bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 14 அக்டோபர், 2019

பொருளாதாரம்`நோபல் பரிசு' பெற்ற அபிஜித் பானர்ஜி ?

இந்தியரல்ல அமெரிக்க குடிமகன்!.

இன்றைய உலகின் மிக அவசரமான பிரச்னைகளில் ஒன்று வறுமை.
 வறுமையால் உலகளவில் 700 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்னும் மிகக் குறைந்த வருமானத்தில் வாழ்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும், ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் ஐந்து மில்லியன் குழந்தைகள் இன்னும் நோய்களால் இறக்கின்றனர்.
உலகின் பாதி குழந்தைகள் இன்னும் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண் திறன் இல்லாமல் பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள்.

 இப்படியான உலகளாவிய வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழிமுறைகளையும், அதை சோதனை முறையில் முயற்சி செய்து நம்பகமான பதில்களைப் பெற்றதற்காக இவர்கள் மூவரும் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நோபல் பரிசுகள் ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அமைதிக்கான பரிசு தவிர மற்ற நோபல் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 2019ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மதுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
"அமைதியை நிலைநாட்டவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும்" நடவடிக்கைகளை எடுத்ததற்காக அபிக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போலாந்தை சேர்ந்த எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக் மற்றும் ஆஸ்திரியாவின் பீட்டர் ஹேண்ட்கே ஆகியோருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்கியதற்காக 96 வயது விஞ்ஞானி ஜான் பி குட் எனாஃப் உட்பட மூவருக்கு 2019-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரண்டத்தைப் பற்றி முற்றிலும் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் க்ரிமர் உடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி மற்றும் அவரின் மனைவி எஸ்தர் ட்யூப்லோ ஆகியோருக்கு வறுமையை ஒழிப்பதற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததற்காக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

``இவர்கள் நடத்திய ஆராய்ச்சி உலகளாவிய வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான நமது திறனை கணிசமாக மேம்படுத்தியுள்ளது.
இருபது ஆண்டுகளாக இவர்களின் புதிய சோதனை அடிப்படையிலான அணுகுமுறை பொருளாதாரத்தை மாற்றியுள்ளது. இது இப்போது வளர்ந்து வரும் ஆராய்ச்சித் துறையாகும்" எனக் கூறி மூவரையும் நோபல் பரிசுக் குழு பாராட்டியுள்ளது.

இந்த சோதனை முயற்சியில் முக்கிய பங்குவகித்தவர் அபிஜித் பானர்ஜி.
கடைசியாக கைலாஷ் சத்தியார்த்தி நோபல் பரிசு பெற்ற இந்தியர்.
அவருக்குப் பிறகு இந்தியர்கள் யாருக்கும் நோபல் கிடைக்காத நிலையில் கொல்கத்தாவின் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அபிஜித் பானர்ஜிக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 58 வயதாகும் அபிஜித் பானர்ஜி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர்.
இவரது தந்தையும், தாயும் கல்லூரி விரிவுரையாளர்கள் என்பதால் இயல்பிலேயே படிப்பில் கவனம் செலுத்திவந்துள்ளார் அபிஜித்.
அதிலும் தந்தை தீபக்கை போலவே பொருளாதாரத்தை தேர்வு செய்து படித்துள்ளார்.
கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், நேரு யுனிவர்சிட்டியில் முதுகலைப் பட்டப் படிப்பையும் முடித்தார்.

 பின்னர் 1988ல் பி.ஹெச்டி படிப்பதற்காக அமெரிக்கா சென்றவர் அங்கேயே குடியுரிமை அமெரிக்க குடிமகனாகி விட்டார்.
அவர் இப்போது வெளிநாட்டு வாழும் இந்தியரல்ல அமெரிக்க குடிமகன்.
இருப்பினும் இந்திய மரபணுவில்  என்பதால் நாம் கொஞ்சம் மகிழலாம்..

அமெரிக்க  குடியுரிமை பெற்ற கல்பனா சால்வாவை இந்தியர் என்று நம்பிக்கொண்டாடுவதைப்போல்தான் இவரையும் கொண்டாடுகிறார்கள்.கல்பனா அமெரிக்காவிலேயே  விண்வெளிக்கு ஏற்கனவே பறந்துள்ளார்.ஆனால்   என்று கொண்டாடுகிறோம்.அதுவரை அவரைப்பற்றி யாருக்குமே .
அதுபோல்தான் .
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி முடித்த இவர் தற்போது மாசேசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக  பொருளாதார பேராசிரியராக உள்ளார்.
தொடர்ச்சியாக வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார ஆய்வில் கவனம் செலுத்தி வரும் அபிஜித்துக்கு ஏற்கெனவே இன்போசிஸ் விருது, ஜெரால்ட் லோப் விருது, கீல் நிறுவனத்திடமிருந்து பெர்ன்ஹார்ட்-ஹார்ம்ஸ் விருதுகளை வென்றுள்ளார்.
 கடந்த 2003ம் ஆண்டே தனது சோதனைகளுக்காக தனது மனைவி எஸ்தர் மற்றும் செந்தில் முல்லைநாதனுடன் இணைந்து அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை மையத்தை நிறுவியுள்ளார். பொருளாதாரம் சார்ந்த பல்வேறு அமைப்புகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
 மாசேசூசெட்ஸ் கல்வி நிறுவனத்தில் பணிபுரியும்போது இதே நிறுவனத்தில் இலக்கிய பேராசிரியராகப் பணிபுரிந்தவரும், கொல்கத்தாவில் தன் சிறுவயது தோழியாக இருவருமாக அருந்ததி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
 இவர்களுக்கு ஒரு மகனும் இருந்தார்.

ஆனால், சில ஆண்டுகளில் கருத்து வேறுபாட்டால் மனைவி விவாகரத்து பெற்றுவிட 2016ல் மகனும் உயிரிழந்துவிட்டார்.
இதன்பின்புதான் தன்னுடன் ஆராய்ச்சி செய்து வந்த எஸ்தர் ட்யூப்லோவுடன் வாழ்ந்து வருகிறார் அபிஜித். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
எஸ்தர் ட்யூப்லோவும் அபிஜித்தை போல அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பிரெஞ்சு பெண். பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெறும் இரண்டாவது பெண் மற்றும் குறைந்த வயதில் (46 வயது) பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெறும் நபர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார் எஸ்தர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 தமிழ்நாடு அரசுப்பேருந்தா?இந்து முன்னணி பேரூந்துகளா?
" தீவிர அரசியலா.ஊ....கு..ம் "
இப்போதைய அரசியல், கருத்துச் சுதந்திரம், போலி செய்திகள் என சினிமாவை கடந்து பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார் சித்தார்த்.

"நான் தீவிர அரசியலுக்கு வரமாட்டேன். அதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.
 இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்தால் பாரபட்சம் பார்க்காமல் எல்லோரையும் திட்ட முடியாது.
 இப்போது தவறு யார் செய்கிறார்கள் என்று பார்க்காமல்.. தவறு என்ன என்று பார்த்து என்னுடைய கருத்தை நான் பதிவு செய்கிறேன்." என்றார்.

மேலும், "என் சிறிய வயதில் தேர்தல் என்பது வேறு மாதிரியாக இருந்தது. தேடித் தேடி படிப்போம். கருத்துக் கணிப்புகளைப் பார்ப்போம்.
ஆனால், இப்போது எல்லாம் கத்து கத்து என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் சேர விரும்பவில்லை.

கருத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்லக் கூடாது.
 கருத்து கூறினால் பயனாக இருக்குமென்றால் கருத்து கூறலாம். கும்பலாகக் கத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை." என்றார் நடிகர் சித்தார்த்.
இப்படித்தான்  ஆண்டுகளுக்கு முன்புவரை கமல்ஹாசனும் சொல்லிக்கொண்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...