bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 30 மார்ச், 2018

காவிரி நாடகம் ...,

கடைசி நாளின் கடைசி நிமிடங்களில் கூட, காவிரி மேலாண்மை வாரிய அறிவிப்புவெளியாகலாம் என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த தமிழக விவசாயிகளின் முதுகில் குத்தி யிருக்கிறது மோடி அரசு.

தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களும் காவிரி நதிநீர் பங்கீட்டுக் கொள்வதற்கான ‘திட்டம்’ ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் காலக்கெடு, வியாழக் கிழமை மாலை 5 மணியுடன் முடி வடைந்தது. 

ஆனால், கடைசிவரை காவிரி தொடர்பான எந்த உத்தர வையும் பிறப்பிக்காமல் மோடி அரசுதமிழக மக்களை ஏமாற்றி விட்டது.


இது தமிழக விவசாயிகளையும், பொதுமக்களையும் பெரும்கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.காவிரி நீர் பங்கீடு தொடர்பாக- ஏற்கெனவே நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு,கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தன. 

இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி இறுதித் தீர்ப்பை வழங்கியது.
அதில், “காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை 177.25டிஎம்சி என்றும், கர்நாடகத்திற்கு உரிய தண்ணீரை 284.75 டிஎம்சி என்றும் பங்கீடு செய்த உச்ச நீதிமன்றம், இதனடிப்படையில் மாநி லங்கள் நீரைப் பங்கிட்டுக்கொள்ள நடுவர் மன்றம் பரிந்துரை செய்தபடி ‘ஸ்கீம்’ (செயல்திட்டம்) ஒன்றை 6 வார காலத்துக்குள் மத்திய அரசுஉருவாக்க வேண்டும்” உத்தரவிட்டது.

காவிரி நடுவர் மன்றமானது, தனது இறுதித்தீர்ப்பில் “நதிநீர் பங்கீட்டை மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை ஆணையம்” ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்ததால், உச்ச நீதி மன்றம் கூறியிருக்கும் ‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று ஆணை யம்தான் என்று தெளிவானது. 

அதனடிப்படையில், காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று ஆணையத்தையும் அமைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும், தமிழக அரசும், மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு கோரிக்கை விடுத்தன. 

தமிழக விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 
அணை யின் கட்டுப்பாட்டை கர்நாடக அரசிடமிருந்து பறிக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை ஏற்க முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்தது.

மத்திய அரசின் நீர்வளத்துறை யானது, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்குப் பதிலாக, நான்கு மாநில அரசுகளின் அதிகாரிகளைக் கூட்டி, பிரச்சனையை மீண்டும் முதலில் இருந்து துவங்குவது போல ஆலோசனை நடத்தியது. 
காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்காவிடில் அதிமுக எம்.பிக்கள்
அனைவரும் தற்கொலை
செய்து கொள்வோம்


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக அறிக்கை அளிக்கு மாறும் உத்தரவிட்டது. அதன்படியே நான்கு மாநிலங்களும் தங்கள் தரப்பு கருத்தை நீர்வளத்துறையிடம் தெரிவித்தன.
அதனைத் தனது கையில் வைத்துக்கொண்டு, உச்சநீதிமன்றம்‘ஸ்கீம்’ என்றுதான் கூறியிருக்கிறதே தவிர, மேலாண்மை வாரியம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை என்று புதிய வியாக்யானம் கொடுக்கஆரம்பித்தது. 

நடுவர் மன்றம் பரிந்துரைத்த ‘ஸ்கீம்’ என்ற வார்த்தையை யோ, நடுவர் பரிந்துரைத்தது மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று ஆணையத்தையும் தான் என்பதையோ வசதியாக மறைத்தது. அத்துடன் கர்நாடக அரசு கூறியிருந்தபடி, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ‘காவிரி மேற்பார்வைக்குழு’ என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தவும் தீர்மானித்தது. 

இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், திடீரென உச்ச நீதிமன்றம் கூறிய ‘ஸ்கீம்’ என்னவென்று உச்ச நீதிமன்றத்திடமே விளக்கம் கேட்கப் போவதாக- பிரச்சனையைக் காலம் கடத்தும் முயற்சியில் இறங்கியது. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

6 வாரங்களாக வெறுமனே வேடிக்கை பார்த்துவிட்டு, கெடு முடிவதற்கு ஒருநாள் முன்னதாக மோடி அரசு உச்ச நீதிமன்றத்தை நாடுவது, தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் துரோகம் என்று கண்டனக் கணைகள் பாய்ந்தன.

உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைப்பதற்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்; மத்திய அரசு அதை மீறும் பட்சத்தில் உடனடியாக நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 
உச்ச நீதிமன்றத்தின் காலக்கெடு, மார்ச் 29-ஆம் தேதிதான் முடிகிறது என்பதால், அதற்குப் பின்னால், நீதிமன்ற அவதூறு தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு சமாளித்தது. 
கடைசி நிமிடத்தில் கூட மேலாண்மை வாரியம் அமைக்கப்படலாம் என்று தமிழக பாஜக தலைவர்கள் கூறினர். 

தமிழக விவசாயிகளும் காவிரி மேலாண்மை வாரிய அறிவிப்புக்காக கடைசி நிமிடம் வரை காத்திருக்க முடிவு செய்தனர்.
ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார ‘கெடு’ வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடையும் வரை, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல், மோடி அரசு தமிழக மக்களின் முதுகில் குத்தியுள்ளது.
மோடிக்கும்,பாஜகவுக்கும் முதுகில் குத்துவது ஒன்றும் புதிதல்ல.
அவர்களால் முதுகில் குத்தப்பட்டவர்கள் எண்ணி மாளாது.சமீபகால உதாரணம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...