bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 29 ஜனவரி, 2018

பா.ஜ கா (பாரதீய ஜனதா கார்ப்பரேட்)

 2017ம் ஆண்டு எந்தெந்தக் கட்சிகளுக்கு எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக எவ்வளவு நிதி கொடுத்திருக்கின்றன என்பது தொடர்பான ஆய்வறிக்கையை ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டமைப்பு என்கிற அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதில், பாஜக தொடர்ந்து 4வது ஆண்டாக பாஜக முதலிடம் வகிக்கிறது. 

அதிலும், கடந்த 2016-17 வரையிலான நிதி ஆண்டில் கார்ப்பரேட்டுகளிடம் நிதிபெறுவதில் பாஜக அசைக்க முடியாத உச்சத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. 

கார்ப்பரேட் தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாக 2016-17 நிதியாண்டில் மொத்தம் 325.27 கோடி நாடுமுழுவதும் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
 இதில், 89% நிதி, அதாவது சுமார் 290.22 கோடி ரூபாய் பாஜகவுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நிதியில் மிகப்பெரும் பங்கு இரண்டு நிறுவனங்கள் மட்டுமே கொடுத்துள்ளன. அவை அம்பானி,அதானி என்பது தெரிந்ததே.


இவை,  தேர்தல் நிதிவழங்கும் அறக்கட்டளைகளுக்கான மையத்தில் பதிவுசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த மையத்தில் ஏர்டெல், டி.எல்.எப், யு.பி.எல். லிமிட்டெட், ஜே.எஸ்.டபிள்யூ லிட், பிரமல் எண்டர்பிரைசைஸ், ஜனதா நிர்வாசக் அறக்கட்டளை கிராசிம் சிமெண்ட்ஸ் உள்ளிட்ட 21 மிக முக்கியமான கார்ப்பரேட்டுகள் பதிவு செய்திருக்கின்றன.

இந்த மையத்திற்கு 2016-17 ஆண்டில் சுமார் 283.72 கோடி நிதிவந்துள்ளது. இந்த நிதியில், 16.5 கோடி காங்கிரஸுக்கும், ரூ.9 கோடி சிரோமணி அகாலிதளத்துக்கும், ரூ.6.5 கோடி சமாஜ்வாடி கட்சிக்கும், ரூ.1 கோடி ஆம் ஆத்மிக்கும், மீதமுள்ள தொகை திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 


மீதமுள்ள பெருந்தொகை அனைத்தும் கார்ப்பரேட்டுகள் சார்பாக பாஜகவுக்கு வழங்கப்பட்டிருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கார்ப்பரேட்டுக்கள் கட்சிகளுக்கு கொடுக்கும் நிதியின் மொத்த அளவு கணிசமாக கூடியுள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2013-14ம் ஆண்டில் ரூ.85.37 கோடியாகவும், 

2014-15 ரூ.177.50 கோடியாகவும், 
2015-16 ஆண்டில் ரூ.49.50 கோடியாகவும் இருந்த நிதியின் அளவு
 இந்த ஆண்டு 325.27 கோடியாக உயர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...