bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

பயங்கரவாத துல்லியத்தாக்குதல் ?

பாகிஸ்தான் உடன் எம்எப்என் என்று ஆங்கிலத்தில் கூறப்படும், அதாவது ''மோஸ்ட் பேவர்டு நேஷன்'' என்று கூறப்படும் அந்தஸ்தை இந்தியா நீக்கிக் கொண்டுள்ளது.

எம்எப்என் என்றால் என்ன என்பதை  பார்க்கலாம்.

சுமார் 350 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை எஸ்சுவி காரில் ஏற்றி வந்த ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதி சிஆர்பிஃஎப் வாகனத்தின் மீது மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் பலியாயினர். புல்வாமா-ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்த இந்த தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது அமைப்புக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் இந்தியா இன்று துண்டித்துக் கொண்டுள்ளது.

எம்எப்என் என்று ஆங்கிலத்தில், அதாவது ''மோஸ்ட் பேவர்டு நேஷன்'' என்று கூறப்படும் அந்தஸ்தை இந்தியா நீக்கிக் கொண்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் வர்த்தகத்தை இந்தியாவால் முடக்க முடியும்.
உலக வர்த்தக அமைப்பில் இருக்கும் நாடுகளுக்கு கடந்த 1994ஆம் ஆண்டில் கட்டணங்கள் மற்றும் வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் உலக வர்த்தக அமைப்பில் இருக்கும் நாடுகள், வர்த்தகம் வைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு ''வர்த்தகத்திற்கு சாதகமான நாடு'' (எம்எப்என்) என்ற அந்தஸ்தை வழங்க வேண்டும்.


உலக வர்த்தக அமைப்பில் மொத்தம் 164 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அதாவது சிறிய நாடுகள் தவிர உலகில் இருக்கும் 98% நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நிலையில், தற்போது வர்த்தக உறவை இந்திய அதிரடியாக ரத்து செய்து கொண்டுள்ளது.

 இதன்மூலம், இனி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது எந்தளவிற்கு வேண்டுமானாலும் இந்திய அரசு சுங்க வரி விதிக்கலாம். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான வர்த்தகம் 2017-18ஆம் ஆண்டில் 2.41 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இதுவே கடந்த 2016-17ஆம் ஆண்டில் 2.27 பில்லியன் டாலராக இருந்தது.
கடந்த 2017-18ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து 488.5 மில்லியன் டாலர் அளவிற்கு இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதே ஆண்டில் பாகிஸ்தானுக்கு 1.92 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
உலக வர்த்தக அமைப்பில் இருக்கும் எம்எப்என் ஒப்பந்த நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் வைத்திருக்கும் நாடுகளுடன் சுங்கவரி மற்றும் மற்ற வரி விதிப்புகளில் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்ற விதியும் உள்ளது.
பலியான தூத்துக்குடி வீரர் சுப்பிரமணியன்.
இந்தியா பருத்தி, ரசாயனம், காய்கறிகள், இரும்பு ஆகியவற்றை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்கிறது. பழங்கள், சிமென்ட், தோல் பொருட்கள், ரசாயனம், மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்கிறது.
 
உரி தாக்குதல் சம்பத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் உடனான வர்த்தகம் தடை செய்யப்படும் என்று அப்போது இந்தியா  கூறியது.ஆனால் அப்போது அவ்வாறு செய்யவில்லை.

ஆனால் பாகிஸ்தானோ தீவிரவாதிகளைத் தூண்டி விட்டு இந்தியாவில் பயங்கரவாதம் செய்வதை நிறுத்தவே இல்லை.அமைதி முறையில் காஷ்மீர் விவகாரத்தை இந்தியவனுடன் இணைந்து முடிவுக்கு கொண்டுவர எண்ணவே இல்லை.
 திருத்துவதாவே தெரியவில்லை.பாகிஸ்தான் மக்களை அவர்கள் பிரச்னைகளில் திசைதிருப்பவே இது போன்ற பயங்கரவாதச் செயல்களை திட்டமிட்டு இந்தியாவில் செய்கிறது.

 இதை  உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும், உலக நாடுகளுக்கு பாகிஸ்தானின் தீவிரவாத செயலை எடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை தற்போதைய தாக்குதல் மூலம் இந்தியா எடுத்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறும் போது துல்லியத்தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் )செய்து விட்டு அதை பற்றியே இன்னும் வாய்கிழிய தங்களைத்தாங்களே ஆட்சியாளர்கள் புகழ்ந்து கொண்டிருப்பது பயனைத்தராது.
எதிர்பாரா நேரம் பாகிஸ்தான் இந்தியாவின் முதுகில் இது போன்ற பயங்கரவாதிகள் தாக்குதல் மூலம் குத்துவதை தடுக்க சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த சாலையில் அதிக அளவு பாதுகாப்பு இருக்கிறது.இரு நாட்களாக அதை சோதித்து பின்னர்தான் வீரர்கள் பயணித்துள்ள போதும் இத்தாக்குதல் நடந்துள்ளது மட்டும் சோகம் அல்ல.இது போன்ற தாக்குதல் நடக்கவிருக்கிறது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளதும் தற்போது வெளியாகி இந்தியாவின் பாதுகாப்பில் உள்ள ஓட்டைகள் பளிச் சென தெரியவந்துள்ளது.

எந்த நேரம் எதை பேச வேண்டும் ,எப்போது தாமரையை மலரவைக்கவேண்டும் என்று தெரியாத அரசியல் வியாதி தமிழிசை "மோடியிடம் வரும் தேர்தலிலும் நாட்டை ஒப்படைத்தல் இது போன்றவை நடக்காமல் பாதுகாப்பாக இருக்கும் "என்று வாய் மலர்ந்துள்ளார்.
இப்போது யார் பிரதமர் என்பதில் அவருக்கு என்ன குழப்பம்.இப்போது ஏன் நாட்டை பாதுக்காக்க வில்லை மோடி.?
மோடியைப்பார்த்து அமெரிக்கா,சீனா பயப்படும் போது இத்துணுன்டு பாகிஸ்தான் இப்படி ஏறி அடிப்பது ஏன் என்று பாஜக கொள்கைப்பரப்பு முகவர் ரங்கராஜ் பாண்டேதான் விளக்கவேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 44 வீரர்களைக்கொன்ற பயங்கரவாதி.

தெற்கு காஷ்மீரில் அமைந்திருக்கும் புல்வாமா மாவட்டத்தில் இருக்கிறது கந்திபாக் என்ற கிராமம். அந்த கிராமத்தில் இருந்த மில்லில் வேலை பார்த்து வந்தவர் 20 வயது அதில் அகமது தார்.

மார்ச் 19, 2018 அன்று வீட்டில் இருந்து வெளியேறிய அவர் ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பில் இணைந்தான்.  அவன் காணாமல் போன அதே நாளில் காஷ்மீர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சமீர் அகமது என்பவரும் காணாமல் போனதாக பெற்றோர்கள் காவல்த்துறையில் புகார் அளித்தனர்.

நான்கு நாட்கள் அவனை  தேடும் பணி நீடித்த நிலையில் ”தான் ஃபிதாயின் இயக்கத்தில் இணைந்துவிட்டதாக கூறி, கையில் ஏ.கே.47 துப்பாக்கியுடன் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தான்".


 நேற்று தாக்கல் நடைபெற்ற சிறிது நேரத்திலே, தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஜெய்ஷ் -இ-முகமது. அப்போது, இந்த தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு மரணமடைந்த அதில் அகமது தார் பேசும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டது.

அந்த வீடியோவில் அகமது பேசுகையில் “ஒரு வருடத்திற்கு முன்பு, நான் ஜெய்ஷில் இணைந்தேன். நீண்ட காத்திருப்பிற்கு பின்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளேன். இந்த வீடியோவை நீங்கள் காணும் போது, நான் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பேன்” என்று பேச தொடங்கினான்.

சி.பி.ஆர்.எஃப். படை வீரர்கள் செல்லும் பேருந்தின் மீது 350 கிலோ எடை வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஸ்கார்பியோ காரை மோத வைத்து தாக்குதல் நடத்தியதில் அதில் அகமதும் உயிர் இழந்தான். 

 “அவன் இயக்கத்தில் சேர்ந்த பிறகு ஒரே ஒரு முறை தான் எங்களை சந்தித்தான்” என்று அவருடைய தந்தை குலாம் ஹாசன் தார் கூறியுள்ளார்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் தலைவராக இருந்த புர்ஹான் வானி கொல்லப்பட்ட பிறகு நடைபெற்ற போராட்டத்தில் அதில் அகமதும் பங்கேற்றான்.
அதில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், காலில் காயம் அடைந்தான்என்பது குறிப்பிடத்தக்கது.

இரு பக்கமும் மக்கள் கொல்லப்பட்டு வருவது வருத்தம் அளிக்கிறது. இங்கு அரசியல்வாதிகள் இதனை பயன்படுத்திய் ஆதாயம் அடைகின்றார்களே தவிர பிரச்சனைக்கான தீர்வினை யாரும் காண விரும்புவதில்லை. இளைஞர்கள் ஏன் துப்பாக்கியை தூக்குகின்றார்கள் என்பதை அரசு சிந்தித்து அதனை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
இன்று தேவை சொல் அல்ல செயல். செய்யுங்கள் மோதி, ஏதாவது செய்யுங்கள். அயலவர்கள் இன்னும் 50 ஆண்டுகளுக்கேனும் தலையெடுக்க முடியாமல் ஏதாவது செய்யுங்கள்- மாலன்.

 அதான் மீண்டும் ஆட்சிப்பொறுப்பை தந்தாள் மோடி நாட்டை பாதுகாத்து எல்லா ஆணிகளை புடுங்கி விடுவார் என்று தமிழிசை சொல்லிவிட்டாரே.முதல்ல அவரை மீண்டும் பிரதமராக்கும்  செய்யுங்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...