bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

திராட்சை


பச்சை, சிவப்பு, நீலம், ஊதா மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் காணப்படும் திராட்சை பழமானது மது தயாரிப்பு மற்றும் உலர் பழங்களாக உட்கொள்ளப் படுகிறது.

திராட்சையில் விட்டமின்கள் A, B6, B12, C, D, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த திராட்சைப் பழத்தினை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நல்ல பலன்களை பெறலாம்.
திராட்சை பழத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பதால், அதிக அளவு சாப்பிடக் கூடாது. எனவே வாரத்திற்கு 3-4 நாட்கள் திராட்சை பழங்களை சாப்பிடலாம்.
தனியாக திராட்சை பழத்தை மட்டும் சாப்பிட்டால், ஒரு நாளுக்கு 15- 20 திராட்சைகள் கொண்ட 2- 3 கப் சாப்பிடலாம்.
திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • திராட்சை உள்ள ஊட்டச்சத்துகள் புற்றுநோய் செல்களுடன் எதிர்த்து போராடி புற்றுநோயின் உருவாக்கத்தை தடுப்பதுடன், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த அழுத்த பிரச்சனையை குறைக்கிறது. அதற்கு திராட்சை பழத்தை விதைகள் மற்றும் தோலுடன் சாப்பிட வேண்டும்.
  • திராட்சையில் உள்ள ரெஸ்வெரடால் என்ற பாலிபினோல், வயது முதிர்வை தடுத்து, பல்வேறு தோல் பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
  • பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியம் உள்ள திராட்சை பழத்தை சாப்பிடுவதால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.
  • கண்களின் செல்லுலார் அளவில் ஏற்படும் சிக்னல் மாற்றங்களினால் கண்களுக்கு அழுத்தம் ஏற்படாதவாறு தடுத்து கண் பார்வையினை அதிகப்படுத்துகிறது.
  • அல்சைமர் போன்ற மூளை தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் திராட்சை பழத்தினை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.
  • திராட்சையை தினசரி உட்கொண்டு வந்தால், முழங்கால் வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைப்பதுடன், கீல்வாதத்தை குறைக்கிறது.
  • வீக்கத்தை குறைக்கும் என்சைம்கள் திராட்சை பழத்தில் உள்ளதால், இது தமணிகள் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலில் அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.






========================================================================================

நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் அடையாத போது அதில் உள்ள பாக்டீரியாக்கள் மூலம் வயிற்றில் வாயு உண்டாகுகிறது
.
அதே நேரத்தில் அதிக அளவிலான ஃபைபர் உணவுகள் மற்றும் தாமதமாக ஜீரணமாகும் உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது,வாயுக்களால் அடைக்கப்பட்ட மென்பானங்கள்  அடிக்கடி குடிப்பது இது போன்ற பழக்கத்தினால் வயிற்றில் வாயு  அதிகமாக சேரும்.
  • வயிற்றில் வாயு  அதிகம் சேர்ந்து வயிறு உப்பலாக இருந்தால், தலையை உயர்த்தி உடல் கீழ் நோக்கி இருக்குமாறு தரையில் படுக்க வேண்டும்.
  • கட்டில், சோஃபா போன்றவற்றில் படுப்பதை தவிர்த்து, எளிதில் செரிமானம் ஆகக் கூடிய சூப், கஞ்சி, பழச்சாறுகள்  போன்ற நீராகாரத்தை அதிகமாக குடிக்க வேண்டும்.
  • கேஸ்ட்ரிக் பிரச்சனைகளை தடுக்க கடுகு சூப், சூடான பானங்களான டீ, காபி, க்ரீன் டீ மற்றும் இஞ்சி சாறு போன்றவற்றை குடிக்கலாம்.
வாயு  பிரச்சனைகளை தடுக்க..
  • தண்ணீரை சூடாக்கி அதில் ஒரு சிட்டிகை பெருஞ்சீரகம் மற்றும் புதினா இலையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து குடிக்கலாம்.
  • 2 அல்லது 3 பூண்டுகளை நெருப்பில் சுட்டு அப்படியே சாப்பிடலாம். அல்லது தண்ணீரில் பூண்டு, சீரகம், மிளகு ஆகியவை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடிக்கலாம்.
  • ஒரு நாளில் 2 அல்லது 3 முறைகள் ஒரு டம்ளர் நீரில் சிறிது பெருங்காயத்தை கலந்து குடிக்கலாம். ஆனால் அதிகமாக குடிக்கக் கூடாது.
  • இலவங்கப் பட்டையை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம் அல்லது இலவங்கப்பட்டையை வறுத்துப் பொடி செய்து, அதை பாலில் கலந்து குடிக்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...