட்டது. தேசிய சுதந்திரத்தை அடைவதில் சீன ஜனநாயகம் வெற்றி பெற்றது.
  வெளிநாட்டு முதலீட்டுக்கு இரையாகிப் போய் ஏறத்தாழ நூறாண்டு காலம் அடிமையாக இருந்த நிலைமைக்கு அது முற்றுப்புள்ளி வைத்துவிட்டது...''

அக்டோபர் 1949,பி.ஆர்.சி.க்கு ரஷிய அரசு கடிதம்:
``சீனாவின் மத்திய மக்கள் அரசின் முன்மொழிவுகளைப் பரிசீலனை செய்த பிறகு, சீன மக்களுடன் மாற்றம் இல்லாத நிலையில் நட்புறவைப் பராமரிக்கும் உந்துதலுடனும், சீன மக்களின் ஏகோபித்த பெரும்பான்மையினரின் விருப்பங்களை சீனாவின் மத்திய மக்கள் அரசாங்கம் பெற்றிருக்கிறது என திருப்தி அடைந்திருப்பதாலும், சோவியத் யூனியனுக்கும் சீனாவின் மக்கள் குடியரசுக்கும் இடையில் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும், தூதர்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் முடிவு செய்யப்படுகிறது.''
(ரஷிய வெளியுறவு துணை அமைச்சர் ஆண்ட்ரெய் அன்ட்ரெயிச் குரோமிகோவிடம் இருந்து அனுப்பப்பட்ட கடிதம்)
                                                                                                                              ஆதாரம்: பிபிசி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
வாட்ஸ்ஆப் தங்களின் வாடிக்கையாளர்களின் தனிஉரிமை, தனிமை  மற்றும் பாதுகாப்பு ஆகியவைகளுக்கு முக்கியதத்துவம் தருகிறது.
தங்களின் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் தற்போது புதிய பல புதுப்பித்தல்களை  வழங்கி வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

விறல் ரேகைப்பதிவு

வாட்ஸ்ஆப் ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் சிறப்பம்சங்கள் ஆப்பிளின் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஐபோன் வாடிக்கையாளர்கள் ஃபேஸ் அன்லாக் மூலமாகவும் வாட்ஸ்ஆப்பை செயல்படுத்த முயலும். உங்களின் அக்கௌண்ட்களுக்கு செல்லுங்கள் அதில் ப்ரைவசியை தேர்வு செய்யுங்ஜள். பின்னர் பிங்கர்பிரிண்ட் லாக் என்ற வசதி இருக்கும் அதில் அன்லாக் வித் ஃபிங்கர் பிரிண்ட் என்ற ஆப்சனை தேர்வு செய்து உங்களின் வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஃபேஸ்புக் ஸ்டோரியாக வாட்ஸ்ஆப் இடுகைகளை பகிர்வது எப்படி?

ஆண்ட்ராய்டின் 2.19.258 என்ற வெர்சனிலும், ஐபோனில் 2.19.92 என்ற வெர்சனிலும் இந்த அப்டேட் கிடைக்கிறது.
 வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பக்கத்தில் ஃபேஸ்புக் ஸ்டோரியாக ஷேர் செய்வதற்கான ஆப்சன் தற்போது வந்துள்ளது. ஏற்கனவே வாட்ஸ்ஆப், பேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராமை ஒன்றிணைக்கும் பணியில் ஃபேஸ்புக் குழுமம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நண்பர்களின் இடுகைகளை உங்கள் பெயர் தெரிய வராமல் பார்ப்பது ?

என்னதான் நண்பர்களாக இருந்தாலும் ஒரு சில ஸ்டேட்டஸ்கள் ப்ரைவசி வைத்து யாருக்கு தேவையோ அவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் வைப்பதும் வழக்கம். நீங்கள் அவர்களின் ஸ்டேட்டஸ்களை பார்க்கின்றீர்கள்.
இருப்பினும் உங்களின் பெயர்கள் தெரியாமல் இருக்க என்ன செய்யலாம்?
ப்ரைவசி ஆப்சனில் இருக்கும் ரீட் ரெசிப்ட்ஸ் என்ற ஆப்சனை தேர்வு செய்தால் உங்களின் பெயர் ஸீன் பை பட்டியலிலேயே இடம் பெறாது.

குழுக்கான அழைப்புகள்.

உங்களின் விருப்பம் இல்லாமல் உங்களை இனி யாராலும் வாட்ஸ்ஆப் குழுவில்  இணைக்க இயலாது. இதற்கான செட்டிங்க்ஸ்லில் நோபடியை தேர்வு செய்தால், யாரும் உங்களை எந்த க்ரூப்பிலும் இணைக்க இயலாது.
அந்த இன்விடேசன் ரெக்வஸ்ட்டும் மூன்றே நாட்களில் காலாவதி ஆகிவிடும். மை காண்டாக்ட்ஸ் என்றால், உங்கள் காண்டாக்ட்டில் இருக்கும் நபர்கள் உங்களை க்ரூப்பில் இணைக்க இயலும்.
தேவையற்ற ஒவ்வொரு க்ரூப்பிலும் நம்மை இணைத்துவிட்டு கடுப்பேற்றுவர்களிடம் இருந்து தப்பிக்க இது ஒரு சிறந்த முறையாக இருக்கும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
 பெரும்பணக்காரர்கள் சொத்து மதிப்பு சரிவு...
இந்திய பெரும்பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டை காட்டிலும் சராசரியாக 11 சதவீதம் சரிவடைந்துள்ளதாக ஹருன் இந்தியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதற்கும் பாஜக அரசின் பொருளாதாரக்கொள்கைகள்தான் காரணம்.
ஆனால் மீண்டும் கார்ப்பரேட் வரிகள் சலுகைகளால் அவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துவிடும் என்றும் உணரப்படுகிறது.
ஹருன் ரிப்போர்ட் இந்தியா மற்றும் ஐஐஎப்எல் வெல்த் நிறுவனங்கள் இணைந்து நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்கள் குறித்த ஆய்வை நடத்தியது.
அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதோடு மட்டுமல்லாது, 2019ம் ஆண்டின் இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் 41 துறைகளில் இருந்து 953 நபர்களை, ஹருன் ரிப்போர்ட் இந்தியா மற்றும் ஐஐஎப்எல் வெல்த் நிறுவனங்கள் தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
இது கடந்தாண்டு பங்கேற்ற நபர்களை காட்டிலும் 15 சதவீதம் அதிகம் ஆகும், அதாவது, கடந்தாண்டை விட 122 பேர் அதிகமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டனர். 2016ம் ஆண்டு பட்டியலை கணக்கிடும்போது 181 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டியலில் எடுத்துக்கொண்டவர்களின் குறைந்தபட்ச சொத்து மதிப்பு ரூ. ஆயிரம் கோடிகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதன் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் பணக்காரர்களில் சராசரி சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 11 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்தாண்டில் அவர்கள் சேர்த்துள்ள புதிய சொத்துக்களை சேர்க்காமல் இருக்கும் பட்சத்தில், அவர்களின் சொத்து மதிப்பு கடந்தாண்டை விட ரூ.3,72,800 கோடி குறைந்துள்ளது.
344 நபர்கள் அதாவது, இந்தாண்டு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு நபர்களின் சொத்து மதிப்பு கடுமையாக சரிவடைந்துள்ளது.
ஆயிரம் கோடி கட் ஆப் ஆக தாங்கள் நிர்ணயித்திருந்த நிலையில், 112 பேர் அந்த வட்டத்திற்குள்ளேயே வரவில்லை.

2019 இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலின் முதலிடத்தில் ரூ.3,80,700 கோடிகள் சொத்துமதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இந்த சொத்துமதிப்பு, இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் மத்திய அரசுக்கு வழங்கிய ரூ.1,76,000 கோடியை விட 2.2 மடங்கு அதிகம் ஆகும்.
 முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, கடந்தாண்டை விட 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரூ.94,500 கோடிகள் சொத்து மதிப்புடன் கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் பட்டியலில், ஐந்தாம் இடம் பிடித்துள்ளனர்.
 இவர்களது சொத்து மதிப்பு, கடந்தாண்டை விட 33 சதவீதம் அதிகரித்துள்ளது.விப்ரோ நிறுவனத்தின் அஜிம் பிரேம்ஜி, கோடக் மகேந்திரா பேங்கின் உதய் கோடக் உள்ளிட்டோரின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
ஆர்ச்லர் மிட்டல் நிறுவனத்தின் தலைவர் எல் என் மிட்டல், சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் திலிப் சங்க்வி உள்ளிட்டோரின் சொத்து மதிப்பு, கடந்தாண்டை விட கணிசமாக சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 பொருளாதார  அடிப்படைத் தெரியாதவர்.
பா.ஜ.க ஆட்சியின் தவறான அரசியல் பொருளாதாரக்கொள்கைகளால் இந்தியா மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.
ஆனால் அதை பலர் ,பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டும்,அதை விட்ட வெளியே வர ஆலோசனைகள் சொன்னாலும் மோடி கேட்டுக்கொண்டு திருத்திக்கொள்ளும் மனநிலையில் இல்லை.
அது கூட பரவாயில்லை.பொருளாதார நெருக்கடியை சரி செய்கிறேன் என அவர் எடுக்கும் நடவடிக்கைகள் மேலும் இழி நிலைக்கு இந்திய பொருளாதாரத்தை கொண்டு செல்கிறது.
 இந்நிலையில் பா.ஜ.க எம்.பி-யாக இருந்து கொண்டே சுப்பிரமணியன் சுவாமி, பா.ஜ.க ஆட்சியின் அவலங்களை அவ்வப்போது சுட்டிக்காட்டி  வருகிறார்.


 மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுப்பிரமணியன் சுவாமி கலந்துக்கொண்டார்.
 நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர், எடுத்த எடுப்பிலேயே பிரதமர் மோடிக்கு அறிவுரை கூற ஆரம்பித்துவிட்டார்.

அப்போது
 “பிரதமர் மோடி, நீங்கள் நாட்டின் பொருளாதாரத்தை உண்மையாக மீட்க விரும்பினால், உங்களுக்கு விருப்பம் இல்லாத உண்மைகளை கேட்கும் மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
 அரசு தன்னுடைய பொருளாதார வல்லுநர்களை அச்சுறுத்தும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் இருந்து தவறை கூறிய  உறுப்பினர்கள் நீக்கப்படுவது தவறு.
வல்லுநர்கள் உண்மையான பொருளாதாரச் சூழலைச் சொல்வதற்கு அச்சப்படு நிலை  எனக்குப் பயத்தை தருகிறது.
 பொருளாதார வல்லுனர் கூறும் வாதத்தை முதலில் நேருக்கு நேர் எந்த வித தயக்கம் இன்றி கூறுவதற்கு மோடி ஊக்கப்படுத்தவேண்டும். ஆனால் அதுபோல ஊக்கப்படுத்தும் நடவடிக்கையை மோடி இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை என தோன்றுகிறது.
 மோடிக்கு பொருளதாரத்தின் அடிப்படைக்கூட தெரியவில்லை.
தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையாக குறுகிய கால, நடுத்தர கால மற்றும் தொலைநோக்கு கொள்கை திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை.
மோடி இதில் கவனம் செலுத்தாமல் தேவையற்றவற்றில்  கவனம் செலுத்துகிறார்.
குறிப்பாக கடந்த 1991-ம் ஆண்டு பெருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளை மன்கோகன் சிங் கொண்டுவந்தார்.
நிதியமைச்சராக மன்கோகன் சிங்  இருந்தபோது செய்யமுடிந்த நடவடிக்கைகளைக் கூட பிரதமராக இருக்கும் மோடியால் செய்ய முடியவில்லை.செய்யவும் தெரியவில்லை.அதற்கு காரணம் மோடி தான்,அமித் ஷா மட்டுமே முடிவு  எடுக்க வேண்டும் என நினைப்பதுதான். ” என்று அந்த கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...