bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 12 பிப்ரவரி, 2011

மாரடைப்பின் பின்னர் சுயமாக புதுப்பித்துக் கொள்ளும் திறனைப் பெறுமா மனித இதயம்? 
சீப்ரா எனப்படும் மீன் வகையின் இதயமானது மாரடைப்பின் பின்னர் தானாக புதிப்பித்துக் கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதைப் போல மனித இதயமும் அத்தகைய திறனைப்பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வின மீன்களின் இதயத் திசுக்களானது மாரடைப்பின் பின்னர் தானாக மீள உருவாகுவதாகவும் இவ்வுத்தியை பயன்படுத்தி மனிதனின் இதயம் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நாட்களை நாம் நெருங்கிக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


அம்மீனினத்தின் இதயத்தசைகளின் 20 % சுமார் 2 வாரங்களிலேயே குணமடைவதாகவும் இதற்கான முக்கிய காரணம் அவற்றின் இதயத்தில் காணப்படும் 'மொசைன் பீடா-4' எனப்படும் ஒருவகை புரத மூலக்கூறு எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


பொதுவாக மனித இதயமானது 4 இதயவறைகளைக் கொண்டுள்ளது. சீப்ரா மீன்களின் இதயமானது 2 இதயவறைகளைக் கொண்டுள்ளது.


எனினும் மனித இதயமானது அதிக மூல உயிரணுக்களை கொண்டுள்ளதால் இவற்றைத் தூண்டுவதன் மூலம் அம் மீனினத்தைப்போல மனிதனின் இதயத்திற்கும் புத்துயிரளிக்கமுடியுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...