bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 22 மார்ச், 2017

சந்தைப்படுத்தல்


உங்களது நிறுவனப் பொருட்களை சந்தைப்படுத்த திட்டம் ( மார்க்கெடிங் ப்ளானை) வகுக்க முக்கியமாக அடிப்படையான  கு பத்துறிப்புகளை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். 
அந்த   பத்து குறிப்புகளிலும் உங்களின் சந்தைப்படுத்தலில் இருக்கவேண்டியவை  மூன்று முக்கியம். 
அவைகளை கொண்டே நாம் சந்தைப்படுத்தல் பற்றிய  பத்து கட்டளைகளை வடிவமைக்கலாம். 
அந்த முதல் மூன்று விபரங்கள்:
1,நம் பொருட்களுக்கான சரியான தளத்தை தேர்ந்தெடுத்தல் 
2, வாடிக்கையாளரை அடையாளம் காணல் 
3, சரியான உள்ளடக்கத்தை உருவாக்கல் . 
அதன் பின்னர் இந்த மூன்றை முன்கொண்டு பத்து கட்டளைகளை வடிவமைக்கலாம்.

1. நீங்கள்  சந்தைப்படுத்தலில் இறங்கையில்  கடுமையான பாதையை தேர்ந்தெடுக்காதீர். அதை முடிந்தவரை தவிருங்கள். எளிதான தெளிவான, நிலையான பாதையை தேர்வு செய்து, உங்கள் சந்தைப்படுத்தல் (மார்க்கெடிங்)களத்தை வடிவமையுங்கள். 
உங்களின் இலக்கை நிர்ணயம் செய்யுங்கள், வாடிக்கையாளரை அடையாளம் காணுங்கள், பட்ஜெட்டை தயார் செய்யுங்கள், அதற்கான செயல் உத்தியை வடிவமைத்து வேலையை துவக்குங்கள்.
2. உங்களின் சந்தைப்படுத்தல் பிரச்சாரம் சரியான சமயத்தில், முயற்சியில் தகுந்த செலவில் செய்யப்படவேண்டியது அவசியம்.  அதற்கு முன் சந்தை பற்றிய ஆராய்ச்சி செய்து தெளிவாகி கொள்ளுங்கள். பலமுறை ஆராய்ந்த பின் செயலில் இறங்கவேண்டும். அத்துடன் மற்றவர்களின் வெற்றி, தோல்வியை ஆராயந்து அதிலிருந்து  உங்களின் முடிவை குழப்பமின்றி முடிவு செய்து கொள்ள வேண்டும் . உங்களின் மனம் கவர்ந்த பிரச்சாரங்களை ஆராயுங்கள், அது ஏன் உங்களை கவர்ந்தது, அதை எப்படி உருவாக்கினார்கள் என்று ஆராயுங்கள். அவைதான் மக்களின் மனதயும் கவரும்.இதுவே நீங்கள் உருவாக்கப்போகும் உங்கள் நிறுவனத்தின்  சந்தைப்படுத்தல்பிரச்சாரத்துக்கு உதவியாக இருக்கும். 
3.  நீங்கள் உங்கள் நிறுவனத்தின் மூலம் அடைய நினைக்கும் இலக்கு  எது  என்பதை முதலில் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில்  சந்தைப்படுத்தல் மற்றும் பிரச்சாரத்தை வடிவமைக்கவும். அதற்கு ஏற்ப தளத்தை தேர்ந்தெடுத்து  செயல்படுத்துங்கள். 
 4. உங்களின்  சந்தைப்படுத்தல்  உங்கள் நிறுவன பொருட்களை ,அடிப்படைகளை தெளிவாக மக்களுக்கு விளக்குவதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் இணையவழியில் வாங்குபவர்களுக்கு சரியான புரிதல் உங்கள்  நிறுவனத்தை,பொருட்களைப்  பற்றிஉண்டாகும். அது  வருங்கால வாடிக்கையாளர்களையும் உருவாக்கும்.
5. எல்லா சந்தைப்படுத்தல்களும் சில நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் உருவாக்கப்படுகிறது. 
அந்த நம்பிக்கை எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். அரசு முடிவுகள்,பிற நிறுவனங்கள் மூலம் நம் முன்னர் எதிர்பாராமல்  வரும் ஆபத்து மற்றும் சவால்களையும் நம் கவனத்தில் கொள்ள வேண்டும்.அவற்றை சமாளிக்க எப்போதும் தயாராக இருக்கும்படி பார்த்துக்  கொள்வது மிக அவசியம். 
6.  எல்லாரும் சரியாக இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. சில சமயம்  சந்தைப்படுத்தல் சரியான புரிதலின்றி தவறு ஏற்பட்டு அது தோல்வி அடையலாம். ஆனால் அந்த தோல்வியில் இருந்து உடனடியாக மீள்வது மிக அவசியம். நன்கு ஆராய்ந்து செய்த பிரச்சாரம் வெற்றியடையவில்லை என்றாலும் மனம் தளர தேவையில்லை. உங்கள் சந்தைப்படுத்தல் இதில் தோல்வியை தழுவியது என்று அலசி ஆய்ந்து அதை சரி செய்து , மாறுதலுக்கு உட்படுத்தும் அளவிற்கு வடிவமைத்து செயல்படுங்கள்.வெற்றி கிட்டும் . 

7. உங்களின் பிரச்சாரம், குறைந்த நாட்களுக்கு மட்டும் மக்களிடம் சென்றடைவது போல் அல்லாமல் நீண்ட கால விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் . இதற்காக கூடுதல் நேரத்தையும் பொருளையும் முதலீடு செய்ய தயங்காதீர். ஏனெனில் நீண்டகாலம் மக்கள் மனதில் இருக்கக்கூடிய 
சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள்  நிறுவனத்துக்கு நல்ல வளர்ச்சியை தரும் . 
8.  உங்கள் சந்தைப்படுத்தல் சந்தையில் எப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறது, மக்களிடம் வரவேற்பு உள்ளதா,அதற்கு உங்களின் போட்டியாளர் தரும் பதிலடி என்ன என்பதை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.அதற்கேற்ப அன்றாடம் நமது சந்தைப்படுத்தல் வடிவமைப்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும்.அவவ்ப்போது  மக்களின் கருத்துக்களை  கேட்டு,உணர்ந்து உடனடியாக தீர்வுகளை காணவேண்டும் . அப்போதே வாடிக்கையாளரின் மத்தியில் நாம் உரிய முதலிடத்தை  பெறமுடியும். 
9.  வருங்காலத்தை பற்றி சிந்திப்பது முக்கியம். அதே சமயம் கடந்த காலத்தில் நிகழ்ந்தை ஆராய்வது தேவையாக உள்ளது. உங்கள் யுக்திகளின் முடிவுகளை ஆராய்ந்து அதில் தேவையான மாற்றங்களை செய்து மேம்படுத்துவது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்து, விளம்பரங்களை பட்ஜெட்டுக்குள் வைப்பது  நிறுவன வளர்ச்சிக்கு நல்லது. நல்ல முடிவுகளை தரப்போகும் பிரச்சாரங்களுக்கு மட்டும் செலவிடுங்கள். அதுதான்  உங்கள் நிறுவனத்துக்கு மக்களிடம் நல்ல பெயரையும் பிரபலத்தையும்,மரியாதையையும் பெற்றுத்தரும். 

10.  இலக்கை அடைய திட்டம் வகுத்துக்கொள்ளுங்கள். யார் யாருக்கு என்னென்ன பணிகள் என்று பிரித்து கொடுங்கள். அதை ஒருங்கிணைப்பது முக்கிய பணி.அதை தகுதியான ஒருவரிடம் ஒப்படையுங்கள். உங்கள் இலக்கை நிர்ணயித்தவுடன் உடனே செயலில் இறங்குங்கள்.தாமதமே வேண்டாம் 
நூறாண்டு வாழப்போகிறவன் போல் யோசி.ஆனால் நாளையே வாழ்வின் முடிவை காணப்போகிறவன் போல் அதை செயல்படுத்து .இது பொன்மொழி.அதை கடைபிடித்தால் வெற்றி உறுதி.
சாத்தியம் என்பது செயல்.வெறும் வார்த்தையல்ல.
                                                                                                                                                 -சுகுமாரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...