bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

ஒன்­றரை லட்­சம் கோடிகள் தனி­யா­ருக்கு தாரை வார்க்கத் தயார் !

தொடரும் மோடியின் முதலாளிகள் விசுவாசமும்.
தொழிலாளர் விரோதமும் 
தொழி­லா­ளர்­க­ளி­டம் இருந்து பிடித்­தம் செய்­யப்­பட்ட பி.எப், இ.எஸ்.ஐ., தனி­யா­ருக்கு தாரை வார்க்­கப் போவ­தாக பரி­சீ­லித்து வரு­கி­றது.
மத்­தி­யில் மோடி தலை­மை­யில் ஆட்சி அமைந்த நாளில் இருந்து கார்ப்­ரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ர­வா­கத்­தான் செயல்­பட்டு வரு­கி­றார்.
 மிக முக்­கிய திட்­டங்­க­ளில் எல்­லாம் அன்­னிய முத­லீடு, தனி­யார் ஆதிக்­கம் என்று புகுத்தி கொண்­டி­ருப்­ப­தாக எதிர்­கட்­சி­கள் சார்­பில் தொடர்ந்து குற்­றம்­சாட்­டப்­பட்டு வரு­கி­றது. 
பொதுத்­துறை நிறு­வ­னங்­க­ளில் தனி­யார் முத­லீ­டு­களை ஊக்­கப்­ப­டுத்தி படிப்­ப­டி­யாக அந்த துறை படிப்­ப­டி­யாக தனி­யா­ருக்கு தாரை வார்க்­கும் செயல்­க­ளில் தான் மத்­திய அரசு முனைப்பு காட்டி கொண்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.  

மத்­திய அரசு தற்­போது ஒட்டு மொத்த தொழி­லா­ளர்­க­ளை­யும் அதிர்ச்­சி­யூட்­டும் வகை­யில் புதிய நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு வரு­வ­தாக தொழி­லா­ளர் துறை அதி­கா­ரி­கள் தரப்­பில்   கூறப்­பட்டு வரு­கி­றது. 

நாடு முழு­வ­தும் கோடிக்­க­ணக்­கா­னோர் பல்­வேறு தனி­யார் நிறு­வ­னங்­க­ளில் பணி புரிந்து வரு­கின்­ற­னர். இந்த தொழி­லா­ளர்­கள் இ.எஸ்.ஐ., மற்­றும் பி.எப்., திட்­டத்­தின் கீழ் கொண்டு வரப்­பட்டு பணி­யாற்றி வரு­கின்­ற­னர்.
பி.எப்., இ.எஸ்.ஐ., திட்­டம் என்­பது தொழி­லா­ளர்­க­ளின் பாது­காப்­புக்கு உகுந்த திட்­ட­மா­கும். பி.எப்., திட்­டத்­தில் தொழி­லா­ள­ரி­டம் இருந்து குறிப்­பிட்ட தொகை பிடிக்­கப்­பட்டு அந்த அள­விற்­கு­ரிய தொகை நிர்­வா­கம் சார்­பில் போடப்­ப­டும். 
கடை­சி­யில் தொழி­லாளி ஓய்வு பெறும் காலத்­தில் ஒரு பெருந்­தொகை அதில் இருந்து கிடைக்­கும். இதற்கு அரசு ஆண்­டுக்கு ஆண்டு வட்டி நிர்­ண­யம் செய்து அளித்து வரு­கி­றது. இடை­யில் குடும்­பத்­தில் ஏதா­வது திரு­மண செலவு உள்­ளிட்ட செல­வு­க­ளுக்­கும் இந்த தொகையை பெற்று கொள்­ள­லாம். 

மொத்த பணத்­தில் ௭௫ சத­வீ­தத்தை நமது தேவைக்கு எடுத்து கொள்­ளும் வச­தி­யும் இருக்­கி­றது.
இ.எஸ்.ஐ., திட்­டத்­தில் தொழி­லா­ளர் சம்­ப­ளத்­தில் குறிப்பிட்ட தொகை பிடித்­தம் செய்­யப்­ப­டு­கி­றது. அவர்­க­ளுக்கு மருத்­துவ உதவி, பெரிய, பெரிய மருத்­துவ சிகிச்­சை­கள், உடல் நல குறைவு என்­றால் இ.எஸ்.ஐ., மூலம் பணி செய்­யும்  நிர்­வா­கம் கொடுக்­கும் அதே சம்­ப­ளத்தை விடு­மு­றை­யில் இருந்­தா­லும் வழங்­கு­தல் போன்­ற­வற்றை இல­வ­ச­மாக இ.எஸ்.ஐ., நிர்­வா­கம் செய்து வரு­கி­றது. 

இத­னால் பி.எப்., மற்­றும் இ.எஸ்.ஐ., தொழி­லா­ளர்­க­ளுக்கு மிக­வும் பாது­காப்­பினை அளித்து வரு­வ­தால் அனைத்து தொழி­லா­ளர்­க­ளும் இந்த திட்­டங்­க­ளுக்கு நல்ல வர­வேற்பை அளித்து வந்­த­னர்.
நாடு முழு­வ­தும் பல கோடி தொழி­லா­ளர்­க­ளி­டம் இருந்து பிடித்­தம் செய்­யப்­பட்­டுள்ள பி.எப்  இ.எஸ்.ஐ.,   திட்­டங்­க­ளின் மூலம் உள்ள ஒன்­றரை லட்­சம் கோடி ரூபாய் மத்­திய அர­சி­டம் உள்­ளது.

இப்­போ­தைய நிலை­யில் இந்த பணம் தான் மத்­திய அர­சுக்கு கண்ணை உறுத்தி கொண்­டி­ருப்­ப­தாக பி.எப் மற்­றும் இ.எஸ்.ஐ., அதி­கா­ரி­கள் தரப்­பில் கூறப்­ப­டு­கி­றது. இது குறித்து அந்த அதி­கா­ரி­கள் கூறிய தக­வல் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தும் அள­விற்கு இருக்­கி­றது. 

இது குறித்து அந்த அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது;
நாடு முழு­வ­தும் தனி­யார் நிறு­வ­னங்­க­ளில் பணி­யாற்றி வரும் தொழி­லா­ளர்­க­ளி­டம் பி.எப் மற்­றும் இ.எஸ்.ஐ., மூலம் பிடித்­தம் செய்­யப்­பட்ட பணம் சுமார் ஒன்­றரை லட்­சம் கோடி மத்­திய அர­சி­டம் இருக்­கி­றது. இந்த பணத்­தில் எப்­ப­டி­யா­வது தனி­யார் நிறு­வ­னங்­களை உள்ளே அனு­ம­திக்க மத்­திய அரசு முயற்­சித்து வரு­கி­றது.

 தொழி­லா­ளர்­க­ளின் ஒன்­றரை லட்­சம் கோடி பணத்­திற்கு வேட்டு வைப்­ப­தற்­காக அமைப்பு சாரா தொழி­லா­ளர்­க­ளுக்கு சமூக பாது­காப்பு வழங்­கும் வகை­யில் புதிய முறையை கொண்­டு­வ­ரு­வ­தாக மோடி அரசு புதிய யுத்­தியை கையாண்டு வரு­கி­றது. தற்­போது தனித்­தனி நிறு­வ­ன­மாக செயல்­பட்டு வரும் பி.எப்., இ.எஸ்.ஐ., நிறு­வ­னத்தை ஒருங்­கி­ணைக்­கி­றது.

இவ்­வாறு ஒருங்­கி­ணைப்­புக்கு பிறகு புதி­யதாக லேபர் கோர்ட் அமைக்­கி­றது. இவ்­வாறு அமை­யும் போது தொழி­லா­ளர் துறை­யை­யும், தொழி­லக பாது­காப்பு துறை­யை­யும் ஒன்­றாக்கி விடு­கி­றது. 
புதிய லேபர் கோர்ட்­டில் மத்­திய அரசு அதி­கா­ரி­கள் தவிர தனி­யார்­க­ளை­யும் உறுப்­பி­னர்­க­ளாக அதில் சேர்க்­கி­றது. அதன் மூலம் தனி­யார் ஆதிக்­கத்தை லேபர் கோர்­டில் மத்­திய அரசு உரு­வாக்க திட்­ட­மிட்­டி­ருக்­கி­றது.
இவ்­வாறு ரெடி செய்த பின்­னர் தொழி­லா­ளர்­க­ளி­டம் இருந்து பிடித்­தம் செய்­யப்­பட்ட தொகையை இந்த கோர்­டில் பெரும்­பான்­மை­யி­னர் தெரி­விக்­கும் முடி­வு­க­ளின் படி ஒன்­றரை லட்­சம் கோடி பணத்தை தனி­யார்    கார்ப்­ரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு வாரி வழங்க திட்­ட­மிட்­டுள்­ள­னர். 

இதன் மூலம் பெரும் நிறு­வ­னங்­கள் இந்த பணத்தை பெற்று விட்டு இறு­தி­யில் அந்த பணத்தை கட்ட முடி­ய­வில்லை என்று கூறி ‘ ஆட்­டையை’ போட்டு விடு­வர். 
கடை­சி­யில் மல்­லையா போல் அவர்­கள் பறந்து விடு­வர். 
கடை­சி­யில் கஷ்­டப்­பட்டு தனது எதிர்­கா­லத்­திற்­கா­க­வும், குழந்தை திரு­ம­ணம் உள்­ளிட்­டவை நடத்­து­வ­தற்கு சேமித்த பணம் மறைந்­து­வி­டும். 

மத்­திய அரசு டாட்டா காட்டி விடும்.    கடை­சி­யில் தொழி­லா­ளர்­கள் பணம் தான் பாழாய் போகும் நிலைக்கு வந்­து­வி­டும். 
இதற்­காக மத்­திய அரசு துடித்து கொண்­டி­ருப்­ப­தா­க­வும் அதி­கா­ரி­கள் தரப்­பில் அதிர்ச்சி தக­வல் கூறப்­ப­டு­கி­றது.
ஒன்­றரை லட்­சம் கோடியை தனி­யா­ருக்கு தாரை வார்க்க தய­ராகி அதற்­கான பணி­களை வேகப்­ப­டுத்தி கொண்­டி­ருக்­கி­றது என்ற அதிர்ச்சி தக­வலை அதி­கா­ரி­கள் கூ­று­கின்­ற­னர்.
நீரின்றி உலகும் தொழிலாளரின்றி பாஜகவுக்கு கர்ப்பரேட்கள் நிதியும் அமையாது .
அதற்காகவாது தொழிலார் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...