bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 17 மே, 2017

8வது நினைவாண்டாக நினைவேந்தல்



இலங்கையில் தனி தமிழீழம் கோரி போராடி வந்த தமிழர்களுக்கு எதிராக நடந்த இறுதிக் கட்டப் போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக இன்று 8வது ஆண்டாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் தமிழீழம் கோரி போராடி வந்த தமிழகர்கள் மீது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சாவின் ராணுவம் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடத்தி கொத்து கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்தது. இலங்கையில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவத்தால் நடத்தப்பட்ட அரஜாகம், மிருகத்தனமான தாக்குதல்களை இன்றும் யாரும் மறந்துவிட முடியாது.

பெண்கள் என்றும் பாரமால் அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி, களங்கப்படுத்தி கொன்றனர். இந்த கொடூர நினைவுகளை ஏந்தி இன்று இலங்கை தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். தமிழினத்தை காக்க உயிர் நீத்த தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. தற்போதைய அதிபர் மைத்திரி பால சிறிசேனா அரசு மே மாதம் 18 ஆம் தேதியை நினைவேந்தல் நாளாக அனுசரிக்க அனுமதியளித்தது. 
8வது நினைவாண்டாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நடைபெற்று வருகிறது. 
இலங்கையின் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
 மீறி நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...