bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 15 நவம்பர், 2018

விமானங்களை தரக் கட்டாயம் இல்லை!

ரபேல் 

மோடி- டஸ்ஸால்ட் ஒப்பந்தம் !!

ரபேல் விமானக் கொள்முதல் விஷயத்தில், பிரதமர் மோடி தனது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கமிஷன் சம்பாதித்துக் கொடுக்கும் வேலைபார்த்திருக்கிறார் என்பது மட்டுமே இதுவரை தெரிந்த விஷயமாக இருந்தது.

ஆனால், “இந்திய அரசு ரூ. 60 ஆயிரம் கோடியை தூக்கிக் கொடுத்தாலும், பதிலுக்கு ‘டஸ்ஸால்ட்’ நிறுவனம், ரபேல் விமானத்தை தயாரித்துக் கொடுத்தே ஆக வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை” என்று ஒப்பந்தம் போட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதால், இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், எம்.எல். ஷர்மா மற்றும் வினீத் தண்டா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் அமர்வு முன்பு, புதன்கிழமையன்று இவ்வழக்கில் விசாரணை நடை பெற்றது. 


மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆஜராகி வாதங்களைமுன்வைத்தார். அப்போது நீதிபதிகள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் வேணுகோபால் திணறினார்.

“இந்தியாவிற்கு ரபேல் விமானங்களை வழங்கும் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப் பந்ததாரரை யார் தேர்வு செய்தது;
 இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்திற்கு பதிலாக,வேறொரு நிறுவனம் (ரிலையன்ஸ்) திடீரென எப்படிதேர்வு செய்யப்பட்டது;
 ரபேல் ஒப்பந்த விதிகளை மாற்றியது யார், எதன் அடிப்படையில் இதை மாற்றினீர்கள்; ஏற்கெனவே ஒரு ஒப்பந்தம் நிலுவையில் இருந்தபோது, 2015-ஆம் ஆண்டு பிரதமர் மோடி, புதிதாக ஒரு ஒப்பந்தத்தை போட அவசியம் என்ன?”என்று அடுக்கடுக்காக எழுப்பப்பட்ட கேள்விகளில் ஒன்றுக்குக் கூட உருப்படியான பதிலை வேணுகோபால் அளிக்கவில்லை.

“டஸ்ஸால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்ததாரர் யார் என்றே தங்களுக்குத் தெரியாது” என்றுவேணுகோபால் அளித்த பரிதாபகரமான பதிலைப்பார்த்த நீதிபதிகள், “பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஈடுபடப்போகும் பங்குதாரர் யார் என்பதைக் கூட தெரியாமல்தான் விமானம் வாங்குவீர்களா? 
இதுதான் பாதுகாப்புத்துறை மீதான அக்கறையா? என்று விளாசித் தள்ளினர்.

குறிப்பாக, ரபேல் ஒப்பந்தம் குறித்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு,அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் அளித்த பதிலைக் கேட்டு அதிர்ந்து போயினர்.“மத்திய அரசு செய்திருக்கும் ரபேல் ஒப்பந்தத்தில் பெரிய ஓட்டை இருக்கிறது. 


இதில் விமானங்களை அளிக்க வேண்டிய டஸ்ஸால்ட் நிறுவனம், விமானத்தை கட்டாயமாக அளித்தாக வேண்டும் என்று ஒப்பந்தத்தில் எங்குமே கூறப்படவில்லை; ஒருவேளை அவர்கள் ஏமாற்றிவிட்டால் மத்திய அரசு என்ன செய்யும்?” என்பதே பிரசாந்த்பூஷனின் கேள்வி.

அதற்குப் பதிலளித்த வேணுகோபால், “நாங்கள் பணம் கொடுத்தால் அவர்கள் கண்டிப்பாக விமானத்தை அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தின் எந்த இடத்திலும் கூறப்படவில்லை; அது உண்மைதான்” என்று எந்த உறுத்தலுமின்றி ஒப்புக்கொண்டார்.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள், “பாதுகாப்பு தொடர்பான பிரச்சனையில் இப்படியா பதில்அளிப்பது; டஸ்ஸால்ட் நிறுவனம், பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டனர். 

“விமானம் இல்லை, ராணுவம் வலிமையாக இல்லை என்று கூறி, அதை வலிமையாக்கவே இந்த ஒப்பந்தம் என்கிறீர்கள்; அப்படியிருக்கும்போது ஒப்பந்தத்தை இப்படியா மோசமாக வடிவமைப்பது?” என்று சாடினர்.
இதனால் பதற்றம் அடைந்த வேணுகோபால், பிரச்சனையை சமாளிப்பதாக கருதி, மேலும் உளறிக் கொட்டினார். 
“பிரான்ஸ் அரசு தங்களுக்குஆற்றுப்படுத்தும் கடிதம் கொடுத்துள்ளது; அதில் பிரான்ஸ் அரசு ஒப்பந்த முறைகளை பின்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது” என்றார்.
இது ஒன்றும் உத்தரவாதக் கடிதம் அல்ல என்பதை மறைத்து, ஆற்றுப்படுத்தும் கடிதம் என்றுசமாளித்தார். அதுவும் நீதிபதிகளிடம் எடுபடவில்லை. 
“ஒப்பந்த படிவத்திலேயே விமானத்தை கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்று வரிஇல்லாத போது, ஆற்றுப்படுத்தும் வார்த்தை மூலம்விமானம் இந்தியாவிற்கு கிடைத்து விடுமா?” மத்திய பாஜக அரசை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...