bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 27 ஜனவரி, 2018

இதற்கு போயா இத்தனை கலவரம்

பத்மாவதி என்றிருந்தது பத்­மா­வத் என்ற படம் இந்தியாவின் வட மாநிலங்களை கலக்கி வருகிறது.அதனால் அங்கு கலவரம்.
மூன்று மாநிலங்களில் படத்தை பார்க்காமலேயே கலவரம்.படம் தற்போது வெளியாகி விட்டது.ஆனால் கலவரம் செய்யும் வீரர்கள் இன்னும்பட்டத்த்தைப் பார்க்காமலேயே கலவரத்தில் மும்முரமாக உள்ளனர்.
பத்மாவத் படத்­தில் இப்படி அடித்துக் கொள்ளும்படி அப்­படி என்ன தான் இருக்­கி­றது.

இயக்­கு­னர் சஞ்­சய் லீலா பன்­சாலி, பிர­மாண்ட திரை­யில், காட்சி வடி­வில், பிர­மிப்பை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றார். 3டி-யில் பார்க்­கும் போது பிர­மிப்பு இன்­னும் அதி­கம் வெளிப்­ப­டு­கி­றது. பெரும்­பா­லான காட்­சி­கள் இருட்­டி­லேயே நடப்­ப­தால், அவை மங்­க­லா­கவே தெரி­கின்­றன. 

கண்­களை அதி­க­மாக விரித்து, வலிக்க, வலிக்க பார்க்க வேண்டி உள்­ளது.  ராஜ­புத்­திர வம்­சத்தை பெரு­மைப்­ப­டுத்தி இருக்­கி­றது படம். படத்­தின் டைட்­டில் கார்­டி­லேயே மாலிக் முகம்­மது ஜெய்­சி­யின் கவி­தையை மையப்­ப­டுத்தி படம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கச் சொல்­கி­றார்­கள்.

சிங்­கள தேசத்­தி­லி­ருந்து முத்­துக்­களை எடுத்து வரு­வ­தற்­கா­கச் சென்ற மேவார் மன்­னன் ராவல் ரத்­தன் சிங் (ஷாகித் கபூர்), அங்கு சிங்­கள நாட்டு இள­வ­ரசி பத்­மா­வ­தி­யின் (தீபிகா படு­கோனே) அழ­கில் மயங்­கு­கி­றான். 

பத்­மா­வ­தி­யும் ராவல் ரத்­தன் மீது காதல் கொள்ள, இரு­வ­ருக்­கும் திரு­ம­ணம் நடக்­கி­றது. மன்­ன­னும், அர­சி­யும் நெருக்­க­மாக இருந்­ததை, திருட்­டுத் தன­மா­கப் பார்த்­தால், அர­சி­யின் வேண்­டு­கோள்­படி நாடு கடத்­தப்­ப­டு­கி­றான் மேவார் நாட்டு ராஜ­குரு,
அந்த நேரத்­தில், மாம­னார் டில்லி சுல்­தா­னைக் கொன்று அரி­ய­ணை­யைக் கைப்­பற்­றிய அலா­வுதீன் கில்­ஜி­யி­டம் (ரண்­வீர் சிங்) சென்று பத்­மா­வ­தி­யின் அழ­கைப் பற்­றிக் கூறு­கி­றார் ராஜ­குரு. பெண்­கள் மீது அதிக மோகம் கொண்ட அலா­வு­தீன் பத்­மா­வ­தி­யைப் பார்த்தே ஆக வேண்­டும் என்ற ஆசை­யில் மேவார் மீது போர் தொடுக்­கக் கிளம்­பு­கி­றான்.
ஆறு மாதம் காத்­தி­ருந்­தும் ராஜ­புத்­திர வீரர்­க­ளின் எதிர்ப்­பால் வெற்றி பெற முடி­யா­மல், சமா­தா­னம் செல்­கி­றான் அலா­வு­தீன். அப்­போது ராஜ­புத்­திர அர­சுக்கு விருந்­தி­ன­ராக வர­வேண்­டும் என்ற விண்­ணப்­பத்­தை­யும் வைக்­கி­றான். அதை ஏற்­றுக் கொண்ட மன்­னன் ராவல் ரத்­தன் சிங், அலா­வு­தீ­னுக்கு விருந்­த­ளிக்­கி­றான். அப்­போது, திடீ­ரென அரசி பத்­மா­வ­தி­யைப் பார்க்க வேண்­டும் என்­கி­றான்.

சில விவா­தங்­க­ளுக்­குப் பின் பத்­மா­வதி சில கணங்­கள் மட்­டுமே காட்­டப்­ப­டு­கி­றாள். பத்­மா­வ­தியை முழு­மை­யா­கப் பார்க்க வேண்­டும் என நினைக்­கும் அலா­வு­தீன், சதி செய்து ராவல் ரத்­தன் சிங்­கைக் கைது செய்து தில்­லிக்கு அழைத்­துச் செல்­கி­றான்.
கண­வனை மீட்க பத்­மா­வதி, அலா­வு­தீன் வழி­யி­லேயே சதி செய்து கண­வனை மீட்டு வந்து விடு­கி­றாள். கோப­ம­டை­யும் அலா­வு­தீன் மீண்­டும், மேவார் மீது போர் தொடுக்­கி­றான். இதன் பின் என்ன நடக்­கி­றது என்­பது தான் படத்­தின் மீதிக் கதை.

ஷாகித் கபூர், தீபிகா படு­கோனே, ரண்­வீர் சிங் என மூவ­ருமே அவ­ர­வர் கதா­பாத்­தி­ரங்­க­ளில் பொருந்­திப் போகி­றார்­கள். அதி­லும் ஷாகித், தீபிகா இடை­யி­லான காதல் காட்­சி­கள், வீரம் செறிந்த கதை­யில் காத­லை­யும் கண்­ணி­ய­மாக இணைத்­தி­ருக்­கின்­றன. நிமிர்ந்த தோற்­றம், நேர் பார்வை, கம்­பீ­ர­மான பேச்சு என ஷாகித் கபூ­ரின் நடிப்­பில் இந்­தப் படம் அவ­ருக்கு பெரிய முத்­தி­ரை­யைப் பதிக்­கும்.
தீபிகா படு­கோ­னே­வின் அழ­கைப் பற்றி என்ன சொல்­வது, சாந்­த­மான அழகு, அதே சம­யம் எப்­போது வீர­மும், கம்­பீ­ர­மும் வெளிப்­பட வேண்­டுமோ அப்­போது அந்த அழ­குக்­குள் அது­வும் திமி­ராய் வெளிப்­ப­டு­கி­றது. அவ­ருக்கு பொருத்­த­மான ஆடை, அணி­க­லன்­களை அணி­வித்து ரசி­கர்­களை ரசிக்க வைத்­த­வ­ருக்கு தனி பாராட்­டு­கள்.

அலா­வு­தீன் கில்­ஜி­யாக ரண்­வீர் சிங். காமம், கோபம், வீரம், திமிர், ஏள­னம் என எந்த ஒரு நவ­ர­சத்­தை­யும் விட்டு வைக்­காத நடிப்பு.

 மாற்­றான் மனைவி மீது கொண்­டுள்­ளது காதல் அல்ல காமம் என்­பதை கண்­க­ளா­லேயே புரிய வைக்­கி­றார். அந்­தக் காலத்­தில், போர் நடக்­கக் கார­ணம் மண்­ணாசை, பெண்­ணாசை என்­பார்­கள். இந்­தப் படத்­தில் அந்த பெண்­ணாசை, ஒரு­வனை எப்­ப­டி­யெல்­லாம் செய்ய வைக்­கும் என்­பதை உணர்த்­தி­யி­ருக்­கி­றார்­கள். 

அதற்கு ரண்­வீர் சிங்­கின் நடிப்பு அபா­ரம். அலா­வு­தீன் கில்­ஜி­யின் வலது கையாக, நம்­பிக்­கை­யான அடி­மை­யாக ஜிம் சர்ப். மனை­வி­யாக அதிதி ராவ் ஹைதரி, சுல்­தான் ஜலா­லு­தீன் கில்ஜி ஆக ரசா முரத், மேவார் மன்­னன் ராவல் ரத்­தன் சிங் முதல் மனை­வி­யாக அனுப்­ரியா கோயங்கா நிறை­வாக நடித்­தி­ருக்­கி­றார்­கள்.
சஞ்­சய் லீலா பன்­சா­லி­யின் இசை­யில் பாடல்­கள் தமி­ழி­லும் ரசிக்க வைக்­கின்­றன. முத­லில் தீபிகா படு­கோனே அரண்­ம­னை­யில் ஆடும் ஆட்­டம் மீண்­டும் மீண்­டும் பார்க்க வைக்­கும். சஞ்­சித் பல்­ஹா­ரா­வின் பின்­னணி இசை­யும் குறிப்­பிட வேண்­டி­யது.

தமி­ழில் பார்க்­கும் போது முத­லில், டப்­பிங் சீரி­யல் பார்ப்­பது போன்று தோன்­றி­னா­லும், பல இடங்­க­ளில் தமிழ் வச­னங்­க­ளுக்­கும் தியேட்­ட­ரில் கைதட்­டல் கிடைக்­கி­றது.
படத்­தின் தயா­ரிப்பு வடி­வ­மைப்பு, ஒளிப்­ப­திவு, கிரா­பிக்ஸ் பிர­மிக்க வைக்­கின்­றன. 

'பாகு­பலி' படத்­திற்­குப் பிறகு ஒரு பிர­மிக்க வைக்­கும் சரித்­தி­ரப் படத்­தைப் பார்த்த அனு­ப­வம் கிடைக்­கும். இருந்­தா­லும், ஒரு மன்­ன­னின் மனை­வி­யைக் கவ­ரத் துடிக்­கும் மற்­றொரு மன்­னன் என்­ப­து­தான் படத்­தின் ஒரு வரிக் கதை. மேவார் மன்­னன், அவ­னது பேர­ழ­கி­யான அரசி, அவ­ளைக் கவ­ரத் துடிக்­கும் டில்லி மன்­னன் இவர்­க­ளுக்­கி­டையே தான் அதி­கப்­ப­டி­யான காட்­சி­கள் பய­ணிக்­கி­றது. 

                              சஞ்சய் லீலா பன்சாலி



வேறு கதா­பாத்­தி­ரங்­க­ளுக்கு பெரிய முக்­கி­யத்­து­வம் இல்லை. காதல், காமம், வீரம் தவிர, மற்ற உணர்­வு­க­ளுக்கு வேலை இல்லை என்­பது குறை­யா­கத் தெரி­கி­றது.

முக்­கி­யத்­து­வம் வாய்ந்த கிளை­மாக்ஸ் காட்சி பர­ப­ரப்­பா­க­வும், விறு­வி­றுப்­பா­க­வும் பட­மாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. மொத்­தத்­தில் விஷு­வ­லா­க­வும், வியப்­பா­க­வும் ஒரு படத்­தைப் பார்க்­கத் தயா­ராக இருப்­ப­வர்­க­ளுக்கு 'பத்­மா­வத்' பிர­மிப்­பைக் கொடுக்­கும்.

சித்­தூர் மகா­ரா­ணியை தவ­றாக சித்­த­ரித்து உள்­ள­தாக இப்­ப­டத்­திற்கு ராஜ­புத்ர வகுப்­பி­னர் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர். ஆனால் படத்­தில் அப்­ப­டிப்­பட்ட காட்­சி­கள் இல்லை. இன்­னும் சொல்­லப்­போ­னால் ராஜ­புத்ர வம்­சத்­தி­னரை பெரு­மைப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள். அந்த வம்­சத்தை சேர்ந்த பெண்­க­ளின் வீரத்தை பெரு­மைப்­ப­டுத்­தும் வித­மா­கவே சொல்­லி­யி­ருக்­கி­றார் இயக்­கு­நர் சஞ்­சய் லீலா பன்­சாலி.
இதற்கு போயா இத்தனை கலவரம் என்றுதான் இப்படம் எண்ணவைக்கிறது.

நடிகர்கள்: - ஷாகித் கபூர், ரண்­வீர் சிங், தீபிகா படு­கோனே. 
இயக்­கம் :- சஞ்­சய் லீலா பன்­சாலி,
 இசை -: சஞ்­சய் லீலா பன்­சாலி, சஞ்­சித் பல்­ஹாரா. 
தயா­ரிப்பு :- பன்­சாலி புரொ­ட­க்ஷன்ஸ், வியா­காம் 18 மோஷன் பிக்­சர்ஸ்.இந்­தி­யில் தயாரான  'பத்­மா­வத்',  தமி­ழி­லும் மொழிமாற்றமாகி  வெளி­யா­கி­யுள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...