bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 19 நவம்பர், 2018

நன்றி உணர்ச்சி அதிகரிக்குமா

அண்மையில் சென்னையில் 2000 கிலோ சொச்சம் நாய் இறைச்சி பிடிபட்டது பலரை திகைக்க வைத்திருக்கும்.
பலர் அங்குள்ள ஓட்டல்களில் நாம் உண்டது நாய்கறியா என்று புலம்பிக்கொண்டு இருக்கலாம்.
ஆனால் அது நாய்க்கறி இல்லை வடக்கே உள்ள ஒருவகை ஆட்டிறைச்சிதான் என்று ஒருபுறம் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

வழக்கு ஒருபுறம் நாய் போல் இழுத்துக்கொண்டிருக்கும் போதே நாம் நாய்க்கறி பயன்பாடு பற்றி உலகை ஒருவளம் வருவோம்.


21ஆம் நூற்றாண்டில் நாய்கறி மனித உணவின் ஒரு அங்கமாக வகித்துள்ளது. 

காலப்போக்கில் நாய்கறி என்பது உணவுப்பழக்கங்களில் இருந்து மறைந்தாலும் தற்போது வரை ஏணைய நாடுகளிலும், பல இன மக்களிடமும் பாரம்பரிய உணவாக நாய் இறைச்சி இருக்கிறது. 

2014 இன் கணக்கெடுப்பின் படி ஒரு வருடத்திற்கு 25 மில்லியன் நாய்கள் அசைவ உணவிற்காக கொல்லப்படுகிறது.

மனிதர்களின் செல்லப்பிராணியாக இருக்கும் நாய் இறைச்சியாக உண்பது கலாச்சார சீரழிவு என்று அமெரிக்கா நாய்கறிக்கு தடை விதித்தது. 

அதைத்தொடர்ந்து நாய்கறி உண்பதை குற்றமாகவும் பல நாடுகளில் சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும் பென்சில்வேனியா போன்ற நகரங்களில் நாய்கறி மற்றும் பூனைகறி விற்பதற்கும் உண்பதற்கும் அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 சீனாவில் பல  நகரங்களில் 'நாய் கறி திருவிழா' என்று கொண்டாடப்பட்டு வகைவகையான நாய்கள் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகிறது.  

அதேபோல் பல நாடுகளில் உள்ள உணவு விடுதிகளின் மெனு கார்டில் நாய்கறி வகைகளும் சேர்க்கப்பட்டு வருகிறது. 

இந்தியா:
நாய் இறைச்சி நுகர்வு இந்தியாவில் சட்டவிரோதமானது. 
இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளான நாகலாந்து, மிசோரம், மனிப்பூர் போன்ற பகுதிகளில் நாய்கறி உணவுப்பழக்கத்தில் ஒன்றாகும். 
குறிப்பாக நாகலாந்தில் பாரம்பரிய உணவுப்பழக்கம் என்ற பேரில் நாய்கறி அதிகமாக உண்ணும் பழக்கம் உண்டு. 
இந்த பகுதியில் வருடத்திற்கு சுமார் 30,000 நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படுவதுண்டு. நாய்யின் தலையை மட்டும் துண்டித்து கொதிக்கும் நீரில் உள்ளே போட்டுவிடுவார்கள் பின் தோல்கள் உரிந்த பின்பு அதை பேக் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
 மேலும் நாய்கறியில் அதிக ஊட்டச்சத்தும் மருத்துவதன்மையும் இருப்பதாக இவர்கள் கூறுகின்றனர்.



சீனா:

சீனாவின் அசைவ உணவு வகைகளை கேட்கும் போது பொதுவாகவே சிலர்  முகம் தானாகவே சுளித்துக்கொள்ளும். காரணம் சிலவகைப்புழுக்கள்,கரப்பான் முதல் எலி வரை சீரணிப்பவர்கள் சீன மக்கள்.நாயை விட்டு விடுவார்களா?
சீனாவில் நாய்கறி என்பது ஏராளமான இறைச்சியகங்களில் காணப்படும். பெய்ஜிங் ஒலிம்பிக் போதுமட்டும் நாய்கறி விற்பதற்கு சீன அரசாங்கம் தடை விதித்திருந்தது.  

கனா: 

நாய்கறி என்பதை ஆன்மீக வழி உணவாக எண்ணுகின்றனர். 

நாய்கறி சாப்பிட்டால் வாழ்க்கையில் உண்மையோடு நடந்து கொள்ளலாம், சாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம், சதை இருக்கமடையும் போன்ற மூடநம்பிக்கைக்காக இங்கு நாய்கறி சாப்படப்படுகிறது.

நைஜீரியா

இவர்களை  பொருத்தவரை நாய்கறி என்பது தினமும் உணவில் சேர்த்துகொள்ளும் ஒன்றாகும். 
அதுமட்டுமின்றி நாய்கறி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியும், ஆண்மையும் அதிகரிக்கச் செய்யும் என்று பலர் நம்பி வருகின்றனர்.

போலாந்து:

நாய் மற்றும் பன்றிக்கொழுப்புகளை சிறந்த மருத்துவ உணவாக உட்கொண்டு வருகின்றனர்.

அன்டார்டிக்கா

ஆர்டிக் மற்றும் அன்டார்டிக்கா போன்ற குளிர் பிரதேசத்தில் நாய்கறி சாப்பிட்டால் புரோடின் அதிகரிக்கச் செய்யும் என்று கூறி இயல்பான உணவு பழக்கமாக நாய் இறைச்சியை சாப்பிடுகிறார்கள்.



வியட்நாம்: 

இங்கு நாய்கறிக்கு வரவேற்பு  அதிகம். 
விருந்துகளிலும், விழாக்களிலும் நாய்கறி பறிமாறும் பழக்கமுண்டு. 
இந்த பகுதிகளில் பலரின் வீட்டில் உள்ள நாய்களை இறைச்சிக்காக திருடப்படுவது வழக்கமாக நிகழ்ந்து வரும் சம்பவம். 
நம்பகுதி ஆடு திருடுபவர்களைப்போல் நாய்களை திருடி விற்கும் கும்பல் இங்கு  அதிகம் . 

ஸ்விட்சர்லேன்ட்

இங்கு பகுதிகளில் இருக்கும்  விவசாயிகள் நாய்கறியை தங்களது உணவு பழக்கமாக வைத்துள்ளனர்.

இந்தோனேசியா

நாய்கறி தடை தான்.

ஆனால் திருமண நிகழ்ச்சிகளிலும் விடுமுறை நாட்களிலும் நாய்கறி சிறப்பு உணவாக உண்ணும் பழக்கும் பகிரங்கமாகவே உள்ளது .

தென் கொரியா:

இங்கு  தான் வருடத்திற்கு 2 முதல் 2.5 மில்லியன் வரை நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படுவதாக கூறப்படுகிறது.

ஆடுகளைப் போலவே இங்கு இறைச்சிக்காக நாய்கள் பண்ணைகளில் வளர்க்கபப்டுகினறன.

அதெல்லாம் சரிதான்.

நன்றிக்கு பேர் போன நாய்க்கறி தின்றால் நன்றி உணர்ச்சி அதிகரிக்குமா என்ன?

அல்லது நாயா குரைக்கத் தோன்றுமா?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...