bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 24 டிசம்பர், 2018

நாரயணன்சாமி ஆன இயேசு சாமி?

அமெரிக்காவில் வெர்ஜினியா மாகாணம் போர்ட்ஸ்மவுத் என்ற பகுதியில் 30 ஆண்டு பழமையான தேவலாயம், சுவாமிநாரயணன் சாமி இந்து கோயிலாக மாறுகிறது.

 இந்த தேவலாயம் அமைந்துள்ள வெர்ஜினியா பகுதிகளில் குஜராத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு பாபர் மசூதியில் இருந்து  எல்லாவற்றையம் இந்துக்கோவிலாக மாற்றுவதில் தனி ஆர்வம்தான்.

அந்த  தேவலாயம்  முழுமையாக கோயிலாக மாற்றிய பிறகு அங்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.


இதுவரை அமெரிக்காவில் மொத்தம் ஆறு தேவலாயங்களையும், உலக அளவில் ஒன்பது களைதேவலாயங்களையும், இந்தியாவிலுள்ள அகமதாபாத், மணி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சுவாமி நாராயணன் சன்ஸ்தான் அமைப்பு நாராயணசுவாமி கோயில்களாக மாற்றியுள்ளது. 

போர்ட்ஸ்மவுத் சர்ச்சை 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் விலையில் வாங்கியுள்ளது.

 ஏற்கெனவே கலிஃபோர்னியா, பென்ன்சில்வேனியா, ஓஹீயோஆகிய பகுதிகளில் இருந்த சர்ச்சுகள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன.

அதேபோல் 125 ஆண்டுகள் பழமையான  கனடாவில் டோரோண்டாவில் இருந்த சர்ச்சும் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.

 இந்திய மதிப்பில் 10 கோடியே 40 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள போர்ட்ஸ்மவுத் சர்ச் கட்டடம் 18 ஆயிரம் சதுர அடி அபரப்பளவு கொண்டது.

ஐந்து ஏக்கர் நிலத்துடன் வாங்கப்பட்டுள்ளது.

எப்படிங்க இவ்வளவு பணம் வருகிறது.?
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------வாட்ஸ் அப் பிக்சர் - இன் - பிக்சர் மோட்...

 அப்டேட் செய்வது எப்படி ?

ஏற்கனவே ஆப்பிள் போன்களில் செயல்பட்டு வரும் இந்த வசதிகள் தற்போது கணினி வெர்சனிலும், ஆண்ட்ராய்ட் போன்களிலும் செயல்பட உள்ளது.

உங்களுடைய கணினியில் இயங்கி வரும் வாட்ஸ்ஆப் வெப் எந்த வெர்சன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஏன் என்றால், இந்த புதிய அப்டேட் 0.3.1846 இந்த வெர்சனில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அப்டேட் செய்ய, வாட்ஸ்ஆப் வெப் சென்று, செட்டிங்க்ஸ்ஸை க்ளிக் செய்யவும், பின்னர் அங்கு ஹெல்ப் என்ற செக்சனை க்ளிக் செய்யவும்.


அங்கு வாட்ஸ்ஆப் வெப்பின் வெர்சன் தரப்பட்டிருக்கும்.
 டெஸ்க்டாப் வெர்சனை செக் செய்த பின்பு, பயனாளிகள் இந்த அப்டேட்டினை பெற்றுக் கொள்ளலாம்.

தங்களுக்கு வரும் வீடியோ லிங்குகளை, மூன்றாவது இணையதளத்திற்கு சென்று (எ.கா யூடியூப், ஃபேஸ்புக்) பார்க்காமல் வாட்ஸ்ஆப் பக்கத்திலேயே நேரடியாக பார்த்துக் கொள்ளலாம்.

பகிரப்பட்ட லிங்குக்குகளை, கணினி திரையின் வலது பக்கம் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த வீடியோவினை ஃபார்வேர்ட், பேக்வர்ட் மற்றும் மியூட் செய்து கொள்ளும் வசதிகளும் இதில் உள்ளன. இந்த பிக்சர்-இன்-பிக்சர் மோடின் மூலம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஸ்டீரிமபிள் தளங்களில் இருக்கும் வீடியோக்களை பார்த்துக் கொள்ளலாம்.

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் போன்களில் இந்த அப்டேட்டினை v2.18.830-ல் பெற்றுக் கொள்ளலாம்.
  ஆப்பிள் போன்களில் இந்த அப்டேட் மார்ச் மாதமே வெளியானது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெரியார்...!

 



இன்று பெரியாரின் 45வது நினைவு தினம்.
 சாக்ரடீஸ், கார்ல் மார்க்ஸ்  ஆகியோரது கொள்கைகள், கோட்பாடுகளுக்கு நிகரானது,உள்வாங்கியது  பெரியாரின் புரட்சிகர  சிந்தனைகள். 

  • இந்து வர்ணாசிரம தர்மத்தையும், கடவுள் நம்பிக்கையையும், மூடப் பழக்கவழக்கங்களையும் பெரியார் எதிர்த்தார். 
  •  
  • பிராமணர் அல்லாதவர்கள் தம்மையே தாழ்வாக நினைக்கக் கூடாது என்பதை அவரது சுயமரியாதை இயக்கம் வலியுறுத்தியது.
  •  
  • குழந்தைத் திருமணம் செய்து குழந்தையாக இருக்கும்போதே கணவனை இழந்து கைம்பெண்ணாகி வாழ்நாள் முழுவதும் கைம்பெண்ணாகவே வாழ்ந்தது இவரை பாதித்தது. அவர்களுக்கு மறுமணம் செய்து வைத்து புரட்சியை ஏற்படுத்தினார்.
  •  
  • காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்டு அவர் 1919-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். கதர், மது எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு என்னும் காந்தியின் அடிப்படைக் கொள்கைகளுக்காக உழைத்தார். உற்ற நண்பர் ராஜாஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறூபாட்டாலும் காங்கிரஸின் செயல்பாடுகள் பிடிக்காமலும் அதிலிருந்து வெளியேறினார். கொள்கை அடிப்படையில் வேறுபட்டாலும் ராஜாஜியுடன் தனிப்பட்ட முறையில் நட்பைத் தொடர்ந்தார். 
  •  
  • காங்கிரஸ் கட்சியின் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நடத்தினர். கள்ளுக்கடை மறியல் போராட்டத்துக்கு ஆதரவாக, கள் இறக்கப் பயன்படக்கூடாது என்று, தமது தோப்பில் இருந்த தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி அழித்தார் பெரியார்.
  •  
  •  
  • திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கோயில் இருக்கும் தெருக்களில் நடமாட தலித்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து போராடி உரிமையை மீட்டெடுத்ததால் வைக்கம் வீரர் எனப்பட்டார்.
  •  
  • சுதந்திரத்துக்கு முந்தைய இந்திய அரசு இந்தியைத் திணிக்க முயன்றபோது அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர். இது தென் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
  •  
  • இந்தியா முழுவதும் ஒரே நாடாக ஆவதை எதிர்த்த அவர் தென்னிந்தியப் பகுதிகள் இணைந்து திராவிட நாடாக ஆகவேண்டும் என்று குரல் கொடுத்தார். 
  •  
  • பிராமண எதிர்ப்பும், கடவுள் மறுப்பும் அவரது கொள்கையாக இருந்தபோதும் அதை தனிப்பட்ட நபர்களை வெறுப்பதற்கான வழிகளாக அவர் மாற்றிக்கொண்டதில்லை. 
  •  
  • தமது பிரசாரங்களில் தாம் சொல்வதாலேயே ஒரு கருத்தை ஏற்கவேண்டியதில்ல என்றும், சிந்தித்துப் பார்த்து அவரவர் கருத்துக்கு சரியெனப் படுகிறவற்றை மட்டுமே ஏற்றால் போதுமென்றும் வாதிட்டார் அவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...